சமூக நீதிக்கு அடையாளமாக திமுக உள்ளது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

காஞ்சிபுரம்: ‘சமூக நீதிக்கு அடையாளமாக திமுக உள்ளது’ என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று காஞ்சிபுரம் வந்தார். முதலில் காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், வாக்குச் சாவடி முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் அவர் ஆலோசனை நடத்தினார். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கான பல்வேறு வழிமுறைகளை கூறியதுடன், கட்சி … Read more

ஓட்டல் சமையல் தொழிலாளிக்கு ரூ.46 கோடி வருமான வரி நோட்டீஸ்

போபால்: மத்​திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்ட நெடுஞ்​சாலை​யில் உள்ள ஒரு உணவகத்​தில் சமையல​ராக பணிபுரிந்து வருபவர் ரவிந்​தர் சிங் சவு​கான் (30). இவருக்கு கடந்த ஏப்​ரல் 9-ம் தேதி வரு​மான வரித் துறையி​லிருந்து ஒரு நோட்​டீஸ் வந்​துள்​ளது. அவருக்கோ அவரது மனை​விக்கோ ஆங்​கிலம் தெரி​யாது என்​ப​தால், அந்த நோட்​டீஸை புறக்​கணித்​து​விட்​டனர். பின்​னர் கடந்த ஜூலை 25-ம் தேதி 2-வது முறை​யாக நோட்​டீஸ் வந்​துள்​ளது. இதையடுத்​து, ஆங்​கிலம் தெரிந்​தவர்​களின் உதவியை நாடி உள்​ளார். அப்​போது, வரு​மான வரித் … Read more

இந்தியர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த செனட் உறுப்பினர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஆஸ்திரேலிய பிரதமர்

சிட்னி: ஆஸ்​திரேலி​யா​வில் குடியேறும் இந்​தி​யர்​கள் எண்​ணிக்கை சமீப கால​மாக அதி​கரித்து வரு​கிறது. அங்கு குடியேறிய வெளி​நாட்​ட​வர்​களில் இங்​கிலாந்​துக்கு அடுத்​த​படி​யாக இந்​தி​யர்​கள் 2-ம் இடத்​தில் உள்​ளனர். கடந்த 2023-ம் ஆண்டு கணக்​கெடுப்​பின்​படி 8.4 லட்​சம் இந்​தி​யர்​கள் அங்கு வசிக்​கின்​றனர். இதுத​விர, ஆயிரக்​கணக்​கானோர் ஆஸ்​திரேலி​யா​விலேயே பிறந்து குடி​யுரிமை பெற்​றுள்​ளனர். இந்​நிலை​யில், அங்கு வசிக்​கும் இந்​தி​யர்​களுக்கு எதி​ரான மனநிலை அதி​கரித்து வரு​கிறது. குறிப்​பாக, கடந்த சில வாரங்​களாக வெளி​நாட்​டினர் அதிக அளவில் குடியேறு​வதற்கு எதி​ராக, நாடு முழு​வதும் ‘மார்ச் பார் ஆஸ்​திரேலி​யா’ … Read more

ஆப்பிள் ஐபோன் 17 சீரிஸ் போன்கள் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

குபெர்டினோ: அமெரிக்க நாட்டில் இந்திய நேரப்படி நேற்று (செப்.9) இரவு 10.30-க்கு நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் நிகழ்வில் ‘ஐபோன் 17 சீரிஸ்’ ஸ்மார்ட்போன்களை அந்நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் அறிமுகம் செய்து வைத்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி உள்ளது ஐபோன் 17 சீரிஸ் போன்களின் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். கடந்த 2007-ல் ஆப்பிள் நிறுவனம் முதல் ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. அது முதல் ஆண்டுதோறும் தங்கள் பயனர்களுக்கு புதிய அப்டேட் வழங்கும் வகையில் … Read more

இந்தியாவில் முதல்முறையாக கடல்சார் வள அறக்கட்டளை: அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்

சென்னை: இந்​தி​யா​வில் முதல்​முறை​யாக கடல் வள பாது​காப்​புக்​காக அமைக்​கப்​பட்ட தமிழ்​நாடு கடல்​சார் வள அறக்​கட்​டளையை அமைச்​சர் தங்​கம் தென்​னரசு தொடங்கி வைத்​தார். தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் மூலம் தேர்வு செய்​யப்​பட்ட வனக்​காவலர்​கள் மற்​றும் வனவர்​களுக்​கான பணி நியமன ஆணை​கள் வழங்​கும் நிகழ்ச்சி சென்னை கலை​வாணர் அரங்​கில் நேற்று நடை​பெற்​றது. வனத்​துறை அமைச்​சர் ஆர்​.எஸ்​.​ராஜகண்​ணப்​பன் தலைமை தாங்​கி, 333 வனப் பணி​யாளர்​களுக்கு பணி நியமன ஆணை​களை வழங்​கி​னார். அதைத் தொடர்ந்து இந்​தி​யா​வில் முதல்​முறை​யாக கடலோர சூழல் அமைப்​பு​களைப் … Read more

“நேபாளத்தில் அமைதி திரும்ப வேண்டும்” – பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடெல்லி: நேபாளத்தின் ஸ்திரத்தன்மை, அமைதி மற்றும் செழிப்பு எங்களுக்கு மிகவும் முக்கியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் “இன்றைய சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பிய பிறகு, பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் நேபாளத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை மனதை வேதனைப்படுத்துகிறது. பல இளைஞர்கள் உயிரிழந்திருப்பது என் இதயத்தை மிகவும் வருத்தப்படுத்துகிறது. நேபாளத்தின் ஸ்திரத்தன்மை, அமைதி மற்றும் செழிப்பு ஆகியவை மிக முக்கியமானவை. நேபாளத்தில் உள்ள … Read more

“கோழைத்தனமான தாக்குதல்” – இஸ்ரேலுக்கு கத்தார் வெளியுறவு அமைச்சகம் கண்டனம்

ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கத்தார் நாட்டில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு கத்தார் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மஜீத் அல் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் உறுப்பினர்கள் வசிக்கும் குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து நடத்தப்பட்ட கோழைத்தனமான இஸ்ரேலிய தாக்குதலை கத்தார் அரசு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தக் குற்றவியல் தாக்குதல் அனைத்து சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை அப்பட்டமாக மீறுவதாகும். மேலும் … Read more

“அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை மாற்றினால் பாஜக கூட்டணிக்கு ஆதரவு” – டிடிவி தினகரன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: “பாஜகவில் யார் மீதும் எந்த வருத்தமும் இல்லை. அதிமுகவில் முதல்வர் வேட்பாளரை மாற்றினால் ஆதரிக்க தயாராக உள்ளோம்” என ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சுவாமி தரிசனம் செய்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் செவ்வாய்க் கிழமை இரவு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து மணவாள மாமுனிகள் மடத்தில் ஶ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகளிடம் ஆசி பெற்றார். இருவரும் தனி அறையில் … Read more

காத்மாண்டு விமான நிலையம் மூடல்: ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் விமான சேவைகள் நிறுத்தம்

புதுடெல்லி: நேபாளத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டுக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. பேஸ்​புக், யூ டியூப், எக்ஸ் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​களுக்கு நேபாள அரசு திடீர் தடை விதித்​ததை எதிர்த்து நேற்று நடைபெற்ற வன்முறையில் 19 பேர் உயி​ரிழந்​தனர். 200-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இரண்டாவது நாளாக இன்று போராட்டம் தீவிரமடைந்தது. சமூக ஊடக தடைக்கு எதிரான போராட்டம், ஊழலுக்கு எதிரான போராட்டமாகவும் வலுப்பெற்றதோடு, அரசாங்கத்துக்குள்ளும் எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து பிரதமர் கே.பி.சர்மா ஒலி இன்று பிற்பகல் … Read more

போராட்டக்காரர்கள் தீ வைத்ததில் நேபாள முன்னாள் பிரதமரின் மனைவி உயிரிழப்பு

காத்மண்டு: நேபாள முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததில் அவரது மனைவி உயிரிழந்துள்ளார். நேபாளத்தில் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட பதிவு செய்யப்படாத 26 சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்ததைக் கண்டித்தும், ஆட்சியாளர்களின் ஊழலைக் கண்டித்தும் தலைநகர் காத்மாண்டுவில் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்தது. சமூக ஊடக தடைக்கு எதிரான போராட்டம், ஊழலுக்கு எதிரான போராட்டமாகவும் வலுப்பெற்றதோடு, அரசாங்கத்துக்குள்ளும் எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து பிரதமர் கே.பி.சர்மா ஒலி இன்று பிற்பகல் … Read more