“இலங்கையின் முதலாவது இளநீர் ஏற்றுமதி கிராமம்” முறுதவெல மேட்டு கிராமத்தில் ஆரம்பம்

இலங்கையின் முதலாவது இளநீர் ஏற்றுமதி கிராமம் முறுதவெல மேட்டு கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறே இவ்வளவு பெருந்தோட்ட பயிராக அன்றி வீட்டுத்தோட்ட செய்கையாக இடம் பெறும் இளநீர் உற்பத்தி முதலாவது தடவையாக ஏற்றுமதி நோக்கத்துடன் உற்பத்தி செய்யப்படும் பயிராக உற்பத்தி செய்கை பண்ணுவதற்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் நடவடிக்கை (14) எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான ஒரு உள்ளூர் தாவரமான இளநீர் தாவரம் தற்போது நமது நாட்டிற்கு டாலர்களை பெற்று தரும் பிரதான தாவரமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவ்வளவு காலமும் இளநீருக்காக இலங்கையை உலகில் அவ்வளவு அவதானத்தைப் பெற்றிராது விட்டாலும், தற்போது நாடு எழுதிருக்காக ஐக்கிய அரசு மிகவும் அதிகூடிய கேள்வி காணப்படுகிறது. மாதத்திற்கு 200 இளநீர் கொள்கலன்கள் அந்நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அதற்கிணங்க ஒரு முன்னோடி திட்டமாக முதற்தடவையாக 1500 இளநீர் கன்றுகள் இப்பிரதேசத்தில் வீட்டுத் தோட்டமாக பயிரிடப்படுகிறது. அதற்காக அவசியமான உயர்தரத்திலான இளநீர் கன்றுகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு விவசாய மற்றும் பெருதோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்றது. ஒரு வீட்டுத் தோட்டத்திற்கு தலா பத்து கன்றுகள் வீதம் பகிர்ந்தளிக்க திட்டமிட்டுள்ளது.

நாட்டிலிருந்து ஐக்கிய அரபு ராஜ்யத்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் இளநீர் ஒன்று கடற்கரை வலயத்தில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது அந்நாட்டில் இளநீருக்காகக் காணப்படும் கேள்வி மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

சென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலையீட்டில் இளநீர் ஏற்றுமதிக்காக ஒழுங்குமுறையொன்றைத் தயாரிப்பதற்காக தற்போது ஐக்கிய அரபு இராஜ்யத்தில் நாட்டிற்கு ஒரு இளநீருக்காக அந்நாட்டுத் துறைமுகத்தில் 0.8டொலர் (சராசரியாக ரூபா 296)இலாபம் கிடைக்கின்றது

ஐக்கிய அரபு இராஜ்யத்திற்கு இலங்கையிலிருந்து வாரம் ஒன்றிற்கு 252,000 இளநீர்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்விளநீர் ஏற்றுமதியின 20 22ஆம் ஆண்டில் இரண்டு பில்லியன் ரூபா இலாபம் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், இவ்வருடத்தில் (2023) ஆறு பில்லியன் ரூபா வருமானமாக எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் இளநீர் செய்கை பெருந்தோட்ட உற்பத்திக்காக உற்பத்தி செய்வதற்காக சகல நடவடிக்கைகளையும் எடுப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

உலக நாடுகள் பலவும் இளநீர் உற்பத்தி செய்வதற்கு முயற்சி செய்தாலும் அவை வெற்றியளிக்கவில்லை. உலகில் சுவை மிகுந்த இளநீர் இலங்கையிலேயே உற்பத்தியாகின்றது. அதனால் இலங்கைத் தேங்காய் சுவையானது (Sri Lanka Sweet Coconut) என்ற நாமத்துடன் எதிர்காலத்தில் நாடு இளநீர் உலகில் பிரபலப்படுத்துவதற்காக நடவடிக்கை மேற்கொள்வதாகவும், அதற்கு அவசியமான வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறு தென்னை அபிவிருத்திச் சபை மற்றும் தென்னை அதிகாரசபைகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெளிவுபடுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.