மின்தடையால் மாறிய மணமகள்கள்: மத்தியப் பிரதேசத்தில் திருமண விழாவில் பரபரப்பு

போபால்: மத்தியப் பிரதேசத்தில் திருமண நிகழ்வின்போது மின் தடை காரணமாக மணமகள் மாறிய நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் உள்ளது அஸ்லானா கிராமம். இங்கு கடந்த 5 ஆம் தேதி (மே 5) சகோதரிகள் இருவருக்கு நடந்த திருமண நிகழ்வில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. மின்தடைக்கு இடையே மணமக்கள் பூஜையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மணமகள்கள் தங்களுக்கு நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளையுடன் அமராமல் தவறுதலாக மாறி அமர்ந்துள்ளனர். இந்த நிலையிலையே திருமண சடங்குகளும் செய்யப்பட்டுள்ளன. முக்கிய சடங்குகள் கடந்தபிறகே … Read more

மகிந்தா ராஜபக்சே குடும்பத்துடன் திரிகோணமலைக்கு ஹெலிகாப்டரில் தப்பியோட்டம்?- கடற்படைதளத்தை சூழ்ந்து மக்கள் போராட்டம்

கொழும்பு: இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக பெரிய அளவில் மக்கள் போராட்டம் நடந்து வரும் நிலையில் மஹிந்தா ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் ராணுவ பாதுகாப்புடன் கொழும்பிலிருந்து புறப்பட்டு திருகோணமலை கடற்படை தளத்துக்கு ஹெலிகாப்டரில் தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. பொருட்கள் விலை உயர்வு மேலும் அதிகரித்துள்ளதுடன் பொருளாதார சுழற்சியும் தடைபட்டுள்ளது. இதனால் இலங்கை அரசியலில் அங்கம் பதவி … Read more

'விசாரணைக் கைதிகள் மரணம் எந்த ஆட்சியில் நடந்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது' – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: விசாரணை கைதிகள் உயிரிழப்பு எந்த ஆட்சியில் நடந்திருந்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது. லாக்அப் மரணங்கள் இனி நடக்காமல் இருப்பதற்கான உறுதியான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்றும், இன்றும் காவல் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து துறை அமைச்சர் என்ற முறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு பதில் அளித்து பேசினார். அப்போது பேசிய அவர், விசாரணைக் கைதிகள் உயிரிழப்பு எந்த ஆட்சியில் நடந்திருந்தாலும் அதை … Read more

ஆந்திராவில் இளம் பெண்ணை சுட்டுக் கொலை செய்துவிட்டு இளைஞர் தற்கொலை

ஆந்திராவில் இளம் பெண்ணை சுட்டுக் கொலை செய்துவிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். ஒரு தலை காதலே காரணம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் தடிபர்தி கிராமத்தைச் சேர்ந்தவர் காவ்யா ரெட்டி. இவர் புனேவைச் சேர்ந்த ஐடி நிறுவனத்தில் பணி புரிந்துவந்தார். கரோனா காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேலாக அவர் வீட்டிலிருந்து பணி புரிந்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்தவர் மலபதி சுரேஷ் ரெட்டி. இவர் பெங்களூரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி … Read more

குடும்ப அரசியலுக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்: பற்றி எரியும் இலங்கை; கைகொடுக்காத சமரச திட்டம்

கொழும்பு: இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்த மகிந்தா ராஜபக்சே விலகியுள்ள போதிலும் அவரது குடும்ப அரசியலுக்கு எதிரான மக்கள் போராட்டம் தொடர்கிறது. அவரது குடும்பம் நாட்டை விட்டு தப்பி செல்ல முயலும் நிலையில் மக்கள் மட்டுமின்றி சொந்த கட்சியினரும் எதிராக திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. பொருட்கள் விலை உயர்வு மேலும் அதிகரித்துள்ளதுடன் பொருளாதார சுழற்சியும் தடைபட்டுள்ளது. இதனால் இலங்கையில் … Read more

உள்ளூர் மக்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை; கல்பாக்கம் அணுமின்நிலையம் முன் பாமக நாளை போராட்டம்

சென்னை: உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென கல்பாக்கம் அணுமின்நிலையத்தின் முன்பாக நாளை போராட்டம் நடத்த உள்ளதாக பாமக அறிவித்துள்ளது. இதுகுறித்து இக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சென்னை அணுமின் நிலையத்தில் பிளம்பர், தச்சர் போன்ற சி பிரிவு பணிகளுக்குக் கூட இந்தி மொழியில் தேர்வும், நேர்காணலும் நடத்தப்படுவதையும், அதன் மூலம் உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்புகள் திட்டமிட்டு மறுக்கப்படுவதையும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ச.ராமதாஸ் ஆதாரங்களுடன் … Read more

அசானி தீவிர புயல் காக்கிநாடாவுக்கு 260 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது: வானிலை ஆய்வு மையம்

சென்னை: அசானி தீவிர புயல், தற்போது மத்திய மேற்கு வங்கக் கடலில் காக்கிநாடாவிற்கு தென்கிழக்கே சுமார் 260 கி.மீட்டர் தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கே தெற்கே சுமார் 200 கி.மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். சென்னை வானிலை ஆய்வு மையத்தில், தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “அசானி தீவிர புயல், தற்போது மத்திய மேற்கு வங்கக் கடலில் … Read more

'யாரும் கைநீட்டி குற்றம் சொல்லமுடியாத துறையாக காவல்துறை இருக்க வேண்டும்' – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: காவல்துறை யாரும் கைநீட்டி குற்றம் சொல்லமுடியாத துறையாக இருக்க வேண்டும். எங்கோ ஒரு காவலர் செய்யக்கூடிய தவறு, இந்த ஆட்சியின் தவறாக குற்றம்சாட்டப்படும். சம்பந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுத்திருந்தாலும், ஆட்சி மீதுதான் கறையாக அந்த சம்பவம் பேசப்படும். எனவே காவல்துறையைச் சேர்ந்த ஒவ்வொருவரும், விமர்சனத்துக்கு இடமில்லாமல் தங்கள் பணிகளைச் செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானியக் … Read more

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஆதரவு திரட்டும் பாஜக – எதிர்க்கட்சிகள் தரப்பில் சரத் பவாரை முன்னிறுத்த மம்தா முயற்சி

புதுடெல்லி: ஆகஸ்டில் நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்கள் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் பணியில் பாஜக இறங்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் தரப்பில் பொது வேட்பாளராக சரத் பவாரை முன்னிறுத்த திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி முயற்சிக்கிறார். புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்ய நாடாளுமன்ற இரு அவை எம்.பி.க்களின் வாக்குகள் மிக முக்கியம். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எம்எல்ஏக்கள் வாக்குகளும் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கின்றன. நாடாளுமன்றத்தை பொறுத்தவரை பாஜக கூட்டணிக்கு போதிய பலம் உள்ளது. எனினும், … Read more

ஆண்டுதோறும் சொத்துவரி உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் சொத்துவரி உயர்த்தும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்த பதிவுகளில், ”தமிழகத்தில் அனைத்து நகர்ப்புறங்களிலும் சொத்து வரியை ஆண்டுக்கு ஒருமுறை உயர்த்த வகை செய்யும் சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படுகிறது. சொத்துவரி உயர்வு வீட்டு உரிமையாளர்களை மட்டுமின்றி வாடகைதாரர்களையும் கடுமையாக பாதிக்கும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. சென்னை உள்ளிட்ட அனைத்து நகர்ப்புற பகுதிகளிலும் அண்மையில் தான் 200% வரை … Read more