காதலியை சுட்டுக்கொன்று வாலிபர் தற்கொலை – அதிர்ச்சி சம்பவம்

அகர்தலா, திரிபுரா மாநிலம் கோமதி மாவட்டத்தில் உள்ள ஹோலாஷெட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் நேற்றுமுன்தினம் மாலை இளம்பெண் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு பிணமாக கிடந்தார். அருகில் வாலிபர் ஒருவர் ரத்தவெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். இதுபற்றி தகவலறிந்து வந்த போலீசார் வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணையில் இறந்தவர்கள் உதய்பூரைச் சேர்ந்த ஜன்னத் அக்தர் (வயது 26), ஷால்கரா பகுதியைச் சேர்ந்த ஷோஹேல் மியா என்பதும், இருவரும் … Read more

முன்னாள் கிரிக்கெட் வீரர் புஜாராவின் உறவினர் மர்ம மரணம்

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேத்தேஷ்வர் புஜாரா. இவருடைய மனைவி பூஜா பாபரி. இந்நிலையில், பூஜாவின் சகோதரரான ஜீத் பாபரி (வயது 30) வீட்டில் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார். குஜராத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள ஹரிஹரன் சொசைட்டி பகுதியிலுள்ள குடியிருப்பு ஒன்றில் மயக்கமடைந்த நிலையில் பாபரி கிடந்துள்ளார். இதுபற்றிய தகவல் அறிந்து அவர் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். எனினும், வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார் என … Read more

ஹாங்காங்: அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து – பலி 65 ஆக உயர்வு; 300 பேர் மாயம்

பீஜிங், சீனாவின் ஆட்சிக்கு உட்பட்ட ஹாங்காங்கில் தாய் போ மாவட்டத்தில் வாங் புக் கோர்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 8 தொகுதிகள் கொண்ட இந்த குடியிருப்பில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளன. இவற்றில், 2 ஆயிரம் வீடுகள் உள்ளன. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கட்டிடங்களை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதற்காக தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, நேற்று மதியம் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீப்பிடித்தது. தீ அடுத்தடுத்த அடுக்குமாடி கட்டிடங்களுக்கும் பரவியது. … Read more

டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது

புதுடெல்லி, டெல்லியில் கடந்த 10-ந்தேதி நடந்த கார் குண்டுவெடிப்பில் 15 பேர் பலியானார்கள். 30 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கை முதலில் டெல்லி போலீசார் விசாரித்தனர். அப்போது பலரை அவர்கள் பிடித்து ரகசிய விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கினார்கள். இவர்கள் இந்த வழக்கில் முழு விவரங்களையும் கண்டுபிடித்தனர். சம்பவத்தில் டாக்டர் உமர் என்பவர் தற்கொலை குண்டாக வெடித்து … Read more

இந்தியாவை தரக்குறைவாக பேசிய தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் – அனில் கும்ப்ளே பதிலடி

மும்பை, இந்தியா – தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா, இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்தது. அத்துடன் 25 வருடங்களுக்கு பிறகு இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. இந்த போட்டியின் 4வது நாளில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறுவதற்கு … Read more

இம்ரான்கானை சந்திக்க குடும்பத்தினருக்கு அனுமதி

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டு கடந்த 2023-ம் ஆண்டு சிறையில் அடைக் கப்பட்டார். ராவல்பிண்டி நகரின் அடியாலா சிறையில் கடந்த 2 ஆண்டுகளாக இருந்து வருகிறார். இதற்கிடையே இம்ரான்கானை சந்திக்க அவரது 3 சகோதரிகள் நோரின் நியாசி, அலீமா கான், உஸ்மா கான் ஆகியோர் சென்றபோது போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் அவர்களும், இம்ரான்கானின் தெக்ரீக்-இ- இன்சாப் கட்சியினரும் சிறை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே சிறைக்குள் இம்ரான்கானை … Read more

சபரிமலையில் தங்கம் அபகரிக்கப்பட்ட வழக்கில் நடிகர் ஜெயராமை கைது செய்ய விசாரணை அதிகாரிகள் முடிவு

திருவனந்தபுரம், சபரிமலை அய்யப்பன் கோவிலில் துவார பாலகர் சிலைகள் மற்றும் கதவு நிலைகளில் பதிக்கப்பட்ட தங்கத் தகடுகளில் இருந்து தங்கம் அபகரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கேரள ஐகோர்ட்டின் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி. வெங்கடேஷ் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு தங்கத்தகடுகளை சென்னைக்கு கொண்டு சென்ற உண்ணிகிருஷ்ணன் போற்றி மற்றும் தங்கத்தகடுகளை தாமிர தகடுகள் என்று சான்றிதழ் வழங்கிய … Read more

சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட்: தமிழக அணி தோல்வி

ஆமதாபாத், 18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி ஆமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களில் நேற்று தொடங்கியது. இதன் ‘எலைட்’ பிரிவில் பங்கேற்கும் 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்குள் நுழையும். ‘பிளேட்’ பிரிவில் கலந்து கொண்டுள்ள 6 அணிகள் இடையிலான ஆட்டம் புனேயில் நடக்கிறது. இதில் ஆமதாபாத்தில் நடந்த … Read more

இறந்த தாய் போல் வேடமிட்டு பென்சன் தொகையை பெற்ற மகன் கைது

ரோம், இத்தாலியின் போர்கோ விர்ஜிலியோ நகரை சேர்ந்த 56 வயதான நபர், இறந்த தனது தாய் போல் வேடமிட்டு அவரது ஓய்வூதிய தொகையை பெற்று மோசடி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த நபரின் தாய் கிராசியெல்லா டால்ஒக்லியோ கடந்த 2022-ம் ஆண்டு தனது 82-வது வயதில் மரணம் அடைந்தார். ஆனால் அவரது ஓய்வூதிய தொகையை தொடர்ந்து பெற எண்ணிய மகன் தனது தாயின் மரணத்தை அரசுக்கு தெரிவிக்காமல் உடலை பதப்படுத்தி வீட்டில் மறைத்து வைத்து உள்ளார். அதன்பின் … Read more

ஆண் நண்பர்களுடன் பேசிய தங்கை.. ஆத்திரத்தில் அண்ணன் செய்த கொடூர செயல்

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள இடோரா கோட்டியா கிராமத்தை சேர்ந்த இளம்பெண் நைனா தேவி(வயது 22). இவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவரது குடும்பத்தினர் மாப்பிள்ளை தேடி வந்துள்ளனர். ஆனால் திருமண வரன்களை நைனா தேவி தொடர்ந்து நிராகரித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நைனா தேவியின் அண்ணன் ஷேர் சிங், தனது தங்கையின் செயல்பாடுகளை நோட்டமிட்டுள்ளார். நைனா தேவியின் செல்போனை பார்த்தபோது, அவர் பல ஆண் நண்பர்களுடன் தொடர்ந்து பேசி வந்தது தெரியவந்தது. … Read more