தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு ரூ.16,800 வரை போனஸ்

சென்னை: தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு ரூ.16,800 வரை தீபாவளி போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரியம் பிறப்பித்த உத்தரவின் விவரம்: அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழக மின்வாரியத்தில் உள்ள நிறுவனங்கள் மின் பகிர்மான, உற்பத்தி, பசுமை எரிசக்தி, தொடரைப்பு கழகம் ஆகியவற்றில் பணியாற்றும் முழுநேர ஊழியர்களுக்கும், பயிற்சியில் உள்ள கள உதவியாளர், கணக்கீட்டாளர், கேங்மேன், அலுவலக … Read more

தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் அசுத்தமான கழிவறை பற்றிய தகவலுக்கு ரூ.1,000 பரிசு!

புதுடெல்லி: “தேசிய நெடுஞ்​சாலை சுங்​கச்​சாவடிகளில் சுத்​தமில்​லாத கழிப்​பறை பற்றி தகவல் அளித்​தால், ரூ.1,000 அன்​பளிப்பு வழங்​கப்​படும்” என்று மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது. தேசிய நெடுஞ்​சாலை துறை நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தேசிய நெடுஞ்​சாலை துறை தூய்மை பிரச்​சா​ரத்தை தீவிர​மாக நடத்தி வரு​கிறது. அதன் ஒரு கட்​ட​மாக, நாடு முழு​வதும் தேசிய நெடுஞ்​சாலைகளில் வாக​னங்​களில் செல்​வோர், சுங்​கச் சாவடிகளில் உள்ள கழிப்​பறை​கள் சுத்​தமில்​லாமல் இருந்​தால் அதுபற்றி தகவல் அளிக்​கலாம். இதற்கு பரி​சாக அவர்​களு​டைய வாக​னங்​களின் ‘பாஸ்​டேக்​’கில் ரூ.1,000 … Read more

கரூர் நெரிசல் உயிரிழப்புக்கு சட்டப்பேரவையில் இரங்கல்

சென்னை: தமிழக சட்டப்பேரவை மழைக்கால கூட்டம் நேற்று தொடங்கிய நிலையில், மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள், கரூர் நிகழ்வில் மறைந்தோர், பிரபலங்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேரவை ஒத்திவைக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவை விதிகள்படி, பேரவையின் கூட்டம் 6 மாத இடைவெளியில் மீண்டும் கூட்டப்பட வேண்டும். அந்த அடிப்படையில், மார்ச் 14-ம் தேதி தொடங்கி நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடர், ஏப்.29-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடர், நேற்று தொடங்கியது. 4 நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தொடரின் முதல் நாளான … Read more

ம.பி.யில் குழந்தைகளுக்கு பரிந்துரை செய்த ஒவ்வொரு இருமல் மருந்து பாட்டிலுக்கும் 10% கமிஷன் பெற்ற மருத்துவர்

போபால்: மத்​திய பிரதேசத்​தில் கோல்​டிரிப் இரு​மல் மருந்தை மருத்துவர்​கள் பரிந்​துரைத்​த​தில் 23 குழந்​தைகள் உயி​ரிழந்தனர். இதனை பரிந்​துரை செய்தவற்கு கமிஷ​னாக மருத்​து​வருக்கு பாட்​டிலுக்கு 10 சதவீத கமிஷன் வழங்​கப்​பட்​டது விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. இதுகுறித்து புல​னாய்வு அதிகாரி​கள் கூறிய​தாவது: மத்​திய பிரதேசத்​தில் குழந்​தைகளுக்கு தொடர்ச்​சி​யாக இரு​மல் மருந்தை பரிந்​துரை செய்​த​தில் 23 குழந்​தைகள் உயி​ரிழந்​தனர். இதுதொடர்​பாக நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் பாரசியா அரசு சுகா​தார மையத்​தில் பணிபுரி​யும் குழந்​தைகள் நல மருத்​து​வர் பிர​வீன் சோனி கைது செய்​யப்​பட்​டுள்​ளார். 4 வயதுக்​கும் … Read more

​கா​சா​வில் இருந்து பிணைக் கைதிகள் விடுவிப்பு: 738 நாட்களுக்குப் பிறகு ஒன்று சேர்ந்த இஸ்ரேல் தம்பதி

ஜெருசலேம்: ​கா​சா​வில் நீண்ட நாட்​களாக பிணைக் கை​தி​களாக வைக்​கப்​பட்​டிருந்​தவர்​கள் அண்​மை​யில் விடுவிக்​கப்​பட்​டனர். இதை தொடர்ந்து 738 நாட்​களுக்​குப் பிறகு இஸ்​ரேல் தம்​ப​தி​யினர் மீண்​டும் ஒன்று சேர்ந்​துள்​ளனர். இஸ்​ரேல் ராணுவம் – பாலஸ்​தீனத்​தின் காசா பகு​தியை ஆட்சி செய்த ஹமாஸ் குழு​வினர் இடையே கடந்த 2 ஆண்​டு​களாக போர் நடை​பெற்​றது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பின் முயற்​சி​யால் இரு தரப்​பினர் இடையே கடந்த 9-ம் தேதி அமைதி உடன்​பாடு ஏற்​பட்​டது. இதையடுத்து காசா​வில் 10-ம் தேதி போர் நிறுத்​தம் … Read more

கரூரில் தவெக தலைவர் விஜய் நேரில் ஆறுதல் தெரிவிக்கப் போவது எப்போது?

கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். எனினும், பல்வேறு காரணங்களால் விஜய்யின் கரூர் பயணம் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளது. கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பார்த்து ஆறுதல் கூற, விஜய் கரூர் வந்து மக்களை சந்திப்பதற்காக தவெக சார்பில், டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அதற்கு, கரூர் எஸ்.பி.யை சந்தித்து மனு அளிக்க அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை கரூரில் தனியார் மண்டபத்துக்கு … Read more

ராஜஸ்தானில் தீப்பிடித்து எரிந்த பேருந்து; 20 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்

ஜோத்பூர்: ராஜஸ்தானில் ஜெய்சால்மரிலிருந்து ஜோத்பூர் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜெய்சால்மரிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு ஜோத்பூர் நோக்கி புறப்பட்ட பேருந்து ஜெய்சால்மர் – ஜோத்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பேருந்தின் பின்பகுதியில் இருந்து புகை வெளியாகியுள்ளது. இதனை அறிந்த பேருந்து ஓட்டுனர் உடனடியாக பேருந்தை ஓரம்கட்டி நிறுத்த முயற்சித்துள்ளார். எனினும் கண்ணிமைக்கும் நேரத்தில் தீ பேருந்து முழுவதும் பரவியது. இதனைக் கண்ட பொதுமக்கள் பலரும் உடனடியாக … Read more

இதுவரை 75 தொகுதிகளில் மினி ஸ்டேடியம்: முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை: “எளியவர்களின் வெற்றிதான் நமது அரசின் வெற்றி. எத்தனையோ ஏழை வீரர்களின் கனவை விளையாட்டுத் துறை நனவாக்கி வருகிறது. எந்த மாநில அரசும் செய்யாத அளவுக்கு விளையாட்டு வீரர்களுக்கு உதவி செய்துள்ளோம்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நிறைவு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. அந்நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வு குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறும்போது, “தமிழகத்துக்கு பெருமை … Read more

‘கூச்சல் போட்டால் இன்னும் பலரை அழைத்து…’ – மே.வங்க மருத்துவ மாணவி பகிர்ந்த பகீர் வாக்குமூலம்!

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில், மருத்துவக் கல்லுாரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து அப்பெண் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேற்கு வங்கம், பச்சிம் வர்தமான் மாவட்டத்தில் மருத்துவக் கல்லுாரி மாணவியை கடத்திச் சென்று மர்ம நபர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளிக்கிழமை இரவு இவர், தன் ஆண் நண்பருடன் உணவருந்தி விட்டு, விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் , அந்த மாணவியின், ‘மொபைல் … Read more

கூகுள் ஏஐ மையம் அமைவது இந்தியாவுக்கு கிடைத்த வரப் பிரசாதம்: பிரேமலதா வாழ்த்து

சென்னை: கூகுள் நிறுவனம் தனது பிரம்மாண்டமான செயற்கை நுண்ணறிவு மையத்தை அமைத்திருப்பது இந்தியாவுக்கு கிடைத்த மிகப் பெரிய வரப் பிரசாதமாகும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஆந்திர மாநிலத்தில் கூகுள் நிறுவனம் தனது பிரம்மாண்டமான செயற்கை நுண்ணறிவு மையத்தை அமைத்திருப்பது இந்தியாவுக்கு கிடைத்த மிகப் பெரிய வரப் பிரசாதமாகும். இது இந்தியாவின் வளர்ச்சிக்கும், உலக அரங்கில் வல்லரசாக உருவெடுப்பதற்கும் ஒரு முக்கிய அடையாளமாக அமைகிறது. அமெரிக்காவைத் … Read more