பாரீஸ்,
பாரீஸ் ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீரர் ஜானிக் சிம்னெர் (இத்தாலி) 6-4, 7-6 (7-4) என்ற நேர் செட்டில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம்மை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார்.
ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் இத்தகைய மாஸ்டர்ஸ் போட்டியில் சின்னெர் கைப்பற்றிய 5-வது பட்டம் இதுவாகும். அவர் ரூ.9¾ கோடியை பரிசாக அள்ளினார்.
இந்த வெற்றியின் மூலம் 24 வயதான ஜானிக் சிம்னெர் உலக தரவரிசையில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறினார். இதுவரை முதலிடத்தில் இருந்த ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
Related Tags :