முழு வீச்சில் தயாரான கில்…கடைசி நேரத்தில் வந்த அதிர்ச்சி

சென்னை, 20 அணிகள் இடையிலான 10-வது ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி ‘ஏ’ பிரிவில் பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவுடன் இடம் பெற்றுள்ளது. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் பிப்.7-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதுகிறது. அதை தொடர்ந்து … Read more

விண்வெளிக்குச் சென்ற முதல் மாற்றுத்திறனாளி பெண்

லண்டன், ஆராய்ச்சிகளுக்காக மனிதர்கள் விண்வெளிக்கு சென்று வந்த நிலையில், தற்போது சுற்றுலாவிற்காகவும் விண்வெளிக்கு சென்று வருகின்றனர்.இந்தநிலையில், அமேசான் நிறுவனர் ஜெப் பெஸாஸ்க்கு சொந்தமான ப்ளூ ஆர்ஜின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மனிதர்களை விண்வெளி சுற்றுலா அழைத்துச் சென்று வருகிறது. இந்த பயணத்தில் முதல்முறையாக மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் விண்வெளிக்கு சென்று சாதனை படைத்துள்ளார். நேற்று விண்வெளிக்கு புறப்பட்ட ப்ளூ ஆரிஜின் விண்கலத்தில், ஜேர்மனியை சேர்ந்த ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் (ESA) பொறியாளரான மைக்கேலா பென்தாஸ்(Michaela Benthaus), பயணம் … Read more

'புளூ பேர்ட்' செயற்கைக்கோள் டிச. 24ம் தேதி விண்ணில் பாய்கிறது – இஸ்ரோ

பெங்களூரு, அமெரிக்காவை சேர்ந்த ஏ.எஸ்.டி., நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக, 6,500 கிலோ எடையில், ‘புளூ பேர்ட்’ செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது. இது, தொலைதுார கிராமங்களுக்கு, மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும். இந்த செயற்கைக்கோளை, ‘இஸ்ரோ’ விண்ணில் செலுத்த உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில், இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, வரும், டிசம்பர் 24ம் தேதி காலை, 8:54 மணிக்கு, எல்.வி.எம்., 3 ராக்கெட் வாயிலாக, ‘புளூ … Read more

முதல் டி20: இலங்கை அணிக்கு எதிராக இந்தியா பந்துவீச்சு தேர்வு

விசாகப்பட்டினம், இந்தியா வந்துள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. இதில் இந்தியா-இலங்கை மகளிர் அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது. இந்த போட்டிக்கான போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மான்ப்ரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி -இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது. 1 More update தினத்தந்தி Related Tags : டி20  இந்திய … Read more

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் 19 புதிய யூத குடியிருப்புகள் – இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்

டெல் அவிவ், காசா முனை மற்றும் மேற்கு கரை என இரு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளது. மேற்கு கரையில் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன. தொடர்ந்து மேற்கு கரையில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டிகள் எழுந்து வரும் நிலையில், எதிர்ப்புகளை மீறி மேற்கு கரையில் இஸ்ரேல் குடியிருப்புகளை அமைத்து வருகிறது. இந்த நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் 19 புதிய யூத குடியிருப்புகளை அமைப்பதற்கான திட்டத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேற்கு … Read more

காட்டில் விறகு சேகரிக்க சென்ற முதியவரை அடித்துக்கொன்ற புலி

திருவனந்தபுரம், கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் வண்டிக்கடவு பகுதியை சேர்ந்த முதியவர் மாறன் (வயது 60). இவர் தனது சகோதரியுடன் கேரள-கர்நாடக எல்லைப்பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதிக்கு இன்று காலை விறகு சேகரிக்க சென்றுள்ளார். கன்னரும்புலா ஆறு அருகே விறகு சேகரித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த புலி, மாறனை இழுத்து சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த மாறனின் சகோதரி கிராமத்திற்கு விரைந்து சென்று புலி தாக்கியது குறித்து கூறியுள்ளார். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற வனத்துறையினர், புலி … Read more

ப்ளேஷ்பேக் 2025-ல் நிறைவேறிய கோப்பை கனவு: சாதித்த 2 அணிகள்…விரைவான பார்வை

சென்னை, விளையாட்டு களம் என்பது நொடிக்கு நொடி பரபரப்பும், சுவாரஸ்யமான ஆச்சரியங்களும் நிறைந்தது. அந்த வகையில் கிரிக்கெட்டில் நடப்பு ஆண்டிலும் துளி அளவும் பஞ்சம் வைக்காமல் பல்வேறு சுவாரசிய நிகழ்வுகளுடன் நிறைவடைந்துள்ளது. 2025ம் ஆண்டிற்கு விடை கொடுக்கும் வேளையில், கிரிக்கெட்டில் இந்த ஆண்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரு அணிகளின் சாம்பியன் கோப்பை வெல்லும் ஏக்கம் முடிவுக்கு வந்துள்ளது.அந்த வகையில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த ஆண்டு விருந்தாகவே அமைந்துள்ளது. ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியும், சர்வேதேச கிரிக்கெட்டில் தென் … Read more

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா அதிரடி தாக்குதல்

டமாஸ்கஸ், சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்க அந்நாடு அரசுப்படையுடன், அமெரிக்க படைகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இதனிடையே, சிரியாவின் பெல்யரா நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உள்பட 3 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில், சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவில் 70க்கும் மேற்பட்ட இடங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்க … Read more

ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து புதுமண தம்பதி பலி

ஐதராபாத், ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டம் கருகுபில்லி பகுதியை சேர்ந்தவர் சிம்மாசலம் ( வயது25). இவரது மனைவி பவானி (வயது19). இருவரும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். சிம்மாசலம், ஜகத்கிரி குட்டாவில் தங்கி இருந்து ரசாயன தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். நேற்று முன் தினம் இரவு விஜயவாடாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக செகந்திராபாத்தில் இருந்து மச்சிலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறினார். கணவன், மனைவி இருவரும் ரெயிலின் வாசல் அருகே நின்றுகொண்டு … Read more

டி20 உலகக் கோப்பைக்கான அணியில் நீக்கம்: ஜிதேஷ் இப்போது இப்படித்தான் யோசிப்பார் -இர்பான் பதான்

மும்பை, 10-வது ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அந்த அணியில் 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அந்த அணியில் துணை கேப்டன் சுப்மன் கில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக அக்சர் படேல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இது அனைவரது மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏனெனில் சுப்மன் கில் சமீப காலமாக ரன் குவிக்க முடியாமல் போராடி வருகிறார். ஆனால் இந்த அணியில் ஜிதேஷ் சர்மா நீக்கப்பட்டிருப்பது பேசு … Read more