உனக்காக முட்டாள்தனங்களை செய்ய ஆரம்பித்தேன்! – அம்மாச்சிக்கு பேரனின் கடிதம் | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

இறந்து இரண்டு வருடம் ஆகி விட்ட அம்மாச்சிக்கு,

நாங்கள் இங்கு நலம். நாங்கள் உங்களை புதைத்த மண்ணும், மண் மேல் வளரும் புல்லும், உடலை மொய்த்த புழுவும் சகலமும் இங்கு நலம். நீங்கள் நலமா? கடவுள் நம்பிக்கை இத்துப் போய் , மூடநம்பிக்கை விட்டுப்போய் திரிந்த நான், நீங்கள் இறந்த நாளன்று கடவுளை முழுசும் வெறுத்து, மறுத்தேன்.

ஆனால், சடங்கு என்று அம்மா அப்பா எல்லோரும் சாதம் வைத்து, “கா கா” என கத்திய நொடியில், என் புத்தி, “கத்தாதே, அது முட்டாள்தனம்” என்றது. முதல் முதலாய், விரும்பி ஒரு ஏக்கத்தோடு முட்டாள்தனங்களை செய்ய ஆரம்பித்தேன், உங்களுக்காக. கூசுகிற உதடுகளை சேர்த்து, கூச்சத்தோடு, யாருக்கும் கேட்காமல் “கா கா” என்று கத்தினேன். முட்டாள்தனங்களை செய்ய விடாத அறிவு தேவையா, அம்மாச்சி?

அம்மாச்சி, இரத்தமும் சீயும் வடிய வடிய உங்களை துடிக்க விட்ட காயங்கள் ஆறியிருச்சா? சொர்க்கத்தில் உங்களுக்கு புடிச்ச சிவாஜி படம் போடுறாங்களா, அம்மாச்சி? அடிக்கடி நீங்க பாடுற, “மணப்பாறை மாடு கட்டி, மாயவரம் ஏறு பூட்டி” பாட்டு, சில மாசத்துக்கு முன்னாடி காரணமே தெரியாம ஹிட் ஆச்சு.

“ஹிட்” அப்படினா என்னன்னு யோசிக்க வேணாம், அப்படினா என்னனு இங்கயே யாருக்கும் சரியா தெரியல அம்மாச்சி. நீங்க நம்புன மனுசங்க நிறையா பேரு, உங்க சாவுக்கு வரலை; நீங்க நம்புன கடவுளாச்சும் வந்தாரா? ஒருவேளை, கடவுளை பார்த்தால், “என் பேரனுக்கு புடிக்கும்னு” எதையும் கேட்டு தொல்லை செய்ய வேண்டாம். என் பேரன்பிற்குரிய அம்மாச்சி, உன் பொருட்டே என் நிலம் இன்னும் விளைகிறது. உன் மரணத்திற்கு பின், என் ஏக்கமும் அன்பும் குற்றவுணர்ச்சியும், உன் கல்லறை மேலே மெழுகோடு சேர்ந்து உருகி வழிகின்றன.

இப்படிக்கு,

உன் பொறுப்பற்ற பேரன்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.