மேற்குத் தொடர்ச்சி மலையில் நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இரு நாட்டு வெடிகுண்டுகள் இன்று காலை கண்டெடுக்கப்பட்டன. கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை குன்னூர் பீட் பகுதியில் வனத்துறையினர் இன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முள்புதர் அருகே 2 நாட்டு வெடிகுண்டுகள் கிடந்துள்ளன. இதனைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்து, கிருஷ்ணன் கோவில் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார் 2 நாட்டு வெடிகுண்டுகளையும் கைப்பற்றி, அவற்றை … Read more

'டெல்லி, உ.பி., பிஹார் பையோ' – சன்னி, பிரியங்காவுக்கு பிரதமர் மோடி பதிலடி

சண்டிகர்: உ.பி., பிஹார், டெல்லி மாநிலங்களைச் சேர்ந்தவர்களை பஞ்சாபிற்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது என்று அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி பேசிய நிலையில் பிரதமர் மோடி இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். ரவிதாஸ் மற்றும் குரு கோவிந்த் சிங் இருவரும் பஞ்சாபிற்கு வெளியே பிறந்தவர்கள் என்பதால், பஞ்சாபில் அனுமதிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் கூறுகிறதா என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். பஞ்சாப் மாநிலம் ரூப்கரில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உரையாற்றினார். அவருடன் பஞ்சாப் … Read more

மாறிய உலகம்… மாறாத ஜொனாதன்… – 190 வயது ஆமையும் வியத்தகு பின்புலமும்

ராணி விக்டோரியா பதின்பருவத்தில் வலம் வந்துகொண்டிருந்த காலத்தில் ஜொனாதன் பிறந்தது. 120 வருடங்களுக்கு முன்னர், தனது 81 வயதில் ராணி விக்டோரியா மரணித்துவிட்டார். ஆனால், இன்றும் ஜொனாதன் இன்னமும் செயின்ட் ஹெலினா தீவில் சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டில் 190-வது பிறந்தநாளை கொண்டாடுவதன் மூலம், இதுவரை வாழ்ந்த ஆமைகளில் மிகவும் வயதான ஆமை என்ற பெருமை, ஜொனாதனுக்கு கிடைக்கவுள்ளது. 1832-ஆம் ஆண்டு பிறந்ததாகக் கருதப்படும் ஜொனாதன், சர் வில்லியம் கிரே-வில்சன் என்பவருக்கு பரிசாக வழங்கப்பட்டது. இவர் 1882 … Read more

டிவி, சமூக ஊடகங்களிலும் இன்று மாலை 6 மணி வரை மட்டுமே பிரச்சாரத்துக்கு அனுமதி: மாநில தேர்தல் ஆணையம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், மாலை 6 மணிக்கு மேல் தொலைக்காட்சி, வாணொலி, சமூக ஊடங்களில் பரப்புரைகள் செய்வதற்கு அனுமதியில்லை என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு 19.02.2022 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. மேற்குறிப்பிட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரப்புரை … Read more

உ.பி. தேர்தலில் தடம் பதிப்பாரா ஒவைசி: முஸ்லிம் வாக்கு யாருக்கு?

ஹைதராபாத் எம்.பி.யும், ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவருமான அசாதுதீன் ஒவைசி பல்வேறு மாநிலங்களில் கட்சியை விரிவுப்படுத்தி வருகிறார். ஒரு சில மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் பங்கேற்பதன் மூலம் தனது கட்சியின் கால்தடத்தை நாடுதழுவிய அளவில் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கையில் ஒவைசி தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறார். 2019 ஆம் ஆண்டில் அவரது கட்சி ஹைதராபாத்திற்கு வெளியே முதல் முறையாக ஒரு மக்களவைத் தொகுதில் வென்றது. அக்கட்சியின் வேட்பாளர் அவுரங்காபாத்தில் சிவசேனா வேட்பாளரை தோற்கடித்தார். ஒவைசி கட்சிக்கு … Read more

பிரிட்டனில் டெல்டாக்ரான் பாதிப்பு கண்டுபிடிப்பு: கூர்ந்து கவனிப்பதாக சுகாதாரத் துறை தகவல்

லண்டன்: பிரிட்டனில் கரோனா வைரஸின் இன்னொரு திரிபான டெல்டாக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கடந்த 2019-ஆம் டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் முதன்முதலில் கோவிட் 19 வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் பின்னர் கரோனா உலகம் முழுவதும் பரவியது. கரோனா வைரஸ் பரவ ஆரம்பத்ததில் இருந்து அதன் உருமாற்றங்களை உலக சுகாதார நிறுவனம் ஆல்பா, பீட்டா, காமா, லாம்ப்டா, டெல்டா, ஒமைக்ரான் என பல்வேறு திரிபுகள் வந்துவிட்டன. இவற்றில் இந்தியாவில் கண்டறியப்பட்ட … Read more

கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கு: முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவுக்கு நிபந்தனை முன்ஜாமீன்

சென்னை: கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள தனது வீட்டில் ராஜா மற்றும் அமுதா ஆகிய இருவருடன் சேர்ந்து தன்னை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா மீது அவரது கணவர் ராமசாமி, ஜெ.ஜெ நகர் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், சசிகலா புஷ்பா உள்பட மூன்று பேருக்கு எதிராக … Read more

உக்ரைனுக்கு எத்தனை விமானங்கள் வேண்டுமானாலும் இயக்கலாம்: ஏர் பபுள் கெடுபிடியை தளர்த்தியது மத்திய அரசு

புதுடெல்லி: ’போர் பதற்றத்தில் உள்ள உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்டுக் கொண்டு வர ஏதுவாக உக்ரைனுக்கு எத்தனை விமானங்கள் வேண்டுமானாலும் இயக்கிக் கொள்ளலாம்’ என்று ஏர் பபுள் கெடுபிடிகளைத் தளர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. எந்த நேரமும் ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் என்ற போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியர்கள், குறிப்பாக இந்திய மாணவர்கள் வெளியேறலாம் என்று மத்திய அரசு அண்மையில் அறிவுறுத்தியது. ரஷ்யா, உக்ரைன் சர்ச்சை வலுத்து வரும் நிலையில் … Read more

3 மணி நேரத்தில் 25.8 செ.மீ மழை பதிவு; வெள்ளத்தில் மிதக்கும் பிரேசில்: 58 பேர் பலி

பிரேசிலில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 58 பேர் பலியாகினர். இதுகுறித்து அரசு ஊடகம் தரப்பில், “பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் செவ்வாய்க்கிழமை மூன்று மணி நேரத்தில் 25.8 செ.மீ மழை பதிவாகியது. கடந்த மாதத்தில் ஒட்டுமொத்தமாக பெய்த மழை, இந்த மூன்று மணி நேரத்தில் பெய்துவிட்டது. இந்த கனமழையால் நகரின் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக வடக்குப் பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ள பெருக்கால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் … Read more

ஜல்லிக்கட்டு | "அவதூறுகளை பரப்புவது முதல்வர் பொறுப்பில் இருப்பவருக்கு அழகல்ல" – ஸ்டாலின் மீது ஓபிஎஸ் காட்டம்

சென்னை: “ஜல்லிக்கட்டு குறித்து என் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி விஷமப் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவருக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, இதுபோன்ற அவதூறுகளை பரப்புவது என்பது முதல்வர் பொறுப்பில் இருப்பவருக்கு அழகல்ல” என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் காட்டமாக கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய ஆட்சியில் கிட்டத்தட்ட 17 ஆண்டு காலம் அங்கம் வகித்து நீட் தேர்வு அறிமுகம், ஜல்லிக்கட்டுக்கு தடை, மீத்தேன் … Read more