ஈரானை நோக்கி வரும் அமெரிக்க போர்க்கப்பல்களை தாக்குவோம்; ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மிரட்டல்

டெஹ்ரான், ஈரானில் சுமார் ஒரு மாதமாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் வன்முறை அதிகரித்து வருகிறது. இந்த போராட்டக்காரர்களை அரசு இரும்புக்கரம் கொண்டும் ஒடுக்கி வருகிறது. இரு தரப்புக்கும் இடையே நடந்து வரும் மோதலில் சுமார் 6 ஆயிரம் பேர் இதுவரை கொல்லப்பட்டு உள்ளதாக அமெரிக்க மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது. 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இதுவரை கைது செய்யப்பட்டும் உள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு கூட்டாக மரண தண்டனை நிறைவேற்ற அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் … Read more

வாட்ஸ்அப்பில் விரைவில் கட்டணம் கொண்டு வர மெட்டா நிறுவனம் முடிவு: பயனர்களுக்கு அதிர்ச்சி

புதுடெல்லி, உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் செல்போனில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்றிருப்பது வாட்ஸ்அப் தான். உலக முழுவதும் 3 பில்லியன் பேர் வாட்ஸ்அப்பை பயன்படுத்துகிறார்கள். ஆரம்பத்தில் குறுஞ்செய்தி மட்டும் அனுப்பும் வசதியுடன் அறிமுகமான வாட்ஸ்அப், நாளடைவில் புகைப்படங்கள், கோப்புகள், வீடியோ உள்ளிட்டவற்றையும் பகிரும் வசதியை அறிமுகம் செய்தது. வாட்ஸ்அப்பில் குழு அரட்டை, ஸ்டேட்டஸ் என புதுப்புது வசதிகள் கொண்டு வரப்பட்டன. இதனால் எத்தனை நிறுவனங்கள் போட்டிக்கு வந்தாலும் … Read more

“தோனி சொன்னா பாராட்டு… நான் சொன்னா டிரோல்” – அஸ்வின் ஆதங்கம்

சென்னை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், 2025 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவருமான ரவிச்சந்திரன் அஸ்வின், ரசிகர்களின் அணுகுமுறைகள் குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்திய ஒரு பேட்டியில் அவர் பேசுகையில், இந்திய கிரிக்கெட்டில் சில வீரர்களுக்கு வழங்கப்படும் ரசிகர் ஆதரவும், சிலருக்கு கிடைக்கும் விமர்சனங்களும் சமநிலையற்றதாக இருப்பதாக மறைமுகமாக சுட்டிக்காட்டினார். அப்போது அவர் கூறியதாவது: “ஆர்சிபி ரசிகர்கள் ரொம்பவும் விசுவாசமானவர்கள்-னு ‘தல’ தோனி ஒரு நிகழ்ச்சியில் சொல்லியிருக்கார் என … Read more

அமெரிக்காவில் பனிப்புயலுக்கு இடையே கோர விமான விபத்து: 7 பேர் உயிரிழப்பு

வாஷிங்டன், அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் பனிப்புயலால் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் வடகிழக்கில் உள்ள மெய்னே மாகாணத்தில் நிலவும் கடும் பனிப்புயலுக்கு இடையே, தனியார் ஜெட் விமானம் விபத்தில் சிக்கி உள்ளது. நேற்று வெளியான தகவலின்படி, ஞாயிறு இரவு 7:45 மணியளவில், பேங்கர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து தனியார் ஜெட் விமானம் புறப்பட்டது. விமானத்தில் ஊழியர்கள் உட்பட மொத்தம் 8 பேர் இருந்தனர். ஓடுபாதையிலிருந்து கிளம்பிய அடுத்த 45 வினாடிகளில், விமானம் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்து … Read more

பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

புதுடெல்லி, 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரை 2 கட்டங்களாக நடத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி முதல் கட்ட கூட்டத்தொடர் பிப்ரவரி மாதம் 13-ந்தேதி வரை நடக்கிறது. 2-ம் கட்ட கூட்டத்தொடர் மார்ச் மாதம் 9-ந்தேதி முதல் ஏப்ரல் 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. கூட்டத்தொடரையொட்டி 28-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதனைத்தொடர்ந்து பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இது மத்திய நிதி மந்திரி நிர்மலா … Read more

’தோனி அந்த இடத்தில் களமிறங்குவார்’ …அஸ்வின் சொன்ன விஷயம் – சிஎஸ்கே ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

சென்னை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், 2025 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவருமான ரவிச்சந்திரன் அஸ்வின், 2026 ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனியின் பேட்டிங் வரிசை குறித்து ஒரு சுவாரசியமான கணிப்பை வெளியிட்டுள்ளார். ஐபிஎல் தொடருக்காக தோனி ஏற்கனவே தீவிர பயிற்சியைத் தொடங்கிவிட்ட நிலையில், அஸ்வின், சொன்ன விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் பேசுகையில், “தோனி மிகவும் உடற்தகுதியுடன் காணப்படுகிறார். அவர் 9வது இடத்தில் களமிறங்குவார் என்று எனக்குத் … Read more

அமெரிக்காவை புரட்டிப்போடும் பனிப்புயல்; அவசரநிலை பிரகடனம்

வாஷிங்டன், அமெரிக்காவில் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி இந்தாண்டு பிப்ரவரி இறுதிவரை குளிர்காலம் இருக்கும். கடந்தாண்டு டிசம்பரில் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் அங்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கி அங்கு பனிப்பொழிவு குறைந்தபாடில்லாமல் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் அட்லாண்டிங் பெருங்கடல் அருகே பனிப்புயல் ஒன்று புதிதாக உருவானது. மேற்கு மற்றும் மத்திய மேற்கு மாகாணங்களில் தாக்கி வரும் இந்த புயலுக்கு பெர்ன் என … Read more

திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இலவச தரிசனத்தில் பக்தர்கள் 20 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில், கோவிலில் நேற்று முன்தினம் 84 ஆயிரத்து 14 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அன்று அறிவிக்கப்பட்ட ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம். 35 ஆயிரத்து 131 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். 1 More update … Read more

ரூ.4.2 கோடிக்கு ஏலம் போன டான் பிராட்மேன் தொப்பி

சென்னை, 1947-48 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான தொடரின்போது டான் பிராட்மேன் அணிந்திருந்த “பச்சை நிற” தொப்பி நேற்று ஏலத்தில் ரூ.4.2 கோடிக்கு விற்கப்பட்டது. பிராட்மேன் அதை இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீரங்கா வாசுதேவ் சோஹோனிக்கு பரிசாக வழங்கினார். 1947-48ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-0 என இழந்தது. அந்த தொடரின்போது அப்போதைய இந்திய அணியில் இடம்பிடித்திருந்த இந்திய வீரர் ஸ்ரீரங்கா வாசுதேவ் சோஹோனிக்கு தன்னுடைய … Read more

காசாவில் 2-ம் கட்ட போர் நிறுத்தம்: விரைவில் அமல்

காசா, காசாவில் நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா உள்பட பல நாடுகளின் மத்தியஸ்தம் காரணமாக போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் – இஸ்ரேல் தரப்பு சம்மதம் தெரிவித்ததையடுத்து, காசாவில் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம் அமலானது. முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த இஸ்ரேலின் முக்கிய கோரிக்கையாக அந்நாட்டின் கடைசி பிணைக்கைதியின் உடல் பாகங்கள் மீட்கப்பட வேண்டும் என்பதே. இஸ்ரேலின் காவல் துறையில் பணியாற்றிய வீலி என்ற நபர் ஹமாஸால் கொல்லப்பட்ட நிலையில், … Read more