பக்ரைனில் இருந்து ஐதராபாத் வரும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி விமான நிலையத்துக்கு நேற்று திடீர் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பக்ரைனில் இருந்து ஐதராபாத் வரும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த விமானம் மும்பைக்கு திருப்பிவிடப்பட்டது. அங்கு தீவிர சோதனை செய்யப்பட்டதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது. இதையடுத்து விமான நிலைய போலீசார், மிரட்டல் அனுப்பப்பட்டிருந்த இ-மெயில் முகவரி குறித்து விசாரணையில் இறங்கி உள்ளனர். 1 More update தினத்தந்தி Related Tags … Read more

நீங்க உங்க வீட்ல விளையாடுறீங்களா..? குல்தீப் யாதவை திட்டிய பண்ட்.. என்ன நடந்தது..?

கவுகாத்தி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கொல்கத்தாவில் நடந்த முதலாவது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 151.1 ஓவர்களில் 489 … Read more

ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் – பிரதமர் மோடி வலியுறுத்தல்

ஜோகன்னஸ்பர்க், ஜி20 உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடியும் பங்கேற்றார். மாநாட்டின் தொடக்க அமர்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, போதைப்பொருள்-பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் பரிந்துரைகளை வழங்கினார். நேற்று நடந்த இந்த மாநாட்டின் 3-வது அமர்விலும் பிரதமர் மோடி பேசினார். ‘அனைவருக்கும் நியாயமான மற்றும் சமமான எதிர்காலம் – முக்கியமான கனிமங்கள்; ஒழுக்கமான வேலை; செயற்கை நுண்ணறிவு’ என்ற தலைப்பில் நடந்த … Read more

பெங்களூருவில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: விமானி மீது வழக்குப்பதிவு

ஐதராபாத், பெங்களூருவில் இருந்து ஐதராபாத் சென்ற தனி விமானம் ஒன்றின் விமானியாக பணிபுரிந்தவர், முன்னதாக அதில் பணியில் இருந்த 26 வயது பணிப்பெண் ஒருவரை பெங்களூருவில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக அந்த பணிப்பெண் பெங்களூரு பேகம்பேட் போலீசில் புகார் செய்தார். பின்னர் விமானம் ஐதராபாத் சென்றடைந்ததும், அங்கு முறைப்படி புகார் செய்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவம் பெங்களூருவில் நடந்ததால், … Read more

பாபர், பர்ஹான் அதிரடி.. ஜிம்பாப்வே அணிக்கு கடின இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்

ராவல்பிண்டி, பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 4-வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே – பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாஹிப்சாதா பர்ஹான் – சைம் அயூப் களமிறங்கினர். இவர்களில் சைம் அயூப் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனையடுத்து பர்ஹான் உடன் பாபர் … Read more

சவுதி, இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக 17 பேருக்கு மரண தண்டனை விதித்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

சனா, இஸ்ரேல், ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக போர் நடைபெற்றது. இந்த போரில் ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஹமாசுக்கு ஆதரவு அளித்தனர். ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதம், நிதி உள்பட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. இதனிடையே, போரின் போது இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தது. இதில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பலர் உயிரிழந்தனர். அதேவேளை, இந்த மோதலுக்குப்பின் இஸ்ரேல், சவுதி , அமெரிக்கா ஆகிய … Read more

டெல்லியில் சட்டவிரோத சமையல் கியாஸ் நிரப்பும் நிலையம் நடத்திய 5 பேர் கைது

புதுடெல்லி, டெல்லியில் முண்ட்கா பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக சமையல் கியாஸ் நிரப்பும் நிலையம் இயங்கி வருவதாக புகார் வந்தது. அதன்பேரில் அங்கு டெல்லி போலீசார் சோதனை நடத்தினர். அங்கு வீட்டு உபயோக சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பி, அதிக விலைக்கு விற்பனைக்கு அனுப்பி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 563 கியாஸ் சிலிண்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கியாஸ் நிரப்பும் எந்திரங்கள், சிலிண்டர் சீல்கள், 2 வாகனங்கள் ஆகியவற்றையும் கைப்பற்றினர். இது தொடர்பாக … Read more

மகளிர் உலகக் கோப்பை கபடி: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

டாக்கா, 11 அணிகள் இடையிலான 2-வது மகளிர் உலகக் கோப்பை கபடி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றிருந்த நடப்பு சாம்பியன் இந்திய அணி (4 ஆட்டங்களிலும் வெற்றி) முதலிடமும், வங்காளதேசம் (3 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடமும், ‘பி’ பிரிவில் சீன தைபே (5 ஆட்டங்களிலும் வெற்றி) முதலிடமும், ஈரான் (4 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இந்நிலையில் இன்று … Read more

வியட்நாமில் கனமழை, வெள்ளம்; பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு

ஹனோய், ஆசியாவில் அமைந்துள்ள நாடு வியட்நாம். இந்நாட்டின் குவாங் நாம், தாக்லாங், கான் ஹோவா உள்பட 5 மாகாணங்களில் கடந்த வாரம் முதல் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு நகரங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதையடுத்து லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அந்நாட்டில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஆயிரத்திற்கும் … Read more

சட்டவிரோத இருமல் மருந்து விற்பனை; 12 கடைகள் மீது வழக்குப்பதிவு: லாரி பறிமுதல்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து கோடின் என்ற இருமல் மருந்துகள் சட்டவிரோதமாக அண்டை மாநிலங்களுக்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன்படி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது காசியாபாத்தில் காகிதம் ஏற்றி வந்த லாரியை தடுத்து சோதனை செய்தனர். அதில் கோடின் என்ற இருமல் மருந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் ரூ.57 கோடி மதிப்புள்ள சுமார் 37 லட்சம் மருந்து பாட்டில்கள் சட்டவிரோதமாக பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் விற்கப்பட்டது தெரியவந்தது. … Read more