வன்னியர் இடஒதுக்கீட்டை நிறைவேற்றும் அளவுக்கு சிறை நிரப்பும் போராட்டம் அமைய வேண்டும்: தொண்டர்களுக்கு அன்புமணி கடிதம் 

சென்னை: வன்​னியர் இடஒதுக்​கீட்டு சட்​டத்தை நிறைவேற்​றும் அளவுக்​கு டிச.17-ம் தேதி சிறை நிரப்​பும் போராட்​டம் அமைய வேண்​டும் என்று பாமக தொண்​டர்​களுக்கு அக்​கட்​சி​யின் தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக நேற்று பாமக தலை​வர் அன்​புமணி தொண்​டர்​களுக்கு எழு​தி​யுள்ள கடிதம்: நமக்கே உரித்​தான கற்​களும், முட்​களும் நிறைந்த சமூகநீ​தியை நோக்​கிய இன்​னொரு போராட்​டப் பாதை​யில் பயணத்தை தொடங்​கி​யிருக்​கிறோம். தமிழகத்​தில் கல்வி மற்​றும் வேலை​வாய்ப்​பில் வன்​னியர்​களுக்கு குறைந்​தது 15 சதவீத இட ஒதுக்​கீடு வழங்​கப்படவேண்​டும் என்ற கோரிக்​கையை வலி​யுறுத்தி வரும் … Read more

அவதூறாக பேசி காலணியை கழற்றி அடிக்க முயற்சி: தேஜஸ்வி மீது லாலு மகள் பகிரங்க குற்றச்சாட்டு

பாட்னா: ‘‘என்னை அவதூறாக பேசி, காலணியை கழற்றி அடிக்க முயற்சி செய்​தனர்’’ என்று லாலு மகள் ரோகிணி ஆச்​சார்யா தனது சகோ​தரர் தேஜஸ்வி மீது மறை​மு​மாக குற்​றம் சாட்டி உள்​ளார். பிஹார் மாநிலத்​தில் ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்​ஜேடி) தலை​வர் லாலு பிர​சாத், ராப்ரி தம்​ப​தி​யருக்கு மிசா பார​தி, ரோகிணி ஆச்​சார்​யா, சாந்தாசிங், ராகிணி யாதவ், ஹேமா யாதவ், அனுஷ்கா யாதவ், தேஜ்பிர​தாப் யாதவ், ராஜலட்​சுமி சிங் யாதவ், தேஜஸ்வி யாதவ் என 9 பிள்​ளை​கள் உள்​ளனர். … Read more

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை

சென்னை: வங்​கக் கடலில் நில​வும் காற்​றழுத்த தாழ்வு பகுதி காரண​மாக சென்னை உள்​ளிட்ட 7 மாவட்​டங்​களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், 15 மாவட்​டங்​களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: இலங்கை கடலோரப் பகு​தி​களுக்கு அப்​பால், தென்​மேற்கு வங்​கக் கடல் பகு​தி​களில் காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி நில​வு​கிறது. இது வடமேற்கு திசை​யில் மெது​வாக நகர்ந்து செல்​லக் கூடும். … Read more

மருத்துவர் உமர் நபியின் கூட்டாளி டெல்லியில் கைது: வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ20 கார் வாங்கி கொடுத்தவர்

புதுடெல்லி: டெல்லி குண்​டு​வெடிப்​பின் முக்​கிய குற்​ற​வாளி அமீர் ரஷித் அலி கைது செய்​யப்​பட்டு உள்​ளார். இவர், குண்​டு​வெடிப்​புக்கு பயன்​படுத்​தப்​பட்ட காரின் உரிமை​யாளர் ஆவார். கடந்த 10-ம் தேதி டெல்​லி​யில் வெடிபொருள் நிரப்​பப்​பட்ட கார் வெடித்​துச் சிதறியது. இதில் 13 பேர் உயி​ரிழந்​தனர். காஷ்மீரின் புல்​வா​மாவை சேர்ந்த மருத்​து​வர் உமர் நபி, கார் குண்டு தாக்​குதலை நடத்​தி​யிருப்​பது உறுதி செய்​யப்​பட்டு உள்​ளது. இந்த வழக்கை தற்​போது தேசிய புல​னாய்வு அமைப்பு (என்​ஐஏ) விசா​ரித்து வரு​கிறது. என்ஐஏ நேற்று வெளி​யிட்ட … Read more

பூர்த்தி செய்த எஸ்ஐஆர் படிவங்களை சேகரிக்கும் கட்சி முகவர்கள் உறுதி அளிக்க வேண்டும்: அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தல் 

சென்னை: பூர்த்தி செய்த எஸ்​ஐஆர் படிவங்​களை சேகரிக்​கும் அரசி​யல் கட்​சிகளின் வாக்​குச்​சாவடி முகவர்​கள், அப்​படிவங்​கள் வாக்​காளர் பட்​டியலுடன் சரி​பார்க்​கப்​பட்​டது என உறு​தி​ மொழி அளிக்க வேண்​டும் என்று தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் அறி​வுறுத்​தி​யுள்​ளார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​திய தேர்​தல் ஆணைய உத்​தர​வின்​படி தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் தீவிர திருத்த நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்றன. இதன் ஒருபகு​தி​யாக தமிழகத்​தில் உள்ள அனைத்து சட்​டப்​பேரவை தொகு​தி​களி​லும் பிஎல்​ஓ-க்​கள் எஸ்​ஐஆர் படிவங்​களை வாக்​காளர்​களுக்கு … Read more

பிஹாரில் 25 அமைச்சர்களில் 24 பேர் மீண்டும் அமோக வெற்றி

பாட்னா: பிஹார் தேர்தலில் போட்டியிட்ட 25 அமைச்சர்களில் 24 பேர் வெற்றி பெற்று தொகுதியை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். பாஜகவைச் சேர்ந்த துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய்குமார் சின்ஹா ஆகியோர் முறையே தாராப்பூர், லக்கிசராய் தொகுதிகளில் வெற்றி கண்டனர். தற்போது முதல்வராக உள்ள நிதிஷ் குமார், மேலவை உறுப்பினராக(எம்எல்சி) இருக்கிறார். அதனால் அவர் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. அதேபோல் பாஜகவைச் சேர்ந்த மேலும் 15 அமைச்சர்கள் வெற்றி பெற்றனர். வேளாண் அமைச்சர் பிரேம்குமார், கயா தொகுதியிலிருந்து … Read more

விஜய் மக்கள் சந்திப்பு விரைவில் நடைபெறும்: தவெக துணை பொதுச் செயலாளர் தகவல்

திருச்சி: “விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணம் விரைவில் தொடங்க உள்ளது. அனைத்து அணிகளையும் வலுப்படுத்தி, வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி மக்கள் சந்திப்பு நடக்கும்” என்று தவெக துணை பொதுச் செயலாளர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த நவ.4 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி (எஸ்ஐஆர்) நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருவதாக திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வாக்காளர் பட்டியல் … Read more

அரசியலில் ஏற்ற இறக்கம் இயல்புதான்: ஆர்ஜேடி தகவல்

பாட்னா: தேர்தல் தோல்வியால் வருத்தம் இல்லை என்றும் அரசியலில் ஏற்ற இறக்கம் தவிர்க்க முடியாதவை என்றும் ஆர்ஜேடி எக்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2020 தேர்தலில் 75 இடங்களில் … Read more

எஸ்ஐஆர் படிவங்கள் பெறுவதில் உள்ள சிக்கலை சரி செய்ய வலியுறுத்தல்!

மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், வாக்காளர் படிவங்கள் பெறுவதில் உள்ள சிக்கல்களை சரி செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் பணிகளை துவங்கி உள்ளது. தற்போது அனைத்துப் பகுதிகளிலும் வாக்காளர்களுக்கு படிவம் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாநகரின் பல்வேறு இடங்களிலும் படிவங்கள் முழுமையாக சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. திருப்பூர் சுண்டமேட்டை சேர்ந்த வடிவேல் என்பவர் கூறும்போது, “திருப்பூரில் தொழிலாளர்கள் பகல் நேரங்களில் வேலைக்கு சென்றுவிடுகின்றனர். … Read more

டெல்லி குண்டு வெடிப்​பு: 4 மருத்துவர்களின் அங்கீகாரம் ரத்து

புதுடெல்லி: டெல்லி குண்டு வெடிப்​புக்கு பின்​னணி​யில் இருக்​கும் 4 மருத்​து​வர்​களின் அங்​கீ​காரத்தை தேசிய மருத்​துவ ஆணை​யம் (என்எம்​சி) ரத்து செய்​துள்​ளது. இது தொடர்​பாக மருத்​து​வர்​கள் முசாபர் அகமது, ஆதில் அகமது ராதர், முஜம்மில் ஷகீல், ஷாஹீன் சயீது ஆகியோ​ருக்கு ஐஎம்​ஆர், தேசிய மருத்​து​வப் பதி​வாளர் (என்​எம்​ஆர்) ஆகியோர் வழங்​கிய அங்​கீ​காரத்தை எம்​எம்சி உடனடி​யாக ரத்து செய்து நோட்​டீஸ் பிறப்​பித்​துள்​ளது.இந்த மருத்​து​வர்​கள் இந்​தி​யா​வின் எந்​தப் பகு​தி​யிலும் மருத்​து​வ​ராகப் பணி​யாற்ற முடி​யாது என்று அதில் கூறப்​பட்​டுள்​ளது. Source link