எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழகத்தில் 5 லட்சம் பேர் தேர்ச்சி: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் 

சென்னை: “முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத 15+ வயதினர் அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பயின்ற 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 100% தேர்ச்சி விழுக்காட்டோடு தமிழ்நாடு இந்தியாவிலேயே ‘நம்பர் ஒன்’ இடத்தைப் பிடித்துள்ளது,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத 15+ வயதினர் அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பயின்ற 5 லட்சம் பேர் … Read more

கேரளா பருவமழை: வயநாடு, மலப்புரம் உள்ளிட 5 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட்

திருவனந்தபுரம்: கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய வடக்கு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இந்த ஆண்டு மே 24 அன்று தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களில் கடுமையான மழை பெய்தது. அதையடுத்து சிறிது நாட்கள் ஓய்ந்திருந்த மழை இப்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று காலை (ஜூன் 14, 2025) வெளியிட்ட வானிலை அறிவிப்பின்படி, கேரளாவின் … Read more

காவல் நிலையத்தையே காக்க முடியாத திமுக ஆட்சி எப்படி மக்களைக் காக்கும்? – இபிஎஸ் கண்டனம்

சென்னை: “காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த திமுக ஆட்சி, எப்படி மக்களைக் காக்கும்? வாய்ப்பே இல்லை. வி.சத்திரப்பட்டி காவல் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசை வலியுறுத்துகிறேன்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திமுக ஆட்சியில் காவல் நிலையத்துக்கே பாதுகாப்பு இல்லை. காவல் நிலையத்தையே காக்க முடியாத முதல்வர், தமிழ்நாட்டு மக்களை எப்படி … Read more

அகமதாபாத் விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் டிஎன்ஏ பரிசோதனை

புதுடெல்லி: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஏர் இந்தியா விமான விபத்தில் 241 பயணிகள் தீயில் கருகி இறந்தனர். அவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகி உள்ளன. இதையடுத்து, விபத்து நடந்த இடங்களில் சிதறி உள்ள உடல் பாகங்களை சேகரிக்கும் பணியில் தடயவியல் நிபுணர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். அந்த பாகங்களின் மரபணு (டிஎன்ஏ) பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. விபத்தில் இறந்த பயணிகளின் உறவினர்கள் பலர் தங்களது டிஎன்ஏ மாதிரிகளை வழங்கி … Read more

இஸ்ரேல் தாக்குதலில் 78 பேர் உயிரிழப்பு; 320 பேர் காயம்: ஈரானுக்கான ஐ.நா தூதர் தகவல்

தெஹ்ரான்: ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 78 பேர் கொல்லப்பட்டதாகவும், 320-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டுக்கான ஐ.நா.தூதர் அமீர் சயீத் இரவானி தெரிவித்தார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில் பேசிய அமீர் சயீத் இரவானி, “இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் மற்றும் படுகொலைகள் மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் அணு விஞ்ஞானிகளுக்கு எதிரானவை. ஆனால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். இஸ்ரேல் பல ஈரானிய நகரங்களில் உள்ள பல பொதுமக்கள் மற்றும் … Read more

அமராவதி அணையின் நீர்மட்டம் உயர்வு: கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

உடுமலை: அமராவதி அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. அமராவதி ஆற்றில் உபரி நீர் திறக்க வாய்ப்பிருப்பதால், கரையோர கிராமங்களில் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூர் ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி அணையின் நீர் மட்டம் இன்று (ஜூன் 14) காலை 7 மணியளவில் 85.11 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அமராவதி அணையின் பாதுகாப்பை … Read more

கனவுகள் கலைந்து சோகத்தில் மூழ்கிய குடும்பங்கள் – அகமதாபாத் விமான விபத்து பெருந்துயர்

அகமதாபாத்: அகம​தா​பாத்​தில் நடந்த 241 உயிர்​களை இழந்த பயங்​கர​மான விமான விபத்​தில் பல குடும்​பங்​களின் கனவு​கள் கலைந்து போயுள்​ளன. குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் நேற்று முன்​தினம் ஏர் இந்​தியா விமானம் விபத்​துக்​குள்​ளானது. இதில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயி​ரிழந்​தனர். ஒரு​வர் மட்​டுமே உயிர்​பிழைத்​தார். இதில் பயணம் செய்தவர்களின் கனவு​கள் கலைந்து அவர்​களது குடும்​பத்​தைச் சேர்ந்​தவர்​கள் மீள முடி​யாத சோகத்​துக்​குச் சென்​றுள்​ளனர். விபத்​தில் ராஜஸ்​தானைச் சேர்ந்த 10 பேர் இறந்​தனர். அதில் 5 பேர் ஒரே … Read more

இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி: மத்திய கிழக்கில் பதற்றம்; மோதலை கைவிட ஐ.நா கோரிக்கை

தங்கள் நாட்டின் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி விடியவிடிய இடைவிடாது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியதில் மத்திய இஸ்ரேலில் இருவர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் இஸ்ரேல் – ஈரான் மோதலைக் கைவிட வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் பலவும் அதிகரிக்கும் மோதல் தொடர்பாக கவலை தெரிவித்துள்ளது. முன்னதாக, நேற்று ஈரானின் 4 அணுசக்தி தளங்​கள், 2 ராணுவ முகாம்​களை இஸ்ரேல் … Read more

அண்ணா, கருணாநிதி கொடுத்ததை ஸ்டாலின் பறித்தார்: விஜய்யை சந்தித்த பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் குற்றச்சாட்டு

சென்னை: முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி கொடுத்ததை தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் பறித்துவிட்டதாக தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவர் மாயவன் குற்றம்சாட்டினார். சென்னை, பனையூரில் உள்ள தவெக தலைமையகத்தில் கட்சித் தலைவர் விஜய்யை, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் மற்றும் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் நேற்று சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவர் மாயவன் கூறியதாவது: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது … Read more

போயிங் விமான பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டியவரின் முந்தைய பதிவுகள் வைரல்

புதுடெல்லி: போ​யிங் விமானங்​களில் பாது​காப்பு குறை​பாடு​கள் இருப்​பதை ஏற்​கெனவே சுட்​டிக்​காட்​டிய ஜான் பார்​னெட் என்​பவரின் முந்​தைய கருத்​துகள் பொது​வெளி​யில் வைரலாகி வரு​கின்​றன. 1962 பிப்​ர​வரி 23-ல் கலிபோர்​னி​யா​வில் பிறந்​தவர் ஜான் பார்​னெட். பெற்​றோர் பிரிந்த பிறகு அவர் தனது தாயார் மற்​றும் மூன்று சகோதரர்​களு​டன் லூசி​யா​னா​வுக்கு குடிபெயர்ந்​தார். நாசா​வின் விண்​வெளி ஓடத் திட்​டங்​களில் பணி​யாற்​றிய​வர். பின்​னர் 2010 மற்​றும் 2017-க்கு இடை​யில் வடக்கு சார்​லஸ்​டன் போ​யிங் ஆலை​யில் தரக்​கட்​டுப்​பாட்டு மேலா​ள​ராக பணிபுரிந்​தார். அப்​போதே அவர் போ​யிங் நிறு​வனத்​தில் … Read more