விமான விபத்து; விசாரணை வெளிப்படையாக நடைபெறும் – டாடா குழும தலைவர்

புதுடெல்லி, குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட ‘ஏர் இந்தியா’ பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் ‘போயிங் 787-8 டிரீம்லைனர்’ விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்தனர். இந்த கோர விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயங்களுடன் உயிர் பிழைத்தார். விமானத்தில் இருந்த பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் இங்கிலாந்து நாட்டவர்கள், கனடாவை … Read more

டிஎன்பிஎல்: சேலத்திற்கு 178 ரன்கள் இலக்கு நிர்ணயித்த திருப்பூர்

சேலம் நடப்பு தமிழ்நாடு பிரீமியர் லீக் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதில் சேலத்தில் இன்று நடைபெற்றுவரும் 9வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இதில், டாஸ் வென்ற சேலம் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய திருப்பூர் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் துஷார் ரஹ்ஜா 28 பந்துகளில் 5 சிக்சர்கள், … Read more

தென்னாப்பிரிக்காவில் கனமழை, வெள்ளம்: 78 பேர் பலி

ஜோகன்ஸ்பெர்க், தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அம்மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். கனமழை, வெள்ளப்பெருக்கால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். கனமழையால் பலர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். கனமழையால் பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அந்நாட்டில் பெய்துவரும் … Read more

7 மாதமாக பெண் போலீசாரை ஆபாசமாக படம் பிடித்து ஆசைக்கு இணங்குமாறு மிரட்டல் – போலீஸ்காரர் கைது

மூணாறு, கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் பகுதியில் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணி புரியும் பெண் போலீஸ் ஒருவர் வண்டிப்பெரியார் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், “வண்டிப்பெரியார் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீசார் உடை மாற்றவும், கழிவறை செல்லவும் போலீஸ் குடியிருப்பு பகுதியில் ஒரு கழிவறையை பயன்படுத்தி வந்தனர். அந்த கழிவறையில் 4 ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண் போலீசார் உடை மாற்றும் … Read more

டிஎன்பிஎல்: சேலம் அணி பந்து வீச்சு தேர்வு

சேலம், தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 9ஆவது ஆட்டம் சேலத்தில் இன்று நடக்கிறது. இதில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் சேலம் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. 1 More update தினத்தந்தி Related Tags : டிஎன்பிஎல்  சேலம்  TNPL 2025  Salem 

ஆமதாபாத் விமான விபத்து: சீன அதிபர் ஜின்பிங் இரங்கல்

பீஜிங், ஆமதாபாத்தில் இருந்து நேற்று முன்தினம் லண்டன் கிளம்பிய விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து ெநாறுங்கியது. இதில் விமானத்தில் இருந்தவர்கள் உள்பட சுமார் 265 பேர் கொல்லப்பட்டனர். உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்த விபத்து தொடர்பாக சர்வதேச தலைவர்கள் இரங்கல் வெளியிட்டு உள்ளனர். அந்தவகையில் சீன அதிபர் ஜின்பிங்கும் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு தனது அனுதாபத்தை தெரிவித்து இருக்கிறார். அவர் தனது … Read more

விமான விபத்து நடந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பகவத் கீதை

காந்தி நகர், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து நேற்று மதியம் 1.39 மணியளவில் ஏர் இந்தியா விமானம் இங்கிலாந்தின் லண்டனுக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் 230 பயணிகள் 10 பணியாளர்கள், 2 விமானிகள் என மொத்தம் 242 பேர் பயணித்தனர். புறப்பட்ட சில நிமிடங்களில் விமான நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி மீது விமானம் விழுந்து வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 … Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: தென் ஆப்பிரிக்காவுக்கு 282 ரன்கள் இலக்கு

லண்டன், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 212 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ஸ்டீவன் சுமித், வெப்ஸ்டர் அரைசதம் அடித்தனர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா தொடக்க நாளில் 4 விக்கெட்டுக்கு 43 ரன்களுடன் ஊசலாடியது. கேப்டன் பவுமா (3 ரன்), டேவிட் பெடிங்ஹாம் (8 ரன்) களத்தில் … Read more

பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

பாரிஸ், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஐரோப்பிய நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவிக்க அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று பிரான்ஸ் சென்றார். அவர் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தார். இதனை தொடர்ந்து இன்று அவர் பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரி ஜீன் நியல் பெரொட்டை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, … Read more

மருத்துவ அவசர நிலை… எண்ணெய் கப்பலில் தவித்த இந்தியரை விரைந்து சென்று காப்பாற்றிய கடற்படை

புதுடெல்லி: சிங்கப்பூர் கொடியுடன் கூடிய ஈகிள் வெராக்ரூஸ் என்ற எண்ணெய் கப்பல் இன்று இந்திய பெருங்கடல் பகுதியில் வந்தபோது, அந்த கப்பலில் இருந்த ஒரு ஊழியருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரை உடனடியாக சிகிச்சைக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. மருத்துவ அவசரநிலை குறித்த செய்தி இந்திய கடற்படைக்கு கிடைத்தது. இதையடுத்து கொச்சியில் உள்ள ஐ.என்.எஸ். கருடா கப்பலில் இருந்து இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், நோயாளியை அழைத்து வருவதற்கு உதவி செய்வதற்காக ஐ.என்.எஸ். … Read more