15 மாநிலத்தில் 57 எம்பி பதவிக்கு தேர்தல்; காங்கிரசுக்கு 8 மாநிலத்தில் 11 இடங்கள் உறுதி? ஓரிரு நாளில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

புதுடெல்லி: நாடு முழுவதும் 15 மாநிலத்தில் 57 எம்பி பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரசுக்கு 8 மாநிலத்தில் 11 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஓரிரு நாட்களில் வேட்பாளர்கள் பட்டியல் ெவளியாக வாய்ப்புள்ளது. தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்கள் உள்பட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம், வரும் ஜூன் மாதம் 21ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் வெவ்வேறு நாள்களில் நிறைவடைகிறது. இதையடுத்து 57 இடங்களுக்கு ஜூன் மாதம் 10ம் … Read more

நண்பராக வந்து கலைஞர் சிலையை திறந்து வைத்துள்ளார் குடியரசு துணை தலைவர்; முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: நண்பராக வந்து கலைஞர் சிலையை திறந்து வைத்துள்ளார் குடியரசு துணை தலைவர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். வாழ்வின் ஒரு பொன் நாளாக, எந்நாளும் மகிழ்ந்து போற்றும் நாளாக இந்நாள் அமைந்துள்ளது. கருணாநிதியின் கனவு கோட்டையாக உள்ள இடத்தில் அவரது சிலை திறக்கப்பட்டுள்ளது. பெரியார் மற்றும் அண்ணாவின் சிலைக்கு இடையில் கருணாநிதியின் சிலை இருப்பது சிறப்பு வாய்ந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

8 ஆண்டுகால ஆட்சியில் பொதுமக்களுக்கு தலைகுனிவு ஏற்படக்கூடிய எந்த செயலையும் செய்யவில்லை!: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

காந்திநகர்: பொதுமக்களுக்கு தலைக்குனிவை  ஏற்படுத்தும் வகையில் கடந்த 8 ஆண்டுகளில் தனது அரசு எதையும் செய்யவில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் சென்றுள்ளார். ராஜ்கோட்டில் பன்னோக்கு நவீன மருத்துவமனையை திறந்து வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 8 ஆண்டுகளில் ஏழைகள், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர், பெண்கள் பயனடையும் வகையில் பல்வேறு நலத்திட்ட … Read more

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு

சென்னை: சென்னையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கலைஞரின் முழு உருவச்சிலை திறக்கப்பட்டது. கலைஞரின் முழு உருவச்சிலையை குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். முதலமைச்சராக 5 முறை பதவி வகித்த கலைஞருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. 16 அடி உயரமுள்ள வெண்கல சிலையின் கீழ் அமைந்துள்ள 14 அடி உயர பீடத்தில், கலைஞரின் 5 கட்டளைகள் பொறிக்கப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை; திகார் சிறையின் மூத்த கைதியான மாஜி முதல்வர்..! ஏற்கனவே இருந்த சிறை எண்: 2ல் அடைப்பு

புதுடெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா, டெல்லி திகார் சிறையின் அதே சிறை எண்: 2ல் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளார். அரியானா முன்னாள் முதலமைச்சரும், இந்திய தேசிய லோக்தளம் (இன்எல்டி) தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலா (87), கடந்த 1993 முதல் 2006ம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சிபிஐயால் வழக்குபதியப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த டெல்லி சிபிஐ நீதிமன்றம், அவரை குற்றவாளி என்று அறிவித்தது. அதன் தண்டனை … Read more

பாமக தலைவர் அன்புமணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பாமக புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். சமூகநீதிப் பாதையில் பாட்டாளி மக்களின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பாடுபட வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.

குஜராத்தில் உலகின் முதல் நானோ யூரியா தொழிற்சாலையை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

காந்திநகர்: குஜராத் காந்திநகர் கலோலில் அமைக்கப்பட்டுள்ள உலகின் முதல் நானோ யூரியா தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். ஆலையில் ஒரு பை சிறுமணி யூரியாவிற்கு சமமாக 500 மி.லி. பாட்டிலில் நானோ யூரியா தயாரிக்கப்படுகிறது. நானோ யூரியா தொழிற்சாலை மூலம் போக்குவரத்து செலவுகள் குறைக்கப்படும், சிறு விவசாயிகள் பயன்பெறுவர் என பிரதமர் தெரிவித்தார். 

சான்றுபெறாத 124 மெ.டன் நெல்விதைகளை விற்பனை செய்ய தடை: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உத்தரவு

சென்னை: சான்றுபெறாத 124 மெட்ரிக் டன் நெல்விதைகளை விற்பனை செய்ய தடை  விதித்து எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உத்தரவிட்டார். டெல்டாவில் விதை விற்பனை நிலையங்களை சிறப்புக் குழுக்கள் ஆய்வு செய்ததில் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டது.

விபத்தில் கால் ஒன்றை இழந்த பள்ளிச் சிறுமிக்கு கல்வித்துறை மூலமாக செயற்கை கால்; பீகாரில் நெகிழ்ச்சி

பாட்னா: விபத்தில் கால் ஒன்றை இழந்த பிஹாரைச் சேர்ந்த 10 வயது பள்ளிச் சிறுமிக்கு அம்மாநில கல்வித்துறை மூலமாக செயற்கை கால் பொறுத்துப்பட்டுள்ளது. பிஹார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி சீமா. இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த விபத்து ஒன்றில் தனது இடது காலை இழந்திருக்கிறார். இருந்தாலும் படிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால், தனது கிராமத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு ஒற்றைக் காலுடன் துள்ளி துள்ளி பள்ளிக்குச் சென்று … Read more

ராஞ்சி விமான நிலையத்தில் சிறப்பு குழந்தைக்கு அனுமதி மறுப்பு: இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம்

டெல்லி: சிறப்பு குழந்தையை ஏற்றிச்செல்ல மறுத்த விவகாரத்தில் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மே 7ல் ராஞ்சி விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தில் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் நடவடிக்கை மேற்கொண்டது.