தமிழகத்தில் இன்று முதல் நவ.23 வரை கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்​கக் கடலில் நவ. 22-ம் தேதி புதிய காற்​றழுத்த தாழ்வு பகுதி உரு​வாகும் நிலை​யில், தமிழகத்​தில் இன்றுமுதல் 23-ம் தேதி வரை சில மாவட்​டங்​களில் கனமழை நீடிக்க வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தென்​மேற்கு வங்​கக் கடல் பகு​தி​கள் மற்​றும் அதையொட்​டிய இலங்கை கடலோரப் பகு​தி​களில் காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி நில​வு​கிறது. இது இன்று மேற்கு அல்​லது வடமேற்கு திசை​யில் மெது​வாக … Read more

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜாக்டோ-ஜியோ இன்று வேலைநிறுத்த போராட்டம்

சென்னை: அரசு ஊழியர்​களுக்கு பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​தக் கோரி ஜாக்​டோ-ஜியோ சார்​பில் இன்று (நவ.18) ஒரு​நாள் அடை​யாள வேலைநிறுத்​தப் போராட்​டம் நடத்​தப்​படு​கிறது. அதேநேரம், வேலைநிறுத்​தத்​தில் ஈடு​பட்​டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​படும் என தலை​மைச் செய​லா​ளர் எச்​சரித்​துள்​ளார். அரசு ஊழியர்​கள் மற்​றும் ஆசிரியர்​களுக்கு பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை ரத்​து செய்​து​விட்டு மீண்​டும் பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை நடை​முறைப்​படுத்​து​வது, அரசு துறை​களில் உள்ள லட்​சக்​கணக்​கான காலிப்​பணி​யிடங்​களை நிரப்​புவது உள்பட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி அரசு ஊழியர்​-ஆசிரியர் சங்​கங்​களின் கூட்​டமைப்​பான … Read more

நடைபயணத்தில் திமுக ஆட்சி நீடிக்க வலியுறுத்துவேன் – வைகோ தகவல்

“திருச்சி – மதுரை இடையே மேற்கொள்ளும் நடைபயணத்தின்போது, திராவிட இயக்கத்தை பாதுகாக்க திமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்துவேன்” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். போதைப்பொருள் ஒழிப்பு, சாதி மோதல் தடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் திருச்சியிலிருந்து மதுரை வரை ஜன. 2 முதல் 12-ம் தேதி வரை சமத்துவ நடைபயணம் நடைபெற உள்ளது. நடைபயணத்தில் பங்கேற்க உள்ள இளைஞர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணலை மதுரையில் வைகோ … Read more

‘மோடியை பழிப்பது சுலபம்; ஆனால்…’ – ராகுலை விமர்சித்த ஆச்சாரிய பிரமோத் கிருஷ்ணம்

புதுடெல்லி: பிஹார் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள என்டிஏ கூட்டணியின் செயல்பாட்டை புகழ்ந்தும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்தும் உள்ளார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஆச்சாரிய பிரமோத் கிருஷ்ணம். பிஹார் தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக, ஜேடியு அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி. இந்நிலையில், பிஹார் தேர்தலை குறிப்பிட்டு வீடியோ ஒன்றை ஆச்சாரிய பிரமோத் கிருஷ்ணம் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: Source link

பதிவு ரத்தை எதிர்த்து மனித நேய மக்கள் கட்சி வழக்கு!

பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கியதை எதிர்த்து, மனிதநேய மக்கள் கட்சி வழக்குத் தாக்கல் செய்திருக் கிறது. இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆறு ஆண்டுகளாக எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை என்ற காரணத்துக்காக நாடு முழுவதும் 474 கட்சிகளின் பதிவை கடந்த செப்டம்பர் 19-ம் தேதி தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. Source link

பிஹாரில் தனித்து போட்டியிட்ட ஒவைசி கட்சி 5 இடங்களில் வெற்றி

பாட்னா: பிஹாரில் தனித்​துப் போட்​டி​யிட்ட அசாதுதீன் ஒவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் கட்சி 5 இடங்​களில் வெற்றி பெற்​றது. பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலில் ஹைத​ரா​பாத் எம்​.பி. அசாதுதீன் ஒவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் கட்​சி, எதிர்க்​கட்​சிகளின் மகா கூட்​ட​ணி​யில் சேர விரும்​பியது. ஆனால் ஆர்​ஜேடி தலை​வர் தேஜஸ்வி யாதவுக்கு இதில் விருப்​பம் இல்​லாத​தால் கூட்​டணி ஏற்​பட​வில்​லை. Source link

ராமதாஸ் போல் ஒரு நாள் வைகோவும் மகனால் வருந்துவார்: மல்லை சத்யா தாக்கு

மதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா நேற்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவையில் நவம்பர் 20-ம் தேதி எங்கள் பயணம் அரசியல் கட்சியா,இயக்கமா அல்லது சங்கமா என்பதை அறிவிக்க உள்ளோம். திராவிட இயக்க கருத்தியலில் இருந்து பின் வாங்கக்கூடாது என உறுதியாக இருக்கிறோம். கார்ப்பரேட் அரசியல்வாதியாக துரை வைகோ இருக்கிறார். துரை வைகோ மீது இன்னும் மதிமுக-வில் பலர் எதிர்ப்பு மனநிலையில் உள்ளனர். மாமல்லபுரத்தில் பயிற்சி விமானம் ஒன்று … Read more

25 வயதில் எம்எல்ஏ.வான நாட்டுப்புறப் பாடகி மைதிலி

பாட்னா: பிஹார் மாநிலம் மதுபானி மாவட்டம், பெனிபட்டி கிராமத்தைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்குர் (25). பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட மைதிலிக்கு பாஜக வாய்ப்பளித்தது. அதன்படி, பிஹாரின் அலிநகர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் செல்வாக்குமிக்க பினோத் மிஸ்ரா போட்டியிட்டார். Source link

முனைவர் ஆனார் அமைச்சர் அன்பில் மகேஸ்

திருச்சி: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து, திருச்சி தேசியக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற வாய் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற்றதையடுத்து புறத்தேர்வு பேராசிரியரால் முனைவராக அறிவிக்கப்பட்டார். தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி பாரதி தாசன் பல்கலை.க்கு உட்பட்ட தேசியக் கல்லூரி விளையாட்டுத் துறையில் தனது முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சிக்கு பதிவு செய்து, அதற்கான முன்மொழிவை 2021 அக்டோபர் மாதம் சமர்ப்பித்தார். Source link

மிகவும் பாதுகாப்பான தேர்தல்: எப்போதும் இல்லாத சாதனை

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் முதல்முறையாக இம்முறை வாக்குப்பதிவு நாளில் வன்முறை தொடர்பான உயிரிழப்பு ஏதுமில்லை. எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப்பதிவுக்கு உத்தர விடப்படவில்லை. பிஹாரில் கடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் வன்முறை, உயிரிழப்புகள் ஏற்பட்டதும், மறுவாக்குப் பதிவுக்கு உத்தரவிடப்பட்டதும் அதிகாரப்பூர்வ தரவுகள் மூலம் தெரியவருகிறது. கடந்த 1985-ம் ஆண்டு தேர்தலில் 63 உயிரிழப்பு ஏற்பட்டு, 156 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவுக்கு உத்தரவிடப்பட்டது. 1990-ம் ஆண்டு தேர்தல் வன்முறைகளில் 87 பேர் உயிரிழந்தனர். Source link