உக்ரைன் மீது ரஷியா அதிரடி தாக்குதல்: 8 பேர் பலி

கீவ், உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 395வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக 28 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளில் சிலவற்றை ஏற்க உக்ரைன் மறுத்து வருகிறது. இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. … Read more

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி – அதிர்ச்சி சம்பவம்

லக்னோ, பீகார் மாநிலம் ஷியோகர் மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளைஞர் உத்தரபிரதேசத்தின் பாலியா மாவட்டம் கோட்வாலி பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், கூலித்தொழிலாளியான இளைஞர் கோட்வாலி பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தனது தந்தையிடம் இம்மாதம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை உடனடியாக போலீசில் … Read more

இந்திய உள்ளூர் தொடரில் விளையாடும் விராட் கோலி, ரோகித் சர்மா

மும்பை, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 33-வது சீசன் வருகிற 24-ந்தேதி ஆமதாபாத்தில் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தங்களது மாநில அணிகளுக்காக விளையாட உள்ளனர். முன்னதாக இருவரும் உள்ளூர் தொடர்களில் விளையாட வேண்டும் என்று பி.சி.சி.ஐ. வலியுறுத்தியதாக கூறப்பட்டது. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்த வரை இருவரும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகின்றனர். இருவரும் 2027 … Read more

வங்கதேசத்தில் நாடாளுமன்றம் முற்றுகை: பதற்றம் அதிகரிப்பு

டாக்கா, வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததற்கு காரணமாக இருந்த மாணவர் போராட்டத்தை முன்நின்று நடத்தியவர்களில் முக்கிய தலைவராக இருந்த ஷெரீப் உஸ்மான் ஹாடி (வயது 32) மீது கடந்த 12-ந்தேதி மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அவரது தலையில் குண்டு பாய்ந்தது.ஷெரீப் உஸ்மானின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனால் வங்காளதேசத்தில் நேற்று முன்தினம் … Read more

சிபிஐ அதிகாரிபோல் நடித்து ரூ. 30 லட்சம் மோசடி செய்த சைபர் குற்றவாளியை கைது செய்த போலீசார்

ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் ராகேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரின் செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்குமுன் வீடியோ கால் வந்துள்ளது. அந்த அழைப்பை எடுத்த ராகேஷிடம் சிபிஐ அதிகாரி என ஒருவர் அறிமுகமாகியுள்ளார். மேலும், ராகேஷிடம் உங்கள் வங்கி கணக்கில் இருந்து போதைப்பொருள் கடத்தல், ஆள் கடத்தல் தொடர்பாக பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், கைது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் ராகேசை மிரட்டியுள்ளார். மேலும், … Read more

டி20 உலகக் கோப்பை 2026: இந்திய அணியில் 2 தமிழக வீரர்களுக்கு இடம்

சென்னை, 20 அணிகள் இடையிலான 10-வது ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி ‘ஏ’ பிரிவில் பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவுடன் இடம் பெற்றுள்ளது. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் பிப்.7-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதுகிறது. அதை தொடர்ந்து … Read more

இம்ரான்கானுக்கு அதிர்ச்சி: மேலும் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

இஸ்லமபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் தெஹ்ரிக் -இ -இன்சாப் என்ற பெயரில் கட்சி ஒன்றை நடத்தி வருகிறார். இவர் பிரதமராக பதவியில் இருந்த போது, தமக்கு கிடைத்த பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் மனைவியுடன் சேர்ந்து விற்பனை செய்து சொத்துகள் சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதவிர மேலும் பல வழக்குகள் இம்ரான் கான் மீது தொடுக்கப்பட்டன. பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் … Read more

உ.பி: பைக் மீது லாரி மோதி விபத்து – பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி

லக்னோ, உத்தரபிரதேசத்தின் காசியாபாத் மாவட்டம் பஜ்பூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் இம்ரான் (வயது 13), வாசீம் (வயது 16), சமத் (வயது 14). சிறுவர்கள் 3 பேரும் நேற்று மாலை பைக்கில் சென்றுள்ளனர். சைதுபூர் கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்ப சிறுவர்கள் பைக்கில் சாலையை கடக்க முயற்சித்துள்ளனர். அப்போது சாலையில் வேகமாக வந்த லாரி பள்ளி மாணவர்கள் சென்ற பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பைக்கில் இருந்து 3 பேரும் தூக்கி … Read more

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன் துணை கேப்டன் நியமனம்

ஹராரே, ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு கூட்டம் ஹராரேவில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து பல முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த கூட்டத்தின் முடிவில் ஜிம்பாப்வே கிரிகெட்டின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணிக்கு புதிய கேப்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கிரெய்க் எர்வின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அதன்படி ஜிம்பாப்பே கிரிக்கெட்டின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணியின் புதிய கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் ங்காரவா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் … Read more

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.07 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 33.39 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 72.28 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. EQ of … Read more