கர்நாடக சட்டசபையில் ஆர்.எஸ்.எஸ். கீதம் பாடிய டி.கே. சிவக்குமார்; பா.ஜ.க.வில் சலசலப்பு

பெங்களூரு, கர்நாடக சட்டசபையில் நடந்த கூட்டத்தொடரின்போது, ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் எதிர்க்கட்சியான பா.ஜ.க.வினரின் கேள்விக்கு பதிலளித்து பேசினார். அப்போது, நான் காங்கிரசில் வளர்ந்தவன். உங்களுக்கு எப்படி பதில் அளிக்க வேண்டும் என்று எனக்கு தெரியும் என்றார். அதற்கு, எதிர்க்கட்சி தலைவரான ஆர். அசோக், டி.கே. சிவக்குமாரிடம் நீங்கள் ஒரு முறை ஆர்.எஸ்.எஸ். சீருடை அணிந்திருந்தீர்கள் அல்லவா? என்றார். இதனை கேட்டதும் சிரித்த டி.கே. சிவக்குமார், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கீதம் எனப்படும் … Read more

தி ஹண்ட்ரட் லீக் கிரிக்கெட்: பர்மிங்காம் பீனிக்ஸ் அணியை வீழ்த்திய வெல்ஷ் பயர்

லண்டன், இங்கிலாந்தில் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக் (100 பந்துகள் கிரிக்கெட்) தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பர்மிங்காம் பீனிக்ஸ் – வெல்ஷ் பயர் அணிகள் மோதின. இந்த மோதலில் முதலில் பேட்டிங் செய்த பர்மிங்காம் பீனிக்ஸ் அணி 100 பந்துகளில் 9 விக்கெட்டை இழந்து 138 ரன்கள் எடுத்தது. பர்மிங்காம் பீனிக்ஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜேக்கப் பெத்தேல் 38 ரன் எடுத்தார். வெல்ஷ் பயர் தரப்பில் கிறிஸ் கீரின் … Read more

காசா நகரம் முற்றிலும் அழிக்கப்படும்; இஸ்ரேல் ராணுவ மந்திரி எச்சரிக்கை

ஜெருசலேம், இஸ்ரேல்-காசா இடையே நீண்ட காலமாக மோதல்போக்கு நிலவியது. இதனால் 2023-ம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேரை பணய கைதிகளாக கடத்திச் சென்றனர். இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 22 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த போரில் இதுவரை சுமார் 63 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். எனவே பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வருமாறு உலக நாடுகள் பலவும் … Read more

ககன்யான் சோதனைப்பணி டிசம்பரில் தொடக்கம்: இஸ்ரோ தலைவர் நாராயணன்

புதுடெல்லி, டெல்லியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது:- கடந்த 4 மாதங்களில் இஸ்ரோ பல சாதனைகளை செய்துள்ளது. பேரிடர் எச்சரிக்கை துறையில் இஸ்ரோ ஒரு சிறந்த பணியைச் செய்து வருகிறது. ஐ.நா. சபையின் 17 நிலையான வளர்ச்சி இலக்குகளில் மொத்தம் 13 இலக்குகள் இஸ்ரோவால் ஆதரிக்கப்படுகின்றன. ‘கிரயோஜெனிக் என்ஜின் தொழில்நுட்பத்தில் நாங்கள் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளோம். சோதனைகள் மிகச் சிறப்பாக நடந்து வருகின்றன. உள்நாட்டு மயமாக்கலில் பல நடவடிக்கைகள் சிறப்பாக முன்னேறி வருகின்றன. ஆதித்யா எல்-1- … Read more

ஆசிய கோப்பை ஆக்கி தொடருக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள அணியால் உற்சாகம் அடைகிறோம் – தலைமை பயிற்சியாளர்

புதுடெல்லி, 8 அணிகள் இடையிலான 11-வது ஆசிய கோப்பை மகளிர் ஆக்கி போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியாவுடன் நடப்பு சாம்பியன் ஜப்பான், தாய்லாந்து, சிங்கப்பூர் அணிகளும் இடம் பெற்றுள்ளன. சாம்பியன் பட்டம் வெல்லும் அணி அடுத்த ஆண்டு நடக்கும் உலகக் கோப்பை ஆக்கி போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். இந்த நிலையில் ஆசிய … Read more

உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்திய ரஷியா

கீவ் உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் முயன்று வருகிறது. இதற்கு தொடக்கம் முதலே ரஷியா எதிர்ப்பு தெரிவித்தது. அதனை பொருட்படுத்தாததால் உக்ரைன் மீது 2022-ல் ரஷியா போர் தொடுத்தது. 3½ ஆண்டுகளுக்கு மேலாக இந்த போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை நிறுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் அலாஸ்காவில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போரில் கைப்பற்றிய பகுதிகளை திரும்ப … Read more

தெருநாய்கள் விவகாரத்தில் அவசர விசாரணை கோரி புதிய மனு : சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுப்பு

புதுடெல்லி, டெல்லியில் உள்ள தெருநாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்குமாறு கடந்த 11-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதற்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த மற்றொரு அமர்வு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 14-ந் தேதி ஒத்திவைத்தது. இதற்கிடையே, தெருநாய்களை பிடிப்பது தொடர்பாக டெல்லி மாநகராட்சி ஒரு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஒத்திவைத்த நிலையில், அறிவிப்பாணை வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிபதிகள் … Read more

தேசிய தடகளத்தில் தமிழக வீரர் சாதனை

சென்னை, தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் மாநிலங்களுக்கு இடையிலான 64-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் நாடு முழுவதும் இருந்து 700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். முதல் நாளில் தமிழகம் 7 பதக்கங்களை குவித்தது. இந்த நிலையில் 2-வது நாளான நேற்று ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் எதிர்பார்த்தது போலவே தமிழக வீரர் டி.கே. விஷால் தங்கப்பதக்கத்தை தட்டித்தூக்கினார். அவர் இலக்கை 45.12 வினாடிகளில் கடந்து … Read more

பாகிஸ்தானில் கனமழை: வெள்ளப்பெருக்கால் ரூ.600 கோடி சேதம்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சுமார் 750 பேர் பலியாகி உள்ளனர். குறிப்பாக கைபர் பக்துங்க்வா மாகாணம் வெள்ளப்பெருக்கால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. எனவே அங்கு மீட்பு பணியை துரிதப்படுத்துமாறு முதல்-மந்திரி அமின் அலி கந்தாபூர் உத்தரவிட்டார். அதன்பேரில் அங்கு சேத மதிப்பு குறித்து கணக்கெடுக்கப்பட்டது. இதில் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் மட்டும் சுமார் ரூ.600 கோடி அளவுக்கு உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததாக மதிப்பிடப்பட்டு … Read more

கேரளா: நிகழ்ச்சி மேடையிலேயே மயங்கி விழுந்த எம்.எல்.ஏ. மரணம்

மூணாறு, கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் பீர்மேடு தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. வாலூர் சோமன். இவர் நேற்று மாலை பீர்மேடு பகுதியில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது மேடையிலேயே திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி எம்.எல்.ஏ. வாலூர் சோமன் இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. 1 More update தினத்தந்தி Related … Read more