புதினுக்கு பகவத் கீதையை பரிசளித்த பிரதமர் மோடி

டெல்லி, 2 அரசு முறை பயணமாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வந்துள்ளார். தனி விமானம் மூலம் நேற்று இரவு டெல்லி வந்த புதினை விமான நிலையத்திற்கே நேரில் சென்று பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் இருவரும் ஒரே காரில் பயணித்தனர். பிரதமர் இல்லத்தில் புதினுக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட இரவு விருந்து அளித்தார். இதனை தொடர்ந்து டெல்லியில் நடைபெறும் இந்தியா – ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், ரஷிய அதிபர் புதினும் … Read more

ஐ.பி.எல். ஏலம்: சிஎஸ்கே அணி இந்த 2 வீரர்களை குறி வைக்கலாம் – அஸ்வின் கணிப்பு

சென்னை, 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் வருகிற 16-ந் தேதி அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த 15-ந் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம் அதிகாரபூர்வமாக வெளியிட்டன. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த மினி ஏலத்தில் மொத்தம் … Read more

காங்கோ, ருவாண்டா இடையே அமைதி ஒப்பந்தம்; டிரம்ப் முன்னிலையில் கையெழுத்து

வாஷிங்டன் மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. அந்நாட்டில் பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை, காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் ருவாண்டா நாடு அமைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே காங்கோவின் வடக்கு கிவூ, தெற்கு கிவூ உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் கனிம வளங்கள் அதிக அளவில் காணப்படுகிறது. இதனிடையே, காங்கோ, ருவாண்டா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. காங்கோவில் செயல்பட்டு வரும் எம்-23 என்ற … Read more

திருப்பரங்குன்றம் விவகாரம்: நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

புதுடெல்லி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டும், 2-வது நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர். ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி திமுகவின் மக்களவைக் குழு தலைவர் டி.ஆர். பாலு … Read more

வயது என்பது வெறும்.. – ரோகித், விராட் கோலிக்கு நியூசிலாந்து முன்னாள் வீரர் ஆதரவு

வெலிங்டன், இந்திய கிரிக்கெட் அணி தற்போது சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்றுள்ள 2 போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்த 2 போட்டிகளிலும் இந்திய அணியின் முன்னணி நட்சத்திர வீரரான விராட் கோலி சதமடித்து அசத்தியுள்ளார். மறுபுறம் மற்றொரு முன்னணி வீரரான ரோகித் சர்மா முதல் போட்டியில் அரைசதம் அடித்தார். கடந்த ஆஸ்திரேலிய தொடரில் அபாரமாக ஆடி … Read more

குடியேற்றத்திற்காக விண்ணப்பிக்க 19 நாடுகளுக்கு அமெரிக்கா தடை

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீது டிரம்ப் நிர்வாகம் கடுமையாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அவர்களை கைது செய்து நாடு கடத்தப்படுகிறார்கள். இந்தநிலையில் அமெரிக்காவில் குடியுரிமை பெறுவதற்காக விண்ணப்பிக்க 19 நாடுகளுக்கு தடைவிதித்து டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, ஈகுவடாரில் கினி, எரித்ரியா, ஹைதி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன், புரூண்டி, கியூபா, லாவோஸ், சியாரா லியோன், டோகா, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 79 லட்சம்

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 63 ஆயிரத்து 887 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 22 ஆயிரத்து 561 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 79 லட்சம் கிடைத்தது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 11 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பினர். தேதி, நேரம் (டைம் ஸ்லாட்) குறிப்பிடப்பட்ட டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்களுக்கு 8 மணிநேரம் ஆனதாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். 1 More … Read more

மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை

பிரிஸ்பேன், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் … Read more

விசா விண்ணப்பதாரர்களின் வலைத்தள கணக்குகள் கண்காணிக்கப்படும்: அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன், அமெரிக்கா ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அவர்களை கைது செய்து நாடு கடத்துவதற்காக தனி அமைச்சரவை ஒன்றை குடியேற்றத்துறையுடன் இணைந்து பணியாற்ற உருவாக்கினார். மேலும் எச்-1பி விசா கட்டணத்தை இந்திய மதிப்பில் ரூ.90 லட்சமாக உயர்த்தி அறிவித்து கிடுக்கிப்பிடி மேற்கொண்டார். நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தான், மியான்மர், ஈரான் உள்ளிட்ட 19 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா விசாவுக்கு விண்ணபிப்பதற்கு நிரந்தர தடைவிதித்தார். தற்போது அமெரிக்கா விசாவுக்கு விண்ணபிப்பவர்களுக்கு … Read more

பான் மசாலா மீதான கூடுதல் வரியில் மாநிலங்களுக்கு பங்கு – நிர்மலா சீதாராமன் தகவல்

புதுடெல்லி, இந்தியாவில் நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி வரி விகிதம் 5, 18 என, இரு அடுக்குகளாக மாற்றப்பட்டது. அதே நேரத்தில், சிகரெட், புகையிலை பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கு மட்டும், 40 சதவீத சிறப்பு வரி விதிக்கப்பட்டது. இந்த புதிய நடைமுறை, கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த சூழலில் புகையிலை, பான் மசாலா மற்றும் ஆடம்பர பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. இழப்பீடு வரி (செஸ்) காலாவதியாவதை தொடர்ந்து, இந்த வரிக்கு … Read more