ஜெர்மன் அதிபரை வரவேற்க நேரில் செல்லாத சித்தராமையா: பா.ஜ.க. கடும் கண்டனம்

பெங்களூரு, ஜெர்மனியின் அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ், பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று இந்தியாவில் 2 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டார். இதற்காக நேற்று முன்தினம் காலை இந்தியாவுக்கு வருகை தந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி மற்றும் ஜெர்மனி அதிபர் மெர்ஸ் என இரு தலைவர்களும், தங்களுடைய உயர்மட்ட குழுவினருடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, இந்தியாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது பற்றிய … Read more

2வது ஒருநாள் போட்டி: இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்

மும்பை, நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 இருபது ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் 11ம் தேதி நடைபெற்றது .இதில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் … Read more

இலங்கை எம்.பி. ஜீவன் தொண்டமான் பொங்கல் வாழ்த்து

கொழும்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் எம்.பி. வெளியிட்டுள்ள தைப்பொங்கல் வாழ்த்து செய்தியில், தைப்பொங்கல் என்பது தமிழர்களால் உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படும் உன்னதமான அறுவடை திருவிழாவாகும். இது “உழவர் திருநாள்” என்றும் அழைக்கப்படுகிறது. தைப்பொங்கல் என்பது வெறும் பண்டிகை மட்டுமல்ல; அது நமது கலாசாரம், பாரம்பரியம் மற்றும் இயற்கையை போற்றும் மனப்பான்மையின் அடையாளமாக விளங்குகிறது. உழவர்களை கவுரவித்து, இயற்கையை வணங்கும் இந்த நன்னாளில் நாம் ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ … Read more

அண்ணாமலை பேசியது சரியல்ல; ஏக்நாத் ஷிண்டே எதிர்ப்பு

மும்பை, தமிழக பா.ஜனதா முன்னாள் தலைவர் அண்ணாமலை கடந்த வாரம் மும்பையில் மாநகராட்சி தேர்தலையொட்டி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் “மும்பை, மராட்டிய நகரம் அல்ல. சர்வதேச நகரம்” என கூறினார். அவரின் பேச்சுக்கு உத்தவ் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மும்பை நகரை மராட்டியத்தில் இருந்து பிரிக்க பா.ஜனதா சதி செய்வதாக எதிர்க்கட்சியினர் ஏற்கனவே குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த விவகாரம் சர்ச்சையை … Read more

டபிள்யூ.பி.எல் வரலாற்றில் ‘ரிட்டயர்ட் அவுட்’ ஆன முதல் வீராங்கனை – யார் தெரியுமா?

மும்பை, டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் ‘ரிட்டயர்ட் அவுட்’ ஆன முதல் வீராங்கனை சோனி தான். 5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பை புறநகரான நவிமும்பையில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 6-வது லீக்கில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் ஜெயன்ட்சை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த குஜராத்துக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. சோபி டிவைன் 8 ரன்னிலும், பெத்மூனி … Read more

திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவு

பீஜிங், சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் திபெத் அமைந்துள்ளது. திபெத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஷிகாட்சே நகரை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், திபெத்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 11.50 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவானதாக தேசிய … Read more

சபரிமலையில் நெய் விற்பனை முறைகேடு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த கேரள ஐகோர்ட்டு உத்தரவு

சபரிமலை, சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் நெய்யில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கு கேரள ஐகோர்ட்டு நீதிபதிகள் வி.ராஜா விஜயராகவன், கே.வி.ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதிகள், இந்த முறைகேடு 2 மாதங்களுக்குள் நடந்து உள்ளது. நிர்வாகத்தில் பொறுப்பில் இருப்பவர்களுக்கு தெரியாமல் இந்த முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை. 2 மாதத்துக்குள் நெய் விற்பனையில் ரூ.35 லட்சத்துக்கும் மேல் முறைகேடு செய்யப்பட்டு இருப்பதால், நீண்ட காலத்தில் மற்றும் பிற … Read more

டபிள்யூ.பி.எல். வரலாற்றில் முதல் இந்திய வீராங்கனை…சாதனை படைத்த ஹர்மன்பிரீத் கவுர்

மும்பை, டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் 1,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் தான். 5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பை புறநகரான நவிமும்பையில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 6-வது லீக்கில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் ஜெயன்ட்சை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த குஜராத் அணி மும்பைக்கு 193 என்ற கடின்மான இலக்கை நிர்ணயித்தது. … Read more

ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை

செயின்ட் பீட்டர்ஸ்பர்க், ஈரான் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து, அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது. இதனால் அரசுக்கு எதிராக அதிருப்தி அடைந்துள்ள மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. 17-வது நாளாக இன்றும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்க கூடும் என அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட … Read more

போகி பண்டிகை: புதுச்சேரியில் இன்று விடுமுறை

புதுச்சேரி, பொங்கல் பண்டிகையைச் சிறப்பான முறையில் கொண்டாடும் வகையில், மாநிலத்திலுள்ள அனைத்து வகையான பள்ளிகளுக்கும் வரும் ஜனவரி 15-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை (வியாழன் முதல் ஞாயிறு வரை) 4நாட்கள் தொடர் விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டு இருந்தது. இந்தநிலையில், போகியை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை என அரசு … Read more