வந்தே மாதரம் பாடல்: ஆர்எஸ்எஸ், பாஜக மீது கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்​கிரஸ் தலை​வர் கார்கே சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியிருப்பதாவது: தேசி​ய​வாதத்​தின் பாது​காவலர்​கள் என்று அழைத்து கொள்​ளும் ஆர்​எஸ்​எஸ், பாஜக ஆகியவை வந்தே மாதரம் மற்​றும் தேசிய கீதத்தை புறக்​கணித்​தன. கடந்த 1925-ம் ஆண்​டில் ஆர்​எஸ்​எஸ் அமைப்பு தொடங்​கப்​பட்​டது. அப்​போது முதல் ஆர்​எஸ்​எஸ் நிகழ்ச்​சிகளில் வந்தே மாதரம் பாடலோ, தேசிய கீதமோ இசைக்​கப்​பட்​டது கிடை​யாது. ஆர்​எஸ்​எஸ் அலு​வல​கத்​தில் சுமார் 52 ஆண்​டு​கள் தேசிய கொடி​யும் ஏற்​றப்​பட​வில்​லை. இந்​திய அரசி​யலமைப்பு சட்​டத்தை ஆர்​எஸ்​எஸ் வசை பாடியது. மகாத்மா … Read more

‘பெண்கள் பாதுகாப்பு குறித்த எடப்பாடியின் அற்பத்தனம் அம்பலமானது’ – ஆர்.எஸ்.பாரதி

சென்னை: “தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என பழனிசாமி விஷமப் பிரச்சாரம் செய்ததற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும். இபிஎஸ் வழியில் அன்புமணி ராமதாஸ், நயினார் நாகேந்திரன் போன்றவர்களும் உண்மை அறியாமல் தங்களது அரசியல் சுயலாபத்திற்காகப் பெண்களின் பாதுகாப்பை அரசியல் பகடைக்காயாக உருட்டிக் கொண்டிருப்பதை அற்பத்தனமான அறிக்கைகள் அம்பலப்படுத்தி இருக்கின்றன.” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்கிற செய்தி எப்படியாவது செவியில் … Read more

ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி: இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

குப்வாரா: ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதிக்கு அருகே நடந்த ஊடுருவல் முயற்சியின்போது, ராணுவம் நடத்திய தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஊடுருவல் முயற்சி தொடர்பாக கிடைத்த உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், குப்வாராவின் கெரான் செக்டாரில் நேற்று (நவம்பர் 07) தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது. சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளைக் கண்டறிந்தபோது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதால், பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். இந்த நடவடிக்கையின்போது இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டு … Read more

ரஷ்யாவில் மருத்துவம் படித்துவந்த இந்திய மாணவர் சடலமாக கண்டெடுப்பு

புதுடெல்லி: ராஜஸ்​தான் மாநிலம் ஆல்​வார் மாவட்​டம் லக்​ஷ்மன்​கர்​கில் உள்ள கபன்​வாடா கிராமத்​தைச் சேர்ந்​தவர் அஜித் சிங் சவுத்​ரி. 22 வயதான இவர் ரஷ்​யா​வின் உபா நகரத்​தில் உள்ள பாஷ்கிர் ஸ்டேட் மெடிக்​கல் யுனிவர்​சிட்​டி​யில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் எம்​பிபிஎஸ் படித்து வரு​கிறார். பல்​கலைக்​கழக விடு​தி​யில் தங்​கி​யிருந்த இவர் கடந்த அக்​டோபர் 19-ம் தேதி காலை 11 மணி அளவில் பால் வாங்​கு​வதற்​காக வெளி​யில் சென்​றார். அதன் பின் விடு​திக்கு திரும்​ப​வில்லை என்று கூறப்​படு​கிறது. இந்த நிலை​யில், … Read more

எஸ்ஐஆர் பணிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்க திமுக தலைமை அலுவலகத்தில் சிறப்பு உதவி மையம்

சென்னை: எஸ்​ஐஆர் திருத்​தப் பணி​கள் குறித்த பொது​மக்​களின் சந்​தேகங்​களை தீர்ப்​ப​தற்கு தேர்​தல் ஆணை​யத்தை வலி​யுறுத்த வேண்​டுமென திமுக சட்​டத்​துறைக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வுறுத்​தி​னார். தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தத்தை (எஸ்​ஐஆர்) தேர்​தல் ஆணை​யம் அமல்​படுத்​தி​யுள்​ளது. இதை எதிர்த்து வரும் திமுக, தனது கூட்​டணி கட்​சிகளு​டன் இணைந்து போராட்​டம், உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு என பல்​வேறு செயல்​பாடு​களை முன்​னெடுத்து வரு​கிறது. அதனுடன் எஸ்​ஐஆர் திருத்​தப் பணி​களுக்கு வழி​காட்​டு​தல்​கள் வழங்க திமுக தலைமை அலு​வல​கத்​தில் சிறப்பு உதவி … Read more

கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் அமைச்சரின் கார் மீது காலணி வீசியதால் பரபரப்பு

பெங்களூரு: கர்​நாட​கா​வில் கரும்​புக்கு வழங்​கப்​படும் ஆதரவு விலையை ரூ.3,500 ஆக உயர்த்​தக்​கோரி கடந்த 8 நாட்​களாக விவ​சா​யிகள் தொடர் போராட்​டம் நடத்தி வரு​கின்​ற‌னர். பெல​காவி மாவட்​டத்​தில் நேற்று ஆயிரக்​கணக்​கான விவ​சா​யிகள் தேசிய நெடுஞ்​சாலையை மறித்து போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அப்​போது போலீ​ஸார் அவர்​களை கலைந்து செல்​லு​மாறு கூறிய​தால் இரு தரப்​புக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது. இதனிடையே விவ​சா​யிகளில் சிலர் அங்​கிருந்த போலீ​ஸாரின் மீதும், வாக​னங்​களின் மீதும் கல்​வீசி தாக்​குதல் நடத்​தினர். இதையடுத்து போலீ​ஸார் தடியடி நடத்தி கூட்​டத்தை கலைத்​தனர். … Read more

செங்கோட்டையன் விவகாரத்திலும் திமுக பின்னணியில் இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது: நயினார் நாகேந்திரன் கருத்து

திருப்பூர்: செங்​கோட்​டையன் விவ​காரத்​தி​லும் திமுக பின்​னணி​யில் இருக்​குமோ என்ற சந்​தேகம் உள்​ளது என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார். திருப்​பூர் மாவட்​டம் காங்​க​யம் அருகே தொட்​டி​பாளை​யம் பகு​தி​யில் உள்ள தனி​யார் பள்​ளி​யில் ‘வந்தே மாதரம்’ 150-வது ஆண்டு தின நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற நயி​னார் நாகேந்​திரன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பாஜக கூறிய பிறகே, அதி​முகவை ஒருங்கிணைப்​பது தொடர்​பாக பல்​வேறு விஷ​யங்​களை தான் முன்​னெடுத்​த​தாக செங்​கோட்​டையன் கூறியுள்ளார். மேலும், 6 பேர் … Read more

உத்தர பிரதேச எம்எல்ஏ ராஜா பைய்யா நடத்திய 200 துப்பாக்கிக்கு ஆயுத பூஜை: விசாரணை அறிக்கை தாக்கல்

புதுடெல்லி: உத்தர பிரதேச எம்​எல்ஏ ராஜா பைய்யா (எ) ரகு​ராஜ் பிர​தாப் சிங். இவர், கடந்த மாதம் ஆயுத பூஜை தினத்​தில், 200 வகை​யான துப்​பாக்​கி​களுக்கு தனது மாளி​கை​யில் பூஜை செய்​தார். இதில் உள்​நாட்​டு, வெளி​நாட்டு துப்​பாக்​கி​கள் இடம்​பெற்​றன. இதுதொடர்​பான வீடியோ வெளி​யாகி சர்ச்​சை​யானது. உ.பி. குண்டா தொகு​தியை சேர்ந்த ராஜா பைய்​யா, தனது ஜனநாயக ஜன் சத்தா தளம் கட்​சி​யின் சார்​பில் எம்​எல்​ஏ​வாக உள்​ளார். இவர் துப்​பாக்​கி​களுக்கு ஆயுத பூஜை போட்​டது தொடர்​பாக அவரது மனைவி … Read more

கொல்லைப்புற வழியாக முதல்வரானவர் பழனிசாமி! – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தாக்கு

“மூன்று முறை ஓபிஎஸ்ஸை முதல்வராக்கிய ஜெயலலிதா, பழனிசாமியை ஏன் முதல்வராக்கவில்லை? பழனிசாமி கொல்லைப்புற வழியாக முதல்வரானவர் என்பது நாடறிந்த ஒன்று” என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். கோபிசெட்டிபாளையத்தில் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அதிமுக ஆட்சியை மீண்டும் உருவாக்கவே ஒருங்கிணைப்பு கருத்துகளை வெளியிட்டேன். அதனால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன். இன்று, யார் என்னிடத்தில் பேசினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலை உள்ளது. இது கட்சியை பலவீனப்படுத்தும் வகையில் உள்ளது. திமுக எம்எல்ஏ வீட்டு … Read more

ஜம்மு காஷ்மீரில் 8 இடங்களில் திடீர் சோதனை

ஜம்மு: கடந்த 2022-ம் ஆண்டு காஷ்மீரை சேர்ந்த முகம்​மது ஷரீப் ஷா என்​பவர் ஜம்​மு​வில் உள்ள முன்​னாள் அமைச்​சர் ஜதீந்​தர் சிங் என்​கிற பாபு சிங்​கிடம் ரூ.6.9 லட்​சம் ஹவாலா பணத்தை கொடுக்க முயன்​ற​போது போலீ​ஸாரிடம் பிடிபட்​டார். இந்​தப் பணம் இந்​தி​யா​வில் போதைப் பொருள் விற்​பனை மூலம் ஈட்​டப்​படு​வதும் பிரி​வினை​வாத மற்​றும் தீவிர​வாத செயல்​களுக்கு பயன்​படுத்​தப்​படு​வதும் விசா​ரணை​யில் தெரிய​வந்​தது. இதையடுத்து பாபு சிங் ஏப்​ரல் மாதம் கைது செய்​யப்​பட்​டார். இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் போதைப் பொருள் தொடர்​புடைய … Read more