பக்தர்கள் வருகை அதிகரிப்பு: சபரிமலையில் தினமும் 3 லட்சம் டின் அரவணை விற்பனை

சபரிமலை, சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கையொட்டி நடை திறக்கப்பட்ட நாள் முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். கோவிலில் நேற்று வரை 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசாரும், சிறப்பு பாதுகாப்பு படை வீரர்களும் பல்வேறு குழுக்களாக, ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார்கள். நடப்பு மண்டல சீசனில் 1.50 கோடி அரவணை பிரசாதம் விற்பனையானது. தற்போது மகரவிளக்கையொட்டி தினசரி 3 லட்சத்திற்கும் அதிகமான அரவணை … Read more

டி20 உலகக் கோப்பை; ஜிம்பாப்வே அணி அறிவிப்பு

கேப்டவுன், 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன. இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சிகந்தர் ராசா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜிம்பாப்வே அணி: சிக்கந்தர் ராசா (கேப்டன்), பிரையன் பென்னட், ரியான் … Read more

அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் – ஈரான் எச்சரிக்கையால் போர் பதற்றம்

டெஹ்ரான், ஈரான் நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. போராட்டக்காரர்கள் போலீசாருடன் மோதியதாகவும், கற்களை வீசியதாகவும், வாகனங்களை எரித்ததாகவும் உள்ளூர் ஊடங்களில் செய்தி வெளியாகி வருகிறது. சிலர் ஆயுதமேந்தி தாக்குதலில் ஈடுபட்டதாகவும், பல்வேறு நபர்களிடமிருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அமைதியான போராட்டங்களுக்கு எதிராக ஈரான் அரசு … Read more

தெருநாய்களை கணக்கெடுக்கும் பணியில் ஆசிரியர்களா? – திட்டவட்டமாக மறுத்த டெல்லி அரசு

புதுடெல்லி, தேசிய தலைநகர் முழுவதும் தெருநாய்களைக் கணக்கிடுவதற்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் உட்பட அனைவரையும் பணியில் ஈடுபடுத்துமாறு டெல்லி அரசு உத்தரவிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் சுற்றறிக்கை ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் டெல்லி அரசு இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுபோன்ற எந்த உத்தரவையும் சுற்றறிக்கையின் வாயிலாக டெல்லி அரசின் … Read more

விஜய் ஹசாரே தொடர்; சாய் சுதர்சன் விலகல் ?

சென்னை , 33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் எலைட் பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. விஜய் ஹசாரே தொடரில் தமிழக அணி 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இந்த நிலையில், விஜய் ஹசாரே தொடரில் எஞ்சிய போட்டிகளில் இருந்து தமிழக வீரர் சாய் சுதர்சன் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேச அணிக்கும் … Read more

திருமணம் அமெரிக்கரை செய்தாலும் கிரீன் கார்டு கிடைக்காது; டிரம்ப் நிர்வாகம் புதிய கட்டுப்பாடு

வாஷிங்டன், அமெரிக்காவுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து பலர் படிப்பு, வேலை, தொழில் ஆகியவற்றுக்காக பல்வேறு விசாக்களில் செல்கிறார்கள். இவர்களில் ஏராளமானோர் அமெரிக்க குடியுரிமை பெற கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கிறார்கள். இந்த கிரீன் கார்டு ஒரு வெளிநாட்டவர் அமெரிக்காவில் நிரந்தரமாக வாழவும், வேலை செய்யவும் சட்டப்பூர்வ உரிமையை வழங்குகிறது.இதில் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற பெண் அல்லது ஆணை திருமணம் செய்து கொள்பவர்களுக்கு எளிதாக கிரீன் கார்டு கிடைக்கும். அவர்களுக்கு முன்னுரிமையும் அளிக்கப்படும். ஆனால் முறைகேடாக கிரீன் கார்டு பெற … Read more

ஏற்றுமதியாளர்கள் கடன் பெற ரூ.7 ஆயிரம் கோடியில் திட்டம்

புதுடெல்லி, மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் அஜய் படூ கூறுகையில், “ஏற்றுமதியாளர்களின் நிதி சிக்கலுக்கு தீர்வு காண ஏற்றுமதி ஆதரவு தொகுப்பு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. வட்டி மானிய திட்டத்தின்கீழ், ஏற்றுமதிக்கு முந்தைய, பிந்தைய கடன்களுக்கு மானியம் வழங்கப்படும். இதன்கீழ், தகுதியுள்ள சிறு, குறு, நடுத்தர ஏற்றுமதியாளர்களுக்கு 2.75 சதவீத அளவுக்கு மத்திய அரசு மானிய பலன்கள் அளிக்கும். வட்டி மானியத்தின் அளவு, உள்நாட்டு, சர்வதேச அளவுகோல்கள் அடிப்படையில் ஆண்டுக்கு இருமுறை ஆய்வு செய்யப்படும். ஒரு நிறுவனத்துக்கு … Read more

வங்காளதேசம் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி

புதுடெல்லி, இந்திய அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருப்பதாக வங்காளதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 1, 3, 6-ந்தேதிகளில் ஒருநாள் போட்டிகளும் செப்டம்பர் 9, 12, 13-ந்தேதிகளில் டி20 போட்டிகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்திய அணி ஆகஸ்ட் 28-ந்தேதி வங்காளதேசம் சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வங்காளதேசத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில், பிசிசிஐ இந்திய … Read more

ஆப்கானிஸ்தானில் கனமழை: வெள்ளப்பெருக்கில் சிக்கி 17 பேர் பலி

காபூல், ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக, பனிப்பொழிவுக்கு இடையே கனமழை பெய்து வருகிறது. இதன்படி அங்குள்ள கபிசா, பர்வான், டாய்கண்டி, உருஸ்கான், கந்தஹார், ஹெல்மண்ட், பாட்கிஸ், பர்யாப், படக் ஷான், ஹெராத் உள்ளிட்ட மாகாணங்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. அங்குள்ள ஆறுகள், நீர்நிலையில் நிரம்பியதால் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் சுமார் 13 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நாசமாகின. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக 1,800-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. எனவே வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட … Read more

கேரளாவில் போதைப்பொருள் வினியோகம் – பல் மருத்துவ மாணவி உள்பட 7 பேர் கைது

திருவனந்தபுரம், கேரள மாநிலத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகளவில் உள்ளது. மாணவர்கள்- இளைஞர்களை குறி வைத்து நடத்தப்படும் போதைப்பொருட்கள விற்பனையை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் போதைப்பொருட்கள் விற்பனையின் முக்கிய குற்றவாளியான அசிம் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெய்யார் அணை அருகே உள்ள சோதனைச்சாவடி யில் போதைப்பொருள் தடுப்பு குழு சப்-இன்ஸ்பெக்டரின் ஜீப் மீது காரால் மோதிவிட்டு தப்பிச் சென்றார். அவரை கைது செய்யும் நடவடிக்கையில் … Read more