தலைநகர் டெல்லியில் இன்று சற்று அதிகரித்த கொரோனா பாதிப்பு

புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் இன்றைய கொரோனா வைரஸ் தொடர்பான விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 2 ஆயிரத்து 31-ஐ விட அதிகமாகும். இதனால், டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 84 ஆயிரத்து 595 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 8 ஆயிரத்து 430 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். … Read more

தென் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடரில் தோனி ஆலோசகராக செயல்பட பிசிசிஐ மறுப்பு?

மும்பை, ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் நடக்கும் இந்த போட்டியையொட்டி உருவாக்கப்பட்ட 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர். அந்த வகையில் ஜோகனஸ்பர்க்கை அடிப்படையாக கொண்டு உதயமாகும் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிர்வாகம் வாங்கியுள்ளது. இந்த நிலையில் ஜோகனஸ்பர்க் அணியின் பயிற்சியாளர் அல்லது … Read more

வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரின் வீடியோவை வெளியிட்டு இந்தியாவை பாராட்டிய இம்ரான் கான்

இஸ்லாமாபாத், இந்தியாவின் வெளியுறவு கொள்கையை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரின் வீடியோவை லாகூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் காண்பித்து பேசியுள்ளார். இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. இத்தகைய பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதற்கு பாகிஸ்தானின் தவறான வெளியுறவுக்கொள்கைகளே காரணம் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் இது தொடர்பாக லாகூரில் நடைபெற்ற … Read more

பெங்களூருவின் வளர்ச்சிக்கு விரைவில் புதிய திட்டம் அமல்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு

பெங்களூரு: போக்குவரத்து வசதிகள் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.) சார்பில் 75 மின்சார பஸ்கள் சேவை தொடக்க விழா பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அந்த பஸ்களின் சேவையை தொடங்கி வைத்து பேசியதாவது:- பெங்களூரு வளர்ச்சி பெற அனைத்து துறைகளிலும் சரியாக வேண்டும். போக்குவரத்து வசதிகள் மட்டும் அதிகமாக இருந்தால் போதாது. பி.எம்.டி.சி.க்கு தற்போது மாநில அரசு ரூ.270 கோடி மானியம் வழங்குகிறது. அந்த கழகத்திற்கு அரசு … Read more

ஆசிய ஜூனியர் கைப்பந்து: இந்திய அணி அறிவிப்பு

சென்னை: ஆண்களுக்கான 14-வது ஆசிய ஜூனியர் கைப்பந்து (18 வயதுக்குட்பட்டோர்) சாம்பியன்ஷிப் போட்டி ஈரான் தலைநகர் டெக்ரானில் நாளை முதல் 22-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணி விவரம் வருமாறு:- கார்த்திக் ஷர்மா (கேப்டன்), குஷ் சிங், ஷேகர் துரான், ஆதித்ய ராணா, ஆஷிஷ் ஸ்வைன், நயன்பாய் பட்டேல் துருவில், லவிகுமார், யமன் கட்டிக், அதுல் சிங், அபிஷேக், கபிலன் மகேந்திரன், ஆர்யன். அணியின் மேலாளர்: ஜெ.நடராஜன், தலைமை பயிற்சியாளர்: பிர் … Read more

ரஷியாவுடனான உறவில் விரிசல் – இஸ்ரோவின் பக்கம் கவனத்தை திருப்பியுள்ள ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்!

லண்டன், ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்(இஎஸ்ஏ) தனது விண்வெளி பணிகளைத் தொடங்க புதிய கூட்டணிகளை தேட ஆரம்பித்துள்ளது. உக்ரைன் போர் தொடர்பான உறவுகளில் ஏற்பட்ட முறிவைத் தொடர்ந்து ரஷிய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் அதன் ஐரோப்பிய விண்வெளி உறவுகளை முடித்துக்கொண்டது. மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது விதித்துள்ள பொருளாதார நடவடிக்கைகளால் ரஷியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்காரணமாக, ரஷியாவுடனான செவ்வாய் கிரக கூட்டுத் திட்டம் உட்பட பல பணிகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில் ரஷியாவின் விண்கலமான சோயுஸ் … Read more

ராம்புராவில் விரைவில் உலக யானைகள் தினம் கொண்டாட்டம்: பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு திட்ட இயக்குனர் தகவல்

கொள்ளேகால்: சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் நேற்று உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கொள்ளேகால் தாலுகா பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு திட்ட இயக்குனர் ரமேஷ் கூறுகையில்:- உலகம் முழுவதும் யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இது ஒரு நாள் மட்டும் கொண்டாடப்படுவது இல்லை. தினமும் கொண்டாடவேண்டும். ஏனென்றால் வனப்பகுதிகள் பாதுகாப்பில் யானைகளின் பங்கு மிகவும் முக்கியம். இந்தியா முழுவதும் 49 ஆயிரத்திற்கும் அதிகமான யானைகள் உள்ளது. சாம்ராஜ்நகரில் 6 ஆயிரம் யானைகள் உள்ளன. பந்திப்பூரில் மட்டும் … Read more

ஆசிய கோப்பை, டி20 உலகக் கோப்பைக்கான வங்காளதேச அணி கேப்டனாக ஷகிப் அல் ஹசன் நியமனம்

டாக்கா, ஆசியக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பைக்கான வங்கதேச கேப்டனாக ஆல்-ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 27 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட அணியையும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஷகிப் அல் ஹசன் வரவிருக்கும் ஆசியக் கோப்பையில் வங்காளதேச அணியை வழிநடத்துவது மட்டுமல்லாமல், பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடரையும், அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 டி20 உலகக் … Read more

தைவானை ஆதரிக்கும் உறுதியான நடவடிக்கைகள் தொடரும்- அமெரிக்கா

வாஷிங்டன், சீனாவிடம் இருந்து பிரிந்து தனிநாடாக உருவான தைவானை, தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த சூழலில் சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி சமீபத்தில் தைவானுக்கு சென்றார். இதனால் ஆத்திரமடைந்த சீனா தைவான் மற்றும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் தைவானை நாலாபுறமும் சுற்றிவளைத்து போர்ப்பயிற்சியில் ஈடுபட்டது. சீனாவின் ஒரே நாடு கொள்கையை உறுதிப்படுத்த இது போன்ற போர்ப்பயிற்சிகள் தொடரும் எனவும் சீனா எச்சரித்துள்ளது. … Read more

நாட்டில் விடுதலைக்கு உயிர் தியாகம் செய்தவர்கள் பங்கு அதிகம்: மண்டியா நகரசபை தலைவர் மஞ்சுநாத் பேட்டி

மண்டியா: மண்டியா டவுன் பகுதியில் உள்ள கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் நிலையத்தில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் விடுதலை போராட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சியின்போது பேசிய நகரசபை தலைவர் மஞ்சுநாத் கூறியதாவது:- இந்தியாவின் விடுதலைக்கு பலர் தங்கள் உயிர்களை தியாகம் செய்துள்ளனர். விடுதலையில் அவர்களின் பங்கு அதிகமாகும். இது அனைவர் மனதிலும் மிகவும் வலியை ஏற்படுத்தியது. வாகன வசதி இல்லாத காலத்தில் … Read more