குடும்ப பிரச்சினை பற்றி விசாரணைக்கு உத்தரவிட பிரதமர் மோடிக்கு லாலு மகன் தேஜ் பிர​தாப் கோரிக்கை

பாட்னா: பிஹார் தேர்​தலில் முன்​னாள் முதல்​வர் லாலு பிர​சாத் யாத​வின் ராஷ்ட்​ரிய ஜனதா தளம் படு​தோல்வி அடைந்​தது. இத்​தோல்வி அவரது குடும்​பத்​தை​யும் பாதித்​துள்​ளது.

லாலு​வுக்கு சிறுநீரகம் தானம் செய்​தவரும் அவரது இரண்​டாவது மகளு​மான ரோகிணி ஆச்​சார்யா, தனது தம்பி தேஜஸ்​வி​யின் கூட்​டாளி​களால் தாம் பெற்​றோர் வீட்​டில் இருந்து வெளி​யேற்​றப்​பட்​ட​தாக கடந்த ஞாயிற்​றுக்​கிழமை குற்​றம் சாட்​டி​னார்.

இதற்கு முன் லாலு​வின் மூத்த மகன் தேஜ் பிர​தாப் கடந்த மே மாதம் கட்​சி​யில் இருந்​தும் குடும்​பத்​தில் இருந்தும் நீக்​கப்​பட்​டார். தனிக்​கட்சி தொடங்கி பிஹார் தேர்​தலில் 22 தொகு​தி​களில் போட்​டி​யிட்ட அவர் அனைத்து இடங்​களி​லும் தோல்வி அடைந்​தார்.

இந்​நிலை​யில் தேஜ் பிர​தாப் வெளி​யிட்ட சமூக வலை​தளப் பதி​வில், “எனது சகோ​தரிக்கு ஏற்​பட்ட அவமானத்தை எந்த சூழ்​நிலை​யிலும் நான் பொறுத்​துக்​கொள்ள மாட்​டேன். துரோகி​கள் தங்​கள் தவறுகளுக்கு விலை கொடுக்க வேண்​டி​யிருக்​கும். எனது பெற்​றோரை மன ரீதி​யாக​வும், உடல் ரீதி​யாக​வும் அழுத்​தத்​தில் வைத்​திருக்க சிலர் முயற்​சிப்​ப​தாக கூறப்​படு​கிறது. இந்த விவ​காரத்​தில் பாரபட்​சமற்ற வி​சா​ரணைக்கு உத்தரவிட வேண்​டும் என்று பிரதமர் மோடி, அமைச்​சர் அமித் ஷா மற்​றும் பிஹார் அரசை கேட்​டுக்​கொள்​கிறேன்’’ என்​று கூறி​யுள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.