கடல்வழி வணிகத்தை ஊக்குவிக்க வேண்டியது நம் கடமை: துறைமுக மேம்பாட்டாளர்களிடம் அமைச்சர் வேலு வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்​தில் ஒரு ட்ரில்​லியன் டாலர் பொருளா​தார இலக்கை எட்ட‘நீலப் பொருளா​தா​ரம்’ அதாவது கடல்​வழி வணி​கத்தை மேலும் ஊக்​குவிக்க வேண்​டியது நம் கடமை என்று துறை​முக மேம்​பாட்​டாளர்​களிடம் அமைச்​சர் எ.வ.வேலு வலி​யுறுத்​தி​னார். சென்னை தி.நகரில் நீலப் பொருளா​தார மாநாடு நடை​பெற்​றது. இம்​மா​நாட்டை பொதுப்​பணி​கள், நெடுஞ்​சாலைகள் மற்​றும் சிறு துறை​முகங்​கள் துறை அமைச்​சர் எ.வ.வேலு தொடங்கி வைத்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: தமிழகத்​தின் கடற்​கரை பன்​னாட்​டுக் கப்​பல்​கள் செல்​லும் வழித்​தடத்​துக்கு மிக அரு​காமை​யில் உள்ள பகு​தி​யாகும். 14 கடலோர … Read more

மேற்கு வங்கத்தில் 2011 முதல் இதுவரை 840 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கடந்த 2011 முதல் இதுவரை 840 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: மேற்கு வங்க சிறைகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 14 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பவர்கள், குறிப்பாக, நன்னடத்தையுடன் செயல்படும் கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர். அந்த வகையில் கடந்த 2011 முதல் இதுவரை 840 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். … Read more

“தமிழ்நாட்டு மக்களை மகிழ்வித்தவர்” – ரோபோ சங்கர் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திரைக்கலைஞர் ரோபோ சங்கர் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமுற்றேன். மேடைகளில் துவங்கி, சின்னத்திரை – வண்ணத்திரை என விரிந்து, தமிழ்நாட்டு மக்களை மகிழ்வித்தவர் ரோபோ சங்கர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் – கலையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலை காரணமாக கடுமையாக … Read more

‘வாக்குத் திருட்டு’ விவகாரம்: ராகுல் காந்தியின் புதிய குற்றச்சாட்டும், எதிர்வினைகளும்!

‘வாக்குத் திருட்டு’ விவகாரம் குறித்து மீண்டும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி தனது குழு திரட்டியதாக சில ஆதாரங்களை முன்வைத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் மீதும், மத்தியில் ஆளும் பாஜக மீதும் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி. ‘இன்றொரு ஹைட்ரஜன் குண்டு வீசப்படும்’ என்று டீஸர் வெளியிட்டு ராகுல் ஆற்றிய உரைக்கு ஆதரவாகவும், அவரைக் கண்டித்தும் கருத்துகள் குவிந்து கொண்டிருக்கின்றன. அது பற்றிய ஒரு விரைவுப் பார்வை… … Read more

திமுக அறக்கட்டளை வருமான வரி வழக்கு: வருமான வரித் துறைக்கு ஐகோர்ட் புதிய உத்தரவு

சென்னை: திமுக அறக்கட்டளை தொடர்பான வருமான வரி வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என வருமான வரித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, அமைச்சர் துரைமுருகனின் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்நிலையில், ஒருங்கிணைந்த விசாரணை நடத்த வேண்டும் என்ற காரணத்தை கூறி, திமுக கட்சி, திமுக அறக்கட்டளைக்கு எதிரான வருமான வரி வழக்குகளின் விசாரணையையும் , துரைமுருகன் தொடர்பான வழக்கு விசாரணையையும் வருமான வரித்துறையின் … Read more

‘வாக்குத் திருட்டு’ விவகாரத்தில் ராகுல் காந்தி தீவிரம்: பிஹார் தேர்தலில் ‘தாக்கம்’ சாத்தியமா?

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அம்மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, அதன் ஒரு பகுதியாக, நாட்டின் சில பகுதிகளில் இதற்கு முன் நடந்த ‘வாக்குத் திருட்டு’ குறித்தும் ‘ஆதாரங்களை’ வெளிப்படுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார். அவரது இந்த முயற்சி, பிஹார் தேர்தலில் தாக்கம் தருமா என்ற கேள்வி எழுகிறது. ‘Vote chori’ அதாவது ‘வாக்கு திருட்டு’ – … Read more

“தோல்வி பயத்தில் பழனிசாமியை பற்றியே முதல்வர் ஸ்டாலின் சிந்திக்கிறார்” – ஆர்.பி.உதயகுமார்

மதுரை: “மக்களுக்கான நலனை பற்றி சிந்திக்காமல் தோல்வி பயத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை பற்றி முதல்வர் ஸ்டாலின் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்” என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது: “தமிழகத்தில் மக்கள் விரோத மன்னராட்சியை திமுக நடத்திக் கொண்டிருக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முழு வன்மத்தையும் அதிமுக மீதும், பொதுச் செயலாளர் பழனிசாமி மீதும் முதல்வர் ஸ்டாலின் கொட்டிக் கொண்டிருக்கிறார். மக்களின் எதிர்பார்ப்பை, குறைகளை எடுத்துச் சொல்வதுதான் எதிர்க்கட்சியின் … Read more

கஜுராஹோ கோயில் விவகாரத்தில் நெட்டிசன்கள் விமர்சனம் – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விளக்கம்

புதுடெல்லி: கஜுராஹோ கோயில் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற தலைமை பி.ஆர்.கவாய் வெளியிட்ட கருத்து தொடர்பாக சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்கள் பதிவு செய்து வருகின்றனர். இதன் எதிரொலியாக, “அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக, மத்திய பிரதேசத்தில் உள்ள கஜுராஹோ கோயில் வளாகத்தின் ஒரு பகுதியான ஜவாரி கோயிலில் சேதமடைந்த நிலையில் உள்ள 7 அடி உயர விஷ்ணு சிலையை மீட்டெடுக்கக் கோரி … Read more

2026-ல் திமுக வெற்றிக் கணக்கை கரூரில் இருந்து தொடங்குவோம்: செந்தில் பாலாஜி நம்பிக்கை

கரூர்: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிக் கணக்கை கரூரில் இருந்து தொடங்குவோம் என திமுக முப்பெரும் விழாவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ தெரிவித்தார். கரூர் கோடங்கிபட்டியில் திமுக முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ வரவேற்றுப் பேசியது: 2026 சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கு முதல்வரின் வருகை கட்டியம் கூறும். 2026 தேர்தல் வெற்றிக் கணக்கை கரூரில் இருந்து தொடங்குவோம். வரும் தேர்தலில் நாம் தான் வெற்றிபெறுவோம். … Read more

பிஹாரில் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

புதுடெல்லி: பிஹாரில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில், பட்டப்படிப்பை முடித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். பிஹாரில் நவம்பர் மாதத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில், ‘சார்’ எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் விவகாரம் இந்திய அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்கிடையே, பிஹாரில் எப்படியாவது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முயற்சித்து … Read more