பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும்: ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ட்ரம்ப் வலியுறுத்தல்

வாஷிங்டன்: “​காசா விவ​காரத்​தில் இஸ்​ரேல் – ஹமாஸ் தீவிர​வா​தி​கள் இடை​யில் போர் நிறுத்​தம் ஏற்பட வாய்ப்​புள்​ளது. பிணைக் கைதி​களை ஹமாஸ் விடுவிக்க வேண்​டும்’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​து உள்​ளார்.

கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் 7-ம் தேதி இஸ்​ரேலில் நடை​பெற்​றுக் கொண்​டிருந்த இசை நிகழ்ச்​சி​யில் ஹமாஸ் தீவிர​வா​தி​கள் திடீர் தாக்​குதல் நடத்​தினர். இதில் 1,200 பேர் கொல்​லப்​பட்​ட​தாக இஸ்​ரேல் தெரி​வித்​தது. மேலும், இளம்​பெண்​கள் உட்பட 251 இஸ்​ரேலியர்​களை ஹமாஸ் தீவிர​வா​தி​கள் பிணைக் கைதி​களாக பிடித்து சென்​றனர்.

இதையடுத்து காசா மீது இஸ்​ரேல் ராணுவம் கடுமை​யாக தாக்​குதல் நடத்​தி​யது. இது​வரை இஸ்​ரேல் நடத்​திய தாக்​குதலில் காசா​வில் 56,000-க்​கும் மேற்​பட்ட பாலஸ்​தீனர்கள் கொல்​லப்​பட்​ட​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

இதற்​கிடை​யில், அணுஆ​யுத சர்ச்சை தொடர்​பாக ஈரான் மீதும் இஸ்​ரேல் தாக்​குதல் நடத்​தி​யது. தற்​போது ஈரான் – இஸ்​ரேல் போர் நிறுத்​தம் அறி​வித்​துள்ள நிலை​யில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்​று​முன்​தினம் நள்​ளிரவு வெளி​யிட்ட அறி​விப்​பில் கூறியிருப்பதாவது: காசா தொடர்​பாக இஸ்​ரேல் – ஹமாஸ் இடையே ஒரு வாரத்​தில் போர் நிறுத்​தம் ஏற்பட வாய்ப்​புள்​ளது. அதற்​கான பேச்​சு​வார்த்​தை​யில் இஸ்​ரேல் பிரதமர் நேதன்​யாகு ஈடுபட வேண்​டும்.

மேலும், இஸ்​ரேல் பிணைக் கைதி​களை ஹமாஸ் தீவிர​வா​தி​கள் உடனடி​யாக விடு​வித்து போர் நிறுத்த ஒப்​பந்​தத்​துக்கு வரவேண்டும். போர் நிறுத்​தம் தொடர்​பாக இறுதி ஒப்​பந்​தத்தை இஸ்​ரேல் பிரதமர் நெதன்​யாகு முடிவு செய்ய வேண்​டும். இவ்​வாறு டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.