“உச்ச நீதிமன்றம் கண்டனம்… இனியாவது தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம ஊதியம் வழங்குக” – அன்புமணி

சென்னை: உச்ச நீதிமன்ற கண்டனத்துக்குப் பிறகாவது தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் தொகுப்பூதியம் பெறும் ஒப்பந்த செவிலியர்களை தமிழக அரசு சுரண்டுகிறது. செவிலியர்களை அளவுக்கு அதிகமாக உழைப்புச் சுரண்டல் செய்கிறீகள். ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக நியமிக்கவும் மறுக்கிறீர்கள். அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கவும் மறுக்கிறீர்கள்” என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. … Read more

பெங்களூரு: வாகன ஓட்டிகளிடம் ரூ.106 கோடி அபராதம் வசூல்

பெங்களூரு: பெங்​களூரு​வில் போக்​கு​வரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதி​கரித்​து​வரும் நிலை​யில், போக்​கு​வரத்து விதி​முறை மீறல்களும் அதி​கரித்து வரு​கின்​றன. போக்​கு​வரத்து போலீ​ஸார் சாலைகளில் நின்​று, அபராதத்தை வசூலிக்​கும் பணி​யில் ஈடு​பட்டு வந்​தனர். இந்​நிலை​யில் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் செப்​டம்​பர் 12-ம் தேதிக்​குள் அபராதத்தை செலுத்​தி​னால் 50% தள்​ளு​படி என போலீ​ஸார் அறி​வித்​த‌னர். இதையடுத்து வாகன ஓட்​டிகள் தாமாக முன்​வந்து ஆன்​லைன் மூல​மாக அபராதத்தை செலுத்​து​வ​தில் ஆர்​வம் காட்​டினர். அதன்​படி செப்​டம்​பர் 12-ம் தேதி வரை 37 … Read more

‘தலைவர்களே ஒன்று சேருங்கள்’… இபிஎஸ் + ஓபிஎஸ் போஸ்டரால் பெரியகுளத்தில் பரபரப்பு!

பெரியகுளம்: தமிழகத்தை காப்பதற்காக அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரியகுளத்தின் பல பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதில் இபிஎஸ் – ஓபிஎஸ் முகமலர்ச்சியுடன் கைகுலுக்குவது போன்ற படங்கள் இடம்பெற்றுள்ளன. ஒருங்கிணைவு விஷயத்தில் தொடர்ந்து சர்ச்சை இருந்து வரும் நிலையில், இந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டனர். செங்கோட்டையனின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. தற்போது பொதுச் செயலாளரான பழனிசாமி அதிமுகவை வழிநடத்தி வருகிறார். … Read more

‘நன்றி நண்பரே’ – பிறந்தநாள் வாழ்த்து கூறிய ட்ரம்ப்புக்கு பிரதமர் மோடி ரிப்ளை

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு தொலைபேசி அழைப்பு மூலம் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். இந்த சூழலில் அவரை தன் நண்பர் என குறிப்பிட்டு பிரதமர் மோடி நன்றி கூறியுள்ளார். கடந்த ஜூன் 17-ம் தேதிக்கு பின்னர் இருநாட்டு தலைவர்களும் தொலைபேசியில் பேசிக் கொள்வது இதுவே முதல் முறை என தகவல். இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50% வரி விதிப்பு நடவடிக்கை இருநாட்டு உறவில் சற்று விரிசலை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் … Read more

வெறுப்பு பேச்சு விவகாரம்: அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு

சென்னை: சைவ மற்றும் வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் வெறுப்பு பேச்சு பேசியதாக, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது. சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் வெறுப்பு பேச்சு பேசியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக … Read more

பிஹாரில் ரூ.36,000 கோடியில் நலத்திட்டங்கள்: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

பாட்னா: பிஹாரில் ரூ.36,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பிஹாரின் பூர்ணியா நகரில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டு உள்ளது. இந்த புதிய விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். அங்குள்ள எஸ்எஸ்பி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ரூ.36,000 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். ஒரு வந்தே பாரத் ரயில், 3 அம்ரித் … Read more

12,000+ தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தி சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், இதுவரை 12,255 தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநகராட்சி சார்பில் தெருநாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும், வளர்ப்பு நாய்களை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சிறப்பு முகாம்களின் வாயிலாக, 46,122 தெரு நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் (ரேபிஸ்) தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 2021 முதல் இதுவரை … Read more

ஆயுதங்களை கடத்தியதாக 3 ராணுவ சுமைதூக்கிகள் கைது

ஜம்மு: ஆயுதங்களை கடத்தியதாக ​ராணுவத்​தைச் சேர்ந்த 3 சுமைதூக்​கும் நபர்​களை ஜம்​மு-​காஷ்மீர் போலீ​ஸார் கைது செய்துள்ளனர். ராணுவ வீரர்​களுக்கு உதவுவதற்​காக மாத சம்பள அடிப்​படை​யில் சுமை தூக்​கும் நபர்​களை ராணுவ அதி​காரி​கள் தற்​காலிக​மாக பணி​யமர்த்தி வரு​கின்​றனர். இந்த சுமை தூக்​கும் நபர்​கள் சிக்​கலான மலைப்​பாதை, பனிமலைகளில் ராணுவ வீரர்​களுக்கு உதவி​யாக இருப்​பர். ராணுவ வீரர்களுக்​குத் தேவை​யான பொருட்​களை மலைப்​பகு​தி​கள் உள்​ளிட்ட இடங்​களுக்கு சுமந்து சென்று உதவி செய்​வர். இந்​நிலை​யில் ஜம்​மு-​காஷ்மீரின் பூஞ்ச் மாவட்​டம் மண்டி பகு​தி​யில் ராணுவத்​துக்​குச் … Read more

டெல்லியில் அமித் ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!

சென்னை: டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்.16) இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதனையடுத்து, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று இரவு எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். அமித் … Read more

ஆபரேஷன் சிந்தூரில் மசூத் அசாரின் குடும்பம் அழிக்கப்பட்டதாக ஜெய்ஷ்-இ-முகம்மது கமாண்டர் தகவல்

இஸ்லாமாபாத்: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் மூலம் மசூத் அசாரின் குடும்பத்தை இந்திய ராணுவம் அழித்துவிட்டதை ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் கமாண்டர் மசூத் இலியாஸ் காஷ்மீரி உறுதிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானின் பஹவல்பூரை மையமாகக் கொண்டு இயங்கும் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகம்மது, இந்தியாவுக்கு எதிராக நாடாளுமன்றத் தாக்குதல், பதான்கோட் தாக்குதல், உரி தாக்குதல், புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தீவிரவாத அமைப்பை இந்தியா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபை, பிரிக்ஸ் … Read more