லண்டன்,
அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் தயாரிக்கும் அதிநவீன போர் விமானமாக எப்-35 போர் விமானம் உள்ளது அமெரிக்காவின் ராணுவம் தவிர்த்து ஜப்பான், இஸ்ரேல் மற்றும் இங்கிலாந்து நாடுகளிடம் மட்டுமே உள்ள இந்த எப்-35 ரக போர் விமானம் ஒன்றின் விலை ரூ.860 கோடி (100 மில்லியன் அமெரிக்க டாலர்) ஆக உள்ளது.
இந்தநிலையில் அமெரிக்காவிடம் இருந்து புதிதாக 12 எப்-35 ரக போர் விமானங்களை இங்கிலாந்து வாங்க முடிவு செய்துள்ளது.அணு ஆயுதங்களை ஏந்தி சென்று இலக்கை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போர் விமானங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் சப்ளை செய்யப்பட உள்ளது.
இந்த விமானம் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் ரக போர் விமானம் ஆகும். அதாவது, இந்த விமானங்கள் ரேடாரில் சிக்காது. இந்த போர் விமானத்தில் உள்ள அதி நவீன சென்சார்கள், போர்க்களத்தில் உள்ள சூழல்கள் உள்ளிட்டவை குறித்து நிகழ்நேரத்தில் தனது கட்டுப்பாட்டு அமைப்புக்கு தகவல்களை பகிரும். குறுகிய ஓடுபாதையில் இயங்குவது, போர் கப்பல்களில் தரையிறக்கம் போன்ற அசாத்திய திறன்களை கொண்டது.