சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் டி20 போட்டி..?

சென்னை, இந்தியாவில் பழமை வாய்ந்த கிரிக்கெட் ஸ்டேடியங்களில் ஒன்றான சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பெவிலியன் உள்ளிட்ட சில பகுதிகள் இடிக்கப்பட்டு மீண்டும் புது பொலிவுடன் தயாராகி வருகிறது. விரைவில் ஸ்டேடியம் தயார் நிலைக்கு வர இருக்கிறது. இந்த மைதானத்தில் கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த நிலையில் வரும் நவம்பர் மாதம் இந்த மைதானத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் டி20 போட்டி நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் … Read more

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – புதிதாக 2,604 பேருக்கு தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இருப்பினும் தொற்று எண்ணிக்கை குறைவாக … Read more

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடிமை: சித்தராமையா குற்றச்சாட்டு

பெங்களூரு: சுதந்திர போராட்டம் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- ஆங்கிலேயர் காலத்துடன் அடிமைத்தனம் முடிவடைந்துவிட்டதாக நாங்கள் நினைத்தோம். ஆனால் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, தான் இன்னும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடிமை என்று நிரூபித்துள்ளார். இந்த பா.ஜனதா அரசு சுதந்திர போராட்டம் குறித்து விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இதில் நேருைவ அரசு கைவிட்டுள்ளது. பசவராஜ் பொம்மை தனது பதவியை காப்பாற்ற எந்த நிலைக்கும் செல்வார் என்பது இதன் மூலம் தெரிகிறது. நேரு … Read more

கனடா ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டிக்கு முன்னேறினார் பீட்ரிஸ் ஹடாத் மியா

டொரண்டோ, கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் விளையாட்டின் மிக முக்கிய தொடரான அமெரிக்க ஓபன் இந்த மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இதற்கு முன்னதாக கனடா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல் அரையிறுதியில் ருமேனியாவைச் சேர்ந்த சிமோனா ஹாலெப் 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் பெகுலாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதை தொடர்ந்து நடைபெற்ற 2-வது அரையிறுதியில் பிரேசில் நாட்டை சேர்ந்த பீட்ரிஸ் … Read more

எகிப்தில் கிறிஸ்தவ ஆலயத்தில் திடீர் தீ விபத்து; 41 பேர் உயிரிழப்பு

கெய்ரோ, எகிப்து தலைநகர் கெய்ரோவின் வடமேற்கில் இம்பாபா மாவட்டத்தில் அபு சிபைன் என்ற கிறிஸ்தவ ஆலயம் ஒன்று உள்ளது. இந்நிலையில், திடீரென இந்த ஆலயத்தில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் சிக்கி 41 பேர் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். இதற்கான காரணம் எதுவும் உடனடியாக தெரியவரவில்லை. இதனை தொடர்ந்து, அனைத்து நிர்வாக சேவைகளும் முடுக்கி விடப்பட்டு, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என அதிபர் அப்துல் பதா அல்-சிசி தனது பேஸ்புக் பக்கத்தில் … Read more

முன்னாள் பிரதமர் நேருவின் கைப்பட எழுதப்பட்ட 'முதல் சுதந்திர தின உரையை' சமூக வலைதளத்தில் பகிர்ந்த காங்கிரஸ்!

புதுடெல்லி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் புகழ்பெற்ற ‘முதல் சுதந்திர தின உரையின்’ வரைவை காங்கிரஸ் பகிர்ந்துள்ளது. அதில் அவர் நாட்டின் “விதியுடன் கூடிய தேதி” பற்றி எழுதியிருந்தார் என தெரிவித்துள்ளது.1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி இரவு, அரசியல் நிர்ணய சபையின் நள்ளிரவு அமர்வில் நேரு ஆற்றிய உரையின் வீடியோவையும் காங்கிரஸ் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பகிர்ந்துள்ளார். “75 ஆண்டுகளுக்கு முன்பு, நள்ளிரவுக்குப் பிறகு, நேரு தனது அழியாத ‘டிரிஸ்ட் வித் … Read more

செஸ் ஒலிம்பியாட் தாக்கம்- தாயகம் திரும்பியதும் வீட்டிலேயே தோசை சுட்டு சாப்பிட்ட செஸ்சபிள் சிஇஓ

ஆம்ஸ்டர்டம், 185 நாடுகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற 44 வது சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் தமிழர்கள் பண்பாட்டை விளக்கும் வகையில் நினைவு பரிசு, பரிசு பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டது. இந்த தொடரில் பங்கேற்க நெதர்லாந்தை சேர்ந்த கிரிட் வான்டே வெல்டே வந்து இருந்தார். இவர் இசைக் கலைஞராகவும், செஸ்சபிள் இணையத்தளத்தின் சி.இ.ஓ. வாகவும் உள்ளார். சென்னைக்கு வந்த … Read more

சீன உளவு கப்பல் வருகை… இந்தியாவுக்காக வெளியுறவு கொள்கையை மாற்ற முடியாது..! இலங்கை அதிரடி அறிவிப்பு

கொழும்பு, சீனாவின் உளவு கப்பல் யுவான் வாங்-5 நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) இலங்கை கொழும்பு அருகே உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர இருக்கிறது. இந்த உளவு கப்பல் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று கருதப்படுகிறது. இந்த கப்பல் இலங்கைக்கு வருவதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்கே அனைத்துக்கட்சி தலைவர்களிடமும் ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தியா-சீனா இரு நாடுகளின் கருத்துக்களை பரிசீலித்தனர். இறுதியில் சீன கப்பலுக்கு அனுமதி அளிப்பதென்று முடிவு … Read more

தலைநகர் டெல்லியில் இன்று சற்று அதிகரித்த கொரோனா பாதிப்பு

புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் இன்றைய கொரோனா வைரஸ் தொடர்பான விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 2 ஆயிரத்து 31-ஐ விட அதிகமாகும். இதனால், டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 84 ஆயிரத்து 595 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 8 ஆயிரத்து 430 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். … Read more

தென் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடரில் தோனி ஆலோசகராக செயல்பட பிசிசிஐ மறுப்பு?

மும்பை, ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் நடக்கும் இந்த போட்டியையொட்டி உருவாக்கப்பட்ட 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர். அந்த வகையில் ஜோகனஸ்பர்க்கை அடிப்படையாக கொண்டு உதயமாகும் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிர்வாகம் வாங்கியுள்ளது. இந்த நிலையில் ஜோகனஸ்பர்க் அணியின் பயிற்சியாளர் அல்லது … Read more