டோக்கியோ ஒரே வாரத்தில் 1214 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் ஜப்பான் மக்கள் கடும் பீதி அடைத்துள்ளனர். புத்தாண்டு தினத்தன்று ஜப்பானின் இஷிகாவா மாகாணம் மற்றும் மேற்கு கடற்கரை பகுதியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தில் சக்திவாய்ந்ததாக ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாகப் பதிவானது. நிலநடுக்கம் காரணமாக இதுவரை 161 பேர் பலியானதாகவும் 100-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களைத் தேடும் பணியில் பேரிடர் மீட்புப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்துக்குப் பின்னர் […]
