“பொது அமைதியை குலைக்கும் சேலம் அருளை கைது செய்க” – வழக்கறிஞர் கே.பாலு

சென்னை: பொது அமைதியை குலைக்கும் சேலம் அருளை கைது செய்ய வேண்டும் என பாமக செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞர் கேபாலு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாவட்டம் வடுகத்தம்பட்டியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்களை சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் தலைமையிலான கும்பல் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதுடன், மகிழுந்தை மோதி படுகொலை செய்ய முயன்றுள்ளது. காவல் துறையினர் முன்னிலையிலேயே இந்த காட்டுமிராண்டித்தனத்தை அரங்கேற்றிய அருள் தலைமையிலான கும்பல் மீது காவல் துறையினர் இதுவரை … Read more

ரூ.90 லட்சம் கொடுத்து கடன் களங்கத்தில் இருந்து 290 ஏழை விவசாயிகளை மீட்ட சூரத் தொழிலதிபர்

சூரத்: குஜராத் மாநிலம் அம்​ரேலி மாவட்​டத்​தில் உள்ள ஜிரா கிராமத்​தில் உள்ள 290 விவ​சா​யிகளின் போலி கடன்​களை அடைக்க ரூ.90 லட்​சத்தை சூரத்தை சேர்ந்த ஒரு தொழில​திபர் கொடுத்து உதவி​யுள்​ளார். மனிதநே​யம் மற்​றும் தாராளமனப்​பான்​மைக்கு தனது தாயாரின் நினை​வு​நாளில் சூரத் தொழில​திபர் செய்த இந்த சம்​பவம் ஒரு முன்​மா​திரி​யாக மாறி​யுள்​ளது. அம்​ரேலி மாவட்​டம் ஜிரா கிராமத்​தில் உள்​ளூர் கூட்​டுறவு சங்​கத்​தில் அதன் நிர்​வாகி​கள் கிராமத்​தில் உள்ள படிக்​காத ஏழை விவ​சா​யிகளின் பெயரில் கடன்​பெற்று மோசடி செய்​துள்​ளனர். இதனால் … Read more

இரட்டை இலை சின்னம் குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்

ஈரோடு: தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்னம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோபி எம்எல்ஏ கே.ஏ.செங்கோட்டையன், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மின்னஞ்சலில் எழுத்துபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். ஈரோடு மாவட்டம் கோபி சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவாக கே.ஏ.செங்கோட்டையன் உள்ளார். இவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியன்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் சென்று தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். இதையடுத்து செங்கோட்டையனை அதிமுகவின் … Read more

வட கிழக்கு மாநிலங்களுக்காக விரைவில் தனி அரசியல் இயக்கம்: மேகாலயா முதல்வர் உள்ளிட்டோர் அறிவிப்பு

வட கிழக்கு மாநிலங்களுக்காக விரைவில் தனித்த ஒரு அரசியல் இயக்கத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா, பிரத்யோத் மாணிக்யா, கிகோன் ஆகியோர் அறிவித்துள்ளனர். மேகாலயாவின் ஆளும் கட்சியான தேசிய மக்கள் கட்சியின் தலைவரும் முதல்வருமான கான்ராட் சங்மா, திரிபுரா மாநிலத்தின் இரண்டாவது பெரிய கட்சியான திப்ரா மோதா கட்சியின் தலைவர் பிரத்யோத் மாணிக்யா, நாகாலாந்து மாநில பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் எம்.கிகோன் ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கான்ராட் … Read more

“சார் என்றாலே திமுகவுக்கு பயம்!” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்

நாமக்கல்: அண்ணா பல்கலை. விவகார சார், தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சார் (எஸ்ஐஆர்) என எந்த சார் என்றாலும் திமுகவுக்கு பயம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார். நாமக்கல் பூங்கா சாலையில் பாஜக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று பேசியது: “தமிழகத்துக்கு 11 மருத்துவக் கல்லூரிகளை மத்திய பாஜக அரசு வழங்கியது. இதனை வாங்கித் தந்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இங்குள்ள எம்பி … Read more

பிஹாரில் பெண்கள் அதிக அளவில் வாக்களிப்பதை உறுதி செய்ய பாஜகவினருக்கு மோடி அறிவுறுத்தல்

புதுடெல்லி: பிஹாரில் பெண்கள் அதிக அளவில் வாக்களிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று பாஜக பெண் தொண்டர்களுக்கு பாஜக மூத்த தலைவரும், பிரதமருமான நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. முன்னதாக, பிஹார் பாஜக பெண் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்த தேர்தலில் நான் எங்கு சென்றாலும், எங்கு பேசினாலும் பாஜக தொண்டர்கள் … Read more

“பாஜக நமக்கு எதிரி… காங்கிரஸ் துரோகி!” – திருச்சியில் சீமான் பேச்சு

திருச்சி: “பாஜக நமக்கு வெளிப்படையான எதிரி. காங்கிரஸ் நம்மை நம்ப வைத்து ஏமாற்றிய துரோகி” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உலகத் தமிழ்க் கிறிஸ்தவர் இயக்கம் சார்பில் நடைபெற்ற ‘உரையாடுவோம் வாருங்கள்’ எனும் தலைப்பிலான நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொதுமக்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் பேசியது: “சிறுபான்மையினருக்கு வேண்டியது உரிமை, சலுகை அல்ல. 60 … Read more

சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு; பலர் காயம்

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது கோர்பா பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். பிலாஸ்பூர் மாவட்டம் பிலாஸ்பூர் – காட்னி இடையே லால் காடன் பகுதிக்கு அருகில் செவ்வாய்க்கிழமை மாலை இந்த விபத்து நேரிட்டுள்ளது. இதில், பயணிகள் ரயிலின் முன்பக்க பெட்டிகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் பிலாஸ்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜ்னீஷ் உறுதிப்படுத்தியுள்ளார். “மீட்புப் பணிகள் … Read more

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முதல்முறையாக பாகிஸ்தானுக்கு சீக்கியர்கள் புனிதப்பயணம்

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முதல்முறையாக இந்தியாவில் இருந்து சீக்கிய பக்தர்கள் பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளனர். அவர்களுக்கு பாகிஸ்தான் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்தும் மலர்களைத் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து, அதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை எடுத்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் தணிந்துள்ள நிலையில், … Read more

விருதுநகரில் நள்ளிரவில் பிரச்சாரம்: கிருஷ்ணசாமி மீது வழக்குப் பதிவு

விருதுநகர்: நள்ளிரவில் பிரச்சாரம் மேற்கொண்டதால் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 3 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். புதிய தமிழகம் கட்சி சார்பில் 2026 ஜனவரி 7ம் தேதி மதுரையில் 7வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு தொடர்பாக பல்வேறு மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தற்போது விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிருஷ்ணசாமி மாநாட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதோடு, ஒவ்வொரு … Read more