கேரளாவில் உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு தொடக்கம்

திருவனந்தபுரம், கேரளாவில் கிராம பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியம், நகராட்சி வார்டுகளுக்கான உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, முதற்கட்டமாக திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், ஆலப்புழை, எர்ணாகுளம், பத்தனம்திட்டா, இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. பஞ்சாயத்து அடிப்படையில் ஒரு வாக்காளர் கிராம, ஊராட்சி மற்றும் மாவட்ட பஞ்சாயத்து என 3 வாக்குகள் பதிவு செய்ய வேண்டும். வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் … Read more

விராட் கோலியால் 100 சதங்கள் ஏன் அடிக்க முடியாது..? இந்திய முன்னாள் வீரர் கேள்வி

மும்பை, அண்மையில் முடிவடைந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய வீரர் விராட்கோலி இரண்டு சதங்கள் விளாசினார். ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் அவர் இதுவரை 84 சதங்கள் (ஒரு நாள் போட்டியில் 53, டெஸ்டில் 30 மற்றும் 20 ஓவர் போட்டியில் ஒரு சதம்) அடித்துள்ளார். இந்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரராக சச்சின் தெண்டுல்கர் (100 சதம்) முதல் இடத்தில் இருக்கிறார். இந்த நிலையில் தெண்டுல்கரின் சாதனையை கோலி சமன் … Read more

ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி – அமெரிக்கா ஒப்புதல்

வாஷிங்டன், கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் எய்ட்ஸ், மலேரியா உள்ளிட்ட பல தொற்றுநோய்கள் வேகமாக பரவுகின்றன. இதனை கட்டுப்படுத்த முடியாமல் அந்த நாட்டின் சுகாதாரத்துறை போராடி வருகிறது. இந்த நிலையில் காங்கோ உடனான அமைதி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைக்காக ருவாண்டா அதிபர் பால் ககாமே அமெரிக்கா சென்றிருந்தார். பின்னர் ஜனாதிபதி டிரம்ப் முன்னிலையில் இரு நாடுகளின் தலைவர்களும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதனை தொடர்ந்து நாட்டின் சுகாதாரத்துறையை மேம்படுத்துவது தொடர்பாக ருவாண்டா அதிபர் பால் ககாமே அமெரிக்காவுடன் … Read more

புதுவையில் விஜய்யின் தவெக மக்கள் சந்திப்பு கூட்டம்: தொண்டர்கள் முண்டியடிப்பு

புதுவை, புதுச்சேரி துறைமுக மைதானத்தில் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக நடைபெறும் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி என்பதால், அதிகளவில் கூட்டம் கூடாத வகையில், கியூஆர் கோடுகளுடன் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதையொட்டி, கூட்டம் நடைபெறவுள்ள இடத்துக்குள் மற்றும் வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாஸ் உள்ளவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில், கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் … Read more

டி20 தொடர்: கில்லா..? சாம்சனா..? தொடக்க ஆட்டக்காரர் யார்…? சூர்யகுமார் யாதவ் பதில்

கட்டாக், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்காவும் (2-0), அதன்பின் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்தியாவும் (2-1) கைப்பற்றின. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. அதன்படி இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி கட்டாக்கில் நாளை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் அபிஷேக் சர்மாவுடன் மற்றொரு … Read more

ராணுவத்தில் ஆள்சேர்க்க வெளிநாட்டினரை குறிவைக்கும் ரஷியா

மாஸ்கோ, உக்ரைன்-ரஷியா போர் கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் சப்ளை, பொருளாதார உதவி வழங்குகின்றன. அதேபோல் ரஷியாவுக்கும் அதன் நட்பு நாடான வடகொரியா சுமார் 10 ஆயிரம் வீரர்களை அனுப்பியது. ஆனால் மிக பரந்த நிலப்பரப்பை கொண்டுள்ள ரஷியாவுக்கு அதன் எல்லையை பாதுகாக்கும் அளவுக்கு போதுமான வீரர்கள் இல்லை. எனவே படிப்பு, வேலை நிமித்தம் அங்கு செல்லும் வெளிநாட்டினரை போரில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்தநிலையில் … Read more

புதுவையில் விஜய் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு

புதுவை, கரூா் துயர சம்பவத்திற்குப் பிறகு தமிழக வெற்றிக்கழகத் தலைவா் விஜய் இன்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறாா். இதற்காக கடும் நிபந்தனைகளுடன் உப்பளம் துறைமுக மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கியூஆா் குறியீடு இருந்தால் தான் அனுமதி அளிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே பொதுக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என்று காவல் துறை கண்டிப்புடன் கூறியுள்ளது. இதன்படி, பொதுக்கூட்டத்திற்கு வரும் தவெக நிர்வாகிகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த … Read more

உதயநிதி ஸ்டாலினுடன் வள்ளுவர் கோட்டத்தை சுற்றி பார்த்த ஆக்கி வீரர்கள்

சென்னை, 14-வது ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் மதுரை ரேஸ்கோர்சில் உள்ள சர்வதேச ஆக்கி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. கடந்த 28-ந் தேதி தொடங்கிய இந்த போட்டி தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. தமிழகத்தில் முதல்முறையாக நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 24 அணிகள் பங்கேற்றுள்ளன. இதற்காக பல நாடுகளில் இருந்தும் வீரர்கள் சென்னைக்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் … Read more

ஏஐ மூலம் போலீசாரை ஏமாற்ற நினைத்த இளம்பெண்

வாஷிங்டன், இன்று தொழில்நுட்பம் பெருகிவிட்டது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வருகைக்குப் பிறகு சமூக ஊடகங்களில் வெளியாகும் காணொளிகள் உண்மையா, பொய்யா என்று கண்டறிய முடியாத அளவுக்குச் சவாலாகி வருகின்றன. இன்று ஏஐ மூலம் நடக்காததை நடந்ததுமாறியாக நம்ப வைத்து ஒரு சிலர் ஏமாற்றி வருகின்றனர். இதை வைத்துக்கொண்டு குற்றங்களைப் புரியத் தொடங்கியிருக்கின்றனர். அந்தவகையில் அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். அதில் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக புகார் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ப்ளோரிடாவில் … Read more

மத்திய அரசு இணையதளத்தில் 5.17 லட்சம் வக்பு சொத்துகள் பதிவேற்றம்

புதுடெல்லி, வக்பு திருத்த சட்டத்தை நிறைவேற்றிய மத்திய அரசு, அனைத்து பதிவு செய்யப்பட்ட வக்பு சொத்துகளும் ‘ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை, அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாடு’ (உமீது) போர்ட்டலில் 6 மாதங்களுக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவித்து இருந்தது. இந்த போர்ட்டல் கடந்த ஜூன் 6-ந்தேதி தொடங்கப்பட்ட நிலையில் டிசம்பர் 6-ந்தேதி வரை சொத்து பதிவேற்றத்துக்கு காலக்கெடு அளிக்கப்பட்டது. இந்த காலக்கெடுவை மேலும் நீட்டிக்க முடியாது என அரசும், சுப்ரீம் கோர்ட்டும் திட்டவட்டமாக தெரிவித்தன. தற்போது … Read more