அக். 3-ல் பிஹார் பேரவைத் தேர்தல் அட்டவணை

புதுடெல்லி: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான அட்​ட​வணை அக்​டோபர் 3-ம் தேதி வெளி​யிடப்​படும். அன்​றைய தினம் 8 சட்டப் பேர​வைத் தொகு​தி​களுக்​கான இடைத்​தேர்​தல் அட்​ட​வணை​யும் வெளி​யிடப்​படும் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. பிஹார் சட்​டப்​பேர​வை​யின் பதவிக் காலம் வரும் நவம்​பர் 22-ம் தேதி​யுடன் நிறைவடைகிறது.

இந்த சூழலில் அக்​டோபர் 3-ம் தேதி பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான அட்​ட​வணை வெளி​யிடப்​படும் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. அதோடு ஜம்மு காஷ்மீரில் பட்​காம், நாக்​ரோட்டா தொகு​தி​கள், ராஜஸ்​தானில் அன்டா தொகு​தி, ஜார்க்கண்டில் காட்​ஷிலா தொகு​தி, தெலங்​கா​னா​வின் ஜுபிளி ஹில்ஸ் தொகு​தி, பஞ்​சாபில் தரண் தரண் தொகு​தி, மிசோரமில் தம்பா தொகு​தி, ஒடி​சா​வில் நவு​பாடா தொகுதி ஆகிய 8 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்​கான இடைத்தேர்​தல் அட்​ட​வணை​யும் வெளி​யிடப்​படும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

பிஹார் கள நில​வரம்: பிஹாரில் முதல்​வர் நிதிஷ் குமார் தலை​மை​யில் ஐக்​கிய ஜனதா தளம், பாஜக கூட்​டணி (என்​டிஏ) ஆட்சி நடத்தி வரு​கிறது. வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் என்​டிஏ கூட்​ட​ணிக்​கும் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி), காங்​கிரஸ் அடங்​கிய இண்​டியா கூட்​ட​ணிக்​கும் இடையே நேரடி போட்டி நில​வு​கிறது.

பிஹாரில் மொத்​தம் 243 தொகு​தி​கள் உள்​ளன. ஆளும் என்​டிஏ கூட்​ட​ணி​யில் ஐக்​கிய ஜனதா தளம் 102, பாஜக 101 தொகு​தி​களில் போட்​டி​யிடும் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. மீத​முள்ள தொகு​தி​கள் என்​டிஏ கூட்​ட​ணி​யில் உள்ள எல்​ஜேபி, இந்​துஸ்​தான் அவாமி மோர்ச்சா கட்​சிகளுக்கு ஒதுக்​கப்பட உள்​ளன.

கடந்த 2020 பேர​வைத் தேர்​தலில் ஆர்​ஜேடி 144, காங்​கிரஸ் 70, மீத​முள்ள தொகு​தி​களில் கூட்​டணி கட்​சிகள் போட்​டி​யிட்​டன. இந்த முறை இண்​டியா கூட்​ட​ணி​யில் இதே எண்​ணிக்​கை​யில் தொகு​தி​கள் ஒதுக்​கப்​படலாம் என்று தெரி​கிறது. மேலும் பிர​சாந்த் கிஷோரின் ஜன்​சு​ராஜ் கட்​சி, ஓவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் கட்​சி, மாயா​வ​தி​யின் பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி ஆகிய கட்​சிகள் தனித்​தனி​யாக போட்​டி​யிடு​கின்​றன.

கடந்த 2020-ம் ஆண்டு பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ஏஐஎம்​ஐஎம் கட்சி 20 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டு, 5 தொகு​தி​களைக் கைப்​பற்​றியது. எனினும் கடந்த 2022-ம் ஆண்​டில் ஏஐஎம்​ஐஎம் கட்​சி​யின் 4 எம்​எல்​ஏக்​கள் ஆர்​ஜேடி​யில் இணைந்​தனர். வரும் தேர்​தலில் ஏஐஎம்​ஐஎம் கட்சி மீண்​டும் 20 தொகு​தி​களில் களமிறங்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

470 மத்​திய பார்​வை​யாளர்​கள்: பிஹார் தேர்​தல் மற்​றும் 8 தொகு​தி​களின் இடைத்​தேர்​தலுக்​காக 470 மத்​திய பார்​வை​யாளர்​களை தேர்​தல் ஆணை​யம் நியமித்​துள்​ளது. இதில் 320 பேர் ஐஏஎஸ் அதி​காரி​கள் ஆவர். 60 பேர் ஐபிஎஸ், 90 பேர் ஐஆர்​எஸ் அதி​காரி​கள் ஆவர். இதுகுறித்து தேர்​தல் ஆணை​யம் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “தேர்​தலின்​போது நேர்​மை, நம்​பகத்​தன்​மையை உறுதி செய்​யும் பொறுப்பு மத்​திய பார்​வை​யாளர்​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டு உள்​ளது” என்​று தெரிவி​க்​கப்​பட்​டு உள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.