கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் லேப்-டாப் வழங்கல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கல்​லூரி மாணவர்​களுக்கு இந்​த ஆண்டு முதல் லேப்​-​டாப் வழங்​கப்​படும் என்று சென்​னை​யில் நேற்று நடை​பெற்ற ‘வெற்றி நிச்​ச​யம்’ திட்ட தொடக்க விழா​வில் முதல்​வர் மு..க.ஸ்​டா​லின் அறி​வித்​தார்.

தமிழக அரசின் சிறப்​புத் திட்ட செய​லாக்​கத் துறை மற்​றும் தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக் கழகம் சார்​பில் ‘நான் முதல்​வன்’ திட்​டத்​தின் 3-வது ஆண்டு வெற்றி விழா​வும், ‘வெற்றி நிச்​ச​யம்’ திட்​டத்​தின் தொடக்க விழா​வும் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் இத்​திட்​டத்​தை​யும் அடுத்த ஆண்டு ஷாங்​காய் நகரில் நடை​பெறும் உலக திறன் போட்​டி​யில் பங்​கேற்​ப​தற்​கான ஆன்​லைன் பதிவை​யும் முதல்​வர் ஸ்டா​லின் தொடங்​கி​வைத்​தார்.

பின்​னர் அவர் பேசி​ய​தாவது: இந்​தி​யா​விலேயே அதி​கபட்​ச​மாக 9.69 சதவீத வளர்ச்சி வீதத்​தில் நம்​பர் ஒன் மாநில​மாக தமிழகம் திகழ்​கிறது. நான் முதல்​வன் திட்​டத்​தால் இது​வரை 41 லட்​சம் பேர் பயன் அடைந்​துள்​ளனர். அவர்​களுக்கு வளர்ந்து வரும் நவீன தொழில்​துறைக்கு ஏற்ற வகை​யில் தொழில்​நுட்ப திறன், தகவல் தொழில்​நுட்​பம், மொழி அறி​வு, ஹேக்​கத்​தான்​ஸ், இண்​டர்ன்​ஷிப் ஆகிய​வற்றை உள்​ளடக்கி பயிற்சி அளிக்​கப்​படு​கிறது.

கடந்த 3 ஆண்​டு​களில், இத்​திட்​டத்​தால் 3.28 லட்​சம் மாணவர்​கள், முன்​னணி நிறு​வனங்​களில் பணி நியமனம் பெற்​றுள்​ளனர். தமிழகத்​தில் இருந்து இந்த ஆண்டு சிவில் சர்​வீஸ் தேர்​வில் வெற்​றி​பெற்ற 57 பேரில் 50 பேர் நான் முதல்​வன் திட்​டத்​தில் பயிற்சி பெற்​றவர்​கள்.

படித்த, வேலை​யில்​லாத இளைஞர்​கள், படிப்பை பாதி​யிலேயே நிறுத்​தி​ய​வர்​களை கண்​டறிந்து ‘வெற்றி நிச்​ச​யம்’ திட்​டம் மூலம் குறுகிய கால திறன் பயிற்சி வழங்​கப்​படும். இதற்​கான செலவை அரசே ஏற்​கும். சமூக மற்​றும் பொருளா​தா​ரரீ​தி​யாக பின்​தங்​கிய வகுப்​பினர்​கள் அனை​வருக்​கும் இத்​திட்​டத்​தில் முன்​னுரிமை அளிக்​கப்​பட்​டு, ரூ.12 ஆயிரம் வரை ஊக்​கத்​தொகை வழங்​கப்​படும். தொலை​தூர மாணவர்​களுக்கு உணவுடன் கூடிய இருப்​பிட வசதி​யும் வழங்​கப்​படும்.

மேலும், கல்​லூரி மாணவர்​களுக்கு இந்த ஆண்டு முதல் லேப்​-​டாப் வழங்​கப்​படும். மாணவர்​களுக்கு உதவ நான் இருக்​கிறேன். திரா​விட மாடல் அரசு இருக்​கிறது. இவ்​வாறு முதல்​வர் பேசி​னார். துணை முதல்​வர் உதயநிதி பேசும்​போது, “தற்​போது தொடங்​கப்​பட்​டுள்ள வெற்றி நிச்​ச​யம் திட்​டத்​தின் மூலம் ஆண்​டுக்கு 75 ஆயிரம் மாணவர்​களுக்கு திறன் பயிற்சி அளிக்​கப்​படும்.

இத்​திட்​டத்​துக்கு முதல்​கட்​ட​மாக ரூ.100 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. 38 தொழிற்​பிரிவு​களில் 500-க்​கும் மேற்​பட்ட பயிற்சி நிறு​வனங்​கள் வாயி​லாக 165 பயிற்​சிகள் வழங்​கப்​படும்” என்​றார்.

விழா​வில் அமைச்​சர்​கள் பி.கே. சேகர்​பாபு, ராஜகண்​ணப்​பன், மேயர் ஆர்​.பிரி​யா, உயர்​கல்​வித்துறை செயலர் பொ.சங்​கர், தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக்​கழக மேலாண் இயக்​குநர் கிராந்​தி​கு​மார் பாடி, சிஐஐ தலை​வர் உன்னி கிருஷ்ணன் உள்​ளிட்​டோர் கலந்​து​ கொண்​டனர். சிறப்பு திட்ட செய​லாக்​கத்​ துறை​யின்​ செயலர்​ பிரதீப்​ யாதவ்​ நன்​றி கூறி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.