வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு கூடுதல் பணியாளர்கள்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்

புதுடெல்லி, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள வாக்குச்சாவடி அதிகாரிகள் அதிக பணிச்சுமையால் அவதிப்படுகின்றனர். இதனால் தற்கொலை மற்றும் மரணம் என பலர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அதிகாரிகள் கூடுதல் பணிச்சுமையில் தவிக்கும் நிலையில், சிறப்பாக பணியாற்றாததற்காக அவர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது? என தேர்தல் கமிஷனுக்கு அறிவுறுத்த வலியுறுத்தி நடிகர் … Read more

ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி: கால்இறுதியில் இந்தியா-பெல்ஜியம் இன்று பலப்பரீட்சை

சென்னை, 14-வது ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் மதுரை ரேஸ்கோர்சில் உள்ள சர்வதேச ஆக்கி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 24 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடரில் லீக் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, இந்தியா உள்பட 8 அணிகள் கால்இறுதிக்கு முன்னேறின. மற்ற அணிகள் 9 முதல் 24-வது இடத்துக்கான ஆட்டங்களில் ஆடுகின்றன. இந்த நிலையில் சென்னையில் இன்று … Read more

உக்ரைன் போர் விவகாரம்: அமெரிக்க அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தது – புதின்

மாஸ்கோ, உக்ரைன்-ரஷியா போர் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப் மற்றும் டிரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர், மியாமி நகரில் இன்று உக்ரைன் அரசு செயலாளர் ருஸ்டெம் உமெரோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதற்கிடையில், அமெரிக்க அரசு அதிகாரிகளுடன் ரஷிய அதிபர் புதின் சுமார் 5 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இது குறித்து புதின் கூறுகையில், உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அரசுடன் நடத்திய … Read more

கணவர் இறந்த சோகத்தில் இளம்பெண், குழந்தையுடன் எடுத்த விபரீத முடிவு

நகரி, தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் சின்ன சங்கரம்பேட்டை மண்டலம் காஜாபூரைச் சேர்ந்தவர்கள் பிரவீன் கவுடு- அகிலா தம்பதி. கூலித்தொழிலாளியான இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை இருந்தது. பிரவீன் கவுடு உடல் நலக்குறைவால், கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்தார். இதனால் அகிலா மாமியார் வீட்டிலேயே குழந்தையுடன் இருந்து வந்தார். கணவர் இறந்த சோகத்தில் இருந்த அகிலாவை மறுமணம் செய்து கொள்ளுமாறு அவரது மாமியார் கூறினார். ஆனால் அவர் மறுமணத்துக்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. இந்தநிலையில் அகிலா நேற்றுமுன்தினம் … Read more

ஆஷஸ் 2வது டெஸ்ட்: டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு

பிரிஸ்பேன், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் இன்று பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) தொடங்குகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் … Read more

கொலை செய்துவிட்டு தலைமறைவான இந்தியர் குறித்து துப்புக்கொடுத்தால் ரூ.45 லட்சம் வெகுமதி – அமெரிக்கா அறிவிப்பு

நியூயார்க், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நசீர் ஹமீது (38 வயது) என்பவர் அமெரிக்காவின் நியூஜெர்சியில் வசித்து வந்தார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு தனது மனைவி சசிகலா மற்றும் 6 வயது மகன் அனிசை கொன்றுவிட்டு தலைமறைவானார். இதுகுறித்து அமெரிக்கா புலனாய்வு அமைப்பு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இவர் இந்தியாவில் பதுங்கி இருப்பதாக துப்பு கிடைத்தது. இந்த நிலையில் இந்தியாவில் பதுங்கி இருக்கும் நசீர் ஹமீது குறித்து துப்புக்கொடுத்தால் ரூ.45 லட்சம் (50 ஆயிரம் டாலர்கள்) … Read more

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குடும்ப உறவினர் – அதிர்ச்சி சம்பவம்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரை சேர்ந்த 14 வயது சிறுமியின் தாயார் கடந்த சில ஆண்டுகளுக்குமுன் உயிரிழந்தார். இதையடுத்து சிறுமியின் தந்தை கடந்த 2 ஆண்டுகளுக்குமுன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனால், யாருமின்றி தவித்து வந்த சிறுமி அவரது உறவினரான மாமா (வயது 35) வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், குடும்ப உறவினரான மாமாவே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த நபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து … Read more

தமிழக அணியின் கேப்டனாக ஜெகதீசன் நியமனம்

சென்னை, 18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் தொடர் ஆமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதன் ‘எலைட்’ பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன. இதில் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 3 தோல்வி என 4 புள்ளிகளுடன் தனது பிரிவில் கடைசி இடத்தில் தத்தளிக்கிறது. இதற்கிடையே, தமிழக அணியின் … Read more

என்னை கொல்ல ராணுவம் முயற்சி – இம்ரான்கான் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கானுக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ராவல் பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2 ஆண்டுகளாக சிறையில் உள்ள இம்ரான்கானை சந்திக்க குடும்பத்தினருக்கு சில மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர் சிறையில் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து இம்ரான்கானின் 5 சகோதரிகள் மற்றும் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இம்ரான் கான் நலமுடன் இருப்பதாக சிறைத்துறை தெரிவித்தது.இதற்கிடையே இம்ரான்கானை சந்திக்க அவரது … Read more

2 நாள் பயணமாக இன்று மாலை இந்தியா வருகிறார் ரஷிய அதிபர் புதின்

புதுடெல்லி, உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றான ரஷியா, இந்தியாவின் முக்கியமான நட்பு நாடாக நீண்ட காலமாக உள்ளது. உலகின் உச்ச தலைவர்களில் ஒருவராக கருதப்படும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடைசியாக கடந்த 2021-ம் ஆண்டு இந்தியா வந்தார். இதனிடையே உக்ரைன் மீதான ரஷியா நடத்தி வரும் போர் காரணமாக, புதின் மீது சர்வதேச கோர்ட்டு பிடிவாராண்டு பிறப்பித்தது. இதனால் வெளிநாட்டு பயணங்களை தவிர்த்தார். ரஷிய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சி … Read more