கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தாக்​குதலின் மர்​மம் வில​க​வில்லை: அணு விஞ்​ஞானி மொசென் படு​கொலையை மறக்க முடி​யாத ஈரான் மக்கள்

இஸ்​ரேல் தாக்​குதலில் முக்​கிய அணுசக்தி விஞ்​ஞானிகள் கொல்​லப்​பட்ட நிலை​யில், பல ஆண்​டு​களுக்கு முன்​னர் விஞ்​ஞானி மொசென் பக்​ரிஜாதே கொல்​லப்​பட்ட விதத்தை ஈரான் மக்​கள் இன்​னும் மறக்​காமல் உள்​ளனர்.

ஈரான் அணுஆ​யுத தயாரிப்​பில் ஈடு​படு​வதை அமெரிக்​கா, இஸ்​ரேல் போன்ற நாடு​கள் விரும்​ப​வில்​லை. அதனால் கடந்த 2000-ம் ஆண்​டுக்கு முன்​பிருந்தே ஈரானுக்கு பல்​வேறு நெருக்​கடிகளை அமெரிக்கா கொடுத்து வரு​கிறது. இஸ்​ரேலும் தன் பங்​குக்கு அவ்​வப்​போது தாக்​குதல் நடத்தி வரு​கிறது. தற்​போது ஈரான் – இஸ்​ரேல் மோதல் உச்ச கட்​டத்தை எட்​டி​யுள்​ளது. கடந்த வாரம் இஸ்​ரேல் நடத்​திய தாக்​குதலில் ஈரானின் முக்​கிய ராணுவ தளப​தி​கள், அணு விஞ்​ஞானிகள் கொல்​லப்​பட்​டனர். அவர்​களில் முக்​கிய​மானவர் பெரீட​வுன் அப்​பாஸி. இவர் ஈரான் அணுசக்தி அமைப்​பின் முன்​னாள் தலை​வ​ராக இருந்​தவர்.

ஈரானின் அணுசக்தி துறை​யில் முக்​கிய​மானவ​ராக இருந்​த​தால், எந்த நேரத்​தி​லும் கொல்​லப்​படலாம் என்று அவரை எச்​சரித்​தனர். அதை கேட்டு அவர் சிரித்​துள்ளார். அத்​துடன், “அணு ஆ​யுதம் தயாரிக்க என்னை ஈரான் அரசு கேட்​டுக் கொண்​டால், மகிழ்ச்​சி​யுடன் தயாரிப்​பேன்” என்று அவர் கூறிய வார்த்தை மிக​வும் பிரபலமானது. எல்​லோரும் எதிர்​பார்த்​தது போல​வே, கடந்த 2010-ம் ஆண்டு அப்​பாஸியை கொல்ல முயற்சி நடந்​தது. அப்​போது அவர் தப்பி விட்​டார். ஆனால், இந்த முறை இஸ்​ரேல் ஏவு​கணை தாக்​குதலில் உயி​ரிழந்​துள்​ளார். இவரது மரணம் தற்​போது விஞ்​ஞானி மொசென் பக்​ரிஜாதே படு​கொலையை மீண்​டும் நினை​வுப்​படுத்தி உள்​ளது.

விஞ்​ஞானி மொசென் பக்​ரிஜாதேவை ஈரானின் அணுசக்தி தந்தை என்றே மேற்​கத்​திய நாடு​களும் இஸ்​ரேலும் கூறிவந்​தன. அந்​தளவுக்கு மிக முக்​கிய​மானவ​ராக இருந்​தார். இவர்​தான் ஈரானின் “பு​ராஜெக்ட் அமாத்” திட்​டத்​தின் மூளை​யாக செயல்​பட்​ட​வர் என்று மேற்​கத்​திய உளவு அமைப்​பு​கள் நம்​பின. அணு ஆ​யுதம், ஏவு​கணை, அதிநவீன ஆயுதங்​கள் தயாரிப்​பது​தான் இந்த திட்​டம். அதனால், கடந்த 2000-ம் ஆண்​டு​களில் ஈரான் அணு ஆ​யுதங்​களை தயாரிக்​கும் பணி​யில் ஈடு​படு​வ​தாக மேற்​கத்​திய நாடு​கள் பரபரப்​பாக பேசின. அத்​துடன் அமெரிக்க விஞ்​ஞானி ராபர்ட் ஓபன் ஹீமருடன், ஈரான் விஞ்​ஞானி மொசெனை ஒப்​பிட்டு செய்​தி​கள் வெளி​யா​யின.

இத்​தனைக்​கும் மொசென் வெளிவுல​குக்கு வராதவர். ஊடகங்​கள் எதி​லும் பேட்டி அளிக்​காதவர். இன்​னும் சொல்ல போனால், அவரது புகைப்​படம் கூட அவ்​வள​வாக வெளி​யில் வந்​த​தில்​லை. எந்த நிகழ்ச்​சி​யிலும் பங்​கேற்​காதவர். மிகமிக ரகசிய நடவடிக்​கை​களில் மட்​டுமே இருந்​துள்​ளார். கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி அணு ஆ​யுத ஒப்​பந்​தத்​தில் ஈரான் கையெழுத்​திட்​டது. அப்​போது சீனா, பிரான்​ஸ், ஜெர்​மனி, ரஷ்​யா, பிரிட்​டன், அமெரிக்​கா, ஐரோப்​பிய யூனியனுடன் சேர்ந்து ஈரானும் கையெழுத்​திட்​டது. அதன்​படி, அணு ஆ​யுத தயாரிப்​புக்கு ஈரானுக்கு கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டன. அப்​போது கூட விஞ்​ஞானி மொசெனின் பெயர் அடிபட​வில்​லை.

அதன்​பின், கடந்த 2018-ம் ஆண்​டு​தான் இஸ்​ரேல் பிரதமர் பெஞ்​சமின் நேதன்​யாகு, தேசிய தொலைக்​காட்​சி​யில் உரை​யாற்​றிய போது முதன் முதலில் ஈரான் விஞ்​ஞானி மொசென் பெயரை வெளி​யிட்​டார். அதன் பிறகு​தான் அவர் மீது குறி வைக்​கப்​பட்​டது. திட்​ட​மிட்டு நடத்​திய தாக்​குதலில் அவர் கொல்​லப்​பட்​டார். ஆனால், அவர் கொல்​லப்​பட்ட விதத்தை இன்று வரை ஈரான் மக்​கள் மட்​டுமல்ல வெளி​நாட்​ட​வர்​களும் ஆச்​சரி​யத்​துடன் நினை​வு​கூர்​கின்​றனர். அவரை கொன்​றது யார் என்​பது இன்று வரை மர்​மம்​தான். ஆனால், இஸ்​ரேல்​தான் கொன்​றது. அதற்கு பதிலடி தரு​வோம் என்று ஈரான் அப்​போதே உறு​தி​யாக கூறியது.

கடந்த 2020-ம் ஆண்டு நவம்​பர் 27-ம் தேதி… ஈரானின் அப்​சார்ட் என்ற இடத்​தில் உள்ள தனது வீட்​டுக்கு மனை​வி, பாது​காவலர்​களு​டன் விஞ்​ஞானி மொசென் காரில் சென்று கொண்​டிருந்​தார். தலைநகர் டெஹ்​ரானின் கிழக்​குப் பகு​தி​யில் அப்​சார்ட் அமைந்​துள்​ளது. அவர் வழக்​க​மாக செல்​லும் பாதையில்​தான் கார் சென்​றது. சற்று தூரத்​தில் அவரது பாது​காப்பு வாகனம் பின்​தொடர்ந்​தது. அந்த பாதை​யில் சாலை​யோரம் ஒரு டிரக் நிறுத்​தப்​பட்​டிருந்​தது. அந்த டிரக்​கில் யாரும் இல்​லை. ஆனால் அந்த டிரக்​கில் முகத்தை அடை​யாளம் காணும் கருவி பொருத்​தப்​பட்​டிருந்​த​தாக கூறப்​படு​கிறது. அத்​துடன் டிரக்​கில் இயந்​திர துப்​பாக்​கி, வெடிபொருட்​களும் இருந்​துள்​ளன. அந்த துப்​பாக்கி செயற்​கைக் கோள் மூலம் இணைக்​கப்​பட்​டிருந்​தது. சாலை​யில் வேறு தீவிர​வா​தி​களோ, உளவாளி​களோ இல்​லை.

விஞ்​ஞானி மொசென் கார் டிரக் அரு​கில் சென்ற போது, நாய் ஒன்று குறுக்கே வந்​துள்​ளது. உடனே காரின் வேகம் குறைக்​கப்​பட்​டது. அப்​போது டிரக்கில் இருந்து சரமாரி​யாக துப்​பாக்​கிக் குண்​டு​கள் கார் மீது பாய்ந்​தன. அதில், கார் தடு​மாறி வளை​வாக சென்று சாலை​யில் நின்​றது. பின்​னர் 2-வது முறை​யாக துப்​பாக்​கிக் குண்​டு​கள் பாய்ந்​தன. அதில் மொசென் தோளில் ஒரு குண்டு பாய்ந்​தது. உடனே கீழே இறங்​கிய மொசென், கார் கதவுக்கு பின்​னால் ஒளிந்து கொண்​டார். எனினும், அவரது முதுகில் துப்​பாக்​கிக் குண்​டு​கள் பாய்ந்​தன. சாலை​யில் சரிந்து விழுந்த மொசென் உயி​ரிழந்​தார். அடுத்த சில விநாடிகளில் சாலை​யோரம் நின்​றிருந்த டிரக்​கும் வெடித்து சிதறியது.

அவருக்கு அரு​கில் இருந்த அவரது மனைவி மீது தாக்​குதல் நடத்​தப்​பட​வில்​லை. மொசென் மீது மட்​டும் 15 குண்​டு​கள் பாய்ந்​துள்​ள​தாக ஈரான் கூறியது. இந்த தாக்​குதல் முழு​வதும் ஒரு நிமிடத்​துக்​குள் நடந்​தது முடிந்​தது, ஈரானுக்கு பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. ஈரானுக்கு வெளி​யில் இருந்து செயற்​கைக்​கோள் மூலம் இயந்​திர துப்​பாக்​கியை இயக்க செய்து மொசெனை இஸ்​ரேல் கொன்​ற​தாக ஈரான் அதி​காரி​கள் பின்​னர் குற்​றம் சாட்​டினர். மேலும், படு​கொலை நடந்த பாணியை பார்க்​கும் போது இஸ்​ரேலின் மொசாத் உளவு அமைப்​பின் கைவரிசை இருப்​ப​தாக ஈரான் உறு​தி​யாக கூறியது.

அதற்கு சில நாட்​கள் பிறகு பல்​வேறு தகவல்​கள் வெளிவந்​தன. விஞ்​ஞானி மொசெனை பல மாதங்​களாகவே இஸ்​ரேல் கண்​காணித்து வந்​துள்​ளது. அவரை கொல்​வதற்​காக பல்​வேறு ஆயுதங்​களை உதிரி பாகங்​களாக ஈரானுக்​குள் இஸ்​ரேல் உளவு அமைப்​பான மொசாத் கடத்தி சென்​றுள்ளது. அங்கு அவற்றை இணைத்து ரகசி​ய​மாக சோதனை​யும் செய்து பார்த்​துள்​ளது என்று தகவல்​கள் வெளி​யா​யின. உலக வரலாற்​றிலேயே செயற்​கைக் கோள் மூலம் ஆயுதங்​களை இயக்கி நடத்​திய தாக்​குதல் அதுவே முதல் என்​றும் கூறப்​படு​கிறது.

இதுகுறித்து ஈரான் புரட்​சிப் படை பிரி​கேடியர் ஜெனரல் அலி படாவி கூறும்​போது, “விஞ்​ஞானி மொசெனை மட்​டும் துல்​லிய​மாக குறி வைத்து தாக்​குதல்​ நடத்​தப்​பட்​டுள்​ளது. அவருடன்​ சென்​ற மனை​வி மற்​றும்​ பாது​காவலர்​களுக்​கு சிறு கா​யம்​ கூட ஏற்​பட​வில்​லை” என்​றார்​. எனவே, விஞ்​ஞானி மொசென்​ படுகொலை இன்​று வரை பேசப்​படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.