டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கு: அல் பலா பல்கலை.யின் 2 மருத்துவர்கள் உட்பட 3 பேரிடம் போலீஸார் தீவிர விசாரணை

புதுடெல்லி: டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்​கில் அல் பலா பல்​கலைக்​கழகத்​தின் 2 மருத்​து​வர்​கள் உள்​ளிட்ட மேலும் 3 பேரை பிடித்து போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

டெல்லி செங்​கோட்டை அரு​கில் கடந்த 10-ம் தேதி மாலை ஒரு கார் வெடித்து சிதறிய சம்​பவம் நாடு முழு​வதும் அதிர்​வலைகளை ஏற்​படுத்​தி​யது. இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்​தி​ய மருத்​து​வர் உமர் நபி ஹரி​யானா மாநிலம் பரி​தா​பாத்​தில் உள்ள அல் பலா பல்​கலைக்​கழக மருத்​து​வக் கல்​லூரி​யில் பணி​யாற்றி வந்தவர். இது தொடர்​பாக 3 மருத்​து​வர்​கள் உட்பட 8 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இந்​நிலை​யில் ஹரி​யா​னா​வின் தவுஜ், நூஹ் மற்​றும் அதை ஒட்​டிய பகு​தி​களில் டெல்லி போலீ​ஸார் மற்​றும் மத்​திய அமைப்​பு​களின் அதி​காரி​கள் வெள்​ளிக்​கிழமை இரவு ஒருங்​கிணைந்த சோதனை மேற்​கொண்​டனர். இந்த சோதனை​யில் உமர் நபிக்கு தெரிந்த 2 மருத்​து​வர்​கள் உள்​ளிட்ட 3 பேரை டெல்லி போலீ​ஸார் தங்​கள் பிடி​யில் கொண்டு வந்​தனர்.

இதுகுறித்து அதி​கார வட்​டாரங்​கள் கூறிய​தாவது: ஹ் பகு​தி​யில் அல் பலா பல்​கலைக்​கழகத்தை சேர்ந்த முகம்​மது, முஸ்​தாகிம் என்ற மருத்​து​வர்​களை என்ஐஏ உதவி​யுடன் டெல்லி போலீ​ஸார் தங்​கள் பிடி​யில் கொண்டு வந்​தனர். இவர்​கள் உமர் நபி​யின் நெருங்​கிய நண்​பர்​கள். மேலும் தீவிர​வாத சதி வழக்​கில் கைது செய்​யப்​பட்​டுள்ள மருத்​து​வர் முஜாம்​மில் உடன் தொடர்​பில் இருந்​துள்​ளனர்.

இவர்​களில் ஒரு​வர், கார் குண்டு வெடிப்பு நாளில் டெல்​லி​யில் இருந்​துள்​ளார். இரு​வருக்​கும் இந்த வழக்​கில் தொடர்பு உள்​ளதா என்​பது குறித்து தொடர்ந்து விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. இது​போல் நூஹ் பகு​தி​யில் உரிமம் இல்​லாமல் உரம் விற்​பனை செய்த தினேஷ் என்​கிற தாப்பு போலீஸ் பிடி​யில் உள்​ளார். வெடிகுண்டு தயாரிக்க பயன்​படும் என்​பிகே உரம் வாங்க தீவிர​வா​தி​கள் ரூ.3 லட்​சம் செல​விட்​டிருப்​பது தெரிய​வந்​த​தால் அவர்​களுக்கு தினேஷ் உரம் விற்​பனை செய்​தாரா என்​பது குறித்து போலீ​ஸார் வி​சா​ரிக்கின்​றனர். இவ்​வாறு அந்த வட்டாரங்கள் தெரி​வித்​தன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.