லோக் அதாலத்தில் 1.12 லட்சம் வழக்குகள் தீர்வு: பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.632 கோடி இழப்பீடு

சென்னை: தமிழகம் முழு​வதும் நேற்று நடந்த லோக் அதாலத் வாயி​லாக 1.12 லட்​சம் வழக்​கு​களுக்​குத் தீர்வு காணப்​பட்​டு, பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு ரூ.631 கோடியே 80 லட்​சத்து 27,703 நிவாரணம் கிடைத்​துள்​ளது. நாடு முழு​வதும் உள்ள நீதி​மன்​றங்​களில் நிலு​வை​யில் உள்ள வழக்​கு​களை விரை​வாக முடிவுக்கு கொண்​டு​வரும் வகை​யில், ஆண்​டுக்கு நான்கு முறை தேசிய லோக் அதாலத் என்ற மக்​கள் நீதி​மன்​றம் நடத்​தப்​படு​கிறது. அதன்​படி, தமிழகத்​தில் சென்னை உயர்​நீ​தி​மன்ற தலைமை நீதிபதி கே.ஆர்​.ராம் மேற்​பார்​வை​யில், தமிழ்​நாடு சட்​டப்​பணி ஆணைக்​குழு தலை​வர் நீதிபதி … Read more

கேரள நர்ஸ் ரஞ்சிதா முதல் மருத்துவ மாணவி வரை – அகமதாபாத் விமான விபத்து துயரம்

பிரிட்டனில் பணியாற்றி வந்த கேரள நர்ஸ் ரஞ்சிதா கோபக்குமார் (39) அங்கு வேலையை விட்டு விட்டு கேரளாவில் நிரந்தரமாக தங்க முடிவு செய்திருந்தார். அதற்கான வேலைகளை முடிப்பதற்காக ரஞ்சிதா, லண்டனுக்கு மீண்டும் செல்ல முடிவு செய்திருந்தார். துரதிர்ஷ்டவசமாக அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் கூறும்போது, “லண்டன் வேலையை விட்டு விட்டு தென் கேரளாவில் உள்ள தனது சொந்த கிராமமான புல்லாட்டில் அவர் குடியேற முடிவு செய்திருந்தார். இதற்கா அங்கு புதிதாக வீடு … Read more

“ஏழை மாணவர்களின் கல்வியோடு விளையாடாதீர்” – ஆர்டிஇ நிதியை விடுவிக்க தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: “தமிழகத்தில் உள்ள எழை, எளிய, நடுத்தர மாணவர்களின் கல்வியோடு விளையாடுவதை ஸ்டாலின் மாடல் அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். மாநில நிதியில் இருந்து ஆர்டிஇ-க்கான நிதியை விடுவித்து, 25 சதவீத மாணவர் சேர்க்கையை உடனடியாகப் பூர்த்தி செய்ய வேண்டும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழை, எளிய மாணவர்கள், யாரிடமும் கையேந்தாமல் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்டதுதான் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் … Read more

விஸ்வாஷ் குமாரின் ‘அதிர்ஷ்ட சீட்’ – ஐரோப்பாவில் வெறுக்கப்படும் இருக்கை எண் 11ஏ

புதுடெல்லி: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​திலிருந்து லண்​ட​னுக்கு நேற்று முன்​தினம் புறப்​பட்ட ஏர் இந்​தியா விமானம் விபத்​துக்​குள்​ளானது. இதில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயி​ரிழந்​தனர். இந்த விமான விபத்​தில் உயிர் பிழைத்​தவர் விஸ்​வாஸ் குமார் ரமேஷ் என்​பவர் ஆவார். அவர் அமர்ந்​திருந்​தது 11 ஏ என்ற எண்​ணுள்ள இருக்​கை​தான். இந்த இருக்​கை​யானது, ஐரோப்​பிய நாடு​களில் இயக்​கப்​படும் 737 வகை போயிங் விமானங்​களில் மிக​வும் வெறுக்​கப்​படும் இருக்​கை​யாகப் பார்க்​கப்​படு​கிறது. ஆனால், இந்​தி​யா​வில் இயக்​கப்​படும் 787 போயிங் விமானங்​களில் … Read more

ஈரான் பதிலடியின் தாக்கமும், இஸ்ரேல் பிரதமரின் புதிய மிரட்டலும் – நடப்பது என்ன?

டெல் அவிவ் / தெஹ்ரான்: இஸ்ரேல் மீது ஈரான் கடுமையான பதிலடி தாக்குதலை மேற்கொண்ட நிலையில், “ஈரானின் ஒவ்வொரு இலக்கையும் குறிவைத்து தாக்குவோம்” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு புதிய மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறும்போது, “அயதுல்லா ஆட்சியின் கீழ் உள்ள ஈரான் தேசத்தின் ஒவ்வொரு ராணுவத் தளம், அணுசக்தி ஆராய்ச்சி மையம் என அங்குள்ள எங்களது ஒவ்வொரு இலக்கையும் குறிவைத்து தாக்குவோம். இதுவரை அவர்கள் எதிர்கொண்ட தாக்குதலை காட்டிலும் வரும் … Read more

“இனி வேண்டாம் போர்கள்!” – இஸ்ரேலுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

சென்னை: ஈரான் மீதான தாக்குதல் தொடுத்து வரும் இஸ்ரேலின் வன்முறைப் பாதை கண்டிக்கத்தக்கது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “ஈரான் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதல்கள் பெரும் போரை மூளச் செய்யும் பொறுப்பற்ற செயலாகும். ஏற்கெனவே காசாவில் தொடர்ந்து குண்டுகளை வீசி, பாலஸ்தீன மக்கள் அல்லலுற்று வரும் வேளையில் இஸ்ரேலின் இந்த வன்முறைப் பாதை கண்டிக்கத்தக்கது. உலக நாடுகள் அனைத்தும் இதை கட்டுப்படுத்தவும், நீதிக்கும், பொருள் பொதிந்த … Read more

அகமதாபாத் விமான விபத்து: பலி எண்ணிக்கை 270 ஆக அதிகரிப்பு

அகமதாபாத் : அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து நடந்த இடத்தில் இருந்து, மேலும் ஒரு உடல் விமானத்தின் வால் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது. பிஜி மருத்துவக் கல்லூரியில், இளநிலை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் தவால் கமேட்டி இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்திக்கையில், “இன்றைய நிலவரப்படி விமான விபத்துப் பகுதியிலிருந்து 270 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.” என்று தெரிவித்தார். மேலும், விமான விபத்து … Read more

“தமிழகத்தில் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத அவலம்” – செல்லூர் ராஜூ

மதுரை: தமிழகத்தில் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத அவல நிலை உள்ளது என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார். மதுரை திருமங்கலம் அருகே சூறையாடப்பட்ட வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தை பார்வையிட சென்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை போலீஸார் கைது செய்து, கல்லுப்பட்டி – பேரையூர் சாலையிலுள்ள மண்டபத்தில் அடைத்து வைத்தனர். அவரை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு சந்தித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியது: “திருமங்கலம் தொகுதியிலுள்ள வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தை … Read more

“பணம் ஓர் உயிரை திரும்பத் தராது” – அகமதாபாத் விபத்தில் தந்தையை இழந்த மகள் கண்ணீர்!

அகம​தா​பாத்: “ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. ஆனால், இழப்பீடு என் தந்தையை திரும்பக் கொண்டுவரப் போவதில்லை. பணம் ஓர் உயிரை திரும்பக் கொடுக்கப் போவதில்லை.” என்று அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவரின் மகள் உருக்கமாகப் பேசியுள்ளார். அகமதாபாத் விமான விபத்து பல குடும்​பங்​களின் கனவு​களை கலைந்து சுக்குநூறாக்கிய நிலையில், தனது தந்தையை இழந்த மகள் பகிர்ந்த வீடியோ கண்களை கனக்கச் செய்கிறது. அகமதாபாத் விமான விபத்து, பிரிட்டனில் பணியாற்றி வந்த கேரள நர்ஸ், … Read more

“இஸ்ரேலை ஆதரிக்கும் வகையில் கள்ள மவுனம் காக்கிறது மோடி அரசு” – திருமாவளவன்

சென்னை: ஈரான் மீதான ராணுவத் தாக்குதலை இந்திய அரசு கண்டிக்க வேண்டும் என்றும், பாலஸ்தீனப் பிரச்சினையிலும் இஸ்ரேலையே ஆதரித்த மோடி அரசு, இப்போதும் இஸ்ரேலை ஆதரிக்கும் வகையில் கள்ள மவுனம் காக்கிறது என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “உலக அமைதியை அச்சுறுத்தும் வகையில் ஈரான் நாட்டின் மீது ராணுவத் தாக்குதல் நடத்தியிருக்கும் இஸ்ரேலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டிக்கிறோம். இந்திய ஒன்றிய அரசு, இஸ்ரேல் … Read more