இண்டிகோ விமான வழித்தட உரிமங்களை 10 சதவீதம் குறைத்து மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி, இந்தியாவின் பொது விமானத்துறையான ஏர் இந்தியா நிறுவனம் டாடாவிடம் விற்கப்பட்டது. மேலும் இந்தாண்டு ஜூனில் லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் ஆமதாபாத்தில் விபத்தில் சிக்கியது. இதில் 260 பேர் உயிரிழந்தனர். இதனால் ஏர் இந்தியா மீதான நம்பிக்கை பொதுமக்களிடம் சரிய தொடங்கியது. மறுபக்கம் தனியார் விமான நிறுவனமான இண்டிகோ விமான நிறுவனம் இந்தியாவின் விமான போக்குவரத்தில் அசைக்க முடியாத பெரும்சக்தியாக உருப்பெற்றது. அந்த நிறுவனத்திடம் 134 விமானங்கள் உள்ளன. இதன் மூலம் உள்நாட்டு சேவைகள் … Read more

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20: இந்திய அணி அபார வெற்றி

கட்டாக் , இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கட்டாக் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் அடித்தது. ஹர்திக் பாண்ட்யா 59 ரன்களுடனும் (28 பந்துகள்), ஜிதேஷ் சர்மா 10 ரன்களுடனும் (5 பந்துகள்) … Read more

பாகிஸ்தானில் ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கி சூடு: 6 வீரர்கள் பலி

இஸ்லாமாபாத், ஆப்கானிஸ்தான் எல்லையோரம் உள்ள பாகிஸ்தான் மாகாணங்களில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல் அதிகரித்துள்ளது. இதற்கு தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆப்கானிஸ்தான் ஆதரவு அளிப்பதே முக்கிய காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது. ஆனால் தலீபான்கள் அதனை மறுத்து வருகின்றனர். இந்தநிலையில் கைபர் பக்துங்க்வா மாகாண சோதனைச்சாவடியில் ராணுவ வீரர்கள் முகாமிட்டு இருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 6 ராணுவ வீரர்கள் பலியாகினர். 4 பேருக்கு படுகாயம் … Read more

அனில் அம்பானி மகன் வீட்டில் சி.பி.ஐ. சோதனை

புதுடெல்லி, இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான அனில் அம்பானி வசம் இருந்த ரிலையன்ஸ் குழுமம் சரிய தொடங்கியது. அனில் அம்பானிக்கு முன்னாள் இந்தி நடிகை டீனாவுடன் திருமணமாகி ஜெய் அன்மோல் (வயது 33) மற்றும் ஜெய் அன்சுல் (29) என இரு மகன்கள் உள்ளனர். இதில் வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனமான ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக ஜெய் அன்மோல் இருந்தார். இந்த நிறுவனத்துக்காக பல்வேறு இந்திய பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளிடம் இருந்து ரிலையன்ஸ் ஹோம் … Read more

இந்திய கிரிக்கெட்டில் முதல் வீரர்: வரலாற்று சாதனை படைத்த பும்ரா

புவனேஷ்வர், இந்தியா – தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி ஒடிசாவின் கட்டாக்கில் நேற்று நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்காவை 101 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்நிலையில், இந்த போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார். பும்ரா டெஸ்ட்டில் 234 விக்கெட்டுகள், … Read more

மாயமான மலேசிய விமானம்: பயணிகள் குடும்பத்திற்கு தலா ரூ.3½ கோடி இழப்பீடு; சீன கோர்ட்டு அதிரடி

கோலாலம்பூர், மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவுக்கு கடந்த 2014-ம் ஆண்டு எம்.எச்-370 என்ற விமானம் புறப்பட்டது. மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தில் 12 பணியாளர்கள் உள்பட 239 பேர் பயணித்தனர். நடுவானில் சென்றபோது அந்த விமானம் திடீரென கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது. எனவே காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டனர். எனினும் அதில் இருந்தவர்களின் கதி என்ன என்பது இன்றுவரை கேள்விக்குறியாக உள்ளது. இதனால் 11 ஆண்டுகளுக்கு … Read more

ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கு மாதம் ரூ.8,600- கட்டணமா? எலான் மஸ்க் நிறுவனம் விளக்கம்

உலக பணக்காரர்களில் ஒருவரும், அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழில் அதிபருமானவர் எலான் மஸ்க். உலகம் முழுவதும் செயற்கைக்கோள் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு அதிவேக இணைய வசதியை கிடைக்க செய்வதற்கான ஸ்டார்லிங்க் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்தியாவில் ஸ்டார்லிங்க் தொடங்குவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் ஸ்டார்லிங்க் சேவைக்கான கட்டண விவரங்கள் குறித்து அதிகாரபூர்வ வலைத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டது. மாதாந்திர கட்டணம் ரூ.8 ஆயிரத்து 600 எனவும் ஒருமுறைக்கான நிறுவுதல் கட்டணம் ரூ.34 ஆயிரம் எனவும் வெளியானது. … Read more

இந்தியா அசத்தல் பந்துவீச்சு… விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தென் ஆப்பிரிக்கா

கட்டாக் , இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கட்டாக் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் அடித்தது. ஹர்திக் பாண்ட்யா 59 ரன்களுடனும் (28 பந்துகள்), ஜிதேஷ் சர்மா 10 ரன்களுடனும் (5 … Read more

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் கடும் பதிலடி; அசீம்முனீர் பேச்சு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் முப்படைக்களின் தலைவர் பதவியை அந்நாட்டு அரசாங்கம் புதிதாக உருவாக்கியது. இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தான் பின்னடைவை – சந்தித்ததால் இந்த பதவியை உருவாக்கியது. அதன்படி – முப்படைகளின் தலைவராக ராணுவ தளபதியாக இருந்த பீல்டு மார்ஷ் அசிம் முனீர் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் முப்படைகளின் தலைவராக பதவியேற்ற பிறகு அசிம் முனீர் இஸ்லாமாபாத்தில் உள்ள ராணுவ தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதாவது:- வளர்ந்து வரும் மற்றும் மாறிவரும் அச்சுறுத்தல் களைக் கருத்தில் … Read more

இண்டிகோ நிறுவனம் இயல்புநிலைக்கு திரும்புகிறது – தலைமை செயல் அதிகாரி தகவல்

மும்பை, நாட்டின் முன்னணி தனியார் விமான நிறுவனமான இண்டிகோ, கடந்த 2-ந் தேதியில் இருந்து தனது சேவையில் குளறுபடிகளை சந்தித்து வருகிறது. விமானிகள் பணி நேரம் தொடர்பான மத்திய அரசின் புதிய விதிமுறைகளால் இந்த நிலை ஏற்பட்டது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், நாடு முழுவதும் விமான நிலையங்களில் பயணிகள் தவித்தனர். இதையடுத்து இந்த பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு, பயணிகளின் பரிதவிப்பை குறைக்க உடனடியாக விமான சேவைகளை சீரமைக்க உத்தரவிட்டது. நிலைமை சீராகும் … Read more