பயணிகள் கவனத்திற்கு… ரெயில் டிக்கெட் முன்பதிவில் ஐஆர்சிடிசி கொண்டு வந்த முக்கிய மாற்றம்

ரெயில் டிக்கெட் முன்பதிவில் நடைபெறும் மோசடிகளைத் தவிர்க்க, பயணிகள் தங்களின் ஐஆர்சிடிசி கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று ரெயில்வே அறிவுறுத்தியுள்ளது. ஆதார் எண் இணைக்காவிட்டால் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கும் முதல் நாளிலேயே முன்பதிவு டிக்கெட் எடுக்கவும் ஆதார் அவசியம் என்று ரெயில்வே தெரிவித்துள்ளது. அதாவது, கடந்த மாதம் 29-ஆம் தேதி முதல் கடந்த 4-ஆம் தேதி … Read more

16 வருடங்கள் கழித்து தோல்வியை சந்தித்த பொல்லார்ட் …

ஐக்கிய அரபு நாடுகளில் 2025/26 சர்வதேச லீக் டி20 பிரீமியர் தொடர் நடைபெற்றது. அத்தொடரின் இறுதிப்போட்டியில் டெசர்ட் வைப்பர்ஸ் மற்றும் எம்ஐ எமிரேட்ஸ் அணிகள் மோதின. துபாயில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய டெசர்ட் அணி 20 ஓவரில் 182/4 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் சாம் கரண் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 74* (51) ரன்கள் குவித்து அசத்தினார். அவருடன் பகார் ஜமான் 20, … Read more

ஜப்பானில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி அச்சம்

டோக்கியோ, ஜப்பான் ஷிமானே மாகாணத்தில் இன்று (ஜன.6) அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. ஜப்பானை உலுக்கிய 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளது என்ற அச்சத்தை மக்களிடம் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஷிமானே மாகாணத்தில் வசிப்பவர்கள் கடுமையான நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அங்குள்ள ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, … Read more

டெல்லியில் தொடரும் காற்று மாசு; காற்றின் தரம் 281 ஆக பதிவு

புதுடெல்லி, தலைநகர் டெல்லியில், மாசு அதிகரிப்பதன் காரணமாக காற்று மாசு அடைந்து வருகிறது. குளிர் காலம் என வந்துவிட்டாலே தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துவிடும். இந்தாண்டும் கூட அதே நிலைமை தான். கடந்த சில வாரங்களாகவே டெல்லியில் காற்று மாசு உச்சத்திற்குப் போய்விட்டது. இதனால் அங்குப் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.தேசிய தலைநகரில் குளிர் நிலை தொடர்ந்திருப்பதால், ஜனவரி 2 முதல் 5 வரையில் டெல்லியில் குளிர் அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் … Read more

வங்காளதேசத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்ப தடை

டாக்கா, 2026 ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த கிரிக்கெட் தொடருக்கான மின் ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது. அதேவேளை, வங்காளதேசத்தில் இந்து மதத்தினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அந்நாட்டில் கடந்த சில நாட்களில் மட்டும் இந்து மதத்தினர் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையே, வங்காளதேசத்தில் இந்து மதத்தினருக்கு எதிரான தாக்குதலை கண்டித்து … Read more

“அமெரிக்காவை கண்டிப்பாக பழிதீர்ப்போம்..” – நிகோலஸ் மதுரோவின் மகன் குரேரா உறுதி

நியூயார்க், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது அமைச்சரவை எம்.பி.க்கள் மீது அமெரிக்கா போதைப்பொருள் பயங்கரவாதம் மற்றும் கொகைன் கடத்தல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அமெரிக்க உளவுத்துறை மற்றும் ராணுவப் படையினர் இணைந்து வெனிசுலா தலைநகர் கராகஸில் அதிரடித் தாக்குதல் நடத்தினர். இதில் அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் போர்க்கப்பலுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் அமெரிக்காவிற்குக் கொண்டு வரப்பட்டனர். … Read more

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடி காலமானார்

மும்பை, முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான சுரேஷ் கல்மாடி(81) புனேவில் உள்ள தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் . வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த சில நாட்களாக புனேவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.​ இருப்பினும், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அவரது உடல் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு வைகுந்த் ஸ்மஷன்பூமியில் தகனம் செய்யப்பட உள்ளது. இவரது மறைவுக்கு … Read more

சிக்சர் மழை பொழிந்த வைபவ் சூர்யவன்ஷி…19 பந்துகளில் அரைசதம் அடித்து அபாரம்

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய யு19 அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. கேப்டன் ஆயுஸ் மாத்ரேவிற்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், இத்தொடரில் இந்திய அணியை சூர்யவன்ஷி வழிநடத்துகிறார். இவ்விறு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 49.3 ஓவர்களில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜேசன் ராவ்ல்ஸ் (114; 113 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) சதம் அடித்தார். இந்திய … Read more

இந்தோனேசியாவில் கனமழை: திடீர் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கில் சிக்கி 9 பேர் பலி

ஜகார்த்தா, இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணமான வடக்கு சுலவேசியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அங்குள்ள சித்தாரோ தீவுகள் ரீஜென்சியில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் பலத்த மழை பெய்ததை தொடர்ந்து இந்த பேரழிவு ஏற்பட்டது. குடியிருப்புப் பகுதிகள் வழியாக தண்ணீர், சேறு மற்றும் பாறைகள் பெருக்கெடுத்து ஓடின, தெருக்களில் வெள்ளம் புகுந்து, குடியிருப்பாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது வீடுகளை சேதப்படுத்தியது. இந்த சம்பவத்தில் மேலும் 5 பேர் … Read more

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு; போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஜாமீன்

புதுடெல்லி, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் போலீசாரின் கொடூர தாக்குதலில் உயிரிழந்தனர்.தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவம் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 22-ந்தேதி அரங்கேறியது.இந்த சம்பவத்தில் அப்போதைய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கொலை வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், சி.பி.ஐ. விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது. … Read more