ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை தரப்பட்டது? எந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தார்கள் என்ற எந்த விவரமும் தெரியாது: ஓ.பி.எஸ். கைவிரிப்பு
சென்னை: ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை தரப்பட்டது? எந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தார்கள் என்ற எந்த விவரமும் தெரியாது என்று ஓ.பன்னீர்செல்வம் கைவிரித்துள்ளார். மெட்ரோ ரயில் திறப்பு விழாவுக்கு பின்னர் ஜெயலலிதாவை பார்க்கவில்லை. ஜெயலலிதா எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற விவரமும் எனக்கு தெரியாது. சொந்த ஊரில் இருந்தபோது நள்ளிரவில் உதவியாளர் மூலம் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தெரிந்துகொண்டேன் என்று ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டிருக்கிறார்.