ஸ்ரீஹரிகோட்டாவில் தயார் நிலையில் பாகுபலி ராக்கெட்; 1-ந்தேதி ‘கவுண்ட்டவுன்’ தொடக்கம்

சென்னை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வருகிற 2-ந்தேதி பாகுபலி என்று செல்லமாக அழைக்கப்படும் ‘எல்.வி.எம்-3′ ராக்கெட் மூலம் 4 ஆயிரத்து 400 கிலோ எடை கொண்ட ‘ஜிசாட்-7 ஆர்’ என்று அழைக்கப்படும் ‘சி.எம்.எஸ்-03′ என்ற ராணுவ தகவல் தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட் முழுமையாக ஒன்று சேர்க்கப்பட்டு செயற்கைக்கோளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, ஏவுதளத்திற்கு முந்தைய நடவடிக்கைகளாக ராக்கெட் கடந்த 26-ந்தேதி ஏவுதளத்திற்கு நகர்த்தப்பட்டு … Read more

புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் வெற்றி

புதுடெல்லி, 12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் தற்போது பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது தகுதி சுற்றில் புனேரி பால்டனை வீழ்த்தி தபாங் டெல்லி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. தோல்வி கண்ட புனேரி பால்டன் அணி 2வது தகுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற 3வது வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் … Read more

அமெரிக்காவில் வீட்டை சுத்தம் செய்யாத கணவரின் கழுத்தை அறுத்த இந்திய பெண் கைது

வாஷிங்டன், அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் வசித்து வந்தவர் அரவிந்த். இவரது மனைவி சந்திர பிரபா (வயது 44). அவர் அங்குள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்திய வம்சாவளி தம்பதியான அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அந்தவகையில் வீட்டை சுத்தம் செய்யாமல் குப்பை போல வைத்திருப்பதாக அரவிந்திடம் சந்திர பிரபா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த சந்திர பிரபா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கணவரின் … Read more

110 கி.மீ வேகத்தில் சூறைக்காற்றுடன் ஆந்திராவில் கரையை கடந்தது ‘மோந்தா' புயல்

அமராவதி, வங்கக்கடலில் உருவான ‘மோந்தா’ புயல், ஆந்திராவை நோக்கி நேற்று முன்தினத்தில் இருந்து பயணித்து, நேற்று இரவு கரையை கடக்கத் தொடங்கியது. மணிக்கு 17 கி.மீ வேகத்தில் காக்கிநாடா, மசூலிப்பட்டினம் அருகே ‘மோந்தா’ புயல் கரையை கடக்க தொடங்கியது. புயல் கரையை கடக்க தொடங்கியதில் இருந்து ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் 110 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசியது. மேலும் அங்கு விடிய, விடிய இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திராவின் காக்கிநாடா, கிருஷ்ணா, … Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்திய பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா

மும்பை, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. அதன்படி இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 போட்டி கான்பெர்ராவில் நாளை (பிற்பகல் 1.45 மணி) நடக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தற்போது பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் … Read more

அரிய வகை தனிமங்கள் தொடர்பாக அமெரிக்க-ஜப்பான் இடையே முடிவான ஒப்பந்தம்

டோக்கியோ, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆசியாவில் உள்ள 3 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக ஜப்பான் நாட்டுக்கு அவர் சென்றார். அமெரிக்காவுடன் வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார விவகாரங்களில் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்படும் வகையில் டிரம்புக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனே டகாய்ச்சியை அந்நாட்டின் அகாசகா அரண்மனையில் டிரம்ப் நேரில் சந்தித்து உரையாடினார். அரண்மனையில் அவரை இன்முகத்துடன் டகாய்ச்சி வரவேற்றார். டிரம்புக்கு சிறப்பான ராணுவ … Read more

ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து தருவதாக கூறி முதியவரிடம் ரூ.18 ஆயிரம் ‘அபேஸ்’

பெங்களூரு, கர்நாடக மாநிலம் சிவமொக்கா டவுன் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரா (வயது 65). இவர் கடந்த 10-ந்தேதி பத்ராவதி டவுன் பகுதிக்கு சென்றபோது அங்கு உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் அவசர தேவைக்காக பணம் எடுக்க முயன்றுள்ளார். ஆனால், ராமச்சந்திராவுக்கு ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க தெரியவில்லை. இதனை அருகே நின்ற நபர் பார்த்து தான் பணம் எடுத்து கொடுப்பதாக அவரிடம் கூறியுள்ளார். பின்னர் ராமச்சந்திராவிடம் ஏ.டி.எம். கார்டை வாங்கி பணம் எடுப்பது போல் நடித்து பணம் வரவில்லை … Read more

ரஞ்சி கிரிக்கெட்: தமிழகம் – நாகாலாந்து ஆட்டம் ‘டிரா

பெங்களூரு, 91-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ‘எலைட்’ பிரிவில் இடம் பிடித்துள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் பெங்களூவில் நடைபெற்று வரும் ஆட்டம் ஒன்றில் (ஏ பிரிவு) தமிழ்நாடு- நாகாலாந்து அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டாஸ் ஜெயித்து முதலில் ஆடிய தமிழக அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 512 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இரட்டை … Read more

காசா மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவு: மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்

ஜெருசலேம், கடந்த 2023-ம் ஆண்டு அக்-7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், 250க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக சிறைப்பிடித்து சென்றனர். இதையடுத்து ஹமாஸ் அமைப்பினர் மீத் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே யுத்தம் நடைபெற்று வந்தது. இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலில், 67,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் – … Read more

இந்தியா கூட்டணியின் தேர்தல் அறிக்கை புதிய பீகாரை உருவாக்கும்; காங்கிரஸ்

பாட்னா, தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட மேலும் 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி மேற்கொள்ள உள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இந்நிலையில், அம்முடிவை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. பாட்னா விமான நிலையத்தில், ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தலைவர் பவன் கேரா கூறியதாவது:- பீகாரில் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது சந்தித்த சிரமங்களுக்கு என்ன செய்வது? அந்த சமயத்தில், காங்கிரஸ் எழுப்பிய கேள்விகளுக்கு தேர்தல் கமிஷன் இன்னும் பதில் அளிக்காதது ஏன்? … Read more