ரூ.650 கோடி திரட்டி கொள்ளை: பிரசாந்த் கிஷோர் மீது புகார்

பாட்னா: பிஹார் சுயேச்சை எம்​.பி. ராஜேஷ் ரஞ்​சன் என்​கிற பப்பு யாதவ், தனி​யார் தொலைக்​காட்​சிக்கு அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது:

தேர்​தல் வியூ​கம் வகுக்க மாநிலத்​துக்கு மாநிலம் ஓடிய​வர் பிர​சாந்த் கிஷோர். அவர் பிஹார் வந்து முதல்​வர் நிதிஷ் குமாரை வளர்ப்​புத் தந்தை என்று அழைத்து இங்​கேயே தங்​கு​வ​தாக கூறி​னார். பிறகு ஜெகன்​மோகன், மம்தாவிடம் ஓடி​னார்.

கன்​சல்​டன்சி சேவை மூலம் தனக்கு பணம் வரு​வ​தாக பிர​சாந்த் கிஷோர் கூறுகிறார். ஆனால் அவர் கூறும் நிறு​வனத்​தின் நிதி அறிக்​கை​யில் இவருக்கு வழங்​கப்​பட்ட தொகை பற்​றிய விவரம் இல்​லை. அப்​படி​யெனில் இவருக்கு பணம் கொடுத்​தது யார்? பிஹார் தேர்​தலுக்​காக பிர​சாந்த் கிஷோர் ரூ.650 கோடி திரட்​டி​யுள்​ளார். இதன் மூலம் பிஹாரை கொள்​ளை​யடித்​துள்​ளார். இவ்​வாறு பப்​பு யாதவ்​ கூறி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.