எஸ்.ஏ. 20 ஓவர் லீக்; ஜான்சன் அபார ஆட்டம்…பார்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்தி ஈஸ்டர்ன் கேப் வெற்றி

பார்ல்,

தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் லீக் (எஸ்.ஏ. 20 ஓவர் லீக்) தொடரின் 2வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் – பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஈஸ்டர்ன் கேப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது.

ஈஸ்டர்ன் கேப் தரப்பில் அதிரடியாக ஆடிய மார்கோ ஜான்சென் 31 பந்தில் 71 ரன்கள் குவித்து அசத்தினார்.

ராயல்ஸ் அணி தரப்பில் இவான் ஜோன்ஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் 44 ரன் வித்தியாசத்தில் ஈஸ்டர்ன் கேப் அணி அபார வெற்றி பெற்றது. ஈஸ்டர்ன் கேப் தரப்பில் மார்கோ ஜான்சென், லியாம் டாவ்சென், பெயர்ஸ் ஸ்வான்போல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.