வாழ்வாதார கடனுதவி வழங்கும் நிகழ்வு!!

ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலக கிராம அபிவிருத்திப் பிரிவினால் நேற்று (13) தளவாய் மாதர் கிராம அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்களில் தெரிவு செய்யப்பட்ட 48 பயனாளிகளுக்கு வாழ்வாதார கடனாக சங்க நிதியினூடாக ரூபா 480,000.00 (நான்கு இலட்சத்து எண்பதாயிரம்) வழங்கப்பட்டது.

இக் கொடுப்பனவானது பிரதேச செயலாளரின் கோ.தனபாலசுந்தரம் அவர்களின் அனுமதியின் கீழ் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.அகிலேஸ்வரன் மேற்பார்வையில் கிரா அபிவிருத்தி திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.ஸப்ரி ஹசன் வழங்கிவைத்துள்ளார்.

மேலும் இந் நிகழ்வில் பிரிவின் கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் மாதர் சங்க நிருவாக சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.