கள்ளக்காதலுக்கு இடையூறு: கணவரை கொன்று 7 ஆண்டுகளாக நாடகமாடிய பெண்

பெங்களூரு, கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் உள்ள கன்னி கிராமத்தை சேர்ந்தவர் பீரப்பா. இவரது மனைவி சாந்தாபாய். சாந்தபாய்க்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு நபருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த பீரப்பா கள்ளக்காதலை கைவிடும்படி சாந்தாபாயிடம் கூறி கண்டித்தார். இதில் கோபமடைந்த சாந்தாபாய் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் பீரப்பாவை கூலிப்படையை ஏவி கொலை செய்தார். பின்னர் அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறி நாடகமாடி கணவரின் குடும்பத்தினர் மற்றும் … Read more

ஆஸி.வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன..?

பெர்த், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதலாவது டெஸ்ட் உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டி முடிவடைந்ததை அடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இங்கிலாந்துக்கு எதிரான … Read more

பிரேசிலில் ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்ட முன்னாள் அதிபர் கைது

பிரேசிலியா, பிரேசிலில் 2019 முதல் 2022-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் ஜெயிர் பொல்சனாரோ (வயது 70). லிபரல் கட்சியைச் சேர்ந்த இவர் 2022-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினார். இதில் தொழிலாளர் கட்சியை சேர்ந்த லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் தேர்தலில் தான் தோல்வியடைந்ததை பொல்சனாரோ ஒப்புக்கொள்ளவில்லை. எனவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மீது சந்தேகம் இருப்பதாக கூறி ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டார். … Read more

குடும்பத்தகராறு: மனைவியை கொடூரமாக கொலை செய்த தொழிலாளி

ஐதராபாத், தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபாகர். கூலி தொழிலாளி. இவரது மனைவி சாய் வாணி. இந்த தம்பதிக்கு ஒரு மகள், மகன் உள்ளனர்.பிரபாகருக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அவர்களுக்குள் வந்ததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. தனது இதனால் சாய்வாணி கணவரை பிரிந்து வாடகை வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். மேலும் தனியார் மண்டபத்தில் வேலை செய்து குழந்தைகளை படிக்க வைத்து வந்தார். இதகிடையே, தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு கணவர் பலமுறை மனைவியிடம் … Read more

டெஸ்ட் கிரிக்கெட்: 69 பந்துகளில் சதம்.. வரலாற்று சாதனை படைத்த டிராவிஸ் ஹெட்

பெர்த், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதலாவது டெஸ்ட் உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 32.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த நிலையில் முதல் இன்னிங்சில் 172 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹாரி புரூக் 52 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை அள்ளினார். … Read more

பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

கேப்டவுன், இந்தியா, சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய யூனியன், ஆப்பிரிக்க யூனியன் உள்பட பல்வேறு நாடுகளின் கூட்டமைப்பாக ஜி20 உள்ளது. இதனிடையே, ஜி20 கூட்டமைப்பின் உச்சிமாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகனர்ஸ்பர்க்கில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், ஜி20 உச்சி மாநாட்டின் முதல் அமர்வில் பிரதமர் மோடி பங்கேற்றார். உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது, அனைவரையும் உள்ளடக்க்கிய நிலையான பொருளாதார வளர்ச்சி இந்தியாவின் … Read more

டெல்லி குண்டுவெடிப்பில் அடையாளம் காணப்படாத 3 உடல்கள் – டி.என்.ஏ. சோதனை நடத்தி ஒப்படைக்க முடிவு

புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் கடந்த 10-ந் தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் தற்கொலை குண்டாக செயல்பட்ட டாக்டர் உமர் முகமது சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார். இவரோடு பயங்கரவாத சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக 6 பேரை தேசிய புலனாய்வு முகமையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே சம்பவத்தின் பின்னணியில் உள்ள சதி பற்றியும் விசாரிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் … Read more

முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தானுக்கு 129 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை

ராவல்பிண்டி, பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 3-வது லீக் ஆட்டத்தில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன நிசங்கா – கமில் மிஸ்ரா களமிறங்கினர். பாகிஸ்தான் பந்துவீச்சை ஒரளவு சமாளித்த இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 31 ரன்கள் அடித்த நிலையில் பிரிந்தது. … Read more

சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு

பீஜிங், சீனாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 6.25 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 37.71 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 98.94 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. EQ of M: 4.1, On: … Read more

துப்பாக்கியை சுத்தம் செய்தபோது குண்டு பாய்ந்து போலீஸ்காரர் உயிரிழப்பு

ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலம் டியோகர் மாவட்டம் மோகன்பூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் ஹல்வீந்தர் சிவ்பூஜன்பால் (வயது 30). இவர் இன்று காலை போலீஸ் பயிற்சி மையத்தில் சக போலீசாருடன் இணைந்து தனது துப்பாக்கியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, துப்பாக்கியை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது ஹல்வீந்தரின் துப்பாக்கி எதிர்பாராத விதமாக திடீரென வெடித்தது. இதில், துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு ஹல்வீந்தரின் தலையில் பாய்ந்தது. இதில் போலீஸ்காரர் ஹல்வீந்தர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து … Read more