கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கில் நவ.21-ம் தேதி தீர்ப்பு

சென்னை: கும்மிடிப்பூண்டி தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ சுதர்சனம், பவாரியா கொள்ளையர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை, சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம், நவ.21-ம் தேதிக்கு அறிவிக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அதிமுக எம்எல்ஏ-வாகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர் சுதர்சனம். கடந்த 2005-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு, பெரியபாளையம் அருகே தானாக்குளத்தில் உள்ள அவரது வீட்டின் கதவை உடைத்து புகுந்த 5 பேர் கும்பல், சுதர்சனத்தை துப்பாக்கியால் … Read more

பிஹாரில் நவ.20 புதிய அரசு பதவியேற்பு: பிரதமர் மோடி பங்கேற்பு – முதல்வர் யார்?

பாட்னா: பிஹாரில் புதிய அரசு நவம்பர் 20 ஆம் தேதி பாட்னாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் பதவியேற்க உள்ளது. இருப்பினும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் பத்தாவது முறையாக முதல்வராக பதவியேற்பாரா என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மட்டும் இன்னும் வெளியாகவில்லை. பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் புதிய அரசு அமைக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிஹார் … Read more

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

டாக்கா: கடந்த ஆண்டு மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களை ஒடுக்கியபோது ஏற்பட்ட வன்முறை மற்றும் உயிரிழப்பு குற்றங்களுக்காக வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களை அரசு தீவிரமாக ஒடுக்கியது. இதன் காரணமாக சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பதவி நீக்கம் செய்யப்பட்டு தப்பியோடிய ஷேக் ஹசீனா (78) இந்தியாவில் தஞ்சமடைந்தார். கடந்த ஆண்டு … Read more

பல ஆண்டு கனவு நனவாகிறது: மாதுளங்குப்பத்தில் பாலம் அமைக்க கட்டுமான பணிகள் தொடக்கம்

மாமல்லபுரம்: ​திருக்​கழுக்​குன்​றம் அடுத்த மாதுளங்​குப்​பம் பகு​திக்கு செல்​லும் சாலை​யில் உள்ள ஏரி கலங்​கல் பகு​தி​யில் ரூ.75 லட்​சம் மதிப்​பில் சிறிய அளவி​லான உயர்​மட்ட பாலம் அமைக்​கும் பணி​கள் தொடங்​கப்​பட்​டுள்​ள​தால் அப்​பகுதி வாசிகள் மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர். செங்​கல்​பட்டு மாவட்​டம், திருக்​கழுக்​குன்​றம் பேரூ​ராட்சி 4-வது வார்டு பகு​தி​யில் மாதுளங்​குப்​பம் கிராமம் அமைந்​துள்​ளது. இங்​கு, இருளர் மக்​கள் அதி​கள​வில் வசித்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில், அங்கு வசிக்​கும் மக்​கள் பணிக்கு செல்​வதற்கு ஏரிக்​கரை மீது அமைக்​கப்​பட்​டுள்ள சாலையை பயன்​படுத்​தி​தான் நகருக்​குள் வந்து செல்ல … Read more

டெல்லி கார் குண்டுவெடிப்பு ஒரு தற்கொலைப்படை தாக்குதல்: என்ஐஏ உறுதி

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு ஒரு தற்கொலைப் படைத் தாக்குதல் என்றும் இந்த சதியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி ஒருவரை கைது செய்திருப்பதாகவும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தெரிவித்துள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ம் தேதி கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில், 10 பேர் உயிரிழந்தனர், 32 பேர் காயமடைந்தனர். காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவரான உமர் முகமது நபி என்பவர் காரை ஓட்டிச் சென்று வெடிவிபத்தை நிகழ்த்தினார். இந்த … Read more

நவ.22-ல் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: நவ.22 ஆம் தேதி வங்கக் கடலில் மேலும் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும் உள் தமிழகத்தில் ஓரிரு … Read more

‘மேகேதாட்டு தீர்ப்பு எங்களுக்கு சாதகம்’ – கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் வரவேற்பு

பெங்களூரு: மேகேதாட்டு திட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் வரவேற்றார். மேலும், இது மாநிலத்துக்கு ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருக்கும் என்றும் கூறினார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த சிவகுமார், “மேகேதாட்டு தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்துள்ளது. இதற்காக வாதாடிய வழக்கறிஞர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். இதே விஷயம் தொடர்பாக நாளையும் ஒரு கூட்டம் உள்ளது. எதிர்காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி விவாதிக்க வேண்டும்” … Read more

‘முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி’ – வங்கதேச நீதிமன்றம் அறிவிப்பு

டாக்கா: வன்முறை வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை குற்றவாளி என அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் நடந்த போராட்டத்தின்போது நடந்த வன்முறை மற்றும் உயிரிழப்பு சம்பவங்களில் ஷேக் ஹசீனா குற்றவாளி என வங்கதேசத்தில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. தனது அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய சொந்த நாட்டு மக்களையே ஷேக் ஹசீனா கொல்ல உத்தரவிட்டது உறுதியானதாக நீதிபதி தெரிவித்தார். வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் … Read more

குண்டும் குழியுமான சாலை; சிக்னலும் இல்லை – போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் மண்ணூர்பேட்டை

சென்னை: தொழிற்​பேட்டை பகு​தி​யான மண்​ணூர் பேட்டை சாலை குண்​டும் குழி​யு​மாகவும், சிக்​னல் இல்​லாத​தா​லும் அவ்​வழி​யாக செல்​லும் வாகன ஓட்​டிகள் போக்​கு​வரத்து நெரிசலில் சிக்கி தவித்து வரு​கின்​றனர். சென்னை – திரு​வள்​ளூர் நெடுஞ்​சாலை (எம்​டிஹெச்​.​சாலை) மற்​றும் அம்​பத்​தூர் தொழிற்​பேட்​டைக்கு செல்​லும் இணைப்​புச் சாலைகள் இணை​யும் பகு​தி​யில் மண்​ணூர்​பேட்டை சந்​திப்பு அமைந்​துள்​ளது. அம்​பத்​தூர் தொழிற்​பேட்​டை, முகப்​பேர் போன்ற பகு​தி​களுக்கு செல்​லும் வாக​னங்​கள் மண்​ணூர்​பேட்டை வழி​யாகத் தான் தினந்​தோறும் சென்று வரு​கின்​றன. இந்​நிலை​யில் சமீப கால​மாக மண்​ணூர் பேட்டை சாலை குண்​டும் … Read more

பாஜக.வினருக்கு மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ஆயுதங்கள் அளிப்பதை நிறுத்த வேண்டும்: கல்​யாண் பானர்​ஜி பேச்சால் சர்ச்சை

கொல்கத்தா: ‘‘​பாஜக.​வினருக்கு ஆயுதங்​கள், வெடிப்​பொருட்​கள் வழங்​கு​வதை ஆளுநர் ஆனந்த போஸ் நிறுத்​திக் கொள்ள வேண்​டும்’’ என்று திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி எம்​.பி. கல்​யாண் பானர்​ஜி பேசி​யது பெரும் சர்ச்​சையை ஏற்​படுத்தி உள்​ளது. மேற்கு வங்க மாநிலத்​தில் திரிண​மூல் காங்​கிரஸ் சார்​பில் மம்தா பானர்ஜி முதல்​வ​ராக பொறுப்பு வகிக்​கிறார். இவரது கட்​சி​யின் எம்​.பி. கல்​யாண் பானர்​ஜி. அவ்​வப்​போது ஏதாவது கருத்​துகளை தெரி​வித்து சர்ச்​சை​யில் சிக்கி வரு​கிறார். இந்​நிலை​யில், ‘‘மேற்கு வங்​கத்​தில் திரிண​மூல் காங்​கிரஸ் தொண்​டர்​களை அழிக்க ஆளுநர் சி.​வி.ஆனந்த … Read more