கோவை பாலியல் வன்கொடுமை | ஒரு மாதத்துக்குள் குற்றப்பத்திரிகை, அதிகபட்ச தண்டனை: முதல்வர் ஸ்டாலின் உறுதி

கோவை: “கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது. இச்சம்பவத்தில் ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, குற்றச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றுத் தர, காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு வேளையில் கல்லூரி மாணவி ஒருவர், 3 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு … Read more

பிஹாரில் முதல்கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை ஓய்கிறது: நவ.6-ல் வாக்குப்பதிவு

பாட்னா: பிஹாரில் முதல்கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இதன் காரணமாக தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் மகா கூட்டணியின் தலைவர்கள் இன்று தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். 243 தொகுதிகளைக் கொண்ட பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 6 மற்றும் 11-ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் நவம்பர் 6-ல் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 18 மாவட்டங்களில் உள்ள 121 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவடைகிறது. … Read more

விற்பனை விவரம், கணக்கில் செலுத்திய தொகை இடையே மாறுபாடு இருந்தால் பணியாளர்கள் மீது நடவடிக்கை: டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை

சென்னை: மது​பான விற்​பனை விவரம், டாஸ்​மாக் கணக்​கில் செலுத்​திய தொகை இடையே மாறு​பாடு இருந்​தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​படும் என, டாஸ்​மாக் நிர்​வாகம் எச்​சரித்​துள்​ளது. இதுகுறித்​து, டாஸ்​மாக் மேலாண் இயக்​குநர், மாவட்ட மேலா​ளர்​களுக்கு அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மது​பானக் கடைகளில் மது​பானங்​கள் விற்​பனை ரொக்​கம், கார்டு மற்​றும் யுபிஐ ஆகியவை மூலம் நடை​பெறும் நிகழ்​வு​களில், மது​பானங்​களின் அதி​கபட்ச சில்​லறை விற்​பனை விலை​யில் மட்​டுமே அவை​களை விற்​பனை செய்து இருக்க வேண்​டும். இந்த நடை​முறை​யில் வேறு​பாடு நிகழக் கூடாது. … Read more

ஓஆர்எஸ் முத்திரையுடன் கூடிய இனிப்பு பானங்களை விற்க தடை: டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: மருந்​துக் கடைகளில் இருப்​பில் உள்ள ஓஆர்​எஸ் முத்திரையுடன் கூடிய இனிப்பு பானங்​களை விற்​கக் கூடாது என்று டெல்லி உயர் நீதி​மன்​றம் தீர்ப்​பளித்து உள்​ளது. உலகம் முழு​வதும் 5 வயதுக்கு உட்​பட்ட குழந்​தைகள் உயி​ரிழப்​பில் ஐந்​தில் ஒரு மரணம் வயிற்​றுப்​போக்​கால் ஏற்​படு​கிறது. வயிற்​றுப்​போக்​கின்​போது நீரிழப்பை தடுக்க உப்​பு-சர்க்​கரை கரைசல் (ஓஆர்​எஸ்) வழங்​கப்​படு​கிறது. ஒரு லிட்​டர் ஓஆர்​எஸ் கரைசலில் 2.6 கிராம் சோடி​யம் குளோரைடு, 1.5 கிராம் பொட்​டாசி​யம் குளோரைடு, 2.9 கிராம் சோடி​யம் சிட்​ரேட், 13.5 கிராம் … Read more

ஸ்ரீராமச்சந்திராவில் புற்றுநோய் சிகிச்சைக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மையம் தொடக்கம்

சென்னை: ​போரூரில் உள்ள ஸ்ரீராமச்​சந்​திரா உயர் கல்வி மற்​றும் ஆராய்ச்சி நிறு​வனத்​தில் புற்​று​நோய் சிகிச்​சைக்​கான அனைத்து மருத்​துவ சேவை​களை​யும் ஒருங்​கிணைந்து வழங்​கு​வதற்​கான சிறப்பு மையம் நேற்று திறக்​கப்​பட்​டது. நிறு​வனத்​தின் வேந்​தர் வி.ஆர்​.வெங்​க​டாசலம் தலை​மை​யில், சென்னை புற்​று​நோய் மையத்​தின் துணை செயல் தலை​வரும், புற்​று​நோய் அறுவை சிகிச்சை நிபுணரு​மான மருத்​து​வர் எப்​.ஹேமந்த் ராஜ் இந்த மையத்​தைத் திறந்து வைத்​தார். மருத்​து​வர் ஹேமந்த் ராஜ் பேசும்​போது, “மருத்​து​வர்​கள் புற்​று​நோய்க்கு சிகிச்சை அளிப்​பதுடன், நோயாளி​களு​டன் நேரம் செல​விட்​டு, அவர்​களின் கவலைகளைக் கேட்​டு, … Read more

பிஹாரில் பாதுகாப்பு தொழில் துறை வழித்தடம்: மத்திய அமைச்சர் அமித் ஷா வாக்குறுதி

பாட்னா: பிஹார் தேர்தலை முன்னிட்டு ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி வேட்​பாளர்​களுக்​காக பிஹாரின் சிவஹர், சீதாமரி உள்​ளிட்ட பல்​வேறு பகு​தி​களில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா நேற்று வாக்கு சேகரித்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: மன்​னர் சந்​திரகுப்த மவுரியா ஆட்​சிக் காலம் முதல் இப்​போது வரை பிஹாரில் வெள்ள பாதிப்​பு​கள் நீடித்து வரு​கின்​றன. பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்சி அமைத்​தால் வெள்ள பாதிப்​பு​களுக்கு நிரந்தர முற்​றுப்​புள்ளி வைக்​கப்​படும். மேலும் பிஹாரில் பாது​காப்பு தொழில் துறை … Read more

எஸ்ஐஆர் பணிக்கு முழு ஒத்துழைப்பு: அரசியல் கட்சிகளிடம் மாவட்ட தேர்தல் அதிகாரி வேண்டுகோள்

சென்னை: சென்னை மாவட்​டத்​தில் நடை​பெறும் எஸ்​ஐஆர் பணிக்​கு, அரசி​யல் கட்​சிகள் முழு ஒத்​துழைப்பு அளிக்க வேண்​டும் என்று மாவட்ட தேர்​தல் அதி​காரி ஜெ.குமரகுருபரன் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தத்துக்​கான பணி​கள் (எஸ்​ஐஆர்) இன்று முதல் தமிழகம் முழு​வதும் தொடங்​கு​கின்றன. இதை முன்​னிட்​டு, சென்னை மாவட்ட தேர்​தல் அலு​வல​கம் சார்​பில், அங்​கீகரிக்​கப்​பட்ட அரசி​யல் கட்​சிகளின் பிர​தி​நி​தி​களு​ட​னான ஆலோ​சனை கூட்​டம், ரிப்​பன் மாளி​கை​யில், மாவட்ட தேர்​தல் அலு​வலர் ஜெ.குமரகுருபரன் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது. இந்த கூட்​டத்​தில் … Read more

கோழி கறிக்காக சண்டை: திருமணத்தில் 15 பேர் காயம்

பிஜ்னோர்: உத்​தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகு​தி​யில் அண்​மை​யில் ஒரு திரு​மணத்தில் வறுத்த கோழி பரி​மாறு​வ​தில் தகராறு ஏற்​பட்​டது. அதாவது, மணமகன் வீட்​டாருக்கு நடை​பெற்ற விருந்​தில் குறைந்த அளவுக்கு கோழி இறைச்​சித் துண்​டு​கள் பரி​மாறப்​பட்​ட​தாம். மேலும் விருந்து வகைகளைப் பரி​மாறும் நபர்​கள் தங்​களை மோச​மாக நடத்​தி​ய​தாக​வும் மணமகன் வீட்​டார் கோபப்​பட்​டனர். இதைத் தொடர்ந்து மணமகன் வீட்​டார், மணமகள் வீட்​டாருடன் சண்டை போட்​டனர். ஒரு கட்​டத்​தில் இரு வீட்​டாரும் கைகலப்பில் ஈடு​பட்டு திருமண மண்​டபமே களேபர​மானது. இதையடுத்து அங்கு … Read more

பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

சென்னை: கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அரசியல் கட்சி தலைவர்கள், இச்சம்பவத்துக்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்துவிட்ட திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். கோவை கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை உடனடியாகக் கண்டுபிடித்து, சட்டத்தின் பிடியில் நிறுத்தி, கடும் தண்டனை வாங்கித்தர வேண்டும். மதிமுக பொதுச்செயலாளர் … Read more

பாஜகவை அறிந்து கொள்வோம் இயக்கத்தில் 7 நாடுகளின் தூதர்கள் பிஹாரில் சுற்றுப் பயணம்

பாட்னா: உலகின் மிகப்​பெரிய அரசி​யல் கட்​சி​யாக பாஜக விளங்​கு​கிறது. இந்த கட்​சி​யின் செயல்​பாடு​களை உலக நாடு​கள் அறிந்து கொள்​ளும் வகை​யில் கடந்த 2022-ம் ஆண்​டில் ‘பாஜகவை அறிந்து கொள்​வோம்’ என்ற இயக்​கத்தை கட்​சி​யின் தலை​வர் ஜே.பி. நட்டா தொடங்​கி​னார். இதன்​படி பாஜக தலைமை சார்​பில் பல்​வேறு நாடு​களின் தலை​வர்​கள், தூதர்​களு​டன் கலந்​துரை​யாடல்​கள் நடை​பெற்று வரு​கின்​றன. கடந்த காலங்​களில் குஜ​ராத், இமாச்சல பிரதேசம், ராஜஸ்​தான் சட்​டப்​பேர​வைத் தேர்​தல்​களின்​போது, பாஜக​வின் செயல்​பாடு​களை அறிந்து கொள்ள ஏது​வாக பல்​வேறு நாடு​களின் தூதர்​கள் … Read more