வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரியில் இன்று கனமழை

சென்னை: திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று மத்திய மேற்கு மற்றும் அதையொட்டியுள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். தொடர்ந்து 48 மணி நேரத்தில் இது வலுவடையக்கூடும்.

தென்னிந்தியப் பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நில​வு​கிறது. இவற்​றின் தாக்​கத்​தால் வட தமிழகத்​தின் சில இடங்​களி​லும், தென் தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களி​லும் இன்று இடி, மின்​னலுடன் கூடிய லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். திரு​வள்​ளூர், ராணிபேட்டை மற்​றும் நீல​கிரி மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் சில பகு​தி​களில் இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது அல்​லது மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது. அதி​கபட்ச வெப்​பநிலை 93.2 டிகிரி, குறைந்​த​பட்ச வெப்​பநிலை 77-78.8 டிகிரி பாரன்​ஹீட் அளவில் இருக்​கும்.

தென்​தமிழக கடலோரப் பகு​தி​கள், மன்​னார் வளை​குடா, குமரிக்கடல், தெற்கு மற்​றும் மத்​திய வங்​கக் கடல் பகு​தி​கள், அந்​த​மான் கடல் பகு​தி​கள், ஆந்​தி​ரா-ஒடிஸா கடலோரப் பகு​தி​களில் இன்று அதி​கபட்​ச​மாக மணிக்கு 65 கி.மீ. வேகத்​தில் பலத்த காற்​று​வீசக்​கூடும். எனவே, மீனவர்​கள் கட லுக்கு செல்ல வேண்​டாம் என அறி​வுறுத்​தப்​படு​கிறார்​கள். இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில்​ தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.