தங்கம் திருட்டை கண்டுபிடிக்க முடியாத வழக்குகளில், திருடு போன நகையின் மதிப்பில் 30% தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வீடு புகுந்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக தென் மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையில் இந்த வரலாற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி. புகழேந்தி, “இது அரசின் நல்லெண்ண செயல் அல்ல, பொதுச் […]