கரூர் விவகாரத்தில் ஆளுங்கட்சிக்கு ஏன் இவ்வளவு பதற்றம்? – வெளிநடப்புக்குப் பின் இபிஎஸ் கேள்வி

சென்னை: “கரூர் விவகாரம் பற்றி பேசினால், ஆளுங்கட்சிக்கு ஏன் இவ்வளவு பதற்றம். இந்த விவகாரத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது. கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புக்கு பாதுகாப்புக் குறைபாடே காரணம்.” என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விவாதம் நடந்தது. கரூர் கூட்டநெரிசல் குறித்த சட்டப்பேரவையில் நடந்துகொண்டிருந்த விவாதத்தின் போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை குறிப்பிட்டு இபிஎஸ் மீது அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் … Read more

பாகிஸ்தான் எல்லை​ பகுதியில் ஆயுத, போதை கடத்தல்​ முறியடிப்பு

சண்​டிகர்: கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் ஆயுத, போதைப் பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதை தடுக்க பஞ்சாப் மாநில காவல் துறை சார்பில் எல்லைப் பகுதிகளில் ட்ரோன் தடுப்பு சாதனங்கள் நிறுவப்பட்டு உள்ளன. இவற்றின் மூலம் அண்மை காலமாக பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் கடத்தல் முயற்சிகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பஞ்சாப் போலீஸார் கூறியதாவது: பாகிஸ்தானில் இருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், கையெறி … Read more

கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் 30 கி.மீ வேகத்துக்கு அதிகமாக சென்றால் வழக்கு: காவல் ஆணையர்

கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் ஆ.சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கோவை அவிநாசி சாலையில், புதிதாக திறக்கப்பட்டு உள்ள ஜி.டி.நாயுடு மேம்பாலம் தொடங்கும் இடமான உப்பிலிபாளையம் ரவுண்டானாவில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. மேம்பாலத்தை விட்டு கீழே இறங்கும் வாகன ஓட்டிகளுக்கு எப்படி செல்வது என்ற வழி தெரியவில்லை. அத்துடன் மேம் பாலத்தில் செல்ல பல்வேறு பகுதிகளில் இருந்து வருகிறார்கள். இதுதான் போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் ஆகும். உப்பிலிபாளையம் ரவுண்டானாவில் சிக்னல் அமைக்கும் பணி … Read more

பிஹார் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்: பிரசாந்த் கிஷோர் திட்டவட்டம்

புதுடெல்லி: “நடைபெறவிருக்கும் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். கட்சிப் பணிகளில் கவனம் செலுத்த இருக்கிறேன் ” என ஜன்சுராஜ் கட்சியின் வேட்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டத் தேர்தலின்போது 121 தொகுதிகளுக்கும். 2-ம் கட்டத் தேர்தலின்போது 122 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், பாஜக – ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான … Read more

பல்கலை மாணவர்களுக்கு உடனடியாக கல்வி உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி

சென்னை: பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்காமல் நிறுத்தி வைப்பதா? என்றும் உதவித்தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க நடவடிக்கை வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுநிலை வணிக மேலாண்மை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு, முதலாம் ஆண்டுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி உதவித் தொகை இன்னும் வழங்கப்படாததால் அவர்கள் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஏழை மாணவர்களுக்கு … Read more

அமலாக்கத் துறை விசாரணை தடை நீட்டிப்பு: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: டாஸ்​மாக் முறை​கேடு வழக்​கில் அமலாக்​கத் துறை விசா​ரணை தடையை நீட்டித்து உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்டுள்ளது. தமிழகத்​தில் ‘டாஸ்​மாக்’ தலைமை அலு​வல​கத்​தில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை தீவிர சோதனை நடத்​தினர். இந்த சோதனை சட்​ட​விரோதம் என்று அறிவிக்க கோரி​யும், விசா​ரணை என்ற பெயரில் அதி​காரி​களை துன்​புறுத்த கூடாது என்று உத்​தர​விட கோரி​யும் டாஸ்​மாக் நிர்​வாகம் மற்​றும் தமிழக அரசு சார்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கு​கள் … Read more

மதியம் 1 மணி வரை சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: மதியம் 1 மணி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்களில் லேசான மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் சில பகு​திகளில் இடி, மின்​னலுடன் கூடிய, மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது. அதி​கபட்ச வெப்​பநிலை 89.6 டிகிரி, குறைந்​த​பட்ச வெப்​பநிலை 78.8-80.6 டிகிரி பாரன்​ஹீட் அளவில் இருக்​கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை … Read more

மாணவி பாலியல் வன்கொடுமை புகார்: டெல்லியில் பல்கலை. மாணவர்கள் போராட்டம்

புதுடெல்லி: டெல்லியில் தென் கிழக்கு ஆசிய பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக அந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி சத்தர்பூரில் தென் கிழக்கு ஆசிய பல்கலைக்கழகம் (எஸ்ஏயு) உள்ளது. சார்க் நாடுகளால் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டு நடத்தப்படும் இந்த சர்வதேச பல்கலைக்கழகத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியா நாடுகளின் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இந்திய மாணவ, மாணவிகளும் இங்கு படிக்கின்றனர். இந்தப் பல்கலை.யில் நிகழும் தவறுகள் மீது சர்வதேச … Read more

“பல வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திமுக அரசு தடுமாறுகிறது!” – மு.வீரபாண்டியன் நேர்காணல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் மு.வீரபாண்டியன், சமீபகால அரசியல் நகர்வுகள், கட்சி வளர்ச்சிக்காக முன்னெடுக்கும் திட்டங்கள், திமுக கூட்டணியில் தேர்தல் தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பேட்டி. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நீங்கள் கட்சியை வளர்த்தெடுப்பதில் இருக்கும் சவால்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்? ​கொள்கை அளவில் மேலிடத்​தில் இருந்து கட்​டப்​படும் கட்சி எங்​கள் கட்​சி. ஆனால், மேலிடத்​திலிருந்து உத்​தரவு வரும் என்று காத்​திருக்​காமல் கிளை​கள், இடை கமிட்​டிகள் … Read more

1,638 கடன் அட்டைகளுடன் கின்​னஸ் சாதனை படைத்த இந்தியர்

புதுடெல்லி: கடன் அட்டை என்​பது கடனாக பொருட்​களை வாங்​க​வும் பல்​வேறு கட்​ட​ணங்​களை செலுத்​த​வும் மட்​டுமே பயன்​படும் என நாம் நினைக்​கிறோம். ஆனால் வழக்​க​மான பயன்​பாடு​களைத் தாண்​டி, பணத்தை மிச்​சப்​படுத்​து​வதற்​கான ஆதா​ர​மாக​வும் அவற்​றைப் பயன்​படுத்தி வரு​கிறார் மணிஷ் தமேஜா. அவரிடம் மொத்​தம் 1,638 கடன் அட்​டைகள் உள்​ளன. எந்த ஒரு கடனும் இல்​லாமல் வெகுமதி புள்​ளி​கள், கேஷ்பேக், பயணச் சலுகைகள் மற்​றும் ஓட்​டல் சலுகைகளை அதி​கரிக்க இந்த கடன் அட்​டைகளை அவர் பயன்​படுத்தி வரு​கிறார். எந்த ஒரு கடன் … Read more