தீபாவளி பலகாரங்களில் கலப்படம் இருந்தால் கடும் நடவடிக்கை: வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

சென்னை: தீபாவளி பலகாரங்களில் கலப்படம் இருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, கார உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இனிப்பு கடை உரிமையாளர்கள், விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் சென்னை தி.நகரில் அக்.11 நடைபெற்றது. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 300-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பங்கேற்றனர். … Read more

முனம்பத்தின் 365 ஏக்கர் நிலம் வக்பு சொத்து கிடையாது: கேரள உயர் நீதிமன்ற தீர்ப்பால் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மகிழ்ச்சி

கொச்சி: கேரளா​வின் முனம்​பம் பகு​தி​யில் உள்ள 365 ஏக்​கர் நிலம். வக்பு வாரிய சொத்து கிடை​யாது என்று கேரள உயர் நீதி​மன்​றம் தீர்ப்​பளித்து உள்​ளது. இந்த தீர்ப்பை முனம்​பம் பகுதி மக்​கள் முழு​மனதோடு வரவேற்று உள்​ளனர். கேரளா​வின் கொச்சி நகரில் இருந்து 40 கி.மீ. தொலை​வில் முனம்​பம் பகுதி அமைந்​துள்​ளது. கடற்​கரை கிராம​மான அங்கு கத்​தோலிக்க கிறிஸ்​தவர்​கள், இந்​துக்​கள் பெரும்​பான்​மை​யாக வாழ்​கின்​றனர். மீன்​பிடித் தொழில், இறால் வளர்ப்பு ஆகியவை பிர​தான தொழிலாக உள்​ளது. இந்த சூழலில் கடந்த … Read more

முதுநிலை ஆசிரியர் பணி: 2.20 லட்சம் பேர் தேர்வு எழுதினர்

சென்னை: தமிழகம் முழு​வதும் 809 மையங்​களில் முது​நிலை ஆசிரியர் பணிக்​கான போட்​டித் தேர்வு நேற்று நடை​பெற்​றது. இதில் 2.20 லட்​சம் பட்​ட​தா​ரி​கள் பங்​கேற்​றனர். அரசுப் பள்​ளி​களில் முது​நிலை ஆசிரியர், உடற்​கல்வி இயக்​குநர், கணினி பயிற்​றுநர் ஆகிய பணி​களில் காலி​யாக இருந்த 1,996 இடங்​களை நிரப்​புவதற்​கான அறி​விப்பை ஆசிரியர் தேர்வு வாரி​யம் (டிஆர்​பி) கடந்த ஜூலை 10-ம் தேதி வெளி​யிட்​டது. இதற்​கான போட்​டித் தேர்வை எழுத 3,734 மாற்​றுத் திற​னாளி​கள் உட்பட 2.36 லட்​சம்பட்​ட​தா​ரி​கள் விண்​ணப்​பித்​தனர். இதற்​கிடையே, முது​நிலை … Read more

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராஜஸ்தான் இளைஞர் கைது

ஜெய்ப்பூர்: பாகிஸ்​தானுக்கு உளவு பார்த்​த​தாக ராஜஸ்​தான் மாநிலம் ஆல்​வார் மாவட்​டத்தை சேர்ந்​த மன்​கத் சிங் என்​பவரை போலீ​ஸார் நேற்று கைது செய்​துள்​ளனர். இவருக்கு கடந்த 2023-ம் ஆண்டு பாகிஸ்​தானை சேர்ந்த இஷா சர்மா என்ற பெண்​ணுடன் ஆன்​லைனில் பழக்​கம் ஏற்​பட்​டுள்​ளது. அந்த பெண் பாகிஸ்​தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பை சேர்ந்​தவர் ஆவார். ‘ஹனி டிராப்’ எனப்​படும் ஆளை மயக்கி அவரிட​மிருந்து தகவல்​களை பெறு​வது​தான் இந்த உளவாளி​களின் வேலை​. அந்த பெண்​ணிடம் மயங்​கிய மன்​கத் சிங், ராஜஸ்​தானில் செயல்​பட்டு … Read more

அநாகரிகமாக பேசி தரம் தாழ்ந்த அரசியலை செய்கிறார் பழனிசாமி: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு 

சென்னை: அ​தி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி அநாகரி​க​மாக பேசிதரம் தாழ்ந்த அரசி​யல் செய்​கிறார் என்று தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை குற்​றம்​சாட்​டி​யுள்​ளார். தகவல் அறியும் உரிமை சட்டம் அமலாகி 20 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு நேற்று சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் செல்வப்பெருந்தகை கூறிய​தாவது: ஐக்​கிய முற்​போக்கு கூட்​டணி ஆட்​சி​யில் மன்​மோகன்​சிங் பிரதம​ராக இருந்​த​போது கொண்​டு​வந்த தகவல் அறி​யும் உரிமை சட்​டத்தை மத்​திய பாஜக அரசு நீர்த்​துப் போகச் செய்​யும் வேலை​யில் ஈடு​பட்​டுள்​ளது. ஆர்​டிஐ-​யில் மத்​திய பாஜகஅரசு மேற்​கொண்ட திருத்​தங்​களை ரத்து … Read more

ஆப்கன் அமைச்சரின் வருகையின்போது பெண் பத்திரிகையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லை: தியோபந்த் நிர்வாகம்

சஹாரன்பூர்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாகியின் செமினரி வருகையின்போது பெண் பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிப்பதை தடுக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று தாருல் உலூம் தியோபந்த் தெரிவித்துள்ளது. நேற்று ( அக்டோபர் 11) ஆப்கன் அமைச்சர் முட்டாகி உத்தரப்பிரதேசத்தின் சஹாரன்பூரில் உள்ள தாருல் உலூம் தியோபந்த் இஸ்லாமிய கல்வி நிறுவனத்துக்கு வருகை தந்தார். அதிகப்படியான கூட்டம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக கடைசி நேரத்தில் அவர் பங்கேற்க இருந்த பொது நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. இது … Read more

சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடக்கம்: இன்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் 

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வை​யின் மழைக்​கால கூட்ட தொடர் நாளை தொடங்​கு​கிறது. பேர​வையை எத்​தனை நாட்​கள் நடத்து​வது என்​பது குறித்து முடி​வெடுப்​ப​தற்​கான அலு​வல் ஆய்​வுக்​குழு இன்று தலைமை செயல​கத்​தில் நடை​பெறவுள்​ளது. தமிழக சட்​டப்​பேர​வை​யின் நடப்​பாண்​டுக்​கான முதல் கூட்​டம் கடந்த ஜனவரி மாதம் நடை​பெற்​றது. பின்​னர் மார்ச் 14-ல் 2025-26-ம் நிதி​யாண்​டுக்​கான பட்​ஜெட் தாக்​கல் செய்​யப்​பட்​டது. அடுத்த நாள் வேளாண் பட்​ஜெட் தாக்​கலானது. இரு பட்​ஜெட்​கள் மீதான விவாதம் மார்ச் 17 முதல் 21-ம் தேதி வரை நடை​பெற்​றது. நிறை​வாக, … Read more

தேசிய ஜனநாயக கூட்டணியில் சுமுக உடன்பாடு: பிஹார் பேரவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு முடிந்தது

புதுடெல்லி: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்​டி, தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் தொகு​திப் பங்​கீடு இறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. இதன்​படி ஐக்​கிய ஜனதா தளம் (ஜேடி​யூ), பாஜக தலா 101 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கின்​றன. பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நவம்​பர் 6, 11-ம் தேதி​களில் இரு கட்​டங்​களாக நடை​பெற உள்​ளது. நவம்​பர் 14-ம் தேதி வாக்கு எண்​ணிக்கை நடை​பெற உள்​ளது. இந்த தேர்​தலில் ஆளும் ஐக்​கிய ஜனதா தளம், பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயககூட்​ட​ணிக்​கும் (என்​டிஏ), ராஷ்டிரிய ஜனதா தளம், காங்​கிரஸ் அடங்​கியமெகா … Read more

எகிப்தில் இன்று காசா உச்சி மாநாடு – பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் அழைப்பு: இஸ்ரேல் – காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

டெல் அவிவ்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எகிப்து அதிபர் அல் சிசி தலை​மை​யில் எகிப்​தில் இன்று நடை​பெற உள்ள காசா அமைதி உச்சி மாநாட்​டில் 20-க்​கும் மேற்​பட்ட நாடு​களின் தலை​வர்​கள் பங்​கேற்​கின்​றனர். இதில் பங்​கேற்க வரு​மாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது. ஆனால், பிரதமர் மோடி இந்த மாநாட்​டில் பங்​கேற்க மாட்​டார் என கூறப்​படு​கிறது. அதே​நேரம், இந்​தியா சார்​பில் மத்​திய வெளி​யுறவுத் துறை இணை அமைச்​சர் கீர்த்தி வர்​தன் சிங் பங்​கேற்​பார் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இஸ்​ரேலில் கடந்த … Read more

வன்முறை அரசியலில் இருந்து தப்பிக்க ஆர்எஸ்எஸ், பாஜக மீது பழி போடுகிறார் திருமாவளவன்: அண்ணாமலை குற்றச்சாட்டு

மதுரை: வன்முறை அரசியலில் இருந்து தப்பிக்க ஆர்எஸ்எஸ், பாஜக மீது பழிபோடுகிறார் திருமாவளவன் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். மதுரை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரூர் துயரம் போன்று காஞ்சிபுரத்தில் தயாரித்த மருந்தை சாப்பிட்டு 23 குழந்தைகள் உயிரிழந்ததை ஏன் பேச மறுக்கிறோம். நீதியரசர் மீது தாக்குதலை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திருமாவளவன் தரப்பினர் வழக்கறிஞர் ஒருவரை தாக்குகினர். திருமாவளவன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். … Read more