அணு ஆயுத நாடாக பாகிஸ்தான் மாறுவதை தடுக்காமல் காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: அசாம் முதல்வர் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘‘​பாகிஸ்​தான் அணு ஆயுத நாடாவதை தடுக்​காமல் காங்​கிரஸ் வரலாற்று தவறிழைத்து விட்​டது’’ என்று அசாம் முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்​றம் சாட்​டி​யுள்​ளாார். அசாம் முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று தனது எக்ஸ் வலைதள பக்​கத்​தில் ஒரு பதிவை வெளி​யிட்​டுள்​ளார்.

“காங்​கிரஸின் வரலாற்று தவறு: பாகிஸ்​தான் அணு ஆயுத நாடாக மாறு​வதற்கு இந்​தியா எப்​படி விட்​டது’’ என்ற தலைப்​பில் அவர் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 1980-களில் பாகிஸ்​தான் அணு ஆயுதம் தயாரிக்​கும் முயற்​சி​யில் ஈடு​பட்டு வந்​தது. அதை இந்​தி​யா​வின் ‘‘ரா’’ உட்பட உளவு துறை​கள் உறு​திப்​படுத்​தின. பாகிஸ்​தான் கவுதா என்ற பகு​தி​யில் அணுஆ​யுத தயாரிப்பு கூடத்தை அமைத்து வந்​தது. அங்கு யுரேனி​யத்தை செறிவூட்​டும் பணி​கள் நடை​பெற்​றன.

அந்த நேரத்​தில் அதை தடுக்க இந்​தி​யா​வுக்கு இஸ்​ரேல் உதவ முன் வந்​தது. அதற்​காக குஜ​ராத் மாநிலம் ஜாம்​நகர் விமானப் படைதள​மும் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டது. அதற்கு இந்​திய ராணுவ​மும் ஆதரவு அளித்​தது. அங்​கிருந்து கவுதா பகு​தியை தாக்கி அணு ஆயுத தயாரிப்பு முயற்​சியை தடுக்க இந்​தி​யா​வுக்கு உதவு இஸ்​ரேல் தயா​ராக இருந்​தது.

பாகிஸ்​தான் அணு ஆயுத நாடாக மாறு​வதற்கு முன்பே அதை தடுத்து நிறுத்​தம் வலிமை இந்​தி​யா​விடம் இருந்​தது. ஆனால், கடைசி நேரத்​தில் அப்​போதைய பிரதமர் இந்​திரா காந்தி தயக்​கம் காட்​டி​னார். சர்​வ​தேச நாடு​களுக்​குப் பயந்து தாக்​குதல் நடத்​தாமல் விட்​டு​விட்​டார்.

அதன்​பின்​னர் பிரதம​ரான ராஜீவ் காந்​தி​யும், கவு​தா​வில் நடை​பெற்ற பணி​களை தடுக்க தவறி​விட்​டார். சர்​வ​தேச நாடு​களின் அழுத்​தத்​தின் காரண​மாக தூதரக ரீதி​யாக பேச வேண்​டும் என்று கூறி​விட்​டார். கடைசி​யில் கடந்த 1988-ம் ஆண்டு அணுஆ​யுத தளங்​களை பரஸ்​பரம் தாக்​கு​வ​தில்லை என்ற ஒப்​பந்​தத்​தில் பாகிஸ்​தானின் அப்​போதைய பிரதமர் பெனசிர் புட்டோ அரசுடன் ராஜீவ் காந்தி கையெழுத்​திட்​டார்.

அதன்​பின்​னர் 10 ஆண்​டு​கள் கழித்து 1998-ம் ஆண்டு பாகிஸ்​தான் அணுஆ​யுத சோதனை நடத்​தி​யது. இப்​போது, அதிக செல​வாகும் அணுஆ​யுத போட்​டி​யில் இந்​தியா தள்​ளப்​பட்​டுள்​ளது. மேலும், அணுஆ​யுதத்தை கேடய​மாகப் பயன்​படுத்​திக் கொண்டு கார்​கில் ஊடுரு​வல், எல்லை தாண்​டிய தீவிர​வாத தாக்​குதல் போன்​றவற்றை பாகிஸ்​தான் தொடர்ந்து செய்து வரு​கிறது. இப்​போதும் கூட சர்​வ​தேச நாடு​களின் நடவடிக்​கைகளை தடுக்க அணு ஆயுத பலத்தை காட்டி பாகிஸ்​தான் மிரட்டி வரு​கிறது.

வலிமை​யான தலைமை என்​பது சிக்​கலுக்கு உடனடி​யாக தீர்வு காண வேண்​டும். அதே​நேரத்​தில் தொலைநோக்கு பார்​வை​யும் இருக்க வேண்​டும். ஆனால், நல்ல வாய்ப்பை காங்​கிரஸ் அரசு வீணாக்​கி​விட்​டது. நாட்​டின் நீண்ட கால பாது​காப்பை கருத்​தில் கொள்​ளாமல், குறுகிய கால தூதரக ஒப்​பந்​தத்தை காங்​கிரஸ் அரசு செய்து கொண்​டது. இவ்​வாறு அசாம்​ முதல்​வர்​ ஹிமந்​த பிஸ்​வா சர்​மா கூறியுள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.