ராமதாஸ் போல் ஒரு நாள் வைகோவும் மகனால் வருந்துவார்: மல்லை சத்யா தாக்கு

மதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா நேற்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவையில் நவம்பர் 20-ம் தேதி எங்கள் பயணம் அரசியல் கட்சியா,இயக்கமா அல்லது சங்கமா என்பதை அறிவிக்க உள்ளோம். திராவிட இயக்க கருத்தியலில் இருந்து பின் வாங்கக்கூடாது என உறுதியாக இருக்கிறோம். கார்ப்பரேட் அரசியல்வாதியாக துரை வைகோ இருக்கிறார். துரை வைகோ மீது இன்னும் மதிமுக-வில் பலர் எதிர்ப்பு மனநிலையில் உள்ளனர். மாமல்லபுரத்தில் பயிற்சி விமானம் ஒன்று … Read more

25 வயதில் எம்எல்ஏ.வான நாட்டுப்புறப் பாடகி மைதிலி

பாட்னா: பிஹார் மாநிலம் மதுபானி மாவட்டம், பெனிபட்டி கிராமத்தைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்குர் (25). பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட மைதிலிக்கு பாஜக வாய்ப்பளித்தது. அதன்படி, பிஹாரின் அலிநகர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் செல்வாக்குமிக்க பினோத் மிஸ்ரா போட்டியிட்டார். Source link

முனைவர் ஆனார் அமைச்சர் அன்பில் மகேஸ்

திருச்சி: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து, திருச்சி தேசியக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற வாய் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற்றதையடுத்து புறத்தேர்வு பேராசிரியரால் முனைவராக அறிவிக்கப்பட்டார். தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி பாரதி தாசன் பல்கலை.க்கு உட்பட்ட தேசியக் கல்லூரி விளையாட்டுத் துறையில் தனது முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சிக்கு பதிவு செய்து, அதற்கான முன்மொழிவை 2021 அக்டோபர் மாதம் சமர்ப்பித்தார். Source link

மிகவும் பாதுகாப்பான தேர்தல்: எப்போதும் இல்லாத சாதனை

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் முதல்முறையாக இம்முறை வாக்குப்பதிவு நாளில் வன்முறை தொடர்பான உயிரிழப்பு ஏதுமில்லை. எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப்பதிவுக்கு உத்தர விடப்படவில்லை. பிஹாரில் கடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் வன்முறை, உயிரிழப்புகள் ஏற்பட்டதும், மறுவாக்குப் பதிவுக்கு உத்தரவிடப்பட்டதும் அதிகாரப்பூர்வ தரவுகள் மூலம் தெரியவருகிறது. கடந்த 1985-ம் ஆண்டு தேர்தலில் 63 உயிரிழப்பு ஏற்பட்டு, 156 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவுக்கு உத்தரவிடப்பட்டது. 1990-ம் ஆண்டு தேர்தல் வன்முறைகளில் 87 பேர் உயிரிழந்தனர். Source link

காங்கிரஸுடன் இருந்தால் உங்களையும் மூழ்கடித்து விடுவார்கள் – ஸ்டாலினுக்கு தமிழிசை அட்வைஸ்

“பிஹார் தேர்தலுக்குப் பிறகு பல பாடங்களை கற்றிருக்கிறோம் எனச் சொல்லி இருக்கிறார் ஸ்டாலின். காங்கிரஸுடன் இருந்தால் உங்களையும் இழுத்து மூழ்கடித்து விடுவார்கள் எனும் மற்றொரு பாடத்தையும் கற்றுக்கொள்ளுங்கள் என அவருக்குச் சொல்லிக் கொள்கிறேன்’’ என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் பேசுகையில், “வாக்குகளை திருடிவிட்டார்கள் என்று சொல்லிவந்தார் ராகுல் காந்தி. ஆனால் பிஹார் மக்கள், எங்கள் ஓட்டு எங்களிடம் தானே இருக்கிறது எனக் கூறி, பொய் … Read more

விஐபி கட்சிக்கு பின்னடைவு: ஒன்றில் கூட வெற்றியில்லை

புதுடெல்லி: பிஹார் தேர்தலில் போட்டியிட்ட இடங்களில் எல்லாம் விகாஷீல் இன்சான் கட்சி (விஐபி) கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஓர் இடத்தில் கூட அக்கட்சியால் வெற்றிபெற முடியவில்லை. தேர்தலில் விஐபி கட்சி 12 இடங்களில் வேட்பாளரை நிறுத்தி களம் கண்டது. மகாகத்பந்தன் கூட்டணி வெற்றி பெற்றால் விஐபி கட்சியின் நிறுவனரான முகேஷ் சாஹ்னிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று தகவலும் வெளியானது. Source link

‘கிங்’ தலைவர் Vs ‘சேகர’மான மாண்புமிகு | உள்குத்து உளவாளி

ஆலயக் கட்சியில் சென்னை மண்டலத்தைக் கவனிக்கும் பொறுப்பில் இருக்கும் ‘கிங்’ தலைவருக்கும் ‘சேகர’மான மாண்புமிகுவுக்கும் இடையில் வெடித்த மோதல் உரசிக்கிட்டே போகுதாம். முதன்மையானவரே தலையிட்டு சாந்தப் படுத்தியும் இருவரும் அதிகார அங்குசத்தை இன்னும் கீழே வைக்க வில்லையாம். சமீபத்தில், தேர்தல் பணிகள் தொடர்பாக தலைநகர் மண்டலக் கூட்டத்தைக் கூட்டினாராம் ‘கிங்’ தலைவர். அனைத்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தை, மாவட்டப் பொறுப்பிலும் இருக்கும் ‘சேகர’மானவர் மட்டும், இவரெல்லாம் கூட்டம் போட்டு நான் … Read more

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி: கார்கேவுடன் ராகுல் காந்தி ஆலோசனை

புதுடெல்லி: பிஹார் தேர்​தல் தோல்வி தொடர்​பாக டெல்​லி​யில் நேற்று காங்​கிரஸ் தலைவர் கார்கேவுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்​கிரஸ் உள்​ளிட்ட கட்​சிகள் அடங்​கிய மெகா கூட்​டணி படு​தோல்வி அடைந்​திருக்​கிறது. குறிப்​பாக 61 தொகு​தி​களில் போட்​டி​யிட்ட காங்​கிரஸ் 6 தொகு​தி​களில் மட்​டுமே வெற்றி பெற்​றிருக்​கிறது. Source link

தமிழகம் உள்ளிட்ட 12 மாநில எஸ்ஐஆர் பணிகள்: மாநில நிர்வாகிகளுடன் கார்கே இன்று ஆலோசனை

சென்னை: தமிழகம் உள்​ளிட்ட 12 மாநிலங்​களில் நடை​பெற்று வரும் எஸ்​ஐஆர் பணி​கள் தொடர்​பாக மாநில நிர்​வாகி​களு​டன் அகில இந்​திய காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே டெல்​லி​யில் இன்று ஆலோ​சனை நடத்​துகிறார். பிஹார் தேர்​தலில் காங்​கிரஸ் கூட்​டணி படு​தோல்வி அடைந்​துள்​ளது. இந்​நிலை​யில், நாடு முழு​வதும் காங்​கிரஸின் செயல்​பாடு மற்​றும் 2026-ல் சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெற உள்ள தமிழகம், புதுச்​சேரி​யில் தேர்​தல் தயார் நிலை குறித்து காங்​கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே தலை​மை​யில், பொதுச்​செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால், தமிழக பொறுப்​பாளர் … Read more

சாதி அரசியலை பிஹார் நிராகரித்தது: பிரதமர் நரேந்திர மோடி கருத்து

சூரத்: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் சாதி அரசி​யலை மக்​கள் நிராகரித்து உள்​ளனர். இந்த தேர்​தலில் தோல்​வியை தழு​விய​வர்​கள் பேர​திர்ச்​சி​யில் மூழ்கி உள்​ளனர் என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார். பிர்சா முண்​டா​வின் 150-வது பிறந்த தினம் மற்​றும் பழங்​குடி​யினர் கவுரவ தினம் நேற்று கொண்​டாடப்​பட்​டது. இதையொட்டி குஜ​ராத்​தின் நர்​மதா மாவட்​டம், டெடி​யாபடா பகு​தி​யில் உள்ள தேவ​மோக்ரா தேவி கோயி​லில் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று வழிபட்​டார். இந்த கோயில் பழங்​குடி மக்​களின் கோயில் ஆகும். Source link