தமிழகத்தில் பதிவு உரிமம் பெறாத மருத்துவமனை, கிளீனிக் மீது நடவடிக்கை எடுக்க முடிவு

சென்னை: தமிழகத்​தில் பதிவு உரிமம் பெறாத மருத்​து​வ​மனை​கள், கிளீனிக்​கு​கள், ஆய்​வகங்​கள் மீது நடவடிக்கை எடுக்க மருத்துவம் மற்​றும் ஊரக நலப் பணி​கள் இயக்​ககம் முடிவு செய்​துள்​ளது. தமிழகத்​தில் 85 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மருத்​து​வ​மனை​கள், கிளீனிக்​கு​கள், சிறிய அளவி​லான மருத்​துவ மையங்​கள் செயல்​பட்டு வரு​கின்​றன. மருத்​து​வ​மனை​கள், கிளீனிக்​கு​கள் பதிவு உரிமம்​பெறு​வது அவசி​யம் ஆகும். அதே​போல், 5 ஆண்​டு​களுக்கு ஒரு​முறை உரிமத்​தைப் புதுப்​பிக்க வேண்​டும். இதற்​காக 2018-ம் ஆண்டு தமிழக மருத்​துவ நிறு​வனங்​கள் முறைப்​படுத்​துதல் திருத்​தச் சட்​டம் கொண்டு வரப்​பட்​டது. … Read more

ஜப்பானின் விலை உயர்ந்த அரிசி: ஒரு கிலோ விலை ரூ.12,500

டோக்கியோ: உல​கின் மிக விலை உயர்ந்த அரிசி ஜப்​பானில் விளைவிக்​கப்​படு​கிறது. இதன் விலை ஒரு கிலோ ரூ.12,500 ஆக உள்​ளது. தெற்​காசி​யா​வில் உள்ள ஒவ்​வொரு நாட்​டுக்​கும் வெவ்​வேறு மொழி, வரலாறு, உணவு, கலாச்​சா​ரம் மற்​றும் பாரம்​பரி​யம் உள்​ளது. என்​றாலும் இந்த நாடு​களிடையே பொது​வான விஷய​மாக அரிசி உள்​ளது. ஒவ்​வொரு நாடும் தனித்​து​வ​மான அரிசி வகைகளை உற்​பத்தி செய்​கின்​றன. இவை பெரும்​பாலும் எல்​லோ​ராலும் வாங்​கக் கூடிய விலை​யிலேயே கிடைக்​கின்​றன. என்​றாலும் ஜப்​பானின் கின்​மேமை பிரீமி​யம் அரிசி ஒரு ஆடம்பர … Read more

கோயம்புத்தூரில் நடைபெற்ற 16-வது மாநாட்டில் சிஐடியு தொழிற்சங்கத்தின் மாநிலத் தலைவராக ஜி.சுகுமாறன் தேர்வு

கோவை: கோவை​யில் நடந்த சிஐடியு தொழிற்​சங்க மாநாட்​டில் மாநிலத் தலை​வ​ராக ஜி.சுகு​மாறன், பொதுச் செய​லா​ள​ராக எஸ்​.கண்​ணன் உட்பட 41 பேர் கொண்ட புதிய நிர்​வாகி​கள் குழு தேர்வு செய்​யப்​பட்​டது. சிஐடியு தொழிற்​சங்​கத்​தின் 16-வது மாநில மாநாடு கடந்த 6-ம் தேதி கோவை​யில் தொடங்​கியது. தொடர்ந்து நடந்த பொது மாநாடு மற்​றும் பிர​தி​நி​தி​கள் மாநாட்​டில், மாநிலத் தலை​வர் அ.சவுந்​தர​ராஜன் மற்​றும் பல்​வேறு தொழிற்​சங்க நிர்​வாகி​கள் பேசினர். இரண்​டாம் நாள் நடந்த பிர​தி​நி​தி​கள் மாநாட்​டில், மூத்த தொழிற்​சங்​கத் தலை​வர் டி.கே.ரங்​க​ராஜன், … Read more

அத்வானி பிறந்த நாளில் பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: பாஜக மூத்த தலை​வரும், முன்​னாள் துணை பிரதமரு​மான எல்​.கே.அத்​வானி நேற்று தனது 98-வது பிறந்​த​நாளை கொண்​டாடி​னார். இதைத் தொடர்ந்து அவருக்கு தனது எக்ஸ் சமூக வலை​தளப் பக்​கத்​தில் பிரதமர் மோடி வாழ்த்து தெரி​வித்​துள்​ளார். அதில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: எல்​.கே. அத்​வானிக்கு பிறந்​த​ நாள் வாழ்த்​துக்​கள். உயர்ந்த தொலைநோக்கு மற்​றும் அறி​வுத்​திற​னால் ஆசீர்​வ​திக்​கப்​பட்ட ஓர் அரசி​யல்​வா​தி​யான அத்​வானி​யின் வாழ்க்கை நாட்​டின் முன்​னேற்​றத்தை வலுப்​படுத்த அர்ப்​பணிக்​கப்​பட்​டுள்​ளது. எப்​போதும் தன்​னலமற்ற கடமை உணர்​வு, உறு​தி​யான கொள்​கைகளுக்​கு சொந்​தக்​காரர் அத்​வானி. அவரது … Read more

எஸ்ஐஆரை எதிர்க்க என்ன காரணம்? – வீடியோ வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதற்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், எம்எல்ஏ.க்கள், எம்பி.க்கள் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் எஸ்ஐஆர் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதன்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில் பேசியதாவது: மீண்டும் திமுக ஆட்சி அமையக்கூடாது என்பதற்காக பல்வேறு திட்டங்ளை பாஜக செய்துவருகிறது. மேலும், வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, தேர்தல் ஆணையம் என … Read more

சொத்து விவரங்கள் அளிக்காத 5 அமைச்சர்கள், 67 எம்எல்ஏக்கள்

பெங்களூரு: கர்​நாட​கா​வில் எம்​பி, எம்​எல்​ஏக்​கள், எம்​எல்​சிக்​கள், அமைச்​சர்​கள், முதல்​வர், ஆளுநர் உள்​ளிட்ட மக்​கள் பிர​தி​நி​தி​கள், அரசு ஊழியர்​கள் ஆண்​டு​தோறும் தங்​களின் சொத்து விவரங்​களை ஊழல் கண்​காணிப்​பக​மான‌ லோக் ஆயுக்​தா​வில் தாக்​கல் செய்ய வேண்​டும் என சட்ட விதி​கள் 22, 22(1) வலி​யுறுத்​துகின்​றன‌. நடப்​பாண்​டில் கடந்த ஜூன் 30-ம் தேதிக்​குள் சொத்து விவரங்​களை தாக்கல் செய்ய வேண்டும். இறுதி தேதி முடிந்து 4 மாதங்​கள் ஆன பிறகும் பெரும்​பாலான பிர​தி​நி​தி​கள் சொத்து விவரங்​களை தாக்​கல் செய்​ய​வில்லை. இதுகுறித்து லோக் … Read more

மூத்த குடிமக்களின் வாழ்வை மேம்படுத்தும் ‘அன்புச்சோலை’ திட்டம்: திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: புதுக்​கோட்​டை, திருச்​சி​யில் 2 நாள் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​ளும் முதல்​வர் ஸ்டா​லின், மூத்த குடிமக்​களின் வாழ்வை மேம்​படுத்​தும் ‘அன்​புச்​சோலை’ திட்​டத்தை இன்று தொடங்​கு​கிறார். புதுக்​கோட்​டை, திருச்சி மாவட்டங்​களில் முதல்​வர் ஸ்டா​லின் 2 நாள் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்கிறார். புதுக்​கோட்டை மாவட்​டம் கீரனூரில் இன்று காலை 11 மணி அளவில் நடை​பெறும் அரசுநலத்​திட்ட உதவி​கள் வழங்​கும் விழா​வில் பங்​கேற்​கிறார். இதில் ரூ.767 கோடி மதிப்​பீட்​டிலான புதிய திட்​டப்​பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி,​முடிவுற்ற பணி​களைத் தொடங்கி வைக்​கிறார். பயனாளி​களுக்கு நலத் திட்ட உதவி​களை​யும் … Read more

வாக்கு திருட்டு விவகாரத்தில் இன்னும் விரிவான தகவல்கள் எங்களிடம் உள்ளன: ராகுல் காந்தி

பச்மாரி: ஜனநாயகமும் அரசியலமைப்பும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன என்று குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, தற்போதைய முக்கிய பிரச்சினை வாக்குத் திருட்டு என்றும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அதை மூடிமறைத்து நிறுவனமயமாக்குவதற்கான ஒரு அமைப்பு என்றும் தெரிவித்தார். மத்திய பிரதேச மாநிலம் பச்மாரியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “ ஹரியானாவில் வாக்குத் திருட்டு தெளிவாக செய்யப்பட்டுள்ளது. இருபத்தைந்து லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன, எட்டு வாக்குகளில் ஒரு வாக்கு திருடப்பட்டுள்ளன. … Read more

ஆன்லைனில் எஸ்ஐஆர் படிவங்களை நிரப்பும் புதிய வசதி அறிமுகம்: தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல் 

சென்னை: ​வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் தொடர்​பான படிவங்​களை தேர்​தல் ஆணைய இணை​யதளத்​தில் நிரப்​பும் வசதி கொண்​டு​வரப்​பட்​டுள்​ள​தாக தமிழக தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: வாக்​காளர்​கள் வசதிக்​காக இந்​தி​யத் தேர்​தல் ஆணை​யம் தனது அதி​காரப்​பூர்வ இணை​யதள​மான https://voters.eci.gov.in -ல் எஸ்​ஐஆர் படிவத்தை ஆன்​லைனில் நிரப்​புவதற்​கான வசதியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. வாக்​காளர்​கள் தங்​களது பதிவு செய்​யப்​பட்ட செல்​போன் எண் அல்​லது வாக்​காளர் அடை​யாள அட்டை எண்ணை பயன்​படுத்தி இணை​யதளம் … Read more

பிஹாரில் 2-ம் கட்ட தேர்தல் | 122 தொகுதிகளில் பிரச்சாரம் நிறைவு: நாளை வாக்குப்பதிவு; 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை

பாட்னா: பிஹாரில் இரண்​டாம் கட்​ட​மாக 122 தொகு​தி​களில் நாளை சட்டப்பேரவை தேர்​தல் நடைபெறுகிறது. இந்த தொகு​தி​களில் நேற்று மாலை​யுடன் பிரச்​சா​ரம் நிறைவடைந்​தது. பிஹாரில் மொத்​தம் 243 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​கள் உள்​ளன. அங்கு இரண்டு கட்​டங்​களாக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடத்​தப்​படும் என்று தலை​மைத் தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​தது. இதன்​படி கடந்த 6-ம் தேதி 121 தொகு​தி​களில் வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. இதில் 65.08 சதவீத வாக்​கு​கள் பதி​வாகின. இரண்​டாம் கட்​ட​மாக நாளை 122 தொகு​தி​களில் தேர்​தல் நடக்​கிறது. இந்த தொகு​தி​களில் … Read more