ஜெகதீப் தன்கர் 50 நாட்களாக மவுனம் காப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி

இந்திய துணை ஜனாதிபதி பதவியில் இருந்தவர் ஜெகதீப் தன்கர். இவர் தனது உடல்நிலையை காரணம் காட்டி, கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளும் கட்சி தரப்பினரின் அழுத்தம் காரணமாகவே தனது பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்தார் என்ற குற்றச்சாட்டு நிலவிவரும் நிலையில் ராஜினாமா செய்த நாளில் இருந்து இதுவரை ஜெகதீப் தன்கர் பொதுவெளியில் வரவில்லை. இதுதொடர்பாக கருத்து எதுவும் இதுவரை தெரிவிக்கவில்லை. இது இந்திய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. … Read more

ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஹாங்காங்கிற்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

அபுதாபி, ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நேற்றிரவு தொடங்கியது. முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, ஹாங்காங்கை சந்தித்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய ஆப்கானிஸ்தானுக்கு திருப்திகரமான தொடக்கம் அமையவில்லை. ரமனுல்லா குர்பாஸ் 8 ரன்னிலும், இப்ராகிம் ஜட்ரன் ஒரு ரன்னிலும் வீழ்ந்தனர். தொடர்ந்து முகமது நபி 33 ரன்னிலும், குல்படின் நைப் 5 ரன்னிலும் வெளியேறினர். 95 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து (13 ஓவர்) நெருக்கடிக்குள்ளான ஆப்கானிஸ்தானை மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் செடிகுல்லா … Read more

ஆப்பிள் வருடாந்திர நிகழ்ச்சி .. ஐபோன் 17 சீரீஸ் அறிமுகம்: இந்தியாவில் விலை என்ன?

வாஷிங்டன், உலகின் முன்னணி செல்போன் உற்பத்தி நிறுவனமான ஆப்பிள் ஆண்டு தோறும் தனது வருடாந்திர நிகழ்வில் தனது நிறுவன செல்போன்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச் உள்ளிட்ட சாதனங்களின் புதிய அப்டேட்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக நிகழ்வு இந்திய நேரப்படி 10.30 மணிக்கு தொடங்கியது. “Awe-dropping” என்ற இந்த நிகழ்வில் ஐபோன் 17 சீரிஸ் அறிமுகமாக உள்ளது. இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வந்த இந்த மாடல்கள், இன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டன. இந்த முறை … Read more

நேபாளத்தில் அமைதி திரும்ப வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி, நேபாளத்தில் ஊழல் மற்றும் சமூக ஊடகங்களுக்கு தடையால் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தது. இந்த போராட்டங்களில் நேற்று 19 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தொடரும் போராட்டங்களால் அமைச்சர்களின் வீடுகள் மற்றும் அரசு கட்டிடங்களுக்கு தீ வைப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி, இன்று பதவியை ராஜினாமா செய்தார். அதேவேளை, போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம், பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி அலுவகலங்கள், மந்திரிகளின் வீடுகளை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். … Read more

ஆசிய கோப்பை: குழு புகைப்படம் எடுத்த கேப்டன்கள்

அபுதாபி, 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 28-ந்தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் நடக்க இருந்த இந்த போட்டி பாகிஸ்தான் அணி வருவதில் எழுந்த சிக்கல் காரணமாக அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், … Read more

கத்தார் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல்; மத்திய கிழக்கில் பதற்றம்

தோஹா, இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023 அக்டோபர் 7ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,195 பேர் கொல்லப்பட்டனர். பலரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடத்தி சென்றனர். இதனை தொடர்ந்து காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது போர் அறிவித்த இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. சுமார் 2 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த போரில் காசாவில் 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், … Read more

சிபி ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா வாழ்த்து

புதுடெல்லி, துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டின் 15வது துணை ஜனாதிபதிக்கான தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்..இவரை எதிர்த்து, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட பி. சுதர்சன் ரெட்டி, 300 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது,2025 துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற … Read more

2026 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி இந்தியாவில் எங்கு நடைபெறும் ? வெளியான தகவல்

துபாய், 2026-ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெறுகிறது. இம்முறை, டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், மொத்தம் 20 அணிகள் விளையாட உள்ளன. உலகம் முழுவதும், இதற்கான தகுதிசுற்றுகள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்கா பகுதி, ஆப்ரிக்கா பகுதி, ஆசியா பகுதி, ஐரோப்பா பகுதி போன்ற பல பகுதிகளிலும் தகுதிச்சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. தொடரை நடத்தும் அடிப்படையில் நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் தானாகவே தகுதி பெற்றுவிட்டன. இந்த … Read more

வீட்டிற்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்: முன்னாள் பிரதமரின் மனைவி பலி

காத்மண்டு, இந்தியாவின் அண்டை நாடு நேபாளம். இங்கு பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு நடைபெற்று வந்தது. ஜனாதிபதியாக ராம் சந்திரா பவுடல் செயல்பட்டு வந்தார். இதனிடையே, ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகள் நிலவி வரும் நேபாளத்தில் இளைஞர்கள் புரட்சி வெடித்தது. கடந்த சில நாட்களுக்குமுன் நேபாளத்தில் 20க்கும் மேற்பட்ட சமூகவலைதள செயலிகளை அந்நாட்டு அரசு முடக்கியது. இதனால், அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ராணுவம் குவிக்கப்பட்டது. இதில், ராணுவம் நடத்திய … Read more

துணை ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்; சுதர்சன் ரெட்டி

டெல்லி, துணை ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனாநாயக கூட்டணி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் களமிறங்கினார். காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி களமிறக்கினார். தேர்தலில் 781 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 767 வாக்குகள் மட்டுமே பதிவாகின. 14 உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. பதிவான வாக்குகள் மாலை 6 மணிக்கு எண்ணப்பட்ட நிலையில் அதில் 15 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. எஞ்சிய 752 வாக்குகளில் பாஜக … Read more