பிஹாரில் 11 ஆக குறைந்த முஸ்லிம் எம்எல்ஏக்கள்

புதுடெல்லி: பிஹாரில் முஸ்​லிம்​கள் சுமார் 20 சதவி​கிதம் பேர் உள்​ளனர். அதன்​படி 45 எம்​எல்​ஏக்​கள் இருக்க வேண்​டும். ஆனால், இந்த முறை 11 முஸ்​லிம்​கள் மட்​டுமே வெற்றி பெற்​றுள்​ளனர். சீமாஞ்​சல் பகு​தி​யில் முஸ்​லிம் வாக்​காளர்​கள் அதி​கம். இங்கு அசாதுதீன் ஒவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் கட்சி 5 தொகு​தி​களை மீண்​டும் பெற்​றுள்​ளது. மேலும், இதர பல பகு​தி​களில் எதிர்க்​கட்​சிகளின் மெகா கூட்​ட​ணிக்​கான முஸ்​லிம் வாக்​கு​களை​யும் ஒவைசி கட்சி பிரித்​துள்​ளது. ஏஐஎம்​ஐஎம் கட்​சி​யில் 2020 தேர்​தலில் வெற்றி பெற்ற 5 எம்​எல்​ஏ.க்​களில் … Read more

டிசம்பர் அல்லது ஜனவரியில் முடிவு தெரிந்து விடும்: டிடிவி.தினகரன் புதுக் கரடி

எந்தக் கட்சியிடமும் நாங்களாக தேடிப் போய் கூட்டணி பேசவில்லை. அதற்கான அவசியமும் அமமுக-வுக்கு இல்லை. அதுபோல், அமமுக-வை தவிர்த்துவிட்டு எந்தக் கூட்டணியும் ஆட்சிக்கு வரமுடியாது” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார். அமமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மண்டலப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியதாவது: பிஹார் தேர்தலுக்கும் தமிழகத்துக்கும் சம்பந்தமில்லை. அதனால் அம்மாநில தேர்தல் முடிவுகள் … Read more

பிஹார் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு பெரும் தோல்வி ஏன்?

புதுடெல்லி: பிஹார் தேர்​தலில் மொத்​த​முள்ள 243 தொகு​தி​களில் ஆளும் என்​டிஏ கூட்​டணி 202 இடங்​களை பெற்​றுள்​ளது. அதேசம​யம் ஆர்​ஜேடி தலை​மையி​லான மெகா கூட்​டணி 35 ஆக சுருங்கி விட்​டது. ஆர்ஜேடி 25 இடங்களை மட்டுமே பெற்றது. இதில் முக்​கிய ஆதர​வாளர்​களான யாதவ் மற்​றும் முஸ்​லிம்​கள் எதிர்க்கட்​சிகளுக்கு வாக்​களிக்​காதது ஏன் என்ற கேள்வி எழுந்​துள்​ளது. தேர்​தல் ஆணை​யத்​தின் முக்​கிய நடவடிக்​கை​யான எஸ்​ஐஆர் (வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம்) முதல் மாநில​மாக பிஹாரில் அமலானது. இது தொடர்​பாக காங்​கிரஸ் … Read more

எஸ்ஐஆர் திருத்தப் பணிகள்: உஷார்படுத்துகிறார் விஜய்

தவெக தலைவர் விஜய் நேற்று வெளியிட்ட வீடியோவில் பேசியிருப்பதாவது: இந்திய அரசியல் சாசனம் நம் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லாருக்குமே கொடுக்கப்பட்ட உரிமையில் மிக முக்கியமானது. வாக்காளர் அடையாள அட்டை, வாக்குரிமை என்பது ஒரு மனிதன் உயிரோடு இருக்கிறார் என்பதற்கு அடையாளமாக இருக்கிறது. இதைப் பற்றி நான் முதலில் கேள்விப்பட்ட உடனே, எனக்கு ரொம்ப அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இப்போது நான் பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தமிழ்நாட்டில் இருக்கும் யாருக்குமே ஓட்டு போடும் உரிமையே இல்லை என்று கூறி … Read more

ராஜேந்திர பாலாஜியை பழனிசாமி அடக்கி வைக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அடக்கி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். பிஹார் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில், காங்கிரசை கலைத்து விடுங்கள் என்று ராஜேந்திர பாலாஜி கூறியிருந்தார். இதற்கு பதிலளித்து செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, குறைந்தபட்ச நாகரிகம், அரசியல் நாகரிகம் கூட தெரியாமல், காங்கிரஸ் குறித்தும், ராகுல்காந்தி குறித்தும் பேசி இருக்கிறார். பிஹாரில் காங்கிரஸ் முதன்மைக் … Read more

வருங்காலத்தில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்: உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் நம்பிக்கை 

மதுரை: பெண் வழக்​கறிஞர்​கள் எண்​ணிக்கை அதி​கரித்து வரு​வ​தால், வருங்​காலத்​தில் பெண் நீதிப​தி​களின் எண்​ணிக்கை அதி​கரிக்க வாய்ப்​புள்​ள​தாக உச்ச நீதி​மன்ற நீதிபதி எம்​.எம்​.சுந்​தரேஷ் தெரி​வித்​தார். உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு வழக்​கறிஞர்​கள் சங்​கம் (எம்​பிஏ) சார்​பில், நீதித்​துறை தேர்​வுக்​குத் தயா​ராகி வரும் இளம் வழக்​கறிஞர்​களுக்​கான வார இறுதி நாள் பயிற்சி வகுப்பு தொடக்க விழா நேற்று நடை​பெற்​றது. சங்​கத் தலை​வர் எம்​.கே.சுரேஷ் தலைமை வகித்​தார். செயலர் ஆர்​.வெங்​கடேசன் வரவேற்​றார். பயிற்சி வகுப்​பைத் தொடங்​கி​வைத்து உச்ச நீதி​மன்ற நீதிபதி எம்​.எம்​.சுந்​தரேஷ் … Read more

காங்கிரஸ், ஆர்ஜேடி தோல்வி: ராகுல் எங்கே என பாஜக கேள்வி

புதுடெல்லி: பிஹாரில் முதல் கட்ட தேர்தலுக்கு தொடக்கத்தில் சில நாட்கள் பிரச்சாரத்தை மேற்கொண்ட ராகுல் காந்தி அதன் பிறகு மாயமாகிவிட்டார். தற்போது பிஹார் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளன. இண்டியா கூட்டணியில் இந்த இக்கட்டான சூழலை சமாளிக்க ராகுல் காந்தி இந்தியாவில் இல்லாமல் வேறு எங்கு ஓடி ஒளிந்து கொண்டாரா என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. தற்போது ராகுல் காந்தி லண்டனில் இருக்கிறாரா அல்லது மஸ்கட் அல்லது மத்திய கிழக்கில் இருக்கிறாரா என்று … Read more

தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கினார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தூய்மைப் பணியாளர்களுக்கான முதல்வரின் உணவுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக சென்னையில் 31,373 பேர் பயன்பெறும் வகையிலான இந்த திட்டம் டிசம்பர் 6-ம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் 3 ஷிப்ட்களில் பணியாற்றும் 31,373 தூய்மைப்பணியாளர்கள் பயன்பெறும் வகையில், முதல்வரின் உணவுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தூய்மைப் பணியாளர்களுக்கு … Read more

தேஜஸ்வி யாதவ் 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

புதுடெல்லி: பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலில் ராஷ்டிரிய ஜனதா தள கட்​சி​யின் தலை​வரும், மகாகத்​பந்​தன் கூட்​ட​ணி​யின் முதல்​வர் வேட்​பாள​ரு​மான தேஜஸ்வி யாதவ் தான் போட்​டி​யிட்ட ரகோபூர் தொகு​தி​யில் 14,532 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்​றி​பெற்​றார். தேஜஸ்விக்கு மொத்​தம் 1,18,597 வாக்​கு​கள் கிடைத்த நிலை​யில் அவரை எதிர்த்து போட்​டி​யிட்ட பாஜகவைச் சேர்ந்த சதீஷ் குமார் யாதவுக்கு 1,04,065 வாக்​கு​கள் மட்​டுமே கிடைத்​தன. அதே​நேரம் ஜன் சுராஜ் கட்​சி​யின் வேட்​பாளர் சஞ்​சல் குமார் வெறும் 3,086 வாக்​கு​களை மட்​டுமே பெற்​றார். லாலு பிர​சாத் … Read more

தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு முறைகேடாக அங்கீகாரம்: அண்ணா பல்கலை. அதிகாரிகள் மீது வழக்கு

சென்னை: அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் கீழ் செயல்​படும் தனி​யார் பொறி​யியல் கல்​லூரி​களுக்கு முறை​கே​டாக அங்​கீ​காரம் வழங்​கியது தொடர்​பாக, அண்ணா பல்கலைக்கழக அதிகாரி​கள் உள்பட 17 பேர் மீது லஞ்சஒழிப்​புத் துறை வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளது. தமிழகத்​தில் அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் கீழ் 470-க்​கும் மேற்​பட்ட பொறி​யியல் கல்​லூரி​கள் இயங்கி வரு​கின்​றன. இதற்​கிடையே 224 தனி​யார் பொறி​யியல் கல்​லூரி​களில் 353 ஆசிரியர்​கள் ஒரே நேரத்​தில் ஒன்​றுக்​கும் மேற்​பட்ட கல்​லூரி​களில் பணிபுரிவ​தாக கணக்கு காட்​டப்​பட்​டுள்​ளது என்று அறப்​போர் இயக்​கம் குற்​றம்​சாட்​டியது. மேலும், விதி​முறை​களை பின்​பற்​றாமல் … Read more