நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: நவி மும்பை சர்​வ​தேச விமான நிலை​யம், 3-ம் கட்ட மும்பை மெட்ரோ திட்​டத்தை பிரதமர் நரேந்​திர மோடி இன்று தொடங்கி வைக்​கிறார்.

மகா​ராஷ்டி​ரா​வின் நவி மும்​பை​யில் ரூ.19,650 கோடி செல​வில், 1,160 ஹெக்​டேர் பரப்​பள​வில் சர்​வ​தேச விமான நிலை​யம் கட்​டப்​பட்டு உள்​ளது. இந்த விமான நிலை​யத்​தின் முதல்​கட்ட திட்​டப் பணி​கள் நிறைவு பெற்​றிருக்​கிறது. இதன்​மூலம் ஆண்​டுக்கு 2 கோடி பேர் பயணம் மேற்​கொள்ள முடி​யும். மேலும் 4-ம் கட்ட திட்​டப் பணி​கள் அடுத்​தடுத்து நிறைவேற்​றப்பட உள்​ளன. இவை நிறைவடை​யும்​போது ஆண்​டுக்கு 9 கோடி பேர் வரை பயணம் மேற்​கொள்ள முடி​யும். வரும் 2030-ம் ஆண்​டில் நவி மும்பை சர்​வ​தேச விமான நிலை​யம் முழு​மை​யாக செயல்​படத் தொடங்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

மூன்​றாம் கட்ட மும்பை மெட்ரோ ரயில் திட்​டப் பணி​கள் ரூ.12,200 கோடி​யில் மேற்​கொள்​ளப்​பட்டு உள்​ளது. இதன்​படி ஆச்​சார்யா அத்ரே சவுக் முதல் கபே பரேட் வரை புதிய மெட்ரோ வழித்​தடம் அமைக்​கப்​பட்டு உள்​ளது. இந்த சூழலில் பிரதமர் நரேந்​திர மோடி இன்று பிற்​பகல் மும்பை செல்​கிறார். அப்​போது நவி மும்பை சர்​வ​தேச விமான நிலை​யத்​தின் முதல் முனை​யம் மற்​றும் 3-வது கட்ட மும்பை மெட்ரோ ரயில் திட்​டத்தை அவர் தொடங்கி வைக்​கிறார்.

இங்​கிலாந்து பிரதமருடன் சந்​திப்பு பிரதமர் நரேந்​திர மோடி​யின் அழைப்​பின்​பேரில் இங்​கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்​மர் அரசு முறை பயண​மாக இந்​தியா வரு​கிறார். மும்​பை​யில் முகாமிடும் அவர், நாளை காலை பிரதமர் நரேந்​திர மோடியை சந்​திக்​கிறார். அன்​றைய தினம் காலை இங்​கிலாந்து பிரதமர் ஸ்டார்​மருக்கு பிரதமர் மோடி சிறப்பு விருந்து அளிக்​கிறார். பிற்​பகலில் இரு நாடு​களின் தலை​வர்​களும் முக்​கிய பேச்​சு​வார்த்தை நடத்த உள்​ளார். பின்​னர் மும்​பை​யில் நடை​பெறும் பின்​டெக்​ விழா​வில்​ இரு​வரும்​ பங்​கேற்​கின்​றனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.