பிஹார் தேர்தல் கருத்துக் கணிப்பு: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு

புதுடெல்லி: பிஹாரில் அடுத்த மாதம் 6 மற்​றும் 11-ம் தேதி​களில் 2 கட்​டங்​களாக சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெறுகிறது. வாக்கு எண்​ணிக்கை 14-ம் தேதி நடை​பெறவுள்​ளது. இந்​நிலை​யில் இந்​தியா டுடே சார்​பில் பிஹாரில் தேர்​தலுக்கு முந்​தைய கருத்​துக் கணிப்பு நடத்​தப்​பட்​டது. அதன் முடிவு​கள் நேற்று வெளி​யிடப்​பட்​டன. அதில் கூறி​யிருப்​ப​தாவது: பிஹார் மாநிலத்​தில் தேர்​தல் ஆணை​யம் மேற்​கொண்ட வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்​கை​யால், தே.ஜ கூட்​டணி பலனடை​யும் வாய்ப்​பு​கள் உள்​ள​தாக தெரிய வரு​கிறது.

பாஜக மற்​றும் ஐக்​கிய ஜனதா தளம் தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு இந்த தேர்​தலில் வெற்றி வாய்ப்​புள்​ள​தாக 46 சதவீதம் பேர் கருத்து தெரி​வித்​துள்​ளனர். ராஷ்டிரிய ஜனதா தளம் தலை​மையி​லான மெகா கூட்​டணி 21.7 சதவீத வாக்​கு​களு​டன் 2-வது இடத்​தில் உள்​ளது. இவ்​வாறு இந்​தியா டுடே கருத்​துக் கணிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​தியா டுடே சார்​பில் நாடு முழு​வதும் ஏடுக்​கப்​பட்ட கருத்​துக் கணிப்​பில், வாக்​காளர் பட்​டியலில் மேற்​கொள்​ளப்​பட்ட சிறப்பு திருத்​தம் மூலம் குடிமக்​கள் மட்​டுமே வாக்​களிக்க முடி​யும் என்​பது உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது என 58 சதவீதம் பேர் தெரி​வித்​திருந்​தனர். ஆனால், இது ஆளும் கட்​சிக்கு சாதக​மான நடவடிக்கை என 17 சதவீதம் பேர் கூறி​யிருந்​தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.