மூத்த குடிமக்களின் வாழ்வை மேம்படுத்தும் ‘அன்புச்சோலை’ திட்டம்: திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: புதுக்​கோட்​டை, திருச்​சி​யில் 2 நாள் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​ளும் முதல்​வர் ஸ்டா​லின், மூத்த குடிமக்​களின் வாழ்வை மேம்​படுத்​தும் ‘அன்​புச்​சோலை’ திட்​டத்தை இன்று தொடங்​கு​கிறார்.

புதுக்​கோட்​டை, திருச்சி மாவட்டங்​களில் முதல்​வர் ஸ்டா​லின் 2 நாள் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்கிறார். புதுக்​கோட்டை மாவட்​டம் கீரனூரில் இன்று காலை 11 மணி அளவில் நடை​பெறும் அரசுநலத்​திட்ட உதவி​கள் வழங்​கும் விழா​வில் பங்​கேற்​கிறார். இதில் ரூ.767 கோடி மதிப்​பீட்​டிலான புதிய திட்​டப்​பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி,​முடிவுற்ற பணி​களைத் தொடங்கி வைக்​கிறார். பயனாளி​களுக்கு நலத் திட்ட உதவி​களை​யும் வழங்​கு​கிறார்.

தமிழகத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் தலை​மையி​லான 5 ஆண்டுகால திமுக ஆட்​சி​யில் பல்​வேறு நலத்​திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்​டுள்​ளன. அந்த வகை​யில், மூத்த குடிமக்​களின் வாழ்வை மேம்​படுத்த, வீடு​களில் உள்ள முதி​ய​வர்​கள் மனம் சோர்​வடையாமல் ஊக்​கம் பெற உதவும் வகை​யில் ‘அன்​புச்​ சோலை’ என்ற புதிய திட்​டம் தொடங்​கப்பட உள்​ளது. திருச்​சி​யில் இன்று பகல் 12.30 மணி அளவில் நடை​பெறும் அரசு நிகழ்ச்​சி​யில் இந்த புதிய திட்​டத்தை முதல்​வர் ஸ்டா​லின் தொடங்கி வைக்​கிறார். இதற்​கான ஏற்​பாடு​கள் தயா​ராக உள்​ளன.

25 இடங்​களில் ‘அன்​புச்​சோலை’ – இந்த திட்​டத்​தின்​கீழ் தொடங்​கப்​படும் ‘அன்​புச்​சோலை – முதி​யோர் மனமகிழ் வள மையங்​கள்’ திட்​டம் மூத்த குடிமக்​களின் ஆரோக்​கிய​மான வளர்ச்​சி​யில் கவனம் செலுத்​தும் வகை​யில் சமூக மையங்​களாக செயல்​படும் என அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் மதுரை, கோவை, திருச்​சி, சேலம், திருப்பூர்​, ஈரோடு, தூத்​துக்​குடி, வேலூர், தஞ்​சாவூர், திண்​டுக்​கல் ஆகிய 10 மாநக​ராட்​சிகளில் தலா 2 மையங்​கள், தொழில் துறைமாவட்​டங்​களான ராணிப்பேட்​டை, கிருஷ்ணகிரி, சென்னைமாநக​ராட்​சி​யில் தண்டையார்​பேட்​டை, சோழிங்​கநல்​லூர், விரு​கம்​பாக்​கம் என மொத்​தம் 25 அன்​புச்​சோலை மையங்​கள் ரூ.10 கோடி மதிப்​பீட்​டில் தொடங்​கப்​படு​கின்​றன. இங்கு பொழுது​போக்கு அம்​சங்​கள், யோகா, நூல​கம் மற்​றும் முதி​யோ​ருக்​குத் தேவை​யான திறன் மேம்​பாடு சேவை​கள் வழங்​கப்பட உள்​ளன.

தமிழக அரசின் நிதி​யுத​வி​யுடன், மூத்த குடிமக்​களின் நலனுக்​கான பல்​வேறு அம்​சங்​கள் கொண்ட அன்​புச்​சோலை மையங்​கள் பகலில் மட்​டும் செயல்​படும். இந்த பராமரிப்பு மையங்​களில், முதி​யோர் தோழமை மற்​றும் அர்த்தமுள்ள செயல்​பாடு​களில் ஈடு​படலாம். இந்த அன்​புச்​சோலை மையத்​துக்கு மு​தி​யோர்​ சென்​றுவர ஏது​வாக, போக்​கு​வரத்​து வசதி​யுள்​ள இடங்​களில்​ இந்​த மையங்​கள்​ அமைக்​கப்​படுவது குறிப்​பிடத்​தக்​கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.