கங்கையில் மூழ்கினால் போகாத பாவம் பா.ஜ.க.வில் சேர்ந்து விட்டால் போய் விடும்: தேஜஸ்வி யாதவ் தாக்கு

பாட்னா, 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு கடந்த 6-ந்தேதி 121 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள 122 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. முதல்கட்ட தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அமைதியாக நடந்து முடிந்தது. பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. இதில் 64.66 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. … Read more

முதல் டெஸ்ட்: இந்தியாவின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த பார்த்தீவ் படேல்.. 2 தமிழக வீரர்களுக்கு இடம்

மும்பை, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் 14-ம் தேதி தொடங்க உள்ளது. இது ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனால் தொடரில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. … Read more

2 நாளாக இருமல்… அமெரிக்காவில் கல்லூரி மாணவி திடீர் மரணம்; தோழிகள் அதிர்ச்சி

நியூயார்க், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏ அண்டு எம் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் ராஜலட்சுமி யார்லகட்டா என்ற ராஜி (வயது 23). சமீபத்தில் பட்டம் பெற்றுள்ளார். ஆந்திராவை சேர்ந்த இவர், படிப்புக்கு பின்னர், அமெரிக்காவில் வேலை தேடி கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில், 2 நாட்களாக அவருக்கு தொடர்ந்து இருமல் இருந்துள்ளது. கடுமையான இருமலுடன், நெஞ்சு வலியும் சேர்ந்து அவரை பாதித்துள்ளது. இந்நிலையில், டெக்சாஸில் உள்ள அவருடைய குடியிருப்பில் அவர் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார். அலாரம் … Read more

காங்கிரஸ் பயிற்சி முகாமிற்கு தாமதமாக வந்த ராகுல் காந்திக்கு தண்டனை

போபால், மத்திய பிரதேச மாநிலம், பச்மார்ஹியில் நேற்று காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடத்தப்பட்டது..இந்த பயிற்சி முகாமில் சிறப்பு விருந்தினராக ராகுல் காந்தி கலந்துகொண்டார். ஆனால், இந்த பயிற்சி முகாமிற்கு ராகுல் காந்தி தாமதமாக வந்தார். அதாவது,பீகார் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு நேரடியாக வந்ததால் இரண்டு நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பயிற்சி முகாமுக்கு தாமதமாக வருபவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் பயிற்சிப் பிரிவின் தலைவர் சச்சின் ராவ், 10 புஸ்-அப்ஸ் எடுக்க வேண்டும் என்ற தண்டனை … Read more

ஹெலெனிக் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஜோகோவிச் சாம்பியன்

ஏதென்ஸ், பல முன்னணி வீரர்கள் பங்கேற்றிருந்த ஹெலெனிக் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச் (செர்பியா) – லோரென்சோ முசெட்டி (இத்தாலி) மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கொன்றாக கைப்பற்றிய நிலையில் 3-வது செட்டை ஜோகோவிச் கைப்பற்றினார். இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 4-6, 6-3 மற்றும் 7-5 என்ற செட் கணக்கில் போராடி வென்று சாம்பியன் பட்டத்தை … Read more

ஊழியர்கள் பற்றாக்குறை எதிரொலி; அமெரிக்காவில் ஒரே நாளில் 2,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து

வாஷிங்டன், அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு குடியேற்ற கொள்கை, பிற நாடுகள் மீது வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு அதிரடி மாற்றங்களை அறிவித்து வருகிறார். அவரது இந்த நடவடிக்கைக்கு உள்நாட்டிலேயே எதிர்ப்புகள் கிளம்பின. எனவே நாடாளுமன்றத்தில் அவர் கொண்டு வரும் மசோதாக்களுக்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான நிதியை விடுவிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அரசு துறைகளுக்கான நிதி விடுவிக்கப்படாததால் அனைத்து துறைகளும் முடங்கின. குறிப்பாக … Read more

கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் கழுத்தை அறுத்துக்கொலை… மகன் கண்முன்னே பயங்கரம்

நகரி, தெலுங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் திம்மாப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுவாதி (வயது 28). இவருக்கு திருமணமாகி கணவரும், 2 மகன்களும் இருந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, துண்டிகல் என்ற இடத்தில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் கிஷன் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். கிஷனுக்கு திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர். சுவாதியின் ஒரு மகன் விடுதியில் தங்கி படித்து வந்தான். மற்றொரு மகன் அவருடன் தங்கியிருந்து அருகில் உள்ள பள்ளியில் … Read more

முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தான் அணி அறிவிப்பு

லாகூர், பாகிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்றுள்ள அணிகள் தங்களுக்குள் 2 முறை மோத உள்ளன. இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இந்த தொடர் வருகிற 17-ம் தேதி தொடங்க உள்ளது. இதன் முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் – ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் ஆகா தலைமையிலான … Read more

பிலிப்பைன்ஸ் நாட்டை மிரட்டும் `பங்வோங்' புயல் – 14 லட்சம் பேர் வெளியேற்றம்

மணிலா, பசிபிக் பெருங்கடலில் உருவான கல்மேகி புயல் பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளை தாக்கியது. இதனால் அங்கு பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடின. சில இடங்களில் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 204 பேர் பலியாகினர். மேலும் பல கோடி ரூபாய் அளவுக்கு பொருட்சேதமும் ஏற்பட்டது. எனவே உள்கட்டமைப்பை சரிசெய்யும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. இதற்காக நட்பு நாடுகளான அமெரிக்கா, ஜப்பான் ஆகியவை உதவ முன் வந்துள்ளன. … Read more

அந்தமான் கடலில் கடுமையான நிலநடுக்கம்

போர்ட் பிளேர், அந்தமான் கடலில் இன்று மதியம் 12.06 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகி உள்ளது. இதனால், அந்தமான் நிகோபார் தீவுகளின் சில பகுதிகளில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. அது 90 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. 1 More update தினத்தந்தி Related Tags : … Read more