“முஸ்லிம் லீக், மாவோயிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளை நாடு நிராகரித்துவிட்டது” – பிரதமர் மோடி

சூரத்: முஸ்லிம் லீக், மாவோயிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகளை நாடு நிராகரித்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் சூரத் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “பிஹார் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. குஜராத்தில் குறிப்பாக சூரத்தில் வசிக்கும் பிஹார் சகோதரர்கள், இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்க உரிமை உண்டு. குஜராத் மக்கள் என்னை முதல்வராக தேர்ந்தெடுத்தபோது, இந்தியாவின் வளர்ச்சிக்காக குஜராத்தின் வளர்ச்சியை நாங்கள் முன்னிருத்தினோம் என்பது உங்களுக்குத் தெரியும். பிஹார் மக்களும் … Read more

“தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும்” – வி.பி.துரைசாமி நம்பிக்கை

நாமக்கல்: “பிஹார் தேர்தல் முடிவு தமிழகத்திலும் எதிரொலிக்கும். பாஜக, அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்” என பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி நம்பிக்கை தெரிவித்தார். நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் பிஹார் தேர்தல் வெற்றி கொண்டாட்டம் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் விழா நாமக்கல் மணிக்கூண்டு அருகில் இன்று நடைபெற்றது. மாவட்ட பாஜ தலைவர் சரவணன் தலைமை வகித்தார். … Read more

பிஹார் தோல்வி எதிரொலி: அரசியலையும் குடும்பத்தையும் விட்டு விலகுவதாக லாலு மகள் ரோகிணி அறிவிப்பு

பாட்னா: அரசியலையும் தனது குடும்பத்தையும் விட்டு விலகுவதாக லாலு பிரசாத் யாதவின் இரண்டாவது மகளான ரோகிணி ஆச்சார்யா தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி மிகப் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. கடந்த 2020-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 75 தொகுதிகளில் வெற்றி பெற்று மாநிலத்தின் மிகப் பெரிய அரசியல் சக்தியாக திகழ்ந்த அந்த கட்சி, இந்த தேர்தலில் 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அக்கட்சி வழிநடத்திய மகா … Read more

“தவெகவினருக்கு எஸ்ஐஆர் படிவம் கிடைக்கவிடாமல் தடுக்கப்படுகிறது” – விஜய் குற்றச்சாட்டு

சென்னை: “எஸ்ஐஆர் படிவம், தவெகவினருக்கு கிடைப்பதில்லை, கொடுக்க மறுக்கிறார்கள் என்ற புகார் எழுந்துள்ளது. தற்போது ஆட்சியில் இருப்பவர்கள், அவர்களுக்கு கைப்பாவையாக இருக்கக் கூடியவர்கள்தான் இதைச் செய்கிறார்கள்” என்று விஜய் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியது: “இந்திய அரசியல் சாசனம், தமிழக மக்கள் அனைவருக்கும் கொடுத்துள்ள உரிமையில் மிகவும் முக்கியமானது வாக்குரிமை. ஒரு மனிதன் உயிரோடு இருக்கிறான் என்பதற்கு அடையாளமாக இருப்பதில் அவனது ஓட்டுரிமை மிகவும் முக்கியம். அதனால்தான், வாக்குரிமை … Read more

பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைக்க காங்கிரஸ் தவறிவிட்டது: சிபிஎம்

திருவனந்தபுரம்: பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைப்பதில் காங்கிரஸ் தவறிவிட்டதாக சிபிஎம் குற்றம் சாட்டியுள்ளது. பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மெகா கூட்டணியில் (இண்டியா கூட்டணி) இடதுசாரி கட்சிகள் இடம் பெற்றிருந்தன. சிபிஐ (எம்எல்) 20 தொகுதிகளிலும், சிபிஐ 9 தொகுதிகளிலும், சிபிஎம் 4 தொகுதிகளிலும் போட்டியிட்டன. மொத்தம் 33 தொகுதிகளில் போட்டியிட்ட போதிலும் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றன. இந்த தேர்தல் முடிவு இடதுசாரிகளுக்கு பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பாஜகவின் தொடர் வெற்றியைத் தடுப்பதற்கு ஏற்ப … Read more

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு கழிப்பறை வசதியுடன் ஓய்வு அறைகள்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு 300 சதுர அடியில் கழிப்பறை வசதியுடன் ஓய்வு அறைகள் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு, குடியிருப்புகளுக்கான வீடுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கக்கூடிய நிகழ்ச்சி சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும், தூய்மைப் பணியாளர்களுக்காக பிரத்யேகமாக, 300 சதுர அடி அளவில் உடை மாற்றும் அறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் ஓய்வறைகள் கட்டப்பட்டு, … Read more

பிஹார் தேர்தல்: 23% வாக்குகளுடன் ஆர்ஜேடி முதலிடம்

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டாலும், வாக்கு சதவீதத்தில் ஆர்ஜேடி முதலிடம் பிடித்துள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், பாஜக 89 தொகுதிகளிலும், ஜேடியு 85 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 19 தொகுதிகளிலும், இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 5 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 4 இடங்களிலும் வெற்றி … Read more

நான்கு ஆண்டுகளாக எதையும் செய்யாத திமுகவை நம்பி கிறிஸ்தவர்கள் ஏமாறக்கூடாது: பாஜக

மதுரை: தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டு ஆட்சியில் எதையும் செய்யாத திமுகவை நம்பி கிறிஸ்தவர்கள் ஏமாறக்கூடாது என பாஜக கல்வியாளர் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது. தமிழக பாஜக கல்வியாளர் பிரிவு மாநிலச் செயலாளர் கல்வாரி என். தியாகராஜன் இது குறித்து கூறியதாவது: தமிழகத்தில் வாழும் கிறிஸ்தவர்களை திமுக வெறும் வாக்கு வங்கியாக மட்டும் பயன்படுத்தி வருகிறது. நான்கு ஆண்டு கால திமுக ஆட்சியில் கிறிஸ்தவர்களுக்கு எவ்விதமான நல திட்டங்களையும் கொண்டு வரவில்லை. சிறுபான்மையினர் நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு கொடுத்த … Read more

நவ்காம் காவல் நிலைய குண்டுவெடிப்பு எதிர்பாராத நிகழ்வு: மத்திய அரசு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு எதிர்பாராத நிகழ்வு என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஜம்மு காஷ்மீர் பிரிவு இணை செயலாளர் பிரசாந்த் லோகண்டே தெரிவித்துள்ளார். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜம்மு காஷ்மீரில் சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒட்டப்பட்ட சுவரொட்டியில் இருந்து பெறப்பட்ட துப்புகளின் அடிப்படையில் நவ்காம் காவல்துறை, சமீபத்தில் மிகப் பெரிய வெடிகுண்டுகள் தொகுதியைக் கைப்பற்றியது. இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 162/2025 முதல் தகவல் … Read more

நான்கு ஆண்டுகளாக எதையும் செய்யாத திமுகவை நம்பி கிறிஸ்தவர்கள் ஏமாறக்கூடாது: பாஜக

மதுரை: தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டு ஆட்சியில் எதையும் செய்யாத திமுகவை நம்பி கிறிஸ்தவர்கள் ஏமாறக்கூடாது என பாஜக கல்வியாளர் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது. தமிழக பாஜக கல்வியாளர் பிரிவு மாநிலச் செயலாளர் கல்வாரி என். தியாகராஜன் இது குறித்து கூறியதாவது: தமிழகத்தில் வாழும் கிறிஸ்தவர்களை திமுக வெறும் வாக்கு வங்கியாக மட்டும் பயன்படுத்தி வருகிறது. நான்கு ஆண்டு கால திமுக ஆட்சியில் கிறிஸ்தவர்களுக்கு எவ்விதமான நல திட்டங்களையும் கொண்டு வரவில்லை. சிறுபான்மையினர் நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு கொடுத்த … Read more