கரோனா, கல்வான் பிரச்சினைக்கு பிறகு இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமானப் போக்குவரத்து

புதுடெல்லி: இந்​தியா – சீனா இடையே நேரடி விமானப் போக்​கு​வரத்​தைத் தொடங்க இரு நாடு​களும் முடி​வெடுத்​துள்​ளன. கடந்த 2019-ம் ஆண்டு இந்​தியா – சீனா இடையே 539 நேரடி விமானங்​கள் இயக்​கப்​பட்​டன. ஏர் இந்​தி​யா, இண்​டிகோ, சைனா சதர்ன், சைனா ஈஸ்​டர்ன் விமானங்​கள் இயக்​கப்​பட்​டன.

அதன்​பின் கடந்த 2020-ம் ஆண்டு கரோனா வைரஸ் தொற்று காரண​மாக இரு நாடு​களிடையே சர்​வ​தேச விமானப் போக்​கு​வரத்து நிறுத்​தப்​பட்​டது. அதன்​பின் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்​தி​யா​வின் கல்​வான் பள்​ளத்​தாக்​கில் சீன வீரர்​கள் அத்​து​மீறி நுழைந்து கை கலப்​பில் ஈடு​பட்​டனர். இதனால் இரு நாடு​களுக்கு இடை​யில் மீண்​டும் சச்​சரவு ஏற்​பட்​டது. இதனால் இந்​தியா – சீனா நேரடி விமானப் போக்​கு​வரத்து நடை​பெற​வில்​லை.

இந்​நிலை​யில், சீனா, இந்​தி​யா​வுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதி​கபட்ச வரி விதித்​துள்​ளார். இதனால் இரு நாடு​களும் அமெரிக்கா​வுக்கு பதிலடி கொடுக்க திட்​ட​மிட்​டுள்​ளன. சீன வெளி​யுறவுத் துறை அமைச்​சர் வாங் யீ நேற்​று​முன்​தினம் பிரதமர் மோடியை டெல்​லி​யில் சந்​தித்து பேசி​னார். இதையடுத்து இந்​தியா – சீனா இடையே விரை​வில் நேரடி விமானப் போக்​கு​வரத்​தைத் தொடங்க முடி​வெடுக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து சிவில் விமானப் போக்​கு​வரத்து துறை அதி​காரி​கள் கூறும்​போது, “சீ​னா வைப் பொறுத்​தவரை​யில் நாளைக்கே விமானப் போக்​கு​வரத்​தைத் தொடங்க முடி​யும். ஆனால், இந்​திய விமானங்​களை சீனா​வுக்கு இயக்​கு​வதற்கு முன்​ன​தாக சில நடை​முறை​களை பூர்த்தி செய்ய வேண்டி உள்​ளது.

எனவே, இரு நாடு​களும் எப்​போது விமானப் போக்​கு​வரத்​தைத் தொடங்க முடி​யுமோ, அப்​போது தொடங்​கலாம் என்று முடி​வெடுக்​கப்​பட்​டுள்​ளது. அதற்​காக நீண்ட நாட்​கள் எடுத்​துக் கொள்ள முடி​யாது. ஒரு மாதத்​துக்​குள் விமானங்​களை இயக்க நடவடிக்கை எடுக்​கப்பட வேண்​டும்” என்​றனர்.

இந்​தி​யா- சீனா இடையே விமான சேவை ஒப்​பந்​தம் (ஏஎஸ்ஏ) மாற்றி அமைக்க வேண்​டி​யுள்​ளது. இதுகுறித்து இரு நாடு​களும் ஆலோ​சனை நடத்த வேண்​டி​யுள்​ளது. அல்​லது தற்​போதுள்ள ஒப்​பந்​தத்​தைப் பின்​பற்​றியே விமானங்​களை இயக்​கலாமா என்று ஆலோ​சனை நடத்​தப்​பட்டு வரு​கிறது.

ஷாங்​காய் ஒத்​துழைப்பு மாநாடு சீனா​வின் டியான்​ஜின் நகரில் இந்த மாத இறு​தி​யில் நடை​பெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்​கேற்க சீனா செல்​கிறார். அப்​போது இரு நாடு​களிடையே நேரடி விமானப் போக்​கு​வரத்​தைத் தொடங்​கு​வது குறித்த அறி​விப்பு வெளி​யாகும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.