இந்தியா- பாக். போரை நிறுத்தியதாக ட்ரம்ப் கூறுவதை மறுக்க பிரதமர் மோடிக்கு தைரியமில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு 

நாலந்தா: ‘‘இந்​தியா – பாகிஸ்​தான் இடையே​யான போரை நிறுத்​தி​ய​தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறு​வதை மறுக்​கும் தைரி​யம் பிரதமர் மோடிக்கு இல்​லை’’ என ராகுல் காந்தி கூறி​யுள்​ளார்.

பிஹார் மாநிலத்​தில் நடை​பெறவுள்ள சட்​டப்​பேரவை தேர்​தலை முன்​னிட்டு நாளந்​தா​வில் நடை​பெற்ற தேர்​தல் பிரச்​சார கூட்​டத்​தில் மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி பேசி​ய​தாவது:

பிஹாரில் தற்​போது வினாத்​தாள் கசிவு சம்​பவங்​கள் நடை​பெறுகின்​றன. இங்கு சுகா​தார கட்​டமைப்பு மிக மோச​மாக உள்​ளது. பிஹாரில் தற்​போது நிலங்​களே இல்​லை. அனைத்​தை​யும், ஒரு தொழில் நிறு​வனத்​துக்கு குறைந்த விலைக்கு மாநில அரசு வழங்​கி​விட்​டது.

கடந்த மக்​களவை தேர்​தலில் வாக்கு திருட்டு மூலம் தே.ஜ.கூட்​டணி மத்தியில் ஆட்​சிக்கு வந்​தது. அம்​பேத்கர் உரு​வாக்​கிய அரசி​யல் சாசனத்தை ஒழிப்​ப​தில் தே.ஜ.கூட்​ட​ணி​யும், பிரதமரும் உறு​தி​யாக உள்​ளனர்.

இந்​தியா – பாகிஸ்​தான் இடையே​யான போரை நிறுத்​தி​ய​தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல முறை கூறி​விட்​டார். இதை மறுக்​கும் தைரி​யம் நமது பிரதமருக்கு இல்​லை.

பிஹாரில் இண்​டியா கூட்​டணி ஆட்​சிக்கு வந்​தால், அது விவ​சா​யிகள், தொழிலா​ளர்​கள், தலித்​துகள் மற்​றும் பின்​தங்​கிய​வர்​கள் மற்​றும் அனைத்து சமு​தா​யத்​தினரின் அரசாக இருக்​கும். உலகின் மிகச் சிறந்த பல்​கலைக்​கழகம் நாளந்​தா​வில் அமை​யும். இவ்​வாறு ராகுல்​ காந்​தி கூறி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.