கீழ் கோத்தகிரி தனியார் டீ எஸ்டேட்டில் அழுகிய நிலையில் புலியின் சடலம் மீட்பு: வனத்துறை விசாரணை

கோத்தகிரி: கீழ் கோத்தகிரி தனியார் டீ எஸ்டேட் கிணற்றில் அழுகிய நிலையில் புலியின் சடலத்தை கைப்பற்றி வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்தில் வனக்குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. வனவிலங்குகளின் இயற்கைக்கு மாறான இறப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள புலி, சிறுத்தை, யானை உட்பட்ட வனவிலங்குகளின் இறப்புகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. நீலகிரி வனக்கோட்டத்துக்கு உட்பட்ட கீழ் கோத்தகிரி வனச்சரக பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் … Read more

டெல்லி குண்டுவெடிப்பு எதிரொலி: காஷ்மீரில் 13 இடங்களில் உளவுப்பிரிவு போலீஸார் சோதனை

ஸ்ரீநகர்: டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பாக காஷ்மீரில் 13 இடங்களில் பயங்கரவாத தடுப்பு உளவுப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தியுள்ளனர். கடந்த 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக முதலில் டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)-க்கு மாற்றி மத்திய … Read more

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் கணக்காளர் பணியிட மாற்றம்

மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றம் நகரில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரவு, செலவு கணக்குகள் குறித்து தணிக்கை நடைபெற்ற நிலையில், கோயிலின் கணக்கர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு, அப்பகுதியில் ஏராளமான நிலங்கள், வணிக கட்டிடங்கள் உள்பட பல்வேறு சொத்துகள் உள்ளன. இதன்மூலம், கோயிலுக்கு பல்வேறு வரியினங்கள் மூலம் வருவாய் கிடைத்து வருகிறது. இந்நிலையில், கோயிலில் கடந்த சில … Read more

ஜெய்​ஷ் இ முகமது அமைப்பில் சேர்ந்த தீவிரவாதி உமர் மனைவி

புதுடெல்லி: புல்​வாமா தாக்​குதலுக்கு மூளை​யாக செயல்​பட்​ட​வரின் மனைவி சில வாரம் முன்பு ஜெய்​ஷ்-இ-​முகமது அமைப்​பில் சேர்ந்​தது தெரிய​வந்​துள்​ளது. கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் புல்​வாமா நகரில் பாது​காப்​புப் படை​யினரின் வாக​னங்​கள் மீது தீவிர​வா​தி​கள் தாக்​குதல் நடத்​தினர். இதில் 41 வீரர்​கள் உயி​ரிழந்​தனர். இந்த தாக்​குதலுக்கு மூளை​யாக செயல்​பட்ட உமர் பாருக்​கின் (என்​க​வுன்ட்​டரில் கொல்​லப்​பட்​டார்) மனைவி அபிரா பிபி, ஜெய்​ஷ்-இ-​முகமது அமைப்​பின் மகளிர் பிரி​வான ஜமாத்​-உல்​-மொமினட்​டில் கடந்த சில வாரங்​களுக்கு முன்பு சேர்ந்​தார். அவருக்கு அந்த அமைப்​பின் … Read more

அமெரிக்காவில் 43 நாட்கள் நீடித்த நிதி முடக்கம் முடிவுக்கு வந்தது: மசோதாவில் கையெழுத்திட்டார் ட்ரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புதன்கிழமை (நவம்பர் 12) இரவு அரசாங்க நிதி மசோதாவில் கையெழுத்திட்டார். இது 43 நாட்களாக நீடித்த அரசின் நிதி முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. அமெரிக்க நிதியாண்டு செப்டம்பர் 30-ல் முடிவடையும். அக்.1-ல் புதிய நிதியாண்டு தொடங்கும். இதனையடுத்து ஆண்டுதோறும் புதிய நிதியாண்டுக்கான பட்ஜெட் மசோதா செப்.30-ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அமெரிக்க அரசு இயங்கத் தேவையான ஆண்டு செலவின மசோதாவுக்கு இந்த இரு அவைகளின் உறுப்பினர்களும் ஒப்புதல் அளிக்க … Read more

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக உள்துறைச் செயலர் ஆஜர்

சென்னை: நீ​தி​மன்ற அவம​திப்பு வழக்​கில் தமிழக உள்​துறை செயலர் தீரஜ்கு​மார் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் ஆஜரா​னார். தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர்​கள் தேர்​வாணை​யம் (டிஎன்​பிஎஸ்​சி) கடந்த 1998 முதல் 2002 வரை நடத்​திய தேர்​வு​களில் 53 அரசு உதவி குற்​ற​வியல் வழக்​கறிஞர்​கள் தேர்வு செய்​யப்​பட்​டனர். இதில் 2 பேர் பணிக்கு சேர​வில்லை என்​ப​தால் அந்த இடத்​தில் தங்​களை நியமிக்​கக் கோரி மானுவேல் அரசு மற்​றும் ராஜன் ஆகியோர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தனர். இந்த வழக்கை விசா​ரித்த … Read more

டெல்லியில் குண்டு வெடித்த காருடன் சுற்றிய மற்றொரு கார் ஹரியானாவில் பறிமுதல்

புதுடெல்லி: டெல்​லி​யில் குண்டு வெடித்த காருடன் சுற்​றிவந்​த​தாக கருதப்​படும் மற்​றொரு கார் பரி​தா​பாத் அருகே பறி​முதல் செய்​யப்​பட்​டது. டெல்​லி​யில் கடந்த திங்​கட்​கிழமை மாலை ஒரு கார் வெடித்​துச் சிதறியது. ஜெய்ஷ் இ முகமது தீவிர​வா​தி​யின் தற்​கொலை தாக்​குதலாக இது கருதப்​படு​கிறது. இது தொடர்​பாக சுமார் 200 சிசிடிவி கேம​ராக்​களின் பதிவு​கள் ஆராயப்​பட்டு வரு​கின்​றன. இதில் குண்டு வெடித்த ஹுண்​டாய் ஐ20 காருடன் சிவப்பு நிற ‘ஈகோ ஸ்பாட்’ காரும் சுற்றி வந்​தது பதி​வாகி உள்​ளது. இந்த சிவப்பு … Read more

தண்ணீர் மாநாட்டில் 18 வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் சீமான்

தேர்தல் அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகும் முன்னதாகவே வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தைத் தொடங்குவதை வழக்கமாக வைத்திருக்கும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 18 தொகுதிகளுக்கான நாதக வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்துவைக்க இருக்கிறார். ஆடு – மாடுகள் மாநாடு, மலைகளின் மாநாடு, மரங்களின் மாநாடு என வித்தியாசம் காட்டி வரும் சீமான், தண்ணீரின் தேவை குறித்தும், எதிர்கால தண்ணீரின் பற்றாக்குறையை சமாளிப்பது குறித்தும் எடுத்துரைக்கும் வகையில் தண்ணீர் மாநாட்டை திருவையாறு … Read more

டெல்லி செங்கோட்டை பார்க்கிங் பகுதியில் 3 மணி நேரம் காரை விட்டு உமர் முகமது இறங்காதது ஏன்?

புதுடெல்லி: டெல்லியில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் டாக்டர் உமர் முகமது 3 மணி நேரம் காரை விட்டு இறங்காதது ஏன் என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை கார் வெடிகுண்டு வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். இதில் டாக்டர் உமர் முகமது கார் வெடி குண்டை வெடிக்க செய்ததில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தீவிர விசாரணை நடத்தி வருகிறது. குறிப்பாக, பரிதாபாத்தில் இருந்து டெல்லி வரையில் … Read more

தவெக கூட்ட நெரிசலில் காயமடைந்த 6 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர்: தவெக கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 6 பேர் சிபிஐ அதி​காரி​கள் முன்​னிலை​யில் நேற்று விசா​ரணைக்கு ஆஜராகினர். கரூர் வேலு​சாமிபுரத்​தில் கடந்த செப். 27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய் பங்கேற்றார். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். மேலும், 100-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இந்த வழக்கை விசா​ரித்து வரும் சிபிஐ அதி​காரி​கள், இது தொடர்​பாக 300-க்​கும் மேற்​பட்​ட​வர்​களுக்கு சம்​மன் அனுப்​பி, விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். அதன்​படி, … Read more