விவோ T4 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அண்மையில் விவோ நிறுவனத்தின் டி4 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் … Read more

கர்டர்கள் சரிந்து விபத்து: சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நடவடிக்கை என்ன?

மணப்பாக்கத்தில் மெட்ரோ ரயில் இணைப்பு பாலப் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த கர்டர்கள் சரிந்து விழுந்த சம்பவத்தை அடுத்து, பாதுகாப்பு தன்மையை உறுதி செய்து அறிக்கை சமர்பிக்க, மெட்ரோ ரயில் உயர்மட்ட வழித்தடத்துக்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் 3 நிறுவனங்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒரு வழித்தடமாக மாதவரம் – சோழிங்கநல்லூர் வரையிலான 3-வது வழித்தடத்தில் பல இடங்களில் உயர்மட்டபாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்தடத்தில் ஒரு … Read more

அகமதாபாத் விமான விபத்து: டிஎன்ஏ சோதனையில் 31 பேரின் அடையாளம் உறுதி; 12 உடல்கள் ஒப்படைப்பு

அகமதாபாத்: கடந்த வியாழக்கிமை (ஜூன்.12) அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானோரின் உடல்களில் நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில் இதுவரை 31 பேரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 உடல்கள் அந்தந்த குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட பலரை அடையாளம் கண்டறியும் டிஎன்ஏ சோதனை இன்னும் நடைபெற்று வருவதாக பி.ஜே. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பேராசிரியர் டாக்டர் ரஜ்னிஷ் படேல் தெரிவித்தார். … Read more

வலுக்கும் மோதல்: ஈரானுடன் கூட்டு சேர்ந்து இஸ்ரேலை தாக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள்!

டெல் அவிவ் / தெஹ்ரான்: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டனர். முதல் முறையாக ஒருங்கிணைந்து இஸ்ரேலை தாக்குவதாக ஹவுதி படையினர் வெளிப்படையாக அறிவித்துள்ளனர். ஈரானின் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகம், எரிசக்தி உற்பத்தி மையங்களை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டது. பதிலுக்கு ஈரான் தரப்பு மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 3 பேர் உயிரிழந்தனர். இதை இஸ்ரேல் … Read more

‘தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள் தான்; எல்லா நாளும் வணங்குவோம்’ – அன்புமணி

சென்னை: உலக தந்தையர் தினம் இன்று (ஜுன். 15) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள வாழ்த்துச் செய்தி கவனம் பெற்றுள்ளது. கடந்த சில மாதங்களாகவே ராமதாஸுக்கும் – அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவிவரும் நிலையில் உலக தந்தையர் தினத்தில் அன்புமணி பகிர்ந்த பதிவில் “தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள் தான்; எல்லா நாளும் வணங்குவோம்” என்று குறிப்பிட்டுள்ளார். அன்புமணி தனது எக்ஸ் பக்க பதிவில், “தந்தையர் எப்போதும் … Read more

“விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை நாங்கள் பராமரிக்கவில்லை” – துருக்கி நிறுவனம்

புது டெல்லி: அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியாவின் போயிங் விமானத்தை துருக்கி நிறுவனம் பராமரித்ததில் சதி இருக்கலாம் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக, அகமதாபாத் கிளம்பி வந்த துருக்கி நாட்டுக் குழுவினர் சம்பந்தப்பட்ட போயிங் விமானத்தை தாங்கள் பராமரிக்கவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளனர். அகமதாபாத் விமான விபத்தில் அதில் பயணித்த 241 பேர் உள்பட 270 பேர் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான இந்த போயிங் விமானம் துருக்கி நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டதாக சில குற்றச்சாட்டுக்கள் சமீபத்தில் எழுந்தன. இப்பிரச்சனையில், போயிங்கின் … Read more

மாநிலங்களவை எம்.பி ஆகியுள்ள நிலையில் கமல்ஹாசனுக்கு கட்சி நிர்வாகிகள் நேரில் வாழ்த்து

மாநிலங்களவை எம்.பி ஆகியுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு கட்சி நிர்வாகிகள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். மநீம தலைவர் கமல்ஹாசன் திமுக கூட்டணியின் ஆதரவுடன் மாநிலங்களவை எம்.பி.யாகத் தேரவுசெய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு கமல்ஹாசன் நேற்று காலை வருகை தந்தார். அவருக்கு பட்டாசு வெடித்து மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளை கமல்ஹாசன் சந்தித்தார். நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், மண்டல … Read more

அகமதாபாத் விமான விபத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்ய உருவாகும் சவப்பெட்டிகள்

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்காகவும், பல்வேறு ஊர்களுக்கு அவர்களது உடலை அனுப்புவதற்காகவும் ஏராளமான சவப்பெட்டிகளை தயார் செய்யும் பணிகள் வதோதரா நகரில் நடைபெற்று வருகின்றன. குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து 3 நாட்களுக்கு முன்பு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். மேலும் விமானம் விழுந்த பிஜே மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்த 33 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 274-ஆக உயர்ந்துள்ளது. … Read more

“கமலை குறை சொல்லாதவர்கள் விஜய்யை குறை சொல்வதில் அர்த்தமில்லை!” – சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்புப் பேட்டி

ஆளுநர் பொறுப்பில் இருப்பவர்கள் அதிகம் அரசியல் பேசமாட்டார்கள். ஆனால், மகாராஷ்டிரா ஆளுநரான சி.பி.ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் இதற்கு விதிவிலக்கானவர்கள். கடந்த காலங்களில் ஜெயலலிதா, கருணாநிதி என இரு பெரும் துருவங்களுடனும் அமர்ந்து பேசி கூட்டணிகளை கட்டமைத்தவர் பாஜக மாநில தலைவராக இருந்த சிபிஆர். தமிழகம் வரும் போதெல்லாம் அதிரடியான அரசியல் கருத்துகளையும் பேசி வரும் சிபிஆர், ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பிரத்யேக நேர்காணல் இது. ஆளுநர்கள், அரசியல்வாதிகள் போல் செயல்படுவதால் தான், மாநில அரசுகளுடன் மோதல் ஏற்படுகிறது … Read more

7 பேருடன் கேதார்நாத் சென்ற ஹெலிகாப்டர் விபத்து – உத்தராகண்டில் மீட்பு பணி தீவிரம்

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தின் குப்தகாசியில் இருந்து 7 பேருடன் கேதார்நாத்துக்கு சென்ற ஹெலிகாப்டர் கவுரிகுந்த் வனப்பகுதியில் விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்தில் மீட்பு பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. ஆரியன் ஏவியேஷன் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான அந்த ஹெலிகாப்டரில் விமானி உடன் சேர்த்து மொத்தம் 7 பேர் பயணித்துள்ளனர். இன்று அதிகாலை 5.17 மணி அளவில் குப்தகாசியில் இருந்து கேதர்நாத்துக்கு அந்த ஹெலிகாப்டர் புறப்பட்டுள்ளது. இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக அந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதில் 5 … Read more