தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள நாகலுார் பகுதியை சேர்ந்தவர் அபினேஷ் வயது 21. இவர் பாபநாசம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருடன் காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார். இதனால் அபினேஷை அந்த சிறுமி ரொம்பவே நம்பியுள்ளார். இந்நிலையில், கடந்த 19-ம் தேதி, அபினேஷ் அந்த சிறுமியை தென்னந்தோப்பு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கே அபினேஷின் நண்பர்களான ஒன்பத்துவேலியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (21), திருவாரூர் மாவட்டம், மாளிகைத் திடலை சேர்ந்த அரவிந்தன் (21), ஸ்ரீதரன் (24), ஆகிய மூன்று பேர் மறைந்து நின்றுள்ளனர். கொஞ்சம் நேரம் சிறுமியிடம் பேசிக்கொண்டிருந்த அபினேஷ் பின்னர் தன் நண்பர்களை அழைத்துள்ளார். பின்னர் சிறுமியை மிரட்டி நான்கு பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனை அரவிந்தன் தனது செல்போனில் வீடியோ மற்றும் போட்டோ எடுத்துள்ளார். அதை செல்போனில் பார்த்து ரசித்த நான்கு பேரும் தங்கள் நண்பரான பூண்டியை சேர்ந்த ராகுல் என்கிற குட்டி (24), என்பவருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த வீடியோவை பார்த்த ராகுல் நண்பர்கள் குழுவில் பகிர்ந்துள்ளார். நடந்ததை வெளியே சொல்லக்கூடாது எனவும் சிறுமியை மிரட்டியுள்ளனர்.

அந்த பயத்தில் சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை சொல்லாமல் மறைத்துள்ளார். வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை பார்த்த சிலர் இது குறித்து சைல்டு லைனுக்கு புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில், குழந்தைகள் நல அலுவலர்கள் விசாரணை செய்த பிறகு பாபநாசம் அனைத்து மகளிர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைதொடர்ந்து சிறுமி அளித்த புகாரின் பேரில், அபினேஷ், ஸ்ரீதரன், ஸ்ரீகாந்த், அரவிந்தன், ராகுல் ஆகிய ஐந்து பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் இது தொடராக விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.