கரூர் நெரிசல் வழக்கில் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகள் விடுவிப்பு: நீதிமன்றம் உத்தரவு

கரூர்: தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு விசாரணை சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டதால் தவெக நிர்வாகிகளுக்கு காவல் நீட்டிப்பு வழங்க மறுத்து கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் அவர்களை விடுவித்து உத்தரவிட்டார். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27ம் தேதி நடந்த தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக கரூர் நகர போலீஸார் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்ஸி … Read more

ஐபிஎஸ் அதி​காரி பூரண் குமார் குடும்​பத்​தினருக்கு ராகுல் ஆறு​தல்

புதுடெல்லி: ஹரி​யானா ஐபிஎஸ் அதிகாரியான பூரண் குமார் கடந்த 7-ம் தேதி தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி அம்னீத் பி.குமார், மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். பட்டியல் வகுப்பை சேர்ந்த தனக்கு எதிராக மூத்த அதிகாரிகள் 10 பேர் சாதியப் பாகுபாடு காட்டியதாகவும் மனரீதியாக துன்புறுத்தியதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று காலை 11 மணியளவில் சண்டிகரில் உள்ள பூரண் … Read more

மதுரை மேயர் இந்திராணி ராஜினாமா – சொத்து வரி முறைகேடு விவகாரமும் பின்னணியும்

மதுரை: சொத்து வரி முறைகேடு புகார் எதிரொலியால், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, திமுக தலைமை அறிவுறுத்தல்படி இன்று (அக்.15) தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய மேயரை தேர்வு செய்யும் மாமன்ற அவசர கூட்டம் துணை மேயர் நாகராஜன் தலைமையில் வரும் 17-ம் தேதி அவசரமாக நடக்கிறது. மதுரை மாநகராட்சியில் தனிப்பெரும் கட்சியாக 67 வார்டுகளை கைப்பற்றிய திமுக சார்பில் 8-வது மேயராக இந்திராணி கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 4-ம் தேதி பொறுப்பேற்றார். இவரது … Read more

மகா​ராஷ்டிர சாலை பள்ளத்தில் உயிரிழந்தால் ரூ. 6 லட்சம் இழப்பீடு

மும்பை: மகாராஷ்டிர மாநிலம், மும்பை சாலைகளின் பரி​தாப நிலை மற்​றும் சாலை பள்​ளங்​களால் ஏற்​படும் உயி​ரிழப்​பு​கள் குறித்து மும்பை உயர் நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து விசா​ரணை நடத்​தி​யது. இந்த வழக்​கில் நீதிப​தி​கள் ரேவதி மோஹிதே தேரே, சந்​தேஷ் பாட்​டீல் ஆகியோர் அடங்​கிய அமர்வு நேற்று தீர்ப்பு வழங்​கியது. இந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: குடிமக்கள் நல்ல சாலைகளுக்கு உரிமை உடையவர்கள். சாலை பள்ளங்கள் அல்லது திறந்தவெளி சாக்கடைகளால் உயிரிழப்பு ஏற்பட்டால், இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு ரூ.6 லட்சமும் காயம் … Read more

“ஓர் அதிகாரி மீது கூட அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?” – கரூர் விவகாரத்தில் அண்ணாமலை கேள்வி

கோவை: கரூர் சம்பவம் உள்ளிட்ட திமுக அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் 2026-ம் ஆண்டு மக்கள் மன்றத்தில் நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புவதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் வரதராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் தந்தையை இழந்து வாடும் பெண் குழந்தைகளுக்கு, திருமதி சரோஜினி அம்மாள் நினைவு பெண் குழந்தை கல்வி நிதி வழங்கும் நிழக்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக … Read more

புரன் குமார் ஐபிஎஸ் தற்கொலை வழக்கு… தேசமே திரும்பிப் பார்க்க காரணம் என்ன?

தற்கொலைகள் பிரபலங்கள் அல்லது அதிகார வட்டத்தில் நடக்கும்போது அது பேசுபொருளாவது ஒன்றும் புதிதல்ல. ஆனால், அப்படியான ஓர் அதிகார வட்ட தற்கொலை வழக்கில் அடுத்தடுத்து ஏற்படும் திடீர் திருப்பங்களும், அது அரசியல் வட்டத்தில் ஏற்படுத்தும் அதிர்வலைகளும், அதனால், அரசாங்கம் வரிந்து பேசும் சமரசங்களும், முக்கிய அரசியல் ஆளுமைகள் வரை எழும் சந்தேகக் குரல்களும், அதை தேசமே திரும்பிப் பார்க்க வைக்கும் வழக்காக மாற்றிவிடும் எனலாம். அதுதான் புரன் குமாரின் வழக்கிலும் நடந்திருக்கிறதோ எனுமளவுக்கு அதில் பல விஷயங்கள் … Read more

கரூர் நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நடிகர் சரத்குமார் ஆறுதல்

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் ஆறுதல் கூறினார். கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக பாஜக பிரமுகரான நடிகர் சரத்குமார் இன்று கரூருக்கு வந்தார். கூட்ட நெரிசலில் உயிரிழந்த கரூர் வேலுசாமிபுரத்தைச் சேர்ந்த சகோதரிகளான பழநியம்மாள், கோகிலாவின் வீட்டுக்குச் சென்ற சரத்குமார், சிறுமிகளின் … Read more

மாவோயிஸ்டுகளால் அதிகம் பாதித்த மாவட்டங்கள் 3 ஆக குறைந்தது: மத்திய அரசு

புதுடெல்லி: மாவோயிஸ்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட (most-affected) மாவட்டங்களின் எண்ணிக்கை 6ல் இருந்து 3 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலை மார்ச் 31, 2026-க்குள் முற்றிலுமாக ஒழிக்க அரசு உறுதிபூண்டுள்ளது. இதை நோக்கிய அரசின் செயல்பாடுகள், வெற்றிகரமாக உள்ளன. மாவோயிஸ்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதம் 12-ல் இருந்து 6 ஆக குறைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த எண்ணிக்கை … Read more

கரூர் சம்பவத்தை வைத்து கூட்டணி சேர்க்கலாம் என இபிஎஸ் கனவு காண்கிறார்: அமைச்சர் ரகுபதி

சென்னை: “கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை வைத்து அரசியல் செய்யலாம், கூட்டணி சேர்க்கலாம் என எடப்பாடி பழனிசாமி கனவு காண்கிறார். பொய்யான தகவலை பேசியுள்ளார் பொய்பாடி பழனிசாமி” என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சென்னையில் இது குறித்து அவர் செய்தியாளர்களிடத்தில் பேசும்போது: இன்றைக்கு எதுவுமே சாதிக்க முடியாத எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி என்கின்ற ஒற்றை அஜென்டாவுடன் இன்றைக்கு சட்டமன்றத்திற்கு வந்து, தோல்வி கண்டு, அதற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பொய்யான பல்வேறு செய்திகளை தந்திருக்கின்றார். … Read more

பிஹார் தேர்தல்: ரகோபூர் தொகுதியில் போட்டியிட தேஜஸ்வி யாதவ் வேட்புமனு தாக்கல்

பாட்னா: வைஷாலி மாவட்டத்தில் உள்ள ரகோபூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தேஜஸ்வி யாதவ் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, முன்னாள் முதல்வர்களும் அவரது பெற்றோருமான லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராப்ரி தேவி ஆகியோர் உடன் இருந்தனர். 243 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டுள்ள பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்டத் தேர்தலில் 121 தொகுதிகளிலும், இரண்டாம் கட்டத் தேர்தலில் 122 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளது. … Read more