மும்பை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உலகெங்கும் சமூக வலைத்தள வள்ர்ச்சியல் பிரிவினைவாதம் அதிகரித்துள்ளதாகக் கூறி உள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவி வகித்து வருகிறார். இன்று மும்பையில் நடைபெற்ற ஜம்னாலால் பஜாஜ் விருது வழங்கும் விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில் “இன்று உலகம் முழுவதும் நாம் காணும் பிரிவினைவாதமும், வெறுப்புணர்வும் சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் மேலும் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் சகிப்புத்தன்மையற்ற சமூகம் உருவாகி, பிரிவினை அதிகரித்திருக்கிறது. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவுடன் […]
