நவ. 15 வரை இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்​தில் இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை சில இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்​ளது. இதுதொடர்​பாக வெளி​யிடப்பட்ட செய்​திக்​குறிப்பு: வட தமிழகம் அதையொட் டிய பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்குசுழற்சி நில​வு​கிறது. இதனால் இன்று முதல் வரும்13-ம் தேதி வரை சில இடங்​களி​லும், வரும் 14, 15-ம் தேதி​களில் ஓரிரு இடங்​களி​லும் இடி, மின்​னலுடன் கூடிய லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.வரும் … Read more

பாலியல் வழக்கில் சிக்கிய ஆம் ஆத்மி எம்எல்ஏ ஆஸ்திரேலியா தப்பியோட்டம்

சண்டிகர்: பஞ்​சாப் மாநிலத்​தின் ஆளும் ஆம் ஆத்மி கட்சி​யின் எம்​எல்ஏ ஹர்​மீத் சிங் பதன்​மஜ்ரா பாலியல் குற்​றச்​சாட்​டில் சிக்​கியதையடுத்து, ஆஸ்​திரேலி​யா​வுக்கு தப்​பியோடி தலைமறை​வாகி உள்​ளார். பஞ்​சாப் மாநிலத்​தின் சனூர் தொகு​தி​யில் முதல் முறை​யாக ஆம் ஆத்மி கட்சி சார்​பில் போட்​டி​யிட்டு எம்​எல்ஏ ஆனவர் ஹர்​மீத் சிங் பதன்​மஜ்​ரா. இவர் மீது ஜிர்​காபூரைச் சேர்ந்த பெண் ஒரு​வர் பாலியல் குற்​றச்​சாட்டை அளித்​தார். அதில், ஹர்​மீத் முன்பே திரு​மண​மானதை மறைத்து தன்னை திரு​மணம் செய்து ஏமாற்​றி​விட்​ட​தாக​வும், பாலியல் ரீதி​யாக​வும், ஆபாச​மான … Read more

தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் பணி: 3,665 காலியிடங்களுக்கு போட்டித் தேர்வு 

சென்னை: தமிழக காவல் துறை​யில் காலி​யாக உள்ள 3,665 காவலர் பணி​யிடங்​களை நிரப்​புவதற்​கான எழுத்துத் தேர்​வில் 1.96 லட்​சம் பேர் பங்​கேற்​றனர். தமிழக காவல் துறை​யில் காலி​யாக உள்ள 2,837 இரண்​டாம் நிலை காவலர் பணி​யிடங்​கள்,சிறைத்​துறை​யில் 180 காலி பணி​யிடங்​கள், தீயணைப்பு துறை​யில் 631 பணி​யிடங்​கள் உள்பட மொத்​தம் 3,665 காலிப்பணி​யிடங்​களை நிரப்புவதற்கான அறி​விப்பை தமிழ்​நாடு சீருடை பணி​யாளர் தேர்வு வாரி​யம் ஆக.21-ல் வெளி​யிட்​டது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதியாக நிர்​ண​யிக்​கப்​பட்​டது. ஆனால், 10-ம் … Read more

நாடு முழுவதும் தாக்குதல் நடத்த சதி: குஜராத்தில் 3 ஐஎஸ் தீவிரவாதிகள் கைது

அகமதாபாத்: ​நாட்​டின் பல பகு​தி​களில் தாக்​குதல் நடத்த சதி திட்​டம் தீட்​டிய ஐஎஸ்​ஐஎஸ் தீவிர​வா​தி​கள் 3 பேரை குஜ​ராத் தீவிர​வாத தடுப்​புப் படை​யினர் கைது செய்​துள்​ளனர். குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் 3 ஐஎஸ்​ஐஎஸ் தீவிர​வா​திகளைதீவிர​வாத தடுப்​புப் படை​யினர் (ஏடிஎஸ்) நேற்று கைது செய்​தனர். இதுகுறித்து ஏடிஎஸ் அதி​காரி​கள் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​: போலீஸ் துணைக் கண்​காணிப்​பாளர் வீரஜீத்​சின் பார்​மர் கண்​காணிப்​பில், ஏடிஎஸ் இன்​ஸ்​பெக்​டர் நிகில் பிரம்​பத், சப் இன்​ஸ்​பெக்​டர் ஏ.ஆர்​.சவுத்ரி ஆகியோர் தீவிர​வாத தடுப்பு நடவடிக்​கை​களில் ஈடு​பட்​டனர். … Read more

“முகம் சுளிக்க வைக்கும் பிக்பாஸ்” – தடை செய்யக் கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்யக் கோரி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் மகளிர் அணியினர் பூந்தமல்லியில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர் பண்பாடு மற்றும் குடும்ப அமைப்பைச் சீர்குலைக்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைத் தடை செய்யக் கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மகளிர் அணி சார்பில், பூந்தமல்லி குந்தம்பாக்கம் பிக் பாஸ் படப்பிடிப்பு தளம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநில மகளிர் அணி தலைவி முத்துலட்சுமி வீரப்பன், மாநில கொள்கை … Read more

ட்ரம்ப் கருத்து மீதான பிரதமரின் மவுனம், சீன விவகாரம் உள்ளிட்டவை நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும்: ஜெயராம் ரமேஷ்

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் பற்றிய அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கருத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பதும், சீனாவுடனான பிரச்சினைகளைத் தீர்க்க மத்திய அரசு தவறியதும், எஸ்ஐஆர் உள்ளிட்டவை வரவிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக முக்கிய கவலைகளாக உள்ளன என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 19 வரை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த … Read more

கரூர் கூட்ட நெரிசல்: சிபிஐயிடம் 2-வது நாளாக ஆவணங்களை ஒப்படைத்த தவெக நிர்வாகிகள்

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐயிடம் 2-வது நாளாக தவெக வழக்கறிஞர், நிர்வாகிகள் ஆவணங்களை ஒப்படைத்தனர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இதுதொடர்பாக 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி அக். 30-ம் தேதி முதல் கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. … Read more

பிஹாரில் வாக்குப்பதிவு உயர்ந்ததற்கு புலம்பெயர் தொழிலாளர்களே காரணம்: பிரசாந்த் கிஷோர்

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் வரலாறு காணாத அளவில் வாக்குப்பதிவு சதவீதம் உயர்ந்ததற்கு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களே ‘எக்ஸ் காரணி’யாக உருவெடுத்துள்ளனர் என்று ஜன் சுராஜ் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில், “இந்தத் தேர்தல்களின் எக்ஸ் காரணி பெண்கள் அல்ல, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். அவர்கள் நிதிஷ் – லாலுவை நம்பவில்லை. இப்போது மக்கள் சிந்திக்கிறார்கள். இம்முறை மாற்றி வாக்களித்து பார்ப்போம், ஒருவேளை நம் வாழ்க்கை மேம்படும் என … Read more

நவ. 15-க்குள் நியாய விலை கடைகளுக்கு கோதுமை 100% அனுப்பப்பட்டுவிடும்: தமிழக அரசு விளக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 12,573 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில், நவ. 15-க்குள் நியாய விலை கடைகளுக்கு கோதுமை 100% அனுப்பப்பட்டுவிடும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று ஒரு நாளிதழில் வந்த செய்தியை வைத்து எடப்பாடி பழனிசாமி 12,573 கடைகளில் கோதுமை இல்லை என்று கூறியிருக்கிறார். ஒன்றிய அரசிடம் தமிழ்நாட்டிற்கு … Read more

மோடி, அமித் ஷா, ஞானேஷ் குமார் ஆகியோர் வாக்குகளை திருடுகிறார்கள் – பிஹாரில் ராகுல் குற்றச்சாட்டு

புர்னியா: பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோர் வாக்குகளைத் திருடுகிறார்கள் என்று காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பிஹாரின் புர்னியாவில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வாக்குகளைத் திருடுகிறார்கள் என்பதை நான் தெளிவாகக் கூறுகிறேன். அதற்காக அவர்களின் முழு முயற்சிகளும் … Read more