அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டுதல் தொடர்பான: வழக்குகளை விசாரிக்க 2 நீதிபதிகள் அமர்வு

மதுரை: அரசி​யல் கூட்​டங்​களுக்​கான வழி​காட்​டு​தல்​களை உரு​வாக்​கு​வது தொடர்​பான மனுக்​களை விசா​ரிக்க விரை​வில் 2 நீதிபதி​கள் கொண்ட அமர்வு அமைக்​கப்​படும் என சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி தெரி​வித்​துள்​ளார். தூத்​துக்​குடி மாவட்​டம் சிந்​தலக்​கரையைச் சேர்ந்த திருக்​குமரன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறியிருப்​ப​தாவது: கரூரில் நடந்த தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி குழந்​தைகள், மாணவ, மாணவி​கள் உட்பட 41 பேர் உயி​ரிழந்​தனர். சரி​யான கூட்ட மேலாண்மை மற்​றும் கட்​டுப்​பாடு இல்​லாமை, உரிய … Read more

பேருந்து திடீரென தீப்​பிடித்து எரிந்ததில் ராஜஸ்தான் மாநிலத்தில் 20 பேர் உயிரிழப்பு

ஜெய்ப்​பூர்: ராஜஸ்​​தானின் ஜெய்​சால்​மரிலிருந்து ஜோத்​பூர் நோக்கி செல்​லும் தனி​யார் பேருந்து நேற்று பிற்​பகல் 57 பயணி​களு​டன் புறப்​பட்டது. போர் அருங்​காட்​சி​யகம் அருகே தையத் கிராமத்​தில் சென்​றுகொண்​டிருந்​த​போது அந்​தப் பேருந்​தின் பின்புறத்திலிருந்து திடீரென தீப்​பற்றி பேருந்து முழு​வதும் மளமளவென பரவி​யது. இதில், பயணி​கள் அவசர​மாக வெளி​யேற முடி​யாமல் சிக்​கிக் கொண்​ட​தால் 20 பேர் உடல் கருகி பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். மேலும், 15 பயணி​கள் கடுமை​யான தீக்​கா​யங்​களு​டன் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். ராஜஸ்​தான் முதல்​வர் பஜன்​லால் சர்​மா, பேருந்து … Read more

கேரள மாநிலத்தை பின்பற்றி சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: கேரள மாநிலத்​தைப் பின்​பற்​றி, சட்​டப்​பேர​வைக் கூட்​டத்​தொடரில் சேவை பெறும் உரிமை சட்​டத்தை நிறைவேற்ற வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பொது​மக்​கள் கோரும் பொது சேவை​களை 30 நாட்​களில் வழங்​கா​விட்​டால், அந்த சேவை வழங்​கப்​பட்​ட​தாக கருதப்​படு​வதுடன், சேவையை வழங்​கத் தவறிய அதி​காரி​களுக்கு அபராதம் விதிக்க வகை செய்​யும் திருத்​தப்​பட்ட சேவை பெறும் உரிமைச் சட்​டம் கேரள சட்​டப்​பேர​வை​யில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய சட்​டத்​தின்​படி, பொது​மக்​கள் … Read more

“நீங்கள் தலித்தாக இருந்தால்…” – ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை வழக்கில் ராகுல் காந்தி காட்டம்!

சண்டிகர்: உயர் அதிகாரிகளின் நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்ட ஐபிஎஸ் அதிகாரி புரன் குமாரின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்த வழக்கில் ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனியும், பிரதமர் நரேந்திர மோடியும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், “நீங்கள் எவ்வளவுதான் வெற்றி பெற்றவராக அல்லது திறமையானவராக இருந்தாலும், நீங்கள் தலித்தாக இருந்தால், உங்களை அடக்கலாம், நசுக்கலாம், தூக்கி எறியலாம்.” என்ற … Read more

செல்லூர் ராஜூ குற்றச்சாட்டும் திமுக பகுதிச் செயலாளர் நீக்கமும்: மதுரை நிர்வாகிகள் அதிர்ச்சி!

மதுரை: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டிய திமுக பகுதிச் செயலாளர் பொறுப்பை, கட்சித் தலைமை பறித்துள்ளது. மதுரை மாநகர திமுகவில் தொடரும் கட்சித் தலைமையின் ஒழுங்கு நடவடிக்கையால் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மதுரை திமுகவையும், ஒழுங்கு நடவடிக்கையும் பிரித்துப் பார்க்க முடியாது என்கிற அளவுக்கு மு.க.அழகிரி காலம் முதல் தற்போது வரை கட்சித் தலைமையால் நீக்கம் செய்யப்பட்டவர்கள் பட்டியல் நீள்கிறது. இவர்களில் ஒரு பகுதியினர், கட்சித் தலைமையிடம் பலமுறை மன்னிப்பு கடிதம் வழங்கியும் தற்போது வரை … Read more

ஆந்திராவில் கூகுள் ஏஐ மையம்: பிரதமர் மோடியுடன் சுந்தர் பிச்சை முக்கிய ஆலோசனை

புதுடெல்லி: அமெரிக்காவின் கூகுள் நிறுவனம் சார்பில் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ரூ.1.33 லட்சம் கோடி முதலீட்டில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தரவு மையம் அமைக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பிரதமர் நரேந்திர மோடியுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். அமெரிக்காவின் ஆல்பாபெட் நிறுவனம், உலகின் 3-வது மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக விளங்குகிறது. கூகுள், வேமோ, ஜி.வி., விங், வெரிலி, காலிகோ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை ஆல்பாபெட் நடத்தி வருகிறது. இந்த சூழலில் கூகுள் … Read more

‘அரசுப் பள்ளிக்கு விடுமுறை அளித்துவிட்டு முகாம் நடத்துவதா?’ – திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்

சென்னை: “அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து முகாம் நடத்தலாம் என்ற அகம்பாவம் திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது” என்று அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “திருப்பத்தூர் ஜோலார்பேட்டை அருகே உள்ள தாமலேரி முத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, திமுக அரசின் உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்காக இன்று விடுமுறை அளித்திருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாக, எந்தத் துறை நிர்வாகத்தையும் கவனிக்காமல், வெற்று விளம்பரங்களிலேயே நாட்களைக் கடத்தி விட்டு, தற்போது, … Read more

வாகனப் பரிசோதனையின் போது ஹவாலா பணம் ரூ.1.45 கோடியை ம.பி. போலீஸார் சுருட்டியது எப்படி?

போபால்: ​வாக​னப் பரிசோதனை​யின்​போது ஹவாலா பணம் ரூ.1.45 கோடியை போலீ​ஸார் சுருட்​டியது எப்படி என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்​திய பிரதேச மாநிலம் சிலாதேஹி வனப்​பகு​தி​யில் உள்ள சோதனைச் சாவடியில் கடந்த புதன்​கிழமை இரவு சப்​-டி​விஷனல் போலீஸ் ஆபீஸர் (எஸ்​டிஓபி) பூஜா பாண்டே தலை​மையி​லான குழு​வினர் வாகன சோதனை நடத்​தினர். அப்​போது ஒரு காரில் ரூ.3 கோடி ஹவாலா பணம் சிக்கியது. அந்​தப் பணத்தை பறி​முதல் செய்​வதற்​குப் பதிலாக, காரை ஓட்டி வந்த சோஹன் பார்​மர் என்ற … Read more

தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு ரூ.16,800 வரை போனஸ்

சென்னை: தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு ரூ.16,800 வரை தீபாவளி போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரியம் பிறப்பித்த உத்தரவின் விவரம்: அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழக மின்வாரியத்தில் உள்ள நிறுவனங்கள் மின் பகிர்மான, உற்பத்தி, பசுமை எரிசக்தி, தொடரைப்பு கழகம் ஆகியவற்றில் பணியாற்றும் முழுநேர ஊழியர்களுக்கும், பயிற்சியில் உள்ள கள உதவியாளர், கணக்கீட்டாளர், கேங்மேன், அலுவலக … Read more

தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் அசுத்தமான கழிவறை பற்றிய தகவலுக்கு ரூ.1,000 பரிசு!

புதுடெல்லி: “தேசிய நெடுஞ்​சாலை சுங்​கச்​சாவடிகளில் சுத்​தமில்​லாத கழிப்​பறை பற்றி தகவல் அளித்​தால், ரூ.1,000 அன்​பளிப்பு வழங்​கப்​படும்” என்று மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது. தேசிய நெடுஞ்​சாலை துறை நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தேசிய நெடுஞ்​சாலை துறை தூய்மை பிரச்​சா​ரத்தை தீவிர​மாக நடத்தி வரு​கிறது. அதன் ஒரு கட்​ட​மாக, நாடு முழு​வதும் தேசிய நெடுஞ்​சாலைகளில் வாக​னங்​களில் செல்​வோர், சுங்​கச் சாவடிகளில் உள்ள கழிப்​பறை​கள் சுத்​தமில்​லாமல் இருந்​தால் அதுபற்றி தகவல் அளிக்​கலாம். இதற்கு பரி​சாக அவர்​களு​டைய வாக​னங்​களின் ‘பாஸ்​டேக்​’கில் ரூ.1,000 … Read more