தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 6453 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் 6453 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டு 3578 விவசாயிகளுக்கு ரூ. 26.48 கோடி வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் முதல் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் சேலம் ஆகிய நான்கு மாவட்டங்களில் கேழ்வரகு கொள்முதல் தொடர்ந்து செய்யப்படும் என தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பரவலாக்கப்பட்ட கொள்முதல் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் கேழ்வரகு கொள்முதல் திட்டம், கடந்த … Read more

‘நாட்டில் சைபர் மோசடி தடுப்பு பிரிவு இல்லாதது ஏன்?’ – பணத்தை இழந்த திரிணமூல் எம்.பி கேள்வி

புதுடெல்லி: திரிண​மூல் காங்​கிரஸ் எம்பி கல்​யாண் பானர்​ஜி​யின் வங்​கிக் கணக்​கில் இருந்து ரூ.57 லட்​சம் மோசடி செய்​யப்​பட்டது. தற்போது அந்த பணம் அவரது வங்கிக் கணக்கில் மீண்டும் பெறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, ‘நாட்டில் சைபர் மோசடி தடுப்பு பிரிவு ஏன் இல்லை?’ என நிதி அமைச்சகத்தை நோக்கி அவர் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் கூறியது: “மக்கள் பிரதிநிதியான நானே சைபர் மோசடியால் பாதிக்கப்பட்ட நிலையில் சாமானிய … Read more

பாகிஸ்தான் – ஆப்கன் பேச்சு தோல்வி: போருக்குத் தயார் என தலிபான் அரசு எச்சரிக்கை

காபூல்: துருக்கியின் இஸ்தான்புல் நகரில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை எட்டாத நிலையில், ‘போருக்கு தயார்’ என ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் அரசு தெரிவித்துள்ளது. “நட்பு நாடுகளான துருக்கியும், கத்தாரும் இணைந்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயன்றது. நவ.6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் மிகுந்த நம்பிக்கையுடன் ஆப்கன் தரப்பில் பங்கேற்றோம். இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் தீவிரமாக கவனம் செலுத்தும் என … Read more

சென்னையில் பிங்க் ஆட்டோவை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல்!

சென்னை: சென்னையில் பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகரில் பெண்கள், குழந்தைகள் தனியாக பாதுகாப்புடன் பயணம் செய்ய ஏதுவாக, பெண்களுக்கான உதவி எண் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட இளஞ்சிவப்பு (பிங்க்) ஆட்டோ சேவை அறிமுகம் செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ரூ.1 லட்சம் மானியம் மற்றும் வங்கி … Read more

பிஹார் தேர்தலில் வாக்குப் பதிவு அதிகரிப்பது எதற்கான அறிகுறி? – ஒரு விரைவுப் பார்வை

பிஹாரில் 243 சட்டப்பேரவை தொகுதிகளில் முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 1,314 வேட்பாளர்கள் களம் கண்டன இந்தத் தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவானது என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு பிஹார் தேர்தல் களத்தின் ஹாட் டாப்பிக் ஆகியுள்ளது. 2020 பிஹார் சட்டப்பேரவை பொதுத் தேர்தலுடன் ஒப்பிடும்போது தற்போதைய வாக்குப்பதிவு 7.79% அதிகரித்துள்ளது. 2024 மக்களவை பொதுத் தேர்தலுடன் ஒப்பிடும்போது 8.8% அதிகரித்துள்ளது. பொதுவாகவே வாக்கு சதவீதம் அதிகரித்தால், அது ஆட்சிக்கு எதிரான … Read more

இனப்படுகொலை: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பித்த துருக்கி!

இஸ்தான்புல்: காசாவில் நடத்திய போருக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமைச்சர்கள் மற்றும் அவரது அரசாங்கத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கான கைது வாரன்ட்களை துருக்கி அரசு பிறப்பித்துள்ளது. காசாவில் திட்டமிட்டு இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவரது அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் செய்ததாக துருக்கி குற்றம் சாட்டியுள்ளது. இதனையடுத்து, காசாவில் நடத்திய போருக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமைச்சர்கள் மற்றும் அவரது அரசாங்கத்தில் … Read more

“திமுகவுக்கு சாதகமாக இருக்காது என்பதால் ‘எஸ்ஐஆர்’ தவறு என சொல்லக் கூடாது” – சரத்குமார்

மதுரை: “திமுகவுக்கு சாதகமாக இருக்காது என்பதால் எஸ்ஐஆர் சரிபார்ப்பது தவறு என சொல்லக் கூடாது” என பாஜக தேசியக்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார் தெரிவித்தார். சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு இன்று வருகை தந்த பாஜக தேசியக்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார் கூறியது: “கோவையில் நடந்த பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் காலில் சுட்டுப்பிடித்ததாக கூறியுள்ளனர். பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர்களை நீதிமன்றங்களில் நிரூபித்து தூக்குத் தண்டனை பெற்றுத்தர வேண்டும். அதிகபட்ச தண்டனை வழங்கினால்தான் … Read more

“தமிழ் இலக்கியம், கலாச்சாரத்தில் சமணத்தின் பங்களிப்பு உள்ளது” – சி.பி.ராதாகிருஷ்ணன்

புதுடெல்லி: தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தில் சமண மதத்தின் வரலாற்று முக்கியத்துவம் சார்ந்த பங்களிப்பு உள்ளதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற சமண மத ஆச்சார்யர் ஹன்ஸ்ரத்னா சூரிஷ்வர்ஜி மகாராஜ்-ன் எட்டாவது 180 உபவாச பர்ண விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், “உலகின் பழமையான மதங்களில் ஒன்றான சமண மதத்தின் போதனைகளான அஹிம்சை (வன்முறையின்மை), சத்தியம் (உண்மை), அபரிகிரஹா … Read more

ரஷ்ய எண்ணெய் தடையில் இருந்து ஹங்கேரிக்கு விலக்கு: ட்ரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கு விதிக்கப்பட்ட தடையில் இருந்து ஹங்கேரிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விலக்கு அளித்துள்ளார். அமெரிக்கா வந்துள்ள ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன், வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்கு விதிக்கப்பட்ட தடையில் இருந்து ஹங்கேரிக்கு விலக்கு அளிப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். இரண்டாவது முறையாக ட்ரம்ப் அதிபரான பிறகு அவரை, வெள்ளை மாளிகையில் விக்டர் ஓர்பன் சந்திப்பது இதுவே முதல்முறை. ட்ரம்ப்பின் … Read more

நவ.12-ல் டெல்டா உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் வரும் நவ.12-ம் தேதி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளையும் (நவ.9), நாளை மறுதினமும் … Read more