குடியேற்றத்திற்காக விண்ணப்பிக்க 19 நாடுகளுக்கு அமெரிக்கா தடை

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீது டிரம்ப் நிர்வாகம் கடுமையாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அவர்களை கைது செய்து நாடு கடத்தப்படுகிறார்கள்.

இந்தநிலையில் அமெரிக்காவில் குடியுரிமை பெறுவதற்காக விண்ணப்பிக்க 19 நாடுகளுக்கு தடைவிதித்து டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, ஈகுவடாரில் கினி, எரித்ரியா, ஹைதி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன், புரூண்டி, கியூபா, லாவோஸ், சியாரா லியோன், டோகா, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா உள்ளிட்ட 19 நாடுகளை சேர்ந்த குடிமக்கள் அமெரிக்கா குடியுரிமை பெற விண்ணப்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.