அனில் அம்பானியின் ரூ.1,400 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

புதுடெல்லி ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனங்கள் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக கோடிக்கணக்கான புதிய சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இந்த வழக்கில் முன்னதாக ரூ.7,500 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பிறப்பித்த புதிய உத்தரவின் கீழ் ரூ.1,400 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளை அமலாக்கத்துறை அதிரடியாக பறிமுதல் செய்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், இந்த வழக்கில் அமலாக்கத்துறையால் இதுவரை சட்டப்படி முடக்கப்பட்ட … Read more

ஐ.பி.எல். 2026: சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இவர்கள்தான் – இந்திய முன்னாள் வீரர் கணிப்பு

மும்பை, 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந் தேதி அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த 15-ந் தேதி மாலை 5 மணிக்குள் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு … Read more

பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு

பாரீஸ், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பிரசித்தி பெற்ற லூவ்ரே அருங்காட்சியகம் அமைந்துள்ளது. ஈபிள் கோபுரத்துக்கு இணையான சிறப்பினை பெற்ற இந்த அருங்காட்சியகத்தை லட்சக்கணக்கானோர் பார்வையிடுகின்றனர். இந்தநிலையில் கடந்த மாதம் வைர கிரீடம், நெக்ளஸ் உள்பட சுமார் ரூ.900 கோடி மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். எனினும் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் இன்னும் மீட்கப்படவில்லை. இந்த சம்பவம் அருங்காட்சியகத்தின் பாதுகாப்பில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. எனவே பாதுகாப்பை பலப்படுத்த அங்கு … Read more

தேர்தல் ஆணையம் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும் – மம்தா பானர்ஜி

கொல்கத்தா, மேற்கு வங்காளம் மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் ரங்கமதி கிராம பஞ்சாயத்து உள்ளது. இங்கு வாக்குச்சாவடி நிலை அதிகாரியாக பணியாற்றிய அங்கன்வாடி ஊழியரான 48 வயதான சாந்தி முன் ஓராவ், தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. சாந்தியின் கணவர் கூறும்போது, “அவரது வழக்கமான அங்கன்வாடி பணிகள் மற்றும் வீட்டு வேலைகளுக்குப் பிறகு, அவர் இரவில் ஆவணங்களை சேகரிக்கவும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான படிவங்களை நிரப்பவும் வெளியே செல்வார். … Read more

ஐ.பி.எல்.2026: மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த முன்னாள் வீரர்

மும்பை, 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந் தேதி அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த 15-ந் தேதி மாலைக்குள் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. இதன்படி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் … Read more

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 5.19 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 35.02 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 35.02 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. 1 More update … Read more

இமாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 2.4 ஆக பதிவு

புதுடெல்லி, இமாச்சல பிரதேசத்தின் சம்பா பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு 12.39 மணியளவில் ரிக்டர் அளவில் 2.4 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 33.12 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 76.72 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. EQ of M: 2.4, … Read more

முத்தரப்பு டி20 தொடர்: இலங்கை அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே

ராவல்பிண்டி, பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறுகின்ற 2-வது லீக் ஆட்டத்தில் இலங்கை – ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரையன் பென்னட் – மருமணி களமிறங்கினர். இவர்களில் மருமணி 10 ரன்களிலும், அடுத்து வந்த டெய்லர் 11 … Read more

ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு

கான்பெரா, இன்றைய காலகட்டங்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூகவலைதளங்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் சிறுவர்கள் பலரும் இதில் மூழ்கி கிடப்பதால் கவனக்குறைவு, தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் அவர்களுக்கு ஏற்படுகின்றன. எனவே 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூகவலைதளங்களை பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் தடை விதித்தது. இந்த தடையானது வருகிற 10-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனவே 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூகவலைதள கணக்குகளை நீக்க டிக்-டாக், எக்ஸ், மெட்டா ஆகிய நிறுவனங்களுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இதனை … Read more

விஞ்ஞானிகள் எடுத்த அபூர்வ வகை வால்மீன் புகைப்படம்

புதுடெல்லி, ராஜஸ்தானில் உள்ள மவுண்ட் அபு என்ற இடத்தில் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் செயல்படுகிறது. இங்குள்ள விஞ்ஞானிகள், செவ்வாய் கோளுக்கு அருகில் வந்து சென்ற அபூர்வ வகை ‘இன்டர்ஸ்டெல்லர்’ வால்மீனை, அட்லஸ் என்ற 1.2 மீட்டர் விண்வெளி தொலைநோக்கி மூலம் கண்டறிந்து புகைப்படம் எடுத்தனர். இதனால் இதற்கு ‘வால்மீன் 3ஐ/அட்லஸ்’ என பெயரிட்டுள்ளனர். இது சூரிய மண்டலத்திற்கு வெளியே இருந்து வந்த 3-வது உறுதிபடுத்தப்பட்ட பொருளாகும். 3 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான பனிக்கட்டிகள் மற்றும் சூரியனுக்கு … Read more