தீவிரவாத மையங்களாக செயல்படும் பாக். மசூதிகள்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் கில்​ஜித் பல்​டிஸ்​தான் மற்​றும் லடாக்​கிற்​கான தேசிய சமத்​து​வக் கட்​சி​யின் தலை​வரும், சமூக ஆர்​வலரு​மான பேராசிரியர் சஜ்ஜாத் ராஜா கூறிய​தாவது: ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்கை தீவிர​வாத குழுக்​கள் மற்​றும் பாகிஸ்தானிடம் பயத்தை ஏற்​படுத்​த​வில்​லை. ஆனால், உலகள​வில் தற்​போது அவர்​கள் அம்​பலப்​படுத்​தப்​பட்​டுள்​ள​தால் இனிமேல் மிக​வும் எச்​சரிக்​கை​யாக செயல்​படு​வார்​கள்.

பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு ஜம்​மு-​காஷ்மீர் மற்​றும் பாகிஸ்​தான் முழு​வதும் பல தீவிர​வாத முகாம்​கள் செயல்​பட்டு வரு​கின்​றன. உண்​மை​யில், பாகிஸ்​தானில் உள்ள சுமார் 50 சதவீத மசூ​தி​கள் தீவிர​வாதத்​துக்​கான மையங்​களாக மாறி​யுள்​ளன. அடை​யாளம் கண்​டறிதலை தவிர்க்க இந்த முகாம்​கள் இவ்​வாறு உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன.

மேலும், தாக்​குதல் நடத்​து​வதற்கு தேவை​யான பயிற்​சிகளை அவை அளிக்​கின்​றன. நாட்​டின் வளர்ச்​சியை விட தீவிர​​வாதத்​தின் மீது​தான் பாகிஸ்​தானுக்கு அதி​கவெறி உள்​ளது. கொள்​கை, பொருளா​தா​ரம் மற்​றும் சமூகத்​தில் ராணுவம்​தான் ஆதிக்​கம் செலுத்துகிறது. இவ்​வாறு அவர் தெரிவித்​தார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.