‘பகுத்தறிவால் தான் தமிழகம் இந்தியாவிலேயே சிறந்து விளங்குகிறது’ – உதயநிதி பெருமிதம்!

காரைக்குடி: பகுத்தறிவால் தான் தமிழகம் இந்தியாவிலேயே சிறந்து விளங்குகிறது என தமிழக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா மாதிரி பள்ளி வளாகத்தில் பிளஸ் 1 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்குதல், சிறந்த பள்ளிகளுக்கு விருதுகள் வழங்குதல், குழந்தைகள் தினம் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி வரவேற்றார். இதனையடுத்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: … Read more

பிஹாரில் அமோக வெற்றி: 243-ல் 202 தொகுதிகளை கைப்பற்றியது தேசிய ஜனநாயக கூட்டணி – முழு விவரம்

​பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மொத்​தம் உள்ள 243 தொகு​தி​களில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி 202 இடங்​களைக் கைப்​பற்றி அமோக வெற்றி பெற்​றுள்​ளது. மெகா கூட்​ட​ணிக்கு 35 இடங்​கள் மட்​டுமே கிடைத்​தன. பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் கடந்த 6, 11 ஆகிய தேதி​களில் 2 கட்​ட​மாக நடை​பெற்​றது. வாக்கு எண்​ணிக்கை நேற்று நடை​பெற்​று, முடிவு​கள் அறிவிக்​கப்​பட்​டன. பிஹாரில் 243 தொகு​தி​கள் உள்​ளன. தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் பாஜக 101, ஐக்​கிய ஜனதா தளம் 101, சிராக் … Read more

“போடி தொகுதியை கைப்பற்ற நினைக்கும் முதல்வரின் கனவு பலிக்காது” – ஓபிஎஸ்

மதுரை: போடி சட்டமன்ற தொகுதியை திமுக கைப்பற்ற வேண்டும் என்ற முதல்வரின் கனவு பலிக்காது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று மதியம் மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “பிஹார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளே வெற்றி பெறும் என ஏற்கெனவே பல்வேறு கருத்து கணிப்புகளும் கணித்திருந்தன. தற்போது அது நடந்திருக்கிறது. மேகேதாட்டு … Read more

“அடுத்து மேற்கு வங்கத்திலும் காட்டாட்சியை அகற்றுவோம்” – பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் நடக்கும் காட்டாட்சியை பாஜக வேரோடு அகற்றும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் 200+ தொகுதிகளை வசப்படுத்திய ஐக்கிய ஜனதா தளம் – பாஜக இணைந்த என்டிஏ மகத்தான வெற்றியுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. பெரும்பான்மைக்கு 122 இடங்களின் வெற்றி தேவை எனும் நிலையில், என்டிஏ பதிவு செய்திருப்பது வரலாற்று வெற்றியாக கருதப்படுகிறது. அதேவேளையில், 35 இடங்களை வெல்லவே திக்குமுக்காடிய ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸின் மகா கூட்டணி … Read more

மேகேதாட்டு அணை விவகாரத்துக்கு தமிழக முதல்வர் பொறுப்பேற்க வேண்டும்: பி.ஆர்.பாண்டியன்

கோவை: மேகேதாட்டு அணை விவகாரத்துக்கு தமிழக முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் என விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார். தென் இந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், வரும் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 3 நாள் மாநாடு கோவை கொடிசியா அரங்கில் நடைபெறுகிறது. முதல் நாள் நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்று, மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இந்நிலையில், இம்மாநாடு தொடர்பாக வரவேற்பு குழுவின் கூட்டம் கோவை ரயில் நிலையம் சாலையில் உள்ள தனியார் … Read more

பலரது வெற்றிக்கு வியூகம் வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோரின் கட்சி பிஹாரில் படுதோல்வி!

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் ஓர் இடத்தைக் கூட வெல்லவில்லை. தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட போதிலும் பிரசாந்த் கிஷோரின் புதிய கட்சி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி (ஜேஎஸ்பி) பிஹார் தேர்தலில் பெரிய தாக்கத்தை உருவாக்கவில்லை. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இரண்டு தொகுதிகளில் முன்னிலை வகித்த ஜன் சுராஜ், அதன் பின்னர் பூஜ்ஜிய நிலைக்கு சென்றுவிட்டது. 243 உறுப்பினர்களைக் … Read more

தேசிய அளவிலான பேரிடர் மீட்பு போட்டியில் தமிழக காவல் துறை முதலிடம்

சென்னை: தீவிரவாத தாக்குதலின்போது பொதுமக்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என நடத்தப்பட்ட தேசிய அளவிலான பேரிடர் மீட்பு போட்டியில் தமிழக காவல் துறை முதலிடம் பிடித்தது. தமிழக காவல் துறையில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 13-ம் அணியானது தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்பு குழுவாக செயல்படுகிறது. இந்த அணியானது கடந்த 10 முதல் 12-ம் தேதி வரை உத்திரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடைபெற்ற 2025-ம் ஆண்டுக்கான தேசிய அளவிலான பேரிடர் மீட்பு போட்டியில் முதல் இடத்தை … Read more

பிஹாரில் 5 தொகுதிகளில் வென்றது ஓவைசி கட்சி: சீமாஞ்சல் பகுதியில் ஆர்ஜேடி வாஷ் அவுட்!

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், 25 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளில் வென்று கவனத்தை ஈர்த்துள்ளது. சீமாஞ்சல் பகுதியில் ஓர் இடத்தில் ஆர்ஜேடி கட்சி வெல்லாதது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. பிஹாரில் இஸ்லாமிய வாக்குகள் உள்ள தொகுதிகளில் ஓவைசியின் கட்சிக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. இதன் காரணமாக 2020-ஆம் ஆண்டில் சீமாஞ்சல் பகுதியில் ஐந்து இடங்களை அக்கட்சி வென்றிருந்தது. அதனைத் தொடர்ந்து 2025 பிஹார் சட்டப்பேரவை தேர்தலிலும் … Read more

இந்தியாவில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இதை ப்ரீமியம் மாடல் போனாக சந்தையில் வெளியிட்டுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013-ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்போது இந்தியாவில் ஒன்பிளஸ் 15 போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் டிஸ்பிளே, ப்ராசஸர் உள்ளிட்டவை ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது. மல்டி … Read more

கரூர் நெரிசல் வழக்கு: திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றம்

திருச்சி: கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த வழக்கு, கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஒரு காரை கரூர் நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் சிபிஐ அதிகாரிகள் நவ.12-ம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சார கூட்டம் கடந்த செப்.27-ம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்றது. அப்போது … Read more