”‘ஆப் ஆப்’னு சொல்லி ஆப்பு வைத்துவிடாதீர்கள்”- மதுரை ஆட்சியரிடம் செல்லூர் ராஜு நகைச்சுவை

மதுரை: ”ஆப், ஆப் என்று சொல்லிட்டு எங்களுக்கு கடைசியில ஆப்பு வைத்துவிடாதீர்கள்” என்று எஸ்ஐஆர் தொடர்பாக மனு கொடுக்க சென்ற இடத்தில் மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு நகைச்சுவையாக கூறியது, அவருடன் சென்ற அதிமுகவினர் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜு, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், மதுரை புறநகர் நகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் தேர்தல் … Read more

தேர்தலில் போட்டியிடும் எனது மகன்கள் தேஜஸ்வி, தேஜ் பிரதாப் இருவருக்கும் வாழ்த்துகள்: ராப்ரி தேவி

பாட்னா: பிஹார் சட்டமன்றத் தேர்தலில் எதிரெதிர் அணியில் போட்டியிடும் சகோதரர்கள் தேஜஸ்வி யாதவ் மற்றும் தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிப்பதாக அவர்களின் தாயும், பிஹார் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி தெரிவித்தார். பிஹார் சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 243-ல் 121 தொகு​தி​களுக்கு இன்று முதல்​கட்ட தேர்​தல் நடை​பெறுகிறது. இதற்காக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் ராப்ரி தேவி, அவரது கணவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் … Read more

இந்தியாவை பலவீனமாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிறார் ராகுல் காந்தி – நாராயணன் திருப்பதி

சென்னை: இந்தியாவை பலவீனமாக்கும் முயற்சியை ராகுல் காந்தி தொடர்ந்து செய்து வருகிறார் என்றும் அவரது இந்த முயற்சிகள் அனைத்தும் மக்களால் முறியடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் பாஜக தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த வருடம் நடைபெற்ற ஹரியானா தேர்தல்கள் குறித்து ராகுல் காந்தியின் கருத்துக்கள் வெறும் புலம்பலேயன்றி வேறில்லை. தொடர் தோல்விகள் ராகுல் காந்தியை விரக்தியின் எல்லைக்கே இட்டுச் சென்று விட்டது என்பதை தான் அவரின் ஆதாரமற்ற, … Read more

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல்: மதியம் 1 மணி வரை 42.31% வாக்குகள் பதிவு

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 42.31% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு 18 மாவட்டங்களில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது, இந்த வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும். காலை 9 மணி நிலவரப்படி 13.13% வாக்குகளும், 11 மணி நிலவரப்படி 27.65% வாக்குகளும் பதிவாகிய நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி 42.31 … Read more

நவ. 7ல் ‘வந்தே மாதரம்’ பாடலின் 150வது ஆண்டு விழா – தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாட பாஜக வேண்டுகோள்

சென்னை: நாளை நடைபெற உள்ள வந்தே மாதரம் தேச பக்திப் பாடலின் 150 வது ஆண்டு விழாவை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, இந்தியாவின் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் தமிழக மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் உள்ள குழந்தைகள் அனைவரையும் ஊக்குவித்து குடும்பத்துடன் … Read more

பிஹார் முதற்கட்டத் தேர்தல்: காலை 11 மணி வரை 27.65% வாக்குகள் பதிவு

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 27.65% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது, இந்த வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும். காலை 9 மணி நிலவரப்படி 13.13% வாக்குகள் பதிவான நிலையில், 11 மணி நிலவரப்படி 27.65% வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக பெகுசராய் மாவட்டத்தில் 30.37% வாக்குகள் … Read more

பதிவுத்துறை உதவி தலைவர், மாவட்ட பதிவாளர் பணிகளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் : அன்புமணி

சென்னை: பதிவுத்துறை உதவித் தலைவர், மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பதிவுத்துறை உதவித் தலைவர் பணிக்கான பதவி உயர்வுப் பட்டியல் முறையாக தயாரிக்கப்படவில்லை; இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு பின்பற்றப்படவில்லை என்று நான் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அதை மறுத்துள்ள வணிகவரி மற்றும் பதிவுத்துறை, அனைத்து நடைமுறைகளும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படியும், விதிகளை பின்பற்றியும் தான் வெளியிடப்பட்டதாக … Read more

''நவ. 14-ல் புதிய அரசு அமையும்'' – பிஹார் தேர்தலில் வாக்களித்த பின் தேஜஸ்வி யாதவ் உறுதி

பாட்னா: “பிஹாரில் நவம்பர் 14 ஆம் தேதி ஒரு புதிய அரசாங்கம் அமைக்கப்படும். புதிய அரசாங்கத்தை அமைக்க மாற்றத்தை கொண்டு வாருங்கள்” என மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிஹார் சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 121 தொகு​தி​களில் இன்று முதல்​கட்ட தேர்​தல் நடை​பெறுகிறது. மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ், இன்று தேர்தல் நடைபெறும் ரகோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த சூழலில், தேஜஸ்வி யாதவ் … Read more

திருச்சி, சேலம் உட்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: ​திருச்​சி, சேலம் உள்​ளிட்ட 9 மாவட்​டங்​களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்​ளது. இதுதொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழக உள் பகு​தி​களின்​மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நில​வு​கிறது. இதன் காரண​மாக இன்​றும், நாளை​யும் (நவ.6, 7) தமிழகத்​தில் ஒருசில இடங்​களில் இடி, மின்​னலுடன் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். 8 முதல் 11-ம் தேதி வரை தென் தமிழகத்​தில் ஒருசில இடங்​களி​லும், வட தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும் … Read more

பிஆர்எஸ் கட்சியை பாஜகவிடம் அடமானம் வைத்த கேசிஆர்: தெலங்கானா முதல்வர் ரேவந்த் குற்றச்சாட்டு

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைத​ரா​பாத் ஜூப்ளி ஹில்ஸ் சட்​டப்​பேரவை தொகு​திக்கு விரை​வில் இடைத்​தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதில் ஆளும் காங்​கிரஸ், பாஜக, பிஆர்​எஸ் கட்​சிகளுக்கு இடையே மும்​முனைப் போட்டி நில​வு​கிறது. இந்​நிலை​யில் ஜூப்ளி ஹில்ஸ் சிறு​பான்​மை​யினர் சங்​கத்​தினர் நேற்று முதல்​வர் ரேவந்த் ரெட்​டியை சந்​தித்து காங்​கிரஸ் கட்​சிக்கு ஆதரவு தெரி​வித்​தனர். அப்​போது ரேவந்த் ரெட்டி பேசி​ய​தாவது: ராகுல்​காந்தி பாத​ யாத்​திரை மேற்கொண்டபோது காங்​கிரஸ் மட்​டுமே சிறு​பான்​மை​யினர் நலனில் அக்​கறை செலுத்​தும் கட்சி என பெரு​மை​யுடன் கூறி​னார். அதை … Read more