எஸ்.ஏ. டி20: பிரிட்டோரியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற சன்ரைசர்ஸ்

கேப் டவுன், 4-வது எஸ்.ஏ. லீக் டி20 கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்தது.இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய அந்த அணியின் டிவால்ட் பிரேவிஸ் 56 பந்துகளில் 101 ரன்கள் குவித்தார். சன்ரைசர்ஸ் … Read more

வங்காளதேசம்: இந்து வாலிபர் உயிருடன் எரிந்து பலியான கொடூரம்; கொலை என குடும்பத்தினர் குற்றச்சாட்டு

டாக்கா, வங்காளதேசத்தின் நர்சிங்டி நகரில் சஞ்சால் பவுமிக் (வயது 25) என்ற இந்து வாலிபர் ஒருவர் வாகனங்கள் பழுது பார்க்கும் கடையில் இரவில் தூங்கி கொண்டிருந்தபோது, திடீரென தீப்பற்றியதில் சிக்கி உயிருடன் எரிந்து பலியானார். இதுபற்றி நர்சிங்டி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அப்துல்லா அல் பரூக் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, கடையில் தீப்பிடித்து எரிந்தபோது நபர் ஒருவர் அந்த பகுதியில் சுற்றி, சுற்றி வந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் கிடைத்துள்ளன. மின் கசிவா? அல்லது அந்நியர்கள் யாரேனும் … Read more

மாணவி பலியான வழக்கில் கடமை தவறிய போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்

பாட்னா, பீகாரில் பாட்னா மாவட்டத்தில் 18 வயது மாணவி ஒருவர் நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். விடுதியில் தங்கியிருந்த அவர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். மயக்கமான அவரை சக மாணவிகள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஒரு வாரமாக கோமா நிலையில் இருந்த மாணவி கடந்த 11-ந்தேதி திடீரென இறந்தார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். அவர் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவரது உடைகளை ஆய்வு செய்த தடயவியல் நிபுணர்கள், … Read more

அபிஷேக் சர்மா அதிரடி…நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா

கவுகாத்தி, இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. இதையடுத்து, கடந்த 21ம் தேதி இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்தை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. 23ம் தேதி நடந்த 2வது டி20 போட்டியிலும் நியூசிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி … Read more

மியான்மரில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்

நேபிடா, மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28-ந்தேதி ரிக்டர் 7.7 மற்றும் ரிக்டர் 6.4 அளவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 3,700 பேர் உயிரிழந்ததாகவும், 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்தது. இதனை தொடர்ந்து மியான்மரில் அவ்வப்போது சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில், மியான்மரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை … Read more

தேசிய வாக்காளர் தினம்: நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

புதுடெல்லி, பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- தேசிய வாக்காளர் தின வாழ்த்துக்கள். இந்த நாள் நமது நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் மீதான நமது நம்பிக்கையை மேலும் ஆழப்படுத்துவதாகும். நமது ஜனநாயக செயல்முறைகளை வலுப்படுத்தும் முயற்சிகளுக்காக இந்திய தேர்தல் ஆணையத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் எனது பாராட்டுகள். வாக்காளராக இருப்பது என்பது அரசியலமைப்புச் சலுகை மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் குரல் கொடுக்கும் ஒரு முக்கியமான கடமையாகும். ஜனநாயக செயல்முறைகளில் எப்போதும் பங்கேற்பதன் மூலம் … Read more

சர்வதேச செஸ் போட்டி: குகேஷ் தோல்வி

டாட்டா ஸ்டீல் 88-வது செஸ் தொடர் நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடந்து வருகிறது. 13 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 6-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியான இந்தியாவின் குகேஷ், உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தோரோவை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் ஆடிய குகேஷ் 37-வது நகர்த்தலில் தோல்வியை தழுவினார். 6-வது சுற்று முடிவில் நோடிர்பெக் அப்துசத்தோரோவ் 4½ புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். 1 More update தினத்தந்தி Related Tags : சர்வதேச … Read more

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இழுபறி: கைப்பற்றிய பகுதிகளை திரும்பி தர மறுக்கும் ரஷியா

அபுதாபி, உக்ரைன் நாடு, நேட்டோவில் சேரும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 2022-ம் ஆண்டு பிப்ரவரியில், அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற பெயரில் ரஷியா போர் தொடுத்தது. இந்த போரானது 3 ஆண்டுகளை கடந்தும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. போர் எதிரொலியாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன் லட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்து சென்று விட்டனர். போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு ஈடுபட்டு வருகிறது. அதன்படி, போர் நிறுத்தம் … Read more

ஆபாச வீடியோ வழக்கு; சத்தீஷ்கார் முன்னாள் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் விடுவிப்பு ரத்து

புதுடெல்லி, சத்தீஷ்காரில் கடந்த 2017-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சியின்போது, அப்போதைய பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்த ராஜேஷ் முனாத் தொடர்பான ஆபாச வீடியோ அடங்கிய சி.டி.க்கள் பணம் பறிக்கும் நோக்கில் வினியோகிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக ராஜேஷ் முனாத் அளித்த புகாரின்பேரில், மாநில போலீசார் முதலில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் காங்கிரசை சேர்ந்த அம்மாநில முன்னாள் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. … Read more

யு19 உலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி

ஹராரே, 16 அணிகள் பங்கேற்கும் 19 வயதுக்குட்பட்டவருக்கான (யு19) ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் 4 பிரிவில் இருந்தும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும். இந்த சுற்றில் விளையாடும் 6 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இதன் முடிவில் 2 பிரிவிலும் முதல் … Read more