விஜய் பிரச்சார கூட்டத்தில் உயிரிழந்த 41 பேருக்கு 16-ம் நாள் காரியம் செய்த தவெகவினர்

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் சட்டப்பேரவைத் தொகுதி தவெகவினர், கரூரில் உயிரிழந்த 41 பேரின் ஆத்மா சாந்தியடைய 16-ம் நாள் காரியம் செய்தனர். இதையொட்டி, துறையூர் விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோயில் முன்பு புரோகிதர் மூலம் வேத மந்திரங்களுடன் பூஜைகள் செய்யப்பட்டன. யாகம் வளர்க்கப்பட்டு, அதில் வைத்திருந்த தர்ப்பை புற்கள், கல் ஆகியன கோயில் குளத்தில் விடப்பட்டன. மேலும், பிதுர்லோகத்தில் இருப்பவர்களுக்கு கவளப்பிண்டம் வைத்து பூஜிக்கப்பட்டு, அவை கோயில் குளத்தில் கரைக்கப்பட்டன. இந்நிகழ்வில், தவெக திருச்சி … Read more

முஸ்லிம் மக்கள்தொகை அதிகரிப்புக்கு ஊடுருவல் காரணம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு

புதுடெல்லி: ‘‘​பாகிஸ்​தான், வங்​கதேசத்​தில் இருந்து ஊடுரு​வல் நடை​பெறு​வ​தால், இந்​தி​யா​வில் முஸ்​லிம்​கள் மக்​கள் தொகை அதி​கரித்​துள்​ளது’’ என்று மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா கூறி​யுள்​ளார். டெல்​லி​யில் ‘தைனிக் ஜாக்​ரன்’ இந்தி செய்​தித் தாள் ஏற்​பாடு செய்த நிகழ்ச்​சி​யில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா நேற்று சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்று பேசி​ய​தாவது: இந்​தி​யா​வில் பல்​வேறு மதத்​தவர்​களின் மக்​கள்​தொகை​யில் ஏற்​றத்​தாழ்வு நில​வு​கிறது. இதற்கு பாகிஸ்​தான், வங்​கதேசம் போன்ற நாடு​களில் இருந்து இந்​தி​யா​வுக்​குள் ஊடுரு​வல் நடப்​பதே காரணம். இதனால் இந்​திய … Read more

நவ.5, 6-ம் தேதிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு

சென்னை: சென்னையில் நவ. 5, 6-ம் தேதிகளில், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம், அரசின் திட்டங்கள் செயல்பாடு குறித்து ஆண்டுதோறும், முதல்வர் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும். அந்த வகையில், வரும் நவ 5 மற்றும் 6 ம் தேதிகளில் சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் மாவட்ட நிர்வாகம், சட்டம்- … Read more

99 தேர்தலில் தோற்ற ராகுல்: பாஜக கடும் விமர்சனம்

புதுடெல்லி: வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர போராடிய மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சுரேந்திரா ராஜ்புத் கூறும்போது, “அரசமைப்பை பாதுகாக்கும் நோக்கில் போராடிய வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு இந்த முறை அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, தேசத்தின் அரசமைப்பை காக்கும் போராட்டத்தில் தலைமை வகிக்கிறார்” என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் … Read more

இருமல் மருந்து நிறுவன உரிமையாளர், அரசு அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை

சென்னை: இரு​மல் மருந்​தால் 20-க்​கும் மேற்​பட்ட குழந்​தைகள் உயி​ரிழந்த விவ​காரத்​தில், மருந்து ஏற்​றுமதி செய்​த​தில் சட்​ட​விரோத பணப்​பரிவர்த்​தனை நடந்​திருப்​ப​தாக எழுந்த புகாரையடுத்​து, மருந்து நிறுவன உரிமை​யாளர், அரசு அதி​காரி​களின் வீடுகள்,மருந்து ஆலைகளில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர். இதில் முக்​கிய ஆவணங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. மத்​திய பிரதேசம் மாநிலம் சிந்த்​வாரா மாவட்​டத்​தில் கோல்ட்​ரிப் இரு​மல் மருந்து சாப்​பிட்டு 20-க்​கும் மேற்​பட்ட குழந்​தைகள் உயி​ரிழந்​தனர். விசா​ரணை​யில், இரு​மல் மருந்​தில் டைஎ​திலீன் கிளை​கோல் நச்சு அதி​கள​வில் இருப்​பது … Read more

பிஹாரில் 100 இடங்களில் ஒவைசி கட்சி போட்டி

பாட்னா: எ​திர்​வரும் பிஹார் சட்​டப்​பேரவைத் தேர்​தலில் சுமார் 100 இடங்​களில் போட்​டி​யிட அசாதுதீன் ஒவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் கட்சி திட்​ட​மிட்​டுள்​ளது. இதுகுறித்து அக்​கட்​சி​யின் பிஹார் மாநிலத் தலை​வர் அக்​தருல் இமான் கூறிய​தாவது: பிஹார் அரசி​யல் பல ஆண்​டு​களாக பாஜக தலை​மையி​லான கூட்​டணி மற்​றும் காங்​கிரஸ்​-ஆர்​ஜேடி கூட்​டணி பற்​றிய​தாகவே உள்​ளது. எனவே நாங்​கள் மூன்​றாவது மாற்று அணி அமைக்க விரும்​பு​கிறோம். எதிர்​வரும் பிஹார் தேர்​தலில் சுமார் 100 இடங்​களில் போட்​டி​யிட திட்​ட​மிட்​டுள்ளோம். இதனால் இரு அணி​களும் எங்​கள் இருப்பை உணர … Read more

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு தலைவர்கள் வரவேற்பு

சென்னை: கரூர் விவ​காரத்​தில் சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விட்ட உச்ச நீதி​மன்ற தீர்ப்​புக்கு அரசி​யல் தலை​வர்​கள் வரவேற்​பும், எதிர்ப்​பும் தெரி​வித்​துள்​ளனர். பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: கரூர் சம்​பவத்​தில் தங்​கள் மீது எந்​த​விதத் தவறும் இல்லை என்​பதை நிறுவ, எதிர்​தரப்​பினரைக் குற்​ற​வாளிக் கூண்​டில் நிறுத்தி தங்​கள் இஷ்டத்​துக்​குக் கட்​டுக்​கதைகளைப் புனைந்து வந்த திமுக அரசின் அவசரத்​துக்​குப் பின்​னால் ஏதோவொரு அரு​வருப்​பான அரசி​யல் காரணம் ஒளிந்​துள்​ளது என்ற மக்​களின் சந்​தேகத்​துக்​குக் கூடிய விரை​வில் விடை கிடைக்​கப்​போகிறது. மத்​திய இணை … Read more

முல்லை பெரியாறில் புதிய அணை கோரி மனு: தமிழக, கேரள அரசுகளுக்கு நோட்டீஸ் 

புதுடெல்லி: முல்லை பெரி​யாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்​டக்கோரி ‘சேவ் கேரளா பிரி​கேட்’ என்ற தொண்டு நிறு​வனம் சார்​பில் தொடரப்​பட்ட பொதுநல வழக்கு உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய், கே.​வினோத் சந்​திரன் அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது தலைமை நீதிப​தி அமர்விடம் மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் வி.கிரி வாதிடும் போது இது 130 ஆண்​டு​கள் பழமை​யானது என்​ப​தால், அணை​யின் கீழ்ப்​பகு​தி​யில் வசிக்​கும் சுமார் ஒரு கோடி மக்​கள் அச்​சத்​தில் உள்​ளனர் … Read more

ட்ரம்ப் முன்னிலையில் காசா அமைதி ஒப்பந்தம் உறுதியானது: இஸ்ரேல், ஹமாஸ், ஈரான் பங்கேற்கவில்லை

ஜெருசலேம்: எகிப்தில் நடைபெற்ற அமைதி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்னிலையில் காசா அமைதி ஒப்பந்தம் உறுதியானது. முன்னதாக, ஹமாஸ் குழுவின் பிடியில் இருந்த 20 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதேபோல இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 154 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர். இஸ்ரேல் ராணுவம் – பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆட்சி செய்த ஹமாஸ் குழுவினர் இடையே 2 ஆண்டுகளாக போர் நடைபெற்றது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முயற்சியால் இரு தரப்பினர் இடையே கடந்த … Read more

தவெகவை நெருக்கடிக்கு உள்ளாக்க சிபிஐ விசாரணையை பாஜக பயன்படுத்தும்: ஜோதிமணி எம்.பி. கருத்து

திருச்சி: தமிழக வெற்றி கழகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்காக இந்த சிபிஐ விசாரணையை பாரதிய ஜனதா கட்சி பயன்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது என திருச்சியில் ஜோதிமணி எம்.பி. தெரிவித்தார். கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி திருச்சியில் திங்கள்கிழமை மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தவெக கரூர் கூட்டத்தில் உயிரிழந்த பலர் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்கள் முக்கிய குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளனர். அனைவரும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். உயர் நீதிமன்றம் அமைத்த எஸ்ஐடி விசாரணையில் எனக்கு … Read more