கிறிஸ்துமஸ் பண்டிகை, அரையாண்டு விடுமுறை: விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பு

சென்னை: டிசம்​பர் மாதத்​தில் கிறிஸ்​து​மஸ், அரை​யாண்டு தேர்வு விடு​முறையை முன்​னிட்டு சொந்த ஊர் செல்​பவர்​கள் ரயில்​களில் விறு​விறுப்​பாக முன்​ப​திவு செய்து வரு​கின்​றனர்.

கிறிஸ்​து​மஸ் பண்​டிகை வரும் டிச.25-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது. இது​போல, பள்​ளி​களில் அரை​யாண்டு தேர்​வு​களும் முடிந்து விடு​முறை வரு​கிறது. இதற்​கிடையே, 60 நாட்​களுக்கு முன்பு ரயில்​களில் முன்​ப​திவு செய்​யும் வசதி இருப்​ப​தால், டிச.23, 24-ம் தேதி​களில் வெளியூர் செல்ல திட்​ட​மிட்​டுள்​ளவர்​கள் கடந்த 2 நாட்​களாக முன்​ப​திவு செய்து வரு​கின்​றனர்.

முன்​ப​திவு தொடங்​கிய சில நிமிடங்​களில் கன்​னி​யாகுமரி, நாகர்​கோ​வில், நெல்​லை, தூத்​துக்​குடி, செங்​கோட்​டை, பாண்​டியன், மலைக்​கோட்டை உள்​ளிட்ட விரைவு ரயில்​களில் தூங்​கும் வசதி பெட்​டிகளுக்​கான முன்​ப​திவு முடிந்​தது. இதன்​பிறகு, அடுத்த 30 நிமிடங்​களில் ‘ஏசி’ பெட்​டிகளி​லும் முன்​ப​திவு முடிந்​து, காத்​திருப்​போர் பட்​டியல் வந்​தது.

இருப்​பினும், வந்தே பாரத், தேஜஸ், வைகை, குரு​வாயூர் உள்​ளிட்ட விரைவு ரயில்​களில் மட்​டும் கணிச​மாக டிக்​கெட்​டுகள் இருந்​தன. இதேபோல, கோவை தடத்​தில் செல்​லும் வந்தேபாரத் உள்ளிட்ட அதிவிரைவு ரயில்களி​லும் கணிச​மான டிக்​கெட்​ இருந்​தன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.