கரூர் சம்பவத்துக்கு பின் விஜய் அங்கிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டார்: உச்ச நீதிமன்றத்தில் தவெக வாதம்

புதுடெல்லி: “கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது பொது ஒழுங்கை நிலைநாட்டவே எனது கட்சிக்காரர் (விஜய்) அந்த இடத்தைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உதவ எங்கள் தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.” என உச்ச நீதிமன்றத்தில் தவெக தரப்பில் வாதிடப்பட்டது. கரூரில் தவெக தலைவர் விஜய் செப்.27-ல் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 2 வயது குழந்தை, பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் … Read more

கர்நாடகாவில் மகளிருக்கு ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு

பெங்​களூரு: கர்​நாடக தொழிலா​ளர் நலத்​துறை அமைச்​சர் சந்​தோஷ் லாட் பெங்​களூரு​வில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கர்​நாட​கா​வில் கடந்த 2024-ம் ஆண்​டில் மகளிருக்கு ஆண்​டுக்கு 6 நாட்​கள் மாத​வி​டாய் விடு​முறை​ என்ற கொள்கை திட்​டம் அறி​முகப்​படுத்​தப்​பட்​டது. இதனை 12 நாட்​களாக அதி​கரிக்க வேண்​டும் என கோரிக்கை வந்​தது. அதன் அடிப்​படை​யில் ஆண்​டுக்கு 12 நாள்​கள் ஊதி​யத்​துடன் கூடிய விடுப்பு வழங்​கும் வகை​யில் இந்​தக் கொள்கை திட்​டம் மேம்​படுத்​தப்​பட்​டுள்​ளது. முதல்​வர் சித்​த​ராமையா தலை​மை​யில் வியாழக்​கிழமை நட‌ந்த அமைச்​சர​வைக் கூட்​டத்​தில் இந்த … Read more

2025 அமைதி நோபல் பரிசு வெனிசுலாவின் ‘இரும்புப் பெண்மணி’ மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிப்பு

நார்வே: 2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர தொடர்ந்து போராடிய, வெனிசுலாவின் ‘இரும்புப் பெண்மணி’ என்று அழைக்கப்படும் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்க வேண்டும், அதற்கு எல்லாத் தகுதியையும் பெற்றுவிட்டேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறிவந்த நிலையில், அவருக்கு அந்த விருது கிடைக்கவிலை. “2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுலா மக்களுக்கு ஜனநாயக உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காக அயராது போராடி, … Read more

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வை ஒத்திவைக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை தள்ளி வைக்கும் படி உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. தமிழகத்தில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு அக்டோபர் 12ஆம் தேதி போட்டி தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. புதிய பாடத்திட்டங்கள் அடிப்படையில் இந்தத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாலும், இத்தேர்வு நவம்பர் மாதம் நடத்தப்படும் என்று உத்தேசமாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், … Read more

நிதிஷ்குமார் கட்சியின் முக்கிய தலைவர் தேஜஸ்வி கட்சியில் இணைகிறார்: பிஹாரில் பரபரப்பு

பாட்னா: பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்.பி சந்தோஷ் குஷ்வாஹா, எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில் இணையவுள்ளார். இதன் காரணமாக ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பிஹாரின் பூர்னியா தொகுதியில் இரண்டு முறை எம்.பி.யாக இருந்த சந்தோஷ் குஷ்வாஹா ஆர்ஜேடி கட்சியில் இணையவுள்ளார். அவருடன் தற்போதைய பங்கா தொகுதி ஜேடியு எம்.பி கிரிதாரி யாதவின் மகன் சாணக்ய பிரகாஷ் ரஞ்சன் மற்றும் முன்னாள் ஜஹானாபாத் தொகுதி எம்.பி … Read more

பிலிப்பைன்ஸில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு வாபஸ்!

மனிலா: தெற்கு பிலிப்பைன்ஸின் மின்தனோவோவில் இன்று 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, ‘அழிவுகரமான சுனாமி’ எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்தச் சூழலில், தற்போது பிலிப்பைன்ஸ், பலாவ் மற்றும் இந்தோனேசியாவுக்கான சுனாமி எச்சரிக்கையை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் (PTWC) நீக்கியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் இனி சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸின் மின்தனோவோ பகுதியில் 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் நிலநடுக்கவியல் நிறுவனம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கம் … Read more

அடக்கி வாசிக்கும் ‘உடன்பிறவா’ சகோதரர்கள் | உள்குத்து உளவாளி

கட்சியின் கீழ்மட்டத்தில் நடக்கும் உள்ளடிகள் அவ்வளவாக தலைமைக் கழகங்களை எட்டிவிடாது. அதனால் மாவட்டச் செயலாளர்கள், மாண்புமிகுக்களால் பாதிக்கப்பட்டுக் கிடப்பவர்கள் ‘என்னத்த சொல்ல… எங்க போய்ச் சொல்ல’ என்று மனக்குமுறலைக் கொட்டி பரிகாரம் தேட வழிதெரியாமல் உட்கார்ந்திருப்பார்கள். அப்படி இருப்பவர்களை ஆறுதல்படுத்துவதற்காகவே ‘கழக’ கட்சி தரப்பில் மாவட்ட வாரியாக, ‘உடன்பிறவா’ சகோதரர்களை அழைத்துப் பேசிக் கொண்டிருக்கிறார் தலைவர். இதுவரை சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட தொகுதிகளைச் சார்ந்த சகோக்களிடம் ஆராய்ச்சி மணி கட்டாத குறையாக ஆதங்கங்களைக் கேட்டு குறித்திருக்கிறாராம் தலைவர். … Read more

ம.பி.யில் 10-ம் வகுப்பு தகுதி கொண்ட காவலர் தேர்வுக்கு 12,000 பொறியாளர்கள், 50 முனைவர்கள் விண்ணப்பம்!

புதுடெல்லி: மத்தியப் பிரதேச மாநிலத்தின் காவலர்கள் பணிக்கானத் தேர்வு அக்டோபர் 30-ல் நடைபெறுகிறது. 10-ம் வகுப்பு தகுதி கொண்ட பணிக்கு 12,000 பொறியாளர்கள், 50 முனைவர் பட்டம் பெற்றவர்கள் உள்ளிட்டோர் விண்ணப்பித்துள்ளனர். மத்தியப் பிரதேச காவல்துறையில் காவலர்(கான்ஸ்டபிள்) ஆட்சேர்ப்பில் 7,500 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்காக, மபி மாநிலத்தின் சுமார் 9.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த காவலர் பணிக்கானக் குறைந்தபட்ச தகுதி உயர்நிலைப்பள்ளியின் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி ஆகும், ஆனால் விண்ணப்பதாரர்களில் 52,000 முதுகலை பட்டதாரிகள், 33,000 … Read more

அசைவ உணவு வழங்கியதால் தந்தை உயிரிழப்பு: கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் மீது நஷ்ட ஈடு கேட்டு மகன் வழக்கு

லாஸ் ஏஞ்சல்ஸ்: கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி கத்தார் ஏர்வேஸ் விமானம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து கொழும்புவுக்கு புறப்பட்டது. அதில், 85 வயதான அசோகா ஜெயவீரா என்பவர் பயணம் செய்தார். இவர் தெற்கு கலிபோர்னியாவில் இதயவியல் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து கொழும்பு செல்ல 15 மணி நேரமாகும். பயணத்தின் போது சைவ உணவு வழங்க வேண்டும் என்று டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே குறிப்பிட்டுள்ளார். ஆனால், … Read more

69 சதவீத இடஒதுக்கீடு முறையாக செயல்படுத்தப்பட்டதா? – விசாரணை ஆணையம் அமைக்க அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: 69 சதவீத இடஒதுக்​கீடு முறை​யாக செயல்​படுத்​தப்​பட்​டதா என்​பது குறித்து நீதிபதி தலை​மை​யில் ஆணை​யம் அமைத்து விசா​ரிக்க வேண்​டும்’ என பாமக தலை​வர் அன்​புமணி வலி​யுறுத்​தி​யுள்​ளார். இதுகுறித்து, அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: 69 சதவீத இடஒதுக்​கீட்​டைப்பின்​பற்றி பணி​யாளர்​களைத் தேர்வு செய்​யும்​போது, முதலில் பொதுப்​போட்​டிப் பிரிவுக்​கான 31 சதவீத இடங்​கள் தகுதி அடிப்​படை​யில் நிரப்​பப்பட வேண்​டும். அதில் சாதி பார்க்​கக் கூடாது. அதன்​பின், பின்​னடைவுப் பணி​யிடங்​கள் ஏதேனும் இருந்​தால், அவை உரிய இடஒதுக்​கீட்​டுப் பிரி​வினரைக் கொண்டு நிரப்​பப்பட வேண்​டும். … Read more