கொலை திட்டத்துடன் பதுங்கிய ரவுடியை நண்பருடன் கைது செய்த போலீஸ்: காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டு

சென்னை: எழும்​பூரில் கொலை திட்​டத்​துடன் பதுங்​கிய ரவுடியை போலீ​ஸார் கைது செய்​தனர். அவரது நண்​பரும் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். எழும்​பூர் பகு​தி​யில் கொலை செய்​யும் நோக்​கத்​துடன் 2 பேர் கத்​தி​யுடன் பதுங்​கி​யிருப்​ப​தாக போலீ​ஸாருக்கு ரகசி​யத் தகவல் கிடைத்​தது.

இதையடுத்து காவல் கட்​டுப்​பாட்டு அறை உதவி ஆய்​வாளர் பிரின்ஸ் ஜோஸ்வா மற்​றும் எழும்​பூர் காவல் நிலைய தலை​மைக் காவலர் வினோத் ராஜ் ஆகியோர் எழும்​பூர் பகு​தி​யில் உள்ள வீடு ஒன்​றில் அதிரடி​யாக நுழைந்து சோதனை​யிட்​டனர்.

அப்​போது, அங்கு பதுங்​கி​யிருந்த விமல்​ராஜ் என்ற கபாலி, பிர​காஷ் ஆகிய இரு​வரை​யும் கைது செய்​தனர். அவர்​களிட​மிருந்து 3 பட்​டாக்​கத்​தி​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. விசா​ரணை​யில் அவர்​கள் இரு​வரும் எதிர் தரப்பை சேர்ந்த ஒரு​வரை கொலை செய்​யும் நோக்​கில் பதுங்​கி​யிருந்​தது தெரிய​வந்​தது.

பிர​காஷ் மீது ஏற்​கெனவே 20-க்​கும் மேற்​பட்ட குற்ற வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளது குறிப்​பிடத்​தக்​கது. இதையடுத்​து, விழிப்​புடன் செயல்​பட்டு கொலை சதியை தடுத்து நிறுத்​திய இரு போலீ​ஸாரை​யும் காவல் ஆணை​யர் அருண் நேரில் அழைத்​துப் பாராட்​டினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.