மனைவியுடன் தகராறு: 2 குழந்தைகளை கொன்று வாலிபர் தற்கொலை

பிஜ்னோர், உத்தரப் பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மகன், மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முபாரக்பூர் குர்த் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபுராம் (28 வயது). இவருக்கு தீபன்ஷு (5 வயது) என்ற மகனும், ஹர்ஷிகா (3 வயது) என்ற மகளும் இருந்தனர். பாபுராமுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்த நிலையில் நேற்றும் … Read more

சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி

விசாகப்பட்டினம், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஆந்திர மாநிலம் … Read more

ராணுவ தளபதி குறித்து விமர்சனம்: இம்ரான்கானுக்கு பாகிஸ்தான் ராணுவம் கண்டனம்

இஸ்லமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெக்ரீக்-இ-இன்சாஃப் கட்சி தலைவருமான இம்ரான்கானுக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் அவர் சிறையில் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியதால், இம்ரான்கானின் சகோதரிகள் மற்றும் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, இம்ரான்கானை சந்திக்க அவரது சகோதரி உஸ்மாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அவர் சிறைக்குள் சென்று இம்ரான்கானை சந்தித்தார். அதன்பிறகு, சிறையில் இருந்தபடியே வெளியிட்ட அறிக்கையில் ராணுவ தளபதி அசிம் முனீரை இம்ரான்கான் கடுமையாக விமர்சித்திருந்தார். அசிம் … Read more

கோவா தீ விபத்தில் 23 பேர் பலி

வடக்கு கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள பாகா பகுதி கடற்கரையில் இயங்கி வந்த இரவு விடுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் குறைந்தது 23 பேர் பலியாயினர். பலியானவர்கள் அனைவரும் விடுதி ஊழியர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர். விடுதியில் தங்கி இருந்த சுற்றுலா பயணிகள் 4 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணி்களில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்து சமையல் அறை பகுதியில் நிகழ்ந்துள்ளது. சிலிண்டர் வெடிப்பு காரணமாக தீ … Read more

இந்தியாவுக்கு எதிராக சதம்: சாதனை படைத்த டி காக்

மும்பை, நேற்று நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இதில் தென் ஆப்பிரிக்கா வீரர் குயின்டான் டி காக் (106 ரன்) 23-வது சதம் அடித்தார்.இதனால் அவர் புதிய சாதனையை படைத்துள்ளார். ஒருநாள் போட்டியில் அவர் இந்தியாவுக்கு எதிராக அடித்த 7-வது சதம் இதுவாகும். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அதிக சதம் அடித்தவரான இலங்கை முன்னள் கேப்டன் சனத் ஜெயசூர்யாவின் (7 சதம், … Read more

அமெரிக்கா: தீ விபத்தில் சிக்கி இந்திய மாணவி பலி

வாஷிங்டன், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே ஜோடிமெட்லா பகுதியை சேர்ந்தவர் சஹாஜா உடுமலா (வயது 24). இவர் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் அல்பெனி நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். அவர் அல்பெனி நகரின் வெஸ்ட் அவன்யூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சக மாணவிகளுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். இந்நிலையில், சஹாஜா தங்கி இருந்த வீட்டில் நேற்று முன் தினம் காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ … Read more

புதினின் இந்திய பயணத்தின்போது கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எரிபொருள் அனுப்பிய ரஷியா

புதுடெல்லி, ரஷிய அதிபர் புதின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருந்தார். டெல்லியில் நடைபெற்ற 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடியும், ரஷிய அதிபர் புதினும் கலந்து கொண்டனர். மேலும் இந்தியா-ரஷியா இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தொடர்ந்து, 2 நாட்கள் அரசு பயணத்தை நிறைவு செய்த அதிபர் புதின் நேற்று இரவு ரஷியா புறப்பட்டு சென்றார். வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் விமான நிலையத்திற்கு நேரில் சென்று அதிபர் புதினை வழி அனுப்பி … Read more

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை கடந்த ரோகித் சர்மா

மும்பை, நேற்று நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இதில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 75 ரன்கள் எடுத்தார். முன்னதாக அவர் 27 ரன்னை எட்டிய போது சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர் போட்டியை சேர்த்து) 20 ஆயிரம் ரன்களை கடந்த 4-வது இந்திய வீரர் ஒட்டுமொத்தத்தில் 14-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். 38 வயதான ரோகித் சர்மா … Read more

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் திடீர் தாக்குதல் – 4 பேர் பலி

காபுல், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக, ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள கைபர் பக்துவா மாகாணத்தில் தெஹ்ரிக் இ தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பிற்கு ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் ஆதரவு அளிப்பதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது. மேலும், இந்த பயங்கரவாதிகளை ஒழிப்பதாக கூறி ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இது இருநாட்டு மோதலாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் எல்லையில் … Read more

இந்திய பயணம் நிறைவு: ரஷியா புறப்பட்டார் புதின்

டெல்லி, 2 நாட்கள் அரசு முறை பயணமாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் புதன்கிழமை இரவு டெல்லி வந்தார். அவரை பிரதமர் மோடி விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். இதையடுத்து, கடந்த 2 நாட்களாக புதின் இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன்படி நேற்று 23வது இந்தியா – ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின் கலந்து கொண்டனர். பின்னர், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த பயணத்தின்போது இந்தியா … Read more