மாணவர்களுக்கு துப்பாக்கி வழங்குகிறது ஆர்ஜேடி; மடிக்கணினி வழங்குகிறது என்டிஏ: பிஹாரில் பிரதமர் மோடி பிரச்சாரம் 

பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி சீதாமரி, பெத்​தியா நகரங்​களில் பிரதமர் மோடி நேற்று பிரச்​சா​ரம் செய்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: கடந்த 6-ம் தேதி நடை​பெற்ற பிஹார் முதல்​கட்ட தேர்​தலில் பெண்​கள், இளைஞர்​கள் பெரும் எண்​ணிக்​கை​யில் திரண்டு வந்து வாக்​களித்​தனர். ஆளும் தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு (என்டிஏ) ஆதர​வாக அவர்​கள் வாக்​களித்து இருப்​ப​தாக பரவலாக பேசப்​படு​கிறது. இதன்​மூலம் காட்​டாட்சி (ஆர்​ஜேடி) நபர்​களுக்கு 65 வால்ட் மின் அதிர்ச்சி ஏற்​பட்​டிருக்​கிறது. ஆர்​ஜேடி தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் சிறு​வர்​கள் ஈடு​படுத்​தப்​பட்டு வரு​கின்​றனர். … Read more

மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த அதிராம்பட்டினம் முஸ்லிம்கள் மீதான வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு 

மதுரை: தஞ்​சாவூர் மாவட்​டம் அதி​ராம்​பட்​டினத்​தில் மத்​திய அரசுக்கு எதி​ராக ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்ட முஸ்​லிம்​கள் மீது போலீ​ஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்​து, உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டது. அதி​ராம்​பட்​டினத்​தைச் சேர்ந்த சாஜி​தா, பாத்​தி​மா, இப்​ராஹீம் உள்​ளிட்​டோர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: முஸ்​லிம் தலை​வர்​கள், இயக்​கத்​தினர் ஆகியோர் மீதான மத்​திய அரசின் கைது நடவடிக்​கை​யைக் கண்​டித்​து, அதி​ராம்​பட்​டினம் பேருந்து நிலை​யம் அருகே அமை​தி​யான முறை​யில் கவன ஈர்ப்பு ஆர்ப்​பாட்​டத்​தில் … Read more

ஆந்திர மாநிலம் குப்பம் தொகுதியில் ரூ.2,203 கோடியில் 7 தொழிற்சாலைகள்: காணொலி மூலம் சந்திரபாபு நாயுடு அடிக்கல் 

அமராவதி: தனது சொந்த தொகு​தி​யான குப்​பத்​தில் ரூ.2,203 கோடி​யில் 7 தொழிற்​சாலைகளுக்கு நேற்று அமராவ​தி​யில் இருந்​த​படி​ காணொலி மூலம் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு அடிக்​கல் நாட்​டி​னார். ஆந்​திர மாநிலம் அமராவ​தி​யில் உள்ள தனது அலு​வல​கத்​தில் இருந்​த​படியே நேற்று முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு காணொலி மூலம் சித்​தூர் மாவட்​டம், குப்​பம் தொகு​தி​யில் ஒரே சமயத்​தில் 7 தொழிற்​சாலைகளுக்கு அடிக்​கல் நாட்​டி​னார். இந்த நிகழ்ச்​சி​யில் முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு, குப்​பம் தொகுதி மக்​கள், தொழிற்​சாலை நிர்​வாகி​களிடம் பேசி​ய​தாவது: ஆந்​தி​ரா-தமிழகம்​-கர்​நாடக … Read more

கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது: தமிழக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு 

சென்னை: தமிழக ஆம்னி பேருந்​துகளுக்கு கேரளா போக்​கு​வரத்து துறை ரூ.70 லட்​சம் அபராதம் விதித்த நிலை​யில், கேரளா​வுக்கு பேருந்​துகளை இயக்க மாட்​டோம் என ஆம்னி பேருந்து உரிமை​யாளர் சங்​கம் அறி​வித்​துள்​ளது. தமிழகத்​தைச் சேர்ந்த ஆம்னி பேருந்​துகள் முறை​யாக வரி செலுத்​த​வில்லை என்​றும் ஒரு​முறை கேரளா​வுக்கு செல்​வதற்​கான தற்​காலிக அனு​ம​தி​யைப் பெற்று பேருந்​துகள் இயக்​கப்​பட்​ட​தாகக் கூறி கொச்​சி​யில், 30 ஆம்னி பேருந்​துகளுக்கு தலா ரூ.2 லட்​சம் முதல் 2.5 லட்​சம் வரை மொத்​தம் ரூ.70 லட்​சம் வரை நேற்று … Read more

புதிய வந்தே பாரத் ரயில்கள் அதிக வசதிகளை தருகின்றன: பிரதமர் மோடி பெருமிதம்

வாராணசி: உத்தர பிரதேச மாநிலம் பனாரஸ் ரயில் நிலை​யத்​திலிருந்து 4 புதிய வந்தே பாரத் எக்​ஸ்​பிரஸ் ரயில்​களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்​தார். புதிய வந்தே பாரத் எக்​ஸ்​பிரஸ் ரயில்​கள் பனாரஸ்​–கஜு​ராஹோ, லக்​னோ–ஷஹா​ரான்​பூர், பிரோஸ்​பூர்​–டெல்​லி, எர்​ணாகுளம்​–பெங்​களூரு ஆகிய வழித்​தடங்​களில் இயக்​கப்​படும். வாராணசி​யில் நடை​பெற்ற விழா​வில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: இந்​தியா சர்​வ​தேச அளவில் பொருளா​தார வளர்ச்​சி​யில் மிக வேக​மாக வளர்ந்து கொண்டு இருக்​கிறது. தற்​போது, இந்​திய ரயில்​வே​யில் வந்தே பாரத், நமோ பாரத், … Read more

ரவுடி நாகேந்திரன் உயிரோடுதான் இருக்கிறார்; பிளாஸ்டிக் சர்ஜரி செய்து போலீஸார் தப்பிக்க வைத்துவிட்டனர்: பகுஜன் சமாஜ் தலைவர் ஆனந்தன் தகவல் 

சென்னை: ‘ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்​கில் முதல் குற்​ற​வாளி​யாக கைதாகி சிகிச்​சை​யில் இருந்த ரவுடி நாகேந்​திரன் இன்​னும் இறக்​க​வில்​லை. ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனை​யில் அவருக்கு பிளாஸ்​டிக் சர்​ஜரி செய்து போலீ​ஸார் தப்​பிக்க வைத்​து​விட்​டனர்’ என்று பகுஜன் சமாஜ் கட்​சி​யின் மாநிலத் தலை​வ​ரான வழக்​கறிஞர் ஆனந்​தன் சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் தெரிவித்​துள்​ளார். பகுஜன் சமாஜ் கட்​சி​யின் மாநிலத் தலை​வ​ராக இருந்த ஆம்​ஸ்ட்​ராங் கடந்த 2024 ஜூலை​யில் சென்​னை​யில் உள்ள அவரது வீட்​டின் அருகே ஒரு கும்​பலால் வெட்​டிப் படு​கொலை … Read more

பிஹாரில் சாலையோரம் விவிபாட் ஒப்புகைச்சீட்டு: தேர்தல் ஆணையம் விளக்கம்

புதுடெல்லி: பிஹாரில் சாலை​யோரம் விவி​பாட் ஒப்​பு​கைச்​சீட்டு கிடந்​தது குறித்து தேர்​தல் ஆணை​யம் விளக்​கம் அளித்​துள்​ளது. பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலுக்​கான முதல்​கட்ட வாக்​குப் பதிவு கடந்த 6-ம் தேதி நடை​பெற்​றது. இந்​நிலை​யில் பிஹாரின் சமஸ்​திபூர் மாவட்​டத்​தில் சாலை​யோரம் விவி பாட் ஒப்​பு​கைச்​சீட்​டு​கள் சிதறிக் கிடக்​கும் வீடியோ சமூக வலை​தளங்​களில் வெளி​யானது. இதையடுத்து தேர்​தல் ஆணை​யம் விரைந்து நடவடிக்கை மேற்​கொண்​டது. இதுகுறித்து தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் நேற்று கூறிய​தாவது: சம்பவ இடத்​துக்கு சமஸ்​திபூர் மாவட்ட ஆட்​சி​யர் நேரில் … Read more

உடல் பருமன், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் இருந்தால் அமெரிக்க விசா கிடையாது: உலகம் முழுவதும் உடனடி அமல்

வாஷிங்டன்: இதய நோய், சுவாசக் கோளாறு, புற்றுநோய், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல் பருமன், நரம்பியல் பாதிப்பு, மனநிலை பாதிப்பு இருப்பவர்களுக்கு விசா வழங்க வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை உத்தரவிட்டு உள்ளது. உலகம் முழுவதும் செயல்படும் அமெரிக்க தூதரகங்களில் புதிய கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 7 மாதங்களில் மட்டும் 2 … Read more

59-வது பிறந்தநாளை முன்னிட்டு சீமான் வீட்டில் 3 ஆயிரம் பேருக்கு கறி விருந்து: அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: ​​நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானின் பிறந்​த​நாளையொட்​டி, சென்​னை​யில் உள்ள அவரது வீட்​டில் 3 ஆயிரம் பேருக்கு கறி விருந்து அளிக்​கப்​பட்​டது. நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் தனது 59-வது பிறந்​த​நாளை நேற்று கொண்​டாடி​னார். இதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரி​விப்​ப​தற்​காக காலை முதலே சென்னை நீலாங்​கரை​யில் உள்ள அவரது வீட்​டில் ஏராள​மான தொண்​டர்​களும், கட்சி நிர்​வாகி​களும் குவிந்​தனர். சீமானுக்கு வாழ்த்​துக் கூற வருகை தந்த தொண்​டர்​களுக்​காக அவரது வீட்​டில் தடபுடலான கறி … Read more

மதம் மாறியவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு: சத்தீஸ்கர் கிராமத்தில் 3 நாட்களாக குடும்பத்தினர் தவிப்பு 

ராய்ப்பூர்: கிறிஸ்​தவத்​துக்கு மதம் மாறிய​வரின் உடலை அடக்​கம் செய்ய கிராம மக்​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றனர். இதனால் 3 நாட்​களாக உடலை அடக்​கம் செய்ய முடி​யாமல் குடும்​பத்​தினர் தவித்து வரு​கின்​றனர். சத்​தீஸ்​கர் மாநிலம் கான்​கெர் மாவட்​டம், கோடிகுர்ஸ் கிராமத்​தைச் சேர்ந்​தவர் மனிஷ் நிஷாத் (50). உடல்​நலம் பாதிக்​கப்​பட்ட மனிஷ், ராய்ப்​பூர் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வந்​தார். இந்​நிலை​யில், கடந்த சில நாட்​களுக்கு முன்​னர் அவர் உயி​ரிழந்​தார். இதையடுத்து அவரது குடும்​பத்​தினர் மனிஷ் உடலை கிராமத்​துக்கு கொண்டு … Read more