அணு ஆயுதம் கொண்டு பாகிஸ்தான் தாக்கினால்… பரூக் அப்துல்லா பதில்

ஜம்மு, ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரான பரூக் அப்துல்லா செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார். அப்போது, பாதுகாப்பு மந்திரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படைகளின் தலைமை தளபதி, முப்படைகளின் தளபதிகள் ஆகியோருடனான பிரதமர் மோடியின் சந்திப்பு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு … Read more

ஐ.பி.எல்.: சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நாளை மோதல்

சென்னை, 10 அணிகள் இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரின் 49-வது லீக் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. 9 … Read more

அமெரிக்கா: மனைவி, மகனை சுட்டுக்கொன்று இந்திய தொழிலதிபர் தற்கொலை

வாஷிங்டன், கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் கேஆர்பெட் பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷ்வர்தன் கிகாரி (வயது 57). இவரது மனைவி சுவேதா பன்யம் (வயது 44). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் இருந்தனர். ஹர்ஷ்வர்தன் அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றினார். பின்னர், 2017ம் ஆண்டு ஹர்ஷ்வர்தன் மனைவியுடன் சேர்ந்து ஹாலோ வால்ட் என்ற ரோபோர்ட்டிக் நிறுவனத்தை தொடங்கினார். அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் நியூகேஸ்டல் இந்நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது. ஹர்ஷ்வர்தன் குடும்பத்துடன் நியூகேஸ்டல் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த … Read more

கர்நாடகா: உள்ளூர் கிரிக்கெட்டின்போது 'பாகிஸ்தான் வாழ்க' கோஷம் எழுப்பிய நபர் அடித்துக்கொலை

பெங்களூரு, கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் குடுபு கிராமத்தில் நேற்று முன் தினம் உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில், அப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்நிலையில், ஆட்டத்தின்போது மதியம் 3 மணியளவில் ஒரு நபர் ‘பாகிஸ்தான் வாழ்க’ என கோஷம் எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த அங்கிருந்தவர்கள் அந்த நபர் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர். கற்கள், கட்டைகளை கொண்டு அந்த நபரை சரமாரியாக அடித்தனர். இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். … Read more

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்

மாட்ரிட், பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து), ரஷியாவின் டயானா ஷ்னைடர் உடன் மோதினார். இந்த போட்டியின் முதல் செட்டை 6-0 என்ற புள்ளிக்கணக்கில் இகா ஸ்வியாடெக்கும், 2வது செட்டை 7-6 (7-3) என்ற புள்ளிக்கணக்கில் டயானா ஷ்னைடரும் கைப்பற்றினர். தொடர்ந்து வெற்றியாளரை … Read more

சீனா: ஓட்டலில் பயங்கர தீ விபத்து – 22 பேர் பலி

பீஜிங், சீனாவின் லியோயிங் மாகாணம் லியாயங் நகரில் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் இன்று மதியம் 12.30 மணியளவில் 30க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டலில் தீ பற்றியது. இந்த சம்பவத்தில் ஓட்டலில் இருந்த 22 பேர் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மீட்புக்குழுவினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த தீ … Read more

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமனம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதவியேற்றார். இவரது பதவிக் காலம் வரும் மே 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்யுமாறு சஞ்சீவ் கன்னாவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் அனுப்பியிருந்தது. இதனையடுத்து, தனக்கு அடுத்ததாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்புக்கு மூத்த நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய் (பி.ஆர்.கவாய்) பெயரை சஞ்சீவ் கன்னா பரிந்துரை … Read more

கனடா: ஆம் ஆத்மி நிர்வாகியின் மகள் கடற்கரையில் சடலமாக மீட்பு – அதிர்ச்சி சம்பவம்

ஒட்டாவா, பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டம் டிராபாசி பகுதியை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி தேவேந்தர் சிங். இவரது மகள் வன்ஷிகா (வயது 21) . வன்ஷிகா கடந்த 2 ஆண்டுகளுக்குமுன் கனடா சென்றார். அவர் ஒட்டாவாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்தார். இந்நிலையில், கடந்த 25ம் தேதி மாலை வன்ஷிகா தான் தங்கி இருந்த வீட்டில் இருந்து வெளியே சென்றார். அந்த வீட்டில் தங்கி இருந்த சக மாணவிகளிடம் , வேறு வாடகை … Read more

நள்ளிரவு 1 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் … Read more

ஆந்திராவில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்படாத அண்ணாமலை..!

அமராவதி, தமிழகம் உள்பட நாடு முழுவதும் பாஜகவின் உள்கட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதுவரை கிளைத் தலைவர், மண்டல தலைவர், மாவட்ட தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கிடையே தமிழக பாஜக மாநில தலைவர் பதவிக்கான தேர்தலும் நடைபெற்றது. இதில் பாஜக வின் தமிழக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து கடந்த 12-ம் தேதி தமிழக பாஜக தலைவராக நயினார் … Read more